என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
வான்கூவர் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. மீண்டும் டெல்லிக்கு திரும்பியது
- விமான நிலையத்தில் அனுமதி கிடைத்ததும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
- பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லியில் இருந்து கனடாவின் வான்கூவர் நகருக்கு இன்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது. டேக் ஆப் ஆன சில நிமிடங்களில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் டெல்லிக்கே திருப்பினார். டெல்லி விமான நிலையத்தை தொடர்புகொண்டு, விமானத்தில் கோளாறு கண்டறியப்பட்டிருப்பதாகவும், உடனடியாக தரையிறக்க அனுமதி வேண்டும் என்றும் கூறினார்.
விமான நிலையத்தில் அனுமதி கிடைத்ததும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் விமான நிலையத்தில் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இத்தகவலை ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணிகள் எத்தனை பேர் இருந்தார்கள்? என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்