என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராமர் கோவில் விடுமுறையால் அரசு-தனியார் வங்கி வாடிக்கையாளர்கள் குழப்பம்
- அரசு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்தனர்.
- தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஒரு விதியும், தனியார் வங்கிகளுக்கு ஒரு விதியுமாக இன்றைய விடுமுறை அமைந்தது.
சென்னை:
ராமர் கோவில் பிரதிஷ்டையையொட்டி அரசு வங்கிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை விடுமுறை விடப்பட்டு இருந்தது. அதன் பின்னர் வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தனியார் வங்கிகள் இன்று முழுமையாக செயல்பட்டன.
இதனால் அரசு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்தனர். அவர்கள் வழக்கம் போல வங்கிகளுக்கு சென்றனர். தனியார் வங்கி ஊழியர்கள் முழு அளவில் செயல்பட்டதால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஒரு விதியும், தனியார் வங்கிகளுக்கு ஒரு விதியுமாக இன்றைய விடுமுறை அமைந்தது.
Next Story






