search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஏர் இந்தியா விமானத்தில் இருந்த தேள் - பெண் பயணியை கொட்டியதால் பரபரப்பு
    X
    ஏர் இந்தியா விமானம்

    ஏர் இந்தியா விமானத்தில் இருந்த தேள் - பெண் பயணியை கொட்டியதால் பரபரப்பு

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
    • உணவு பொருட்களால் தேள் விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    நாக்பூரில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண்ணை தேள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றது.

    தேள் கொட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் பயணி விமான நிலையத்தில் திரையிறங்கியதும் அவரை மருத்துவர் பரிசோதனை செய்தார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    "கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் AI 630-இல் பயணித்த பெண்ணை தேள் கொட்டியது. இதுபோன்ற சம்பவம் அரங்கேறுவது மிகவும் அரிதான ஒன்று ஆகும்," என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் தேள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விமானத்தில் வேறு ஏதேனும் பூச்சிக்கள் நுழைவதை தடுக்கும் வகையில், புகை போடப்பட்டது. இதோடு விமானத்தின் உணவு துறையிடம் அவர்களது பகுதியை முழுமையாக சோதனை செய்ய ஏர் இந்தியா வலியுறுத்தியது.

    உணவு பொருட்களால் தேள் விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்பதால், அந்த பகுதியில் தேவைப்படும் பட்சத்தில் புகை போடவும் வலியுறுத்தி இருக்கிறது. முன்னதாக பறக்கும் விமானத்தில் பல்லி மற்றும் ஊர்வனங்கள் நுழைந்த சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

    Next Story
    ×