search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "announcement"

    • வாகை சூடவா படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    • தஞ்சாவூர் மாவட்டத்தை கதைக்களமாக கொண்ட படத்தில் தஞ்சாவூரை சேர்ந்த நான் நடித்துள்ளது பெருமை அளிக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரை கதைக்களமாக கொண்டு பட்டத்து அரசன் என்ற திரைப்படம் கடந்த 25-ந் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்த படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாகவும், ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

    இதைவிட முக்கிய கதை பாத்திரங்களில் ராஜ்கிரன், ராதிகா, சிங்கம்புலி, ஆர்.கே. சுரேஷ், தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தை சேர்ந்த சிங். முருகா, அதே பகுதியை சேர்ந்த குழந்தை நட்சத்திரங்களான சிங். கோகுல், சிவானிசிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை தஞ்சாவூர் மாவட்டம் ஆம்பலாப்பட்டை சேர்ந்த சற்குணம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே களவாணி, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் உள்ளிட்ட 6 படங்களை இயக்கி தயாரித்துள்ளார்.

    இதில் வாகை சூடவா படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் இயக்குனர் சற்குணம் மற்றும் படத்தில் நடித்த வல்லத்தை சேர்ந்த சிங். முருகா ஆகியோர் தஞ்சையில் உள்ள விஜயா தியேட்டருக்கு வந்தனர்.அவர்களுக்கு தஞ்சை ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பலர் அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

    அப்போது இயக்குனர் சற்குணம் அளித்த பேட்டியில், பட்டத்து அரசன் நான் இயக்கிய ஏழாவது திரைப்படம் ஆகும்.

    அடுத்து ஒரு வெப் சீரியல் இயக்குகிறேன்.அதனை தொடர்ந்து நான் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

    நடிகர் சிங். முருகா கூறும்போது, தஞ்சாவூர் மாவட்டத்தை கதைக்களமாக கொண்ட படத்தில் தஞ்சாவூரை சேர்ந்த நான் நடித்துள்ளது பெருமை அளிக்கிறது.மேலும் குழந்தை நட்சத்திரங்களாக நமது பகுதியை சேர்ந்த சிங் .கோகுல், சிவானிசிங் இந்த படத்தில் நன்றாக நடித்துள்ளனர்.

    படத்தை இயக்கிய சற்குணமும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.நான் அடுத்து வெப் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறேன். அதன் பின்னர் அடுத்த படங்களின் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

    • தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விசைத்தறிக்கான 3 ஏ 2 டேரிப் மின் கட்டணத்தை உயர்த்தியது.
    • நல்ல அறிவிப்பு வரும் வரை மின் கட்டணத்தை கட்டுவது இல்லை

    திருப்பூர் : 

    கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம், தலைவர் பழனிசாமி தலைமையில் சோமனூரில் நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விசைத்தறிக்கான 3 ஏ 2 டேரிப் மின் கட்டணத்தை உயர்த்தியது. கடந்த மூன்று மாதங்களாக, ஆணைய தலைவர், அமைச்சர்கள், மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து மின் கட்டண விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. தொழில் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி அரசு உடனடியாக மின் கட்டண குறைப்பு அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    சாதா விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதே நடைமுறை வரும் காலங்களில் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். கட்டணம் குறைக்கப்படும் வரை, மின் கட்டணம் செலுத்துவதில்லை என முடிவு செய்து 70 நாட்கள் ஆகியுள்ளது. நல்ல அறிவிப்பு வரும் வரை மின் கட்டணத்தை கட்டுவது இல்லை என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வேலைநிறுத்தம் செய்வது குறித்தும், உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
    • 800 ரூபாயாக குறைத்ததற்கு,தமிழக அரசுக்கு நன்றிகூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பல்லடம் :

    திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத்தின் பொது உறுப்பினர் கூட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் சின்னம்மன் சேவா சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.சங்க தலைவர் இரா.வேலுசாமி தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் முத்துக்குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துணை செயலாளர் பாலாஜி வரவேற்றார்.

    இதில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்துவது குறித்தும், வேலைநிறுத்தம் செய்வது குறித்தும், உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விசைத்தறிகளுக்கு ,உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை விசைத்தறியாளர்கள் செலுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளதால் வருகிற அக்டோபர் மாதம் 1 ந்தேதி முதல் மின்கட்டணம் செலுத்துவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் விசைத்தறி மின் இணைப்புகளுக்கு நிலைக்கட்டணம் 560 ல் இருந்து 1600 ஆக உயர்த்தியதை 800 ரூபாயாக குறைத்ததற்கு,தமிழக அரசுக்கு நன்றிகூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதேபோல் மின் கட்டணத்தையும் குறைத்து பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டுமெனக்கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மின்சாரத்துறை ஆகியோரைச் சந்தித்து மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • அரசு என்ஜினீயரிங் கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
    • இதனால் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி தரம் உயர்த்தி என்ஜினீயரிங் கல்லூரியாக மாற்றியுள்ளோம்.

    புதுச்சேரி:

    சுல்தான்பேட்டையில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

    சட்டசபையில் கேள்விநேரத்தின்போது எதிர்கட்சித்தலைவர் சிவா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நமச்சிவாயம் பதிலளித்து பேசியதாவது:-

    பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி தரம் உயர்த்தி என்ஜினீயரிங் கல்லூரியாக மாற்றியுள்ளோம்.

    இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்கிறது. அதிகளவில் மாணவிகள் சேர விண்ணப் பித்துள்ளனர். இதனால் சுல்தான்பேட்டையில் அரசு மகளிர் என்ஜினீய ரிங்கல்லூரி அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று கூறினார்.

    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி). குரூப்-7 ஏ 8 உதவி இயக்குனர் பதவிகளை நிரப்ப தேதி அறிவிப்பு வெளியிட்டது.
    • தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வருகிற 29-ந்தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி). குரூப்-7 ஏ பிரிவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் 25 செயல் அலுவலர் நிலை-1 பதவிகள், கூட்டுறவு தணிக்கை துறையில் 8 உதவி இயக்குனர் பதவிகள் நிரப்ப கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

    இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து பட்டதாரிகள் விண்ணப்பித்தனர்.

    பின்னர் செயல் அலுவலர் பணிக்கு தாள்-1, தாள்-2, தாள்-3 ேதர்வும், கூட்டுறவு உதவி இயக்குனர் பணிக்கு தாள்-1, தாள்-2 தேர்வும் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்டன.

    இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பட்டதாரிகள் ஏராள–மானோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த 2 தேர்வுகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வருகிற 29-ந்தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.

    பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக் கிழமை) காலை முதல் மாலை வரை அரசு இ-சேவை மையங்கள் இயங்காது என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #EServiceCenter #MaintenanceService
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் மொத்தம் 10 ஆயிரத்து 423 அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.

    இந்தநிலையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக் கிழமை) காலை முதல் மாலை வரை அரசு இ-சேவை மையங்கள் இயங்காது என தெரிவிக்கபடுகின்றது. அரசின் இ-சேவை மையங்கள் 18-ந் தேதி முதல் வழக்கம்போல் இயங்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #EServiceCenter #MaintenanceService 
    மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.
    சென்னை:

    மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.

    சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தெற்கு அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று வலுவாக வீசுகிறது. மத்திய வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றும், கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி ஆந்திராவில் உள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. விரிஞ்சிபுரம், கேளம்பாக்கம், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., அரிமளம், செய்யாறு, காஞ்சீபுரத்தில் 6 செ.மீ., ஆலங்குடி, செம்பரம்பாக்கத்தில் தலா 5 செ.மீ., சென்னை, அரியலூர், வந்தவாசி, தேவக்கோட்டை, நிலக்கோட்டை, சென்னை விமானநிலையம், டி.ஜி.பி. அலுவலகம், திருப்பத்தூர், குமாரபாளையம், திருவாலங்காடு, கடலூர், செய்யூர், காட்டுக்குப்பத்தில் தலா 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.

    வருகிற 11-ந்தேதி வரை தமிழகத்தின் வடமாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யும்.

    இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்

    காவிரி பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு திட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு நாளை இறுதி முடிவு எடுக்கிறது. #CauveryMangementBoard #CauveryDraftScheme
    புதுடெல்லி:

    காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.

    இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை 177.25 டி.எம்.சி.யாக குறைத்ததோடு, காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல்திட்டத்தை (‘ஸ்கீம்’) 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி தீர்ப்பு கூறியது.

    கர்நாடக சட்டசபை தேர்தல் காரணமாக வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யாமல் தாமதப்படுத்தி வந்த மத்திய அரசு ஸ்கீம் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதே சமயம், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.



    அந்த வழக்கை கடந்த 8-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வரைவு செயல்திட்டத்தை 14-ந் தேதி கண்டிப்பாக தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

    அதன்படி இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு இணங்க மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கோர்ட்டில் வரைவு செயல் திட்டத்துடன் ஆஜராகி இருந்தார். பார்வையாளர்கள் பகுதியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் அமர்ந்து இருந்தனர்.

    விசாரணை தொடங்கியதும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கோர்ட்டு உத்தரவின் படி வரைவு செயல்திட்டத்தை மூடி ‘சீல்’ வைக்கப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்தார்.

    அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், “வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதன் பிரதியை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அளிக்கலாம். மாநிலங்கள் இந்த வரைவு செயல்திட்டம் குறித்த தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கலாம் அல்லது கோர்ட்டு உரிய உத்தரவை பிறப்பிக்கலாம். மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு சட்டத்தின் அடிப்படையில் இதற்கு மத்திய மந்திரிசபையின் ஒப்புதலை பெற வேண்டி இருக்கும்” என்று கூறினார்.

    அதற்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த விவகாரத்தின் மீது மேலும் புதிது புதிதாக வழக்குகளை விசாரித்துக்கொண்டு இருக்க முடியாது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு சட்டம் 6ஏ பிரிவின் கீழ் செயல்திட்டத்தை வகுக்க வேண்டியது சட்டரீதியாக அவசியமாகிறது என்றும் கூறினார்.

    இதைத்தொடர்ந்து கே.கே. வேணுகோபால், இந்த வரைவு செயல்திட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அமைப்புக்கு ஒரு பெயர் தேவைப்படுகிறது. அது ‘வாரியம்’ அல்லது ‘ஆணையம்’ அல்லது ‘குழு’ என்று எந்த பெயரிலும் இருக்கலாம். இந்த அமைப்புக்கான பெயரை சுப்ரீம் கோர்ட்டு தீர்மானிக்க வேண்டும் என்றார்.

    அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக் கீல் சேகர் நாப்டே குறுக்கிட்டு, “தற்போது என்ன செய்ய வேண்டியிருந்தாலும் அதை இப்போதே இந்த கோர்ட்டு அறையிலேயே நீதிபதிகள் முன்னிலையிலேயே செய்ய வேண்டும். இதில் மாநில அரசுகள் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. மத்திய அரசு தாக்கல் செய்து இருக்கும் வரைவு செயல்திட்டம் பிப்ரவரி 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதா? என்பதை மட்டுமே பார்க்க முடியும்” என்று கூறினார்.

    அதற்கு நீதிபதிகள், இந்த வரைவு செயல்திட்டம் சரியாக இருக்கிறதா? என்பது குறித்து கோர்ட்டு ஆராய முடியாது என்றும், கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் கீழ் இந்த அமைப்பு அமைக்கப்படுமா? என்பதைத்தான் இந்த கோர்ட்டு கருத்தில் எடுத்துக் கொள்ளும் என்றும் கூறினார்கள்.

    அத்துடன் பிப்ரவரி 16-ந் தேதி இந்த கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த வரைவு செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றிய தங்கள் கருத்தை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகள் புதன்கிழமைக்குள் (நாளை) கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அன்று இந்த வரைவு செயல்திட்டத்தை பரிசீலித்து ஒப்புதல் வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    14 பக்கங்களை கொண்ட வரைவு செயல்திட்டத்தின் நகல் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் சார்பில் ஆஜரான வக்கீல் களுக்கு கோர்ட்டு அறையிலேயே வழங்கப்பட்டது.

    இந்த வரைவு செயல் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண ‘வாரியம்’ அல்லது ‘ஆணையம்’ அல்லது ‘குழு’ ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்று அமைக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி இந்த பெயர் முடிவு செய்யப்படும். இந்த அமைப்புடன் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்படும்.

    * அதிகாரம் பெற்ற இந்த அமைப்பு தலைவர் மற்றும் 9 உறுப்பினர்களை கொண்டதாக இருக்கும். தலைவரை மத்திய அரசு நியமிக்கும். இந்த தலைவர் நீர்வளம் மற்றும் நீர்மேலாண்மையில் செயல்திறன் கொண்ட பொறியாளராக இருப்பார். 5 ஆண்டுகள் அல்லது 65 வயது பூர்த்தியாகும் வரை இவர் பதவியில் இருப்பார்.

    * தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை நிர்வாக செயலாளர்கள் தலா ஒருவர் இந்த அமைப்பில் பகுதிநேர உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள்.

    * மேலும் இரு முழுநேர உறுப்பினர்களும், இரு பகுதிநேர உறுப்பினர்களும் இந்த அமைப்பில் இருப்பார்கள். மத்திய நீர்வளத்துறை செயலாளரும் இந்த அமைப்பில் இடம்பெறுவார்.

    * உறுப்பினர்கள் அனைவருக்கும் சமமான அதிகாரம் உண்டு.

    * மத்திய நீர்வள ஆணையம், தேசிய நீர்த்துறை நிறுவனம், இந்திய வேளாண்மை ஆய்வு மையம், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் இருந்து பிரதிநிதிகளை இந்த அமைப்பின் கூட்டங்களில் பங்கேற்க தலைவர் அழைப்பு விடுக்கலாம்.

    * இந்த அமைப்பின் ஒட்டுமொத்த வழிகாட்டுதலின்படி அணைகள் இயக்கப்படும்.

    * ஒழுங்குமுறை குழுவின் உதவியுடன் அணைகளை திறப்பது, நீர் திறப்பை ஒழுங்குபடுத்துவதை இந்த அமைப்பு கண்காணிக்கும்.

    * கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் இரு மாநிலங்களின் எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் கண்காணிக்கப்பட்டு அளவிடப்படும்.

    * காவிரி படுகையில் உள்ள அனைத்து அணைகளும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக் கும். மாநில அரசின் துணையுடன் இந்த குழு அணைகளில் உள்ள நீர் இருப்பு, பங்கீட்டு விகிதம் ஆகியவற்றை மேற்பார்வை செய்யும்.

    * இந்த அமைப்பில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களின் பரிந்துரையின் பேரில் அணைகளில் இருந்து நீர் திறக்கப்படும்.

    * எந்த மாநிலமாவது காவிரி நடுவர் மன்றம் அல்லது சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி 16-ந் தேதி வழங்கிய தீர்ப்பின்படி தண்ணீரை பகிர்ந்து கொள்ள ஒத்துழைக்க மறுத்தால் இந்த அமைப்பு மத்திய அரசை அணுகும். மத்திய அரசு எடுக்கும் முடிவு இறுதியாக இருப்பதோடு, அந்த முடிவு மாநிலங்களை கட்டுப்படுத்தும்.

    * ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் அணைகளில் உள்ள நீர் இருப்பு எவ்வளவு என்பதை இந்த அமைப்பு ஆய்வு செய்யும்.

    * ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ந் தேதிக்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஆண்டறிக்கை தயார் செய்து அனுப்பும்.

    * வறட்சி காலங்களில் தண்ணீரை பகிர்ந்து கொள்வது பற்றியும் இந்த அமைப்பு முடிவு செய்யும்.

    * இந்த அமைப்பின் தலைமையகம் பெங்களூருவில் செயல்படும்.

    * இந்த அமைப்பின் நிர்வாகச் செலவு, தலைவர், உறுப்பினர்களின் ஊதியம் ஆகியவற்றில் 80 சதவீதத்தை தமிழகமும் கர்நாடகமும் தலா 40 சதவீதம் வீதம் பகிர்ந்து கொள்ள வேண்டும். கேரள மாநிலம் 15 சதவீதத்தையும், புதுச்சேரி 5 சதவீதத்தையும் தங்கள் பங்களிப்பாக அளிக்க வேண்டும்.

    காவிரி ஒழுங்காற்று குழுவிலும் தலைவர், 4 மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினர் மற்றும் பிற உறுப்பினர்கள் இடம் பெற்று இருப்பார்கள். இந்த குழு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை கூடும். அதன்பிறகு 15 நாட்களுக்கு ஒருமுறை கூடும். அவசர காலங்களில் தேவைக்கேற்ப கூட்டங்கள் நடைபெறும்.

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த வரைவு செயல்திட்டம் தமிழகத்துக்கு பலன் தருமா? அல்லது பாதகமாக அமையுமா? என்பது, அதில் உள்ள அம்சங்கள் செயல் பாட்டுக்கு வரும்போதுதான் தெரியவரும்.  #CauveryMangementBoard #CauveryDraftScheme
    ×