search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Air-India"

    • விமானம் டெல்லியை அடைந்ததும், அந்த பயணியை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சமீபகாலமாக விமானங்களில் ஊழியர்களிடம் பயணிகள் அத்துமீறி நடந்துகொள்வதும், கைகலப்பில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோவாவில் இருந்து நேற்று டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் ஊழியரை தாக்கி உள்ளார். விமானம் டெல்லியை அடைந்ததும், அந்த பயணியை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பாக விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-

    விமானத்தில் பயணித்த ஒரு பயணி, ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஒரு ஊழியரை தாக்கி உள்ளார். டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோதும், அந்த பயணி ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். எனவே, அவர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் புகார் அளித்துள்ளோம். பயணிகளின் பாதுகாப்புடன் உங்கள் பணியாளர்களின் பாதுகாப்பும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது,

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக விதிகளின் படி, அத்துமீறி நடக்கும் விமானப் பயணிக்கு, அவர் செய்த குற்றத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட காலத்திற்கு விமானத்தில் பறக்க தடை விதிக்கலாம்.

    • விமான நிலையத்தில் அனுமதி கிடைத்ததும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
    • பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லியில் இருந்து கனடாவின் வான்கூவர் நகருக்கு இன்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது. டேக் ஆப் ஆன சில நிமிடங்களில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் டெல்லிக்கே திருப்பினார். டெல்லி விமான நிலையத்தை தொடர்புகொண்டு, விமானத்தில் கோளாறு கண்டறியப்பட்டிருப்பதாகவும், உடனடியாக தரையிறக்க அனுமதி வேண்டும் என்றும் கூறினார்.

    விமான நிலையத்தில் அனுமதி கிடைத்ததும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் விமான நிலையத்தில் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இத்தகவலை ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணிகள் எத்தனை பேர் இருந்தார்கள்? என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. 

    • விமானியின் செயல் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளுக்கு எதிரானது.
    • விமானத்தை இயக்கிய விமானி தனது அதிகாரத்தை கொண்டு விமான விதிகள் 1937-ஐ மீறியிருக்கிறார்.

    துபாயில் இருந்து டெல்லி வந்த விமானத்தின் காக்பிட்டில் தனது பெண் தோழியை பயணிக்க செய்த விமானி மூன்று மாதங்களுக்கு பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியாவுக்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

     

    "விமான பயணி ஒருவரை காக்பிட்டிற்குள் அனுமதித்து பயணம் செய்ய வைத்த விமானியின் செயல் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளுக்கு எதிரானது. பாதுகாப்பு விதிகளை மீறிய இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் முறையான நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டது," என்று டிஜிசிஏ தெரிவித்து இருக்கிறது.

    "மிக முக்கியமான பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்தாமல், முறையான நடவடிக்கை எடுக்க தவறிய ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் விமானத்தை இயக்கிய விமானி தனது அதிகாரத்தை கொண்டு விமான விதிகள் 1937-ஐ மீறிய குற்றத்திற்காக மூன்று மாதங்களுக்கு பணிஇடைநீக்கம் செய்யப்படுகிறார். இந்த விதிமீறலை தடுக்காமல் இருந்த துணை விமானிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது," என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
    • உணவு பொருட்களால் தேள் விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    நாக்பூரில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண்ணை தேள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றது.

    தேள் கொட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் பயணி விமான நிலையத்தில் திரையிறங்கியதும் அவரை மருத்துவர் பரிசோதனை செய்தார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    "கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் AI 630-இல் பயணித்த பெண்ணை தேள் கொட்டியது. இதுபோன்ற சம்பவம் அரங்கேறுவது மிகவும் அரிதான ஒன்று ஆகும்," என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் தேள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விமானத்தில் வேறு ஏதேனும் பூச்சிக்கள் நுழைவதை தடுக்கும் வகையில், புகை போடப்பட்டது. இதோடு விமானத்தின் உணவு துறையிடம் அவர்களது பகுதியை முழுமையாக சோதனை செய்ய ஏர் இந்தியா வலியுறுத்தியது.

    உணவு பொருட்களால் தேள் விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்பதால், அந்த பகுதியில் தேவைப்படும் பட்சத்தில் புகை போடவும் வலியுறுத்தி இருக்கிறது. முன்னதாக பறக்கும் விமானத்தில் பல்லி மற்றும் ஊர்வனங்கள் நுழைந்த சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

    • பறவை மோதியதால் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
    • டெல்லி விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இருந்து இன்று மாலை டெல்லி நோக்கி 180 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்படது.

    உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து, விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, விமானத்தை தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விமான பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

    பறவை மோதியதால் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. விமானத்தில் விரிசல் ஏற்பட்ட கண்ணாடி மாற்றப்பட்டு பாதுகாப்பு வசதிகள் சரியாக உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

    • கிளார்க் போன்ற பொதுப்பிரிவு ஊழியர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • ஏர் இந்தியாவில் விமானிகள் உள்பட சுமார் 11 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.

    புதுடெல்லி :

    பெரும் கடன் நெருக்கடியில் சிக்கியிருந்த மத்திய அரசின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் கடந்த ஆண்டு ஜனவரியில் வாங்கியது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை ஏர் இந்தியா வெளியிட்டது. இதில் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    இதற்கு சுமார் 4,200 ஊழியர்கள் தகுதிவாய்ந்தவர்களாக கருதப்பட்ட நிலையில், சுமார் 1,500 ஊழியர்கள் இதை ஏற்று விருப்ப ஓய்வு பெற்றனர்.

    இதன் தொடர்ச்சியாக மீண்டும் விருப்ப ஓய்வு திட்டத்தை ஏர் இந்தியா அறிவித்து உள்ளது. இதில் கிளார்க் போன்ற பொதுப்பிரிவு ஊழியர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி 40 மற்றும் அதற்கு மேல் வயதுடைய ஊழியர்கள், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியில் இருந்தால் இந்த திட்டத்தில் பங்கேற்கலாம். அந்தவகையில் சுமார் 2,100 ஊழியர்கள் இந்த சலுகையை பெற முடியும்.

    இதற்காக 17-ந்தேதி (நேற்று) முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 30-ந்தேதி வரை விண்ணப்பிக்க முடியும்.

    இதில் விண்ணப்பிக்கும் ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை நிவாரணமாகவும் வழங்கப்படும். அதேநேரம் வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிப்பவர்களுக்கு கூடுதலாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்து உள்ளது.

    தற்போதைய நிலையில் ஏர் இந்தியாவில் விமானிகள் உள்பட சுமார் 11 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.

    பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தை வளர்ச்சியின் பாதையில் செலுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • முதலாவது ஏ350 ரக விமானம், இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களிடம் ஒப்படைக்கப்படும்.
    • அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்து விமானங்களும் வந்து சேர்ந்து விடும்.

    புதுடெல்லி :

    மத்திய பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டாடா குழுமம் விலைக்கு வாங்கியது.

    இந்தநிலையில், ஏர் இந்தியாவை விரிவுபடுத்தும் நோக்கத்தில், 840 விமானங்களை வாங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த ஏர்பஸ், போயிங் ஆகிய விமான நிறுவனங்களிடம் இருந்து 840 விமானங்கள் வாங்க 'ஆர்டர்' கொடுத்துள்ளது.

    இதுகுறித்து ஏர் இந்தியாவின் தலைமை வர்த்தக அதிகாரி நிபுன் அகர்வால் கூறியதாவது:-

    ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களும் வாங்கப்படும். மீதி 370 விமானங்களை கொள்முதல் உரிமத்துடன் வாங்குவோம்.

    முதலாவது ஏ350 ரக விமானம், இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களிடம் ஒப்படைக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்து விமானங்களும் வந்து சேர்ந்து விடும்.

    கடந்த 2005-ம் ஆண்டு ஏர் இந்தியா 111 விமானங்களை வாங்க 'ஆர்டர்' அளித்தது. அதன்பிறகு, கடந்த 17 ஆண்டுகளில் ஏர் இந்தியா விமானங்களை கொள்முதல் செய்வது இதுவே முதல்முறை ஆகும்.

    ஏர் இந்தியாவின் மிகப்பெரிய விமான ஆர்டர் இதுதான். இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் இது மைல்கல்லாக அமையும். ஏர் இந்தியாவை உலகத்தரமான விமான நிறுவனமாக மாற்றுவதற்காகவும், உலகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடைவிடாமல் விமான சேவையை அளிப்பதற்காகவும் விமானங்களை வாங்குகிறோம்.

    இதுதவிர, விமான என்ஜின்களை நீண்ட காலம் பராமரிப்பதற்காக சி.எப்.எம்.இன்டர்நேஷனல், ரோல்ஸ்ராய்ஸ், ஜிஈ ஏரோஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏர்பஸ், போயிங் நிறுவனங்களிடம் இருந்து ஏர் இந்தியா விமானங்கள் வாங்குவதை பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஏற்கனவே வரவேற்றுள்ளனர்.

    • புதிய விமானங்களை வாங்குவதற்கான அறிவிப்பு வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம், பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 சிவில் விமானங்களையும், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் வாங்க உள்ளது. இதற்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

    புதிய விமானங்களை வாங்குவதற்கான அறிவிப்பு வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், ரத்தன் டாடா, பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய சந்திரசேகரன், ஏர்பஸ் விமான நிறுவனத்தின் தயாரிப்பான, அகலம் அதிகமாக இருக்கக்கூடிய A350 ரக விமானங்கள் 40 வாங்க உள்ளதாகவும், அகலம் குறைவான 210 விமானங்கள் வாங்க உள்ளதாகவும், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.

    ஏர்பஸ் விமான நிறுவனத்துடன் டாடா நிறுவனம் நல்லுறவை கொண்டிருப்பதாகத் தெரிவித்த சந்திரசேகரன், 250 விமானங்கள் வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

    இதேபோல் அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து 20 போயிங் 787 ரக விமானங்கள், 10 போயிங் 777-9s அகலமான விமானங்கள் மற்றும் 190 போயிங் 737MAX அகலம் குறைவான விமானங்கள் வாங்கப்படுகின்றன. விமான வர்த்தக வரலாற்றில் இது மிகப்பெரிய கொள்முதலாக கருதப்படுகிறது.

    • நடிகை குஷ்பு விபத்தில் சிக்கி காலில் அடிபட்டு கட்டு போட்டுள்ளார்.
    • ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினர்.

    சென்னை

    நடிகை குஷ்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியூர் செல்லும் பயணத்துக்கான ஏற்பாடுகளில் இருந்தபோது விபத்தில் சிக்கி காயமடைந்ததாக வலைத்தளத்தில் தெரிவித்து முழங்காலில் கட்டுப்போட்டு இருந்த புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தார்.

    அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினர்.

    இந்த நிலையில் வெளியூர் செல்ல காலை சென்னை விமான நிலையத்துக்கு சென்ற குஷ்பு அங்கு கால் வலியோடு இருந்த தனக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் உடனடியாக சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து தரவில்லை என்று சாடி உள்ளார்.

    டுவிட்டரில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டேக் செய்து குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், "முழங்காலில் காயத்துடன் இருக்கும் பயணியை அழைத்து செல்ல சக்கர நாற்காலி கூடவா உங்களிடம் இல்லை. சக்கர நாற்காலிக்காக சென்னை விமான நிலையத்தில் அரைமணிநேரம் காத்து இருந்தேன்.

    அதன்பிறகு வேறு விமான நிறுவனத்திடம் இருந்து சக்கர நாற்காலியை வாங்கி வந்து என்னை அழைத்துச் சென்றனர். நீங்கள் சிறந்த சேவை செய்ய முடியும் என்று என்னால் உறுதி சொல்ல முடியும்'' என்று பதிவிட்டு இருந்தார். இது பரபரப்பானது.

    இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டு டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விவகாரம் உடனடியாக சென்னை விமான நிலையை குழுவுக்கு கொண்டு செல்லப்படும்'' என்று தெரிவித்து உள்ளது.

    • விமானத்தில் மற்றொரு ஆண் பயணி குடிபோதையில் கழிவறைக்குள் புகைப்பிடித்த சம்பவமும் நிகழ்ந்தது.
    • ஏர் இந்தியாவின் பொறுப்பு கூறல் மேலாளருக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சங்கர் மிஷ்ரா என்ற தனியார் நிறுவன அதிகாரி, குடிபோதையில் சக பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்தார்.

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, சங்கர் மிஷ்ரா மீது வழக்குபதிவு செய்யப்பட்டு கடந்த 7-ந்தேதி அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் 4 மாதங்கள் ஏர் இந்தியா விமானத்தில் பறக்க தடைவிதிக்கப்பட்டது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் இதேபோல ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

    கடந்த ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஆண் பயணி ஒருவர் தனது அருகில் அமர்ந்திருந்த பெண் பயணி கழிவறைக்கு சென்றிருந்த நேரத்தில் அவரது இருக்கையில் இருந்த போர்வையில் சிறுநீர் கழித்தார். மேலும் அதே விமானத்தில் மற்றொரு ஆண் பயணி குடிபோதையில் கழிவறைக்குள் புகைப்பிடித்த சம்பவமும் நிகழ்ந்தது.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக ஏர் இந்தியாவின் பொறுப்பு கூறல் மேலாளருக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஏர் இந்தியா நிறுவனம் தனது பதிலை சமர்பித்தது. அதனை சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் பரிசீலனை செய்தது.

    அதைத்தொடர்ந்து, பாரீஸ்-டெல்லி விமானத்தில் நடந்த இந்த 2 சம்பவங்கள் குறித்தும் முறைப்படி புகார் அளிக்கவில்லை என கூறி ஏர் இந்திய நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் நேற்று ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.

    முன்னதாக நியூயார்க்-டெல்லி விமானத்தில் ஆண் பயணி, சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் கடந்த 20-ந்தேதி ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

    • விமானத்தின் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் பயணம் செய்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
    • விமான சேவைகள் இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சங்கர் மிஷ்ரா என்ற தனியார் நிறுவன அதிகாரி, குடிபோதையில் சக பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்து விட்டதாக எழுந்த புகார், இப்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

    இது தொடர்பாக சங்கர் மிஷ்ரா மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 294 (பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்ளுதல்), 354 (பெண்ணை மானபங்கப்படுத்துதல்). 510 (குடிபோதையில் பொது இடத்தில் ஒழுங்கின்றி நடந்து கொள்ளுதல்) மற்றும் ஏர் இந்தியா விதிகளின் கீழ் டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சங்கர் மிஸ்ரா கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் 4 மாதங்கள் ஏர் இந்தியா விமானத்தில் பறக்க நேற்று முன்தினம் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

    இந்த விவகாரம், சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகத்தின் கவனத்துக்கு கடந்த 4-ம் தேதிதான் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவின் பொறுப்பு கூறல் மேலாளர், விமான சேவை இயக்குனர், விமானிகள், சிப்பந்திகள் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில், ஒழுங்குமுறை கடமைகளை மீறியதில் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பப்பட்டது. அவர்களிடம் இருந்து அதற்கான பதில்கள் பெறப்பட்டன. அவற்றை சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் பரிசீலனை செய்தது.

    இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. சம்பவம் அரங்கேறிய விமானத்தின் விமானியின் லைசென்ஸ் 3 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. விமான சேவைகள் இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் நடவடிக்கைகளை ஏற்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

    • அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது.
    • அதில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் 26-ம் தேதி ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் தற்போது தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவன பணியாளர்களுக்கு தலைமை செயல் அதிகாரி கேம்பெல் வில்சன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    சிறுநீர் கழித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பயணியின் வெறுப்பு முற்றிலும் புரிந்துகொள்ளக் கூடியது. அவரது துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.

    அறிக்கை செய்யப்பட்டதை விட சம்பவம் சிக்கலானதாக இருக்கிறது. அதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் தெளிவாக உள்ளன. விமானத்தில் ஒரு சம்பவம் முறையற்ற நடத்தையை கொண்டிருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினர் இடையே

    தீர்க்கப்பட்டு விட்டதாக இருந்தாலும் அதை ஆரம்பத்தில் பணியாளர்கள், அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    ×