என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
முறைகேடான சம்பவத்தை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் - ஊழியர்களுக்கு விமான நிறுவனம் உத்தரவு
- அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது.
- அதில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் 26-ம் தேதி ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் தற்போது தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவன பணியாளர்களுக்கு தலைமை செயல் அதிகாரி கேம்பெல் வில்சன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிறுநீர் கழித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பயணியின் வெறுப்பு முற்றிலும் புரிந்துகொள்ளக் கூடியது. அவரது துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.
அறிக்கை செய்யப்பட்டதை விட சம்பவம் சிக்கலானதாக இருக்கிறது. அதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் தெளிவாக உள்ளன. விமானத்தில் ஒரு சம்பவம் முறையற்ற நடத்தையை கொண்டிருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினர் இடையே
தீர்க்கப்பட்டு விட்டதாக இருந்தாலும் அதை ஆரம்பத்தில் பணியாளர்கள், அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்