என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Air-India"
- விமானத்தில் மற்றொரு ஆண் பயணி குடிபோதையில் கழிவறைக்குள் புகைப்பிடித்த சம்பவமும் நிகழ்ந்தது.
- ஏர் இந்தியாவின் பொறுப்பு கூறல் மேலாளருக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது.
புதுடெல்லி:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சங்கர் மிஷ்ரா என்ற தனியார் நிறுவன அதிகாரி, குடிபோதையில் சக பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, சங்கர் மிஷ்ரா மீது வழக்குபதிவு செய்யப்பட்டு கடந்த 7-ந்தேதி அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் 4 மாதங்கள் ஏர் இந்தியா விமானத்தில் பறக்க தடைவிதிக்கப்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் இதேபோல ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஆண் பயணி ஒருவர் தனது அருகில் அமர்ந்திருந்த பெண் பயணி கழிவறைக்கு சென்றிருந்த நேரத்தில் அவரது இருக்கையில் இருந்த போர்வையில் சிறுநீர் கழித்தார். மேலும் அதே விமானத்தில் மற்றொரு ஆண் பயணி குடிபோதையில் கழிவறைக்குள் புகைப்பிடித்த சம்பவமும் நிகழ்ந்தது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக ஏர் இந்தியாவின் பொறுப்பு கூறல் மேலாளருக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஏர் இந்தியா நிறுவனம் தனது பதிலை சமர்பித்தது. அதனை சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் பரிசீலனை செய்தது.
அதைத்தொடர்ந்து, பாரீஸ்-டெல்லி விமானத்தில் நடந்த இந்த 2 சம்பவங்கள் குறித்தும் முறைப்படி புகார் அளிக்கவில்லை என கூறி ஏர் இந்திய நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் நேற்று ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.
முன்னதாக நியூயார்க்-டெல்லி விமானத்தில் ஆண் பயணி, சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் கடந்த 20-ந்தேதி ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
- விமானத்தின் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் பயணம் செய்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
- விமான சேவைகள் இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சங்கர் மிஷ்ரா என்ற தனியார் நிறுவன அதிகாரி, குடிபோதையில் சக பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்து விட்டதாக எழுந்த புகார், இப்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இது தொடர்பாக சங்கர் மிஷ்ரா மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 294 (பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்ளுதல்), 354 (பெண்ணை மானபங்கப்படுத்துதல்). 510 (குடிபோதையில் பொது இடத்தில் ஒழுங்கின்றி நடந்து கொள்ளுதல்) மற்றும் ஏர் இந்தியா விதிகளின் கீழ் டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சங்கர் மிஸ்ரா கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் 4 மாதங்கள் ஏர் இந்தியா விமானத்தில் பறக்க நேற்று முன்தினம் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
இந்த விவகாரம், சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகத்தின் கவனத்துக்கு கடந்த 4-ம் தேதிதான் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவின் பொறுப்பு கூறல் மேலாளர், விமான சேவை இயக்குனர், விமானிகள், சிப்பந்திகள் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில், ஒழுங்குமுறை கடமைகளை மீறியதில் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பப்பட்டது. அவர்களிடம் இருந்து அதற்கான பதில்கள் பெறப்பட்டன. அவற்றை சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் பரிசீலனை செய்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. சம்பவம் அரங்கேறிய விமானத்தின் விமானியின் லைசென்ஸ் 3 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. விமான சேவைகள் இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் நடவடிக்கைகளை ஏற்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
- அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது.
- அதில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் 26-ம் தேதி ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் தற்போது தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவன பணியாளர்களுக்கு தலைமை செயல் அதிகாரி கேம்பெல் வில்சன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிறுநீர் கழித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பயணியின் வெறுப்பு முற்றிலும் புரிந்துகொள்ளக் கூடியது. அவரது துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.
அறிக்கை செய்யப்பட்டதை விட சம்பவம் சிக்கலானதாக இருக்கிறது. அதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் தெளிவாக உள்ளன. விமானத்தில் ஒரு சம்பவம் முறையற்ற நடத்தையை கொண்டிருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினர் இடையே
தீர்க்கப்பட்டு விட்டதாக இருந்தாலும் அதை ஆரம்பத்தில் பணியாளர்கள், அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
- விமானத்தின் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் பயணம் செய்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
- அறிக்கை அளிக்கும்படி விமான நிறுவனத்திடம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கோரியுள்ளது.
புதுடெல்லி:
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து இந்தியா வந்த, ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது, போதையில் இருந்த மற்றொரு பயணி சிறுநீர் கழித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 26ஆம் தேதி விமானத்தின் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் பயணம் செய்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா குழுமத் தலைவர் என் சந்திரசேகரனுக்கு, பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதியுள்ளார். அதில், "நான் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தேன். ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் தூங்க ஏதுவாக விளக்கு அணைக்கப்பட்ட வேளையில் ஒரு போதை ஆசாமி என் இருக்கைக்கு அருகே வந்தார். நான் சுதாரிப்பதற்குள் அவர் அங்கே சிறுநீர் கழித்தார். அதன்பின்னரும் கூட அவர் ஆடையை சரி செய்யாமல் ஆபாசமாக நின்றார். என் உதவிக் குரல் கேட்டு சக பயணிகள் அந்த நபரை அப்புறப்படுத்தினர். விமான சிப்பந்திகள் எனக்கு வேறு ஆடை அளித்தனர். அந்த இருக்கையின் மீது வேறு சீட் விரித்தனர். நான் எனக்கு ஏற்பட்ட துயரம் பற்றி புகார் அளித்தேன். ஆனால் விமானம் தரையிறங்கிய பின்னர் அந்த நபர் எதுவுமே நடக்காததுபோல் இறங்கிச் சென்றார். இந்த விஷயத்தில் விமான சிப்பந்திகள் மெத்தனமாக இருந்துவிட்டனர்" என்று கூறியிருந்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் ஒரு மாதத்திற்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஏர் இந்தியா இன்று தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா சார்பில் அந்த நபர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கும்படி விமான நிறுவனத்திடம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கோரியுள்ளது. இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் கூறி உள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான ஏர்இந்தியா நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானத்தை இயக்கி வருகிறது. மேலும் அலையன்ஸ் ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய துணை நிறுவனங்களின் பயணிகள் விமானத்தையும் இந்த நிறுவனம் இயக்கி வருகிறது. இந்தநிலையில் பயணிகள் சேவைக்கான கம்யூட்டர் சாப்ட்வேரில் நேற்று முன்தினம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதும் ஏர் இந்தியா விமானத்தின் சேவை பாதிக்கப்பட்டது.
இதேபோல் நேற்று அதிகாலை 3.30 மணி முதல் காலை 8.45 மணி வரை பயணிகள் சாப்ட்வேர் செயல்படவில்லை. இதன்காரணமாக 137 விமானங்கள் சேவையில் தாமதம் ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின அதிகாரி ஒருவர் கூறும்போது, “பயணிகள் சேவைக்கான சாப்ட்வேர் நேற்று அதிகாலை முதல் சுமார் 5 மணிநேரம் வரை செயல்படாததால் முதலாவது பிரிவான டெல்லி -மும்பை பிரிவில் உள்ள 137 விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது” என்றார். #AirIndia #FlightDelay
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 -ம் ஆண்டு பதவி ஏற்றார். பிரதமராக பதவியேற்றதில் இருந்து வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அடிக்கடி அவர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது சர்ச்சையானது.
பிரதமராக பதவி ஏற்ற ஒரு ஆண்டுக்குள் 2014-ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 2015-ம் ஆண்டு ஜுன் மாதம் வரை மட்டும் 20 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். இதற்காக அரசு சார்பில் ரூ.37.22 கோடி செலவிடப்பட்டது. இதன் பிறகு ஆண்டுதோறும் இதை விட அதிகமான தொகை பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவழிக்கப்பட்டது.
இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பா.ஜனதா கட்சியினர் நாட்டின் தொழில்வளத்தை உயர்த்த புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்காக பிரதமர் பல்வேறு நாடுகளுக்குச் செல்கிறார் என்று விளக்கம் அளித்தனர்.
ஏர் இந்தியா விமான நிறுவனம் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான பில் தொகையை சமீபத்தில் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது. அதில் 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு நாடுகளுக்கு 44 பயணங்கள் சென்றுள்ளார்.
ஒரே பயணத்தில் ஆறு நாடுகளுக்கு சென்றது, இரண்டு நாடுகளுக்கு மேல் சென்றது என பல்வேறு பயணங்கள் இதில் அடங்கும். இதற்காக 443.4 கோடி ரூபாய் கட்டணம் ஆகியுள்ளது என பிரதமர் அலுவலகத்துக்கு ஏர் இந்தியா விமானம் நிறுவனம் பில் அனுப்பியுள்ளது.
மன்மோகன் சிங்கைவிட நிறைய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த மோடி அவரைவிட ரூ.50 கோடி குறைவான செலவில் பயணம் செய்தது எப்படி என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே பயணத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல நாடுகளுக்கு சென்றதால் ஏர் இந்தியாவுக்கான கட்டணம் குறைந்துள்ளது. பிரதமர் தனது வெளிநாட்டு பயணங்கள் பற்றிய பேட்டியிலேயே ஒரே டிக்கெட்டில் நிறைய நாடுகள் என்று இதை குறிப்பிட்டு இருக்கிறார். 44 பயணங்களில் 16 பயணங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு சென்று இருக்கிறார்.
விரைவில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் செல்ல இருக்கிறார். இந்த ஆட்சி காலத்தில் அவரது கடைசி வெளிநாட்டு பயணமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. #AirIndia #PMModi
புதுடெல்லி:
டெல்லி விமான நிலையத்தில் சமீபத்தில் பயணிகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் வழங்கிய விமான டிக்கெட்டில் பிரதமர் மோடி, குஜராத் முதல்- மந்திரி விஜய்ரூபானி ஆகியோரது படங்கள் அச்சிடப்பட்டு இருந்தன.
இது குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பி இருந்தனர். தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த டிக்கெட்டுகள் திரும்ப பெறப்படுகின்றன.
இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-
அந்த டிக்கெட்டுகள் ஜனவரியில் அச்சிடப்பட்டவை. அதில் உள்ள மோடி, விஜய் ரூபானியின் படங்கள் இடம் பெற்ற விளம்பரம் அப்போது குஜராத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டுக்காக வெளியிடப்பட்டது. 3-வது நபர் அளித்த விளம்பரத்தின் அடிப்படையில் இந்த படங்கள் அச்சிடப்பட்டன.
இந்த டிக்கெட்டுகள் குஜராத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வினியோகிக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் தேர்தல் நடத்தை விதி மீறல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஏர் இந்தியா அந்த விமான டிக்கெட்டுகளை உடனடியாக திரும்ப பெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #PMModi #airindia
மும்பையில் உள்ள ஏர் இந்தியா விமான நிலைய (இயக்கங்கள்) கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்மநபரிடம் இருந்து இன்று ஒரு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப் போவதாக வந்த மிரட்டலையடுத்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமை அவசரகால சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
விமான நிலையங்களை பாதுகாக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் விமானச்சேவை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மிகவும் கவனமாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, அனைத்து விமான நிலையங்களின் உள்பகுதி, விமான நிலையங்களை சுற்றியுள்ள இதர வளாகப்பகுதி, விமானங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களை தீவிரமாக கண்காணித்து உரிய பரிசோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்க வேண்டும்.
விமான நிலையத்தின் வெளி நுழைவு வாயில் தொடங்கி அத்தனை பகுதிகளிலும் அதிகப்படுத்தப்பட்ட சோதனைக்கு பின்னரே பயணிகள், பார்வையாளர்கள் மற்றும் சரக்குகளை உள்ளே அனுமதிக்க வேண்டும்.
விமான நிலையங்களில் உள்ள சரக்கு முனையம், உணவு விடுதிகள், அங்காடிகள் ஆகியவற்றில் விழிப்புணர்வுடன் கூடிய பரிசோதனை மற்றும் பாதுகாப்பு செய்யப்பட வேண்டும்.
கண்காணிப்பு கேமராக்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதுடன் அனைத்து பகுதிகளிலும் ஆயுதமேந்திய பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
மேலும். சூழ்நிலைக்கேற்ப அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுதாரிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அந்த சுற்றரிக்கை மூலம் எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விமான கடத்தல் (தடுப்பு) சட்டத்தின்படி விமான கடத்தல்காரர்களை கண்டதும் சுட்டுக் கொல்லவும், உயிருடன் பிடிபடும் குற்றவாளிகளுக்கு விசாரணைக்கு பின்னர் மரண தண்டனை விதிக்கவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #hijackcall #AirIndiahijacka #BCAS #CISFtightensecurity
பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, ரூ.55 ஆயிரம் கோடி கடனில் சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில், ஏர் இந்தியாவுக்கு புத்துயிரூட்டும் திட்டத்தை உருவாக்கி இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளும் எடுக்கப்படும். முந்தைய ஆட்சியில், விமான வழித்தடங்களை சிறப்பாக பயன்படுத்தாததும், அவற்றை வேறு நிறுவனங்களுக்கு அளித்ததுமே ஏர் இந்தியாவின் மோசமான நிலைக்கு காரணம்” என்றார்.#JayantSinha #AirIndia
மும்பையில் இருந்து கடந்த 10ம் தேதி சென்ற ஏர் இந்தியா சர்வதேச விமானத்தில் மதுபோதையில் இருந்த பெண் ஒருவர், அதிக மது கொடுக்காததால் விமான ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். நான் ஒரு சர்வதேச வக்கீல், நீங்கள் பணம் பறிப்பவர்கள் என கூறி தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
மற்றொரு வீடியோவில், பாலஸ்தீன மக்களுக்கு உதவிய ஒரு சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞர் என்று அந்த பெண் கத்துகிறார். #AirIndia
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 9-11-2018 அன்று பிற்பகல் 1.15 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகருக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் துணை விமானியாக இருந்த கேப்டன் அரவிந்த் கத்பாலியா என்பவர் மது போதை தொடர்பான பரிசோதனை கருவிக்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு விமானத்தில் ஏறிச் சென்றது டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, பறந்து கொண்டிருந்த விமானத்தை உடனடியாக தரையிறக்குமாறு கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். அரவிந்த் கத்பாலியா மூத்த விமானியாக மட்டுமில்லாமல் ஏர் இந்தியா நிறுவனத்தின் இயக்கங்கள் (போக்குவரத்து) துறை இயக்குனராகவும் பதவி வகித்து வந்தார்.
அந்த விமானம் டெல்லிக்கு திரும்பி தரையிறங்கியதும் அரவிந்த் கத்பாலியாவிடம் 'பிரீத் அனலைஸர்’ கருவி மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் மது போதையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய விமானிகள் சங்கம் வலியுறுத்தியது.
இதன் விளைவாக விமானிகளுக்கான விதி எண் 24-ஐ மீறி நடந்துகொண்ட குற்றத்துக்காக அரவிந்த் கத்பாலியா அடுத்த மூன்றாண்டுகளுக்கு விமானம் ஓட்ட தடை விதித்தும், அவரது விமானி லைசென்சை அதுவரை ரத்து செய்தும் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குனரகம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் இயக்கங்கள் (போக்குவரத்து) துறை இயக்குனர் பதவியில் இருந்தும் இன்று அவர் நீக்கப்பட்டுள்ளார். #DelhiBangkokflight #AirIndiacopilot #preflightTest #BreathAnalyserTest #Kathpalia #AIDirectorOperations
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்