search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abuse"

    பீகார் மாநிலத்தில் அரசு நிதியுதவி பெறும் சிறுமியர் காப்பகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை இன்று மத்திய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. #CBIinvestigation #abuseofminorgirls #MuzaffarpurShelterHome
    பாட்னா:

    பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சாஹூ சாலையில் அரசு நிதியுதவி பெறும் சிறுமியர் காப்பகம் ஒன்றுள்ளது. இங்கு சுமார் 40 சிறுமியர் தங்கியுள்ளனர். இந்த காப்பகத்தின் நிர்வாகிகள் சிறுமிகளை கற்பழித்ததாகவும், ஒரு பெண்ணை அடித்துக் கொன்று காப்பக வளாகத்துக்குள் புதைத்து விட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

    இதைதொடர்ந்து, இங்குள்ள சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தபோது அவர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.

    காப்பகத்தில் உள்ள இரு சிறுமிகள் அளித்த தகவலின் அடிப்படையில் மோப்ப நாய்களுடன் வந்த போலீசார் காப்பக வளாகத்தில் புதைக்கப்பட்ட பிணைத்தை கைப்பற்றுவதற்காக தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனைக்கு மறுப்பு தெரிவித்த காப்பகத்தை சேர்ந்த சுமார் பத்து பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என சமூக ஆர்வலர்கள் கருதினர். இதே கருத்தை முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் மகனான தேஜஸ்வி யாதவ் நேற்று வலியுறுத்தினார்.

    இந்நிலையில், இந்த காப்பகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை இன்று மத்திய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பீகார் மாநில அரசின் பரிந்துரையை ஏற்று இந்த காப்பகத்தில் உள்ள சிறுமியர்களுக்கு மனதளவிலும், உடல்ரீதியாகவும் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பாக காப்பக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க தொடங்கி உள்ளனர். #CBIinvestigation #abuseofminorgirls #MuzaffarpurShelterHome
    கருவில் ஜனித்த பெண் சிசுவை அழிப்பதில் தொடங்கி மரணம் வரை பெண்களைப் பின் தொடரும் வன்முறை, வக்கிரங்களின் வகைகளைப் பட்டியலிட்டால் தீராது.
    கருவில் ஜனித்த பெண் சிசுவை அழிப்பதில் தொடங்கி மரணம் வரை பெண்களைப் பின் தொடரும் வன்முறை, வக்கிரங்களின் வகைகளைப் பட்டியலிட்டால் தீராது. அதில் சமீபகாலமாக இணைந்திருக்கிறது ஸ்பை கேம் போர்ன். ஒரு பெண்ணை அவரது சம்மதம் இல்லாமலோ சம்மதத்தோடோ நிர்வாணமாகப் படம் பிடித்துவிட்டு, பிறகு அவரது சம்மதம் இல்லாமலேயே அதை வெளியில் பரப்புவதன் பெயர்தான் ஸ்பை கேம் போர்ன்.

    இதை, பழிவாங்கும் போர்ன், அதாவது Revenge Porn என்றும் அழைக்கிறார்கள். இப்படியான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் அந்தப் பெண்ணுக்கு நன்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என இருவகையாக உள்ளனர். துணிக் கடைகளில், தியேட்டர், பூங்கா, பொது நீச்சல் குளம் போன்றவற்றின் கழிப்பறைகளில் கேமராவை ரகசியமாக ஒளித்து வைத்து படம் பிடித்து அதைப் பரப்பும் சைக்கோக்கள் ஒருவகை. தன் காதலியாகவோ மனைவியாகவோ இருந்தபோது எடுத்த அந்தரங்கமான வீடியோக்கள், படங்களை பின்னர் அப்பெண்ணின் சம்மதம் இல்லாமலேயே பரப்புபவர்கள் இரண்டாவது வகை.



    இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டாவது வகையான வீடியோக்கள்தான் அதிகமாகப் பரப்பப்படுகின்றன என்பதுதான் குரூரமான உண்மை. அந்தரங்கம் புனிதமானது என்பார்கள். தன்னை நம்பி வரும் ஒரு பெண்ணை அவளது விருப்பத்துடனோ விருப்பமின்றியோ வீடியோ எடுப்பதே தவறான விஷயம்தான். அதைப் பிற்பாடு வெளியில் பரப்புவது என்பது சைக்கோதனத்தின் உச்சம். இந்தியாவில் இப்படியான குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் உள்ளன.

    ரிவென்ஜ் போர்ன் தொடர்பான புகார்கள் தர பாதிக்கப்பட்ட பெண்தான் செல்ல வேண்டும் என்றில்லை. அவர் சார்பாக வேறு யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். அவசியம் எனில் வழக்கை ஒரு பெண் போலீஸ் அதிகாரி விசாரிக்கவும் கோரிக்கை வைக்கலாம். இவை எல்லாம் சட்டத்தில் உள்ளன. ஆனால், நடைமுறையில் இப்படியான குற்றங்களுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை உள்ளதா எனப் பார்த்தால் கிட்டத்தட்ட ஜீரோதான் பதில்.


    இணையதளத்தின் வருகைக்குப் பின் ஆறாகப் பெருகும் பாலியல் வீடியோக்களின் வெள்ளத்தில் பாதிக்கு மேல் இப்படியான கேண்டிட் போர்ன்கள்தான். இவற்றுக்கு எதிராக மிகக் குறைந்த பெண்களே வழக்குத் தொடுக்கிறார்கள். பெண்கள் இதை தங்களுக்கு ஏற்பட்ட மானக்கேடு எனக் கருதாமல், தனக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று கருதும் நிலை இங்கு வரவேண்டும். அப்படி துணிச்சலாகப் புகார் தரும் பெண்களுக்கு இயல்பான எதிர்காலம் உத்தரவாதமாக்கப்பட வேண்டும். இந்த சமூக முதிர்ச்சி ஏற்படாத வரை எத்தனை சட்டங்கள் இருந்தாலும் இந்த அநீதி தீராது என்பதே கசப்பான உண்மை. 
    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொடுமைகளை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொடுமைகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட குழந்தைகள் நலன் பாதுகாப்பு அதிகாரி டி.கவிதா கூறினார்.

    கோவை மாவட்ட குழந்தைகள் நலன் பாதுகாப்பு அதிகாரி டி.கவிதா, தினத்தந்தி நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

    கேள்வி:-ஆதரவற்ற நிலையில் கைவிடப்படும் பச்சிளம் குழந்தைகளை காப்பாற்ற தொட்டில் குழந்தைகள் திட்டம் எங்கெல்லாம் செயல்படுத்தப்படுகிறது?

    பதில்:-பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் கோவை அரசு ஆஸ்பத்திரி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மற்றும் சூலூர் அரசு ஆஸ்பத்திரிகளில் தொட்டில்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த தொட்டில்களில் போடப்படும் ஆண், பெண் பச்சிளம் குழந்தைகள் பாதுகாக்கப் படுகின்றன.

    கேள்வி:- மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் பணிகள் என்ன?

    பதில்:- பாதுகாப்பும் பராமரிப்பும் இன்றி ஆதரவற்ற நிலையில் காணப்படும் குழந்தைகளை பராமரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது, இதற்கான குழந்தைகள் காப்பகங்களை முறைப்படுத்துவது, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பாலியல் வன்கொடு மைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளை மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் உள்ளிட்டவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் முக்கியமான பணிகள் ஆகும்.

    கேள்வி:-குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதற் காக எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

    பதில்:-பெண்களுக்கான திருமண வயது 18. ஆண்களுக் கான திருமண வயது 21. இந்த வயதுக்கு கீழ் நடத்தப்படும் திருமணங்கள் குழந்தை திருமணங்கள்தான். பெற்றோர் வேலைக்கு செல்வதற்காக, வீட்டில் பெண் குழந்தைகளை பாதுகாக்க முடியவில்லை என்பதற்காக சில நேரங்களில் குழந்தை திருமணங்களை நடத்த முயற்சிக்கிறார்கள்.



    இதுதவிரமேலும் பல காரணங்கள் உள்ளன. குழந்தை திருமணங்கள் மாவட்ட சமூக நல அதிகாரியின் தலைமையில் தடுத்து நிறுத்தப்படுகிறது. மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனைகள் வழங்கி மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப் படுகிறது. காவல்துறையினர் மூலமும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்ததிருமணத்தை நடத்த துணை நின்றவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. குழந்தைகள் திருமணம்நடைபெற முயற்சிகள் நடைபெற்றால் இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கலாம். கடந்த மாதம் கூட, ஒரு இடத்தில் குழந்தை திருமணத்துக்காக திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

    அந்த திருமணம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டதுடன் பெற்றோர் எச்சரிக்கப்பட்டு சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட வாலிபர் குற்றவாளி ஆவார். குழந்தை திருமணத்தை நடக்கச்செய்தவர், நடத்த தூண்டியவர், நெறிப்படுத்தியவர், நடத்தியவர் இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் ஆவார்கள். இது போன்ற வர்களுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப் படும்.

    பதில்:-குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்(போக்சோ) 2012-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    வன்புணர்வு பாலியல் தாக்குதலுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஆயுள்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட லாம். கடுமையான வன்புணர்வு பாலியல் தாக்குதலுக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக் கப்படலாம். பாலியல் தாக்குதலுக்கு குறைந்த பட்சம் 3 ஆண்டு முதல் 5 ஆண்டுவரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட லாம்.

    கடுமையான பாலியல் தாக்குதலுக்கு குறைந்த பட்சம் 5 முதல் 7 ஆண்டுவரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். பாலியல் தொந்தரவுகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். ஆபாசப்படம் எடுத்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதமும் ஒருமுறைக்கு மேல் பல முறை ஆபாசப்படம் எடுத்தால் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்க தற்போதைய சட்டப்பிரிவில் வழிவகை செய்யப் பட்டுள்ளது.

    குழந்தைகளை வேலைக்கு பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தி, கொடுமைப்படுத்துபவர்கள் மீதும் குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், அதுபோன்ற குழந்தைகள் மீட்கப்பட்டு காப்பகங்களில் சேர்க்கப்பட்டு கல்வி கற்க வசதி செய்து கொடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ஊட்டியில் இன்று நடைபெற இருந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. போலீசார் கைதுக்கு பயந்து திருமணம் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. #MahaAkshay #MithunChakraborty
    ஊட்டியில் இன்று நடைபெற இருந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. மணமகன் தலைமறைவாகி விட்டார்.

    பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இவரது மகன் மஹா அக்‌ஷய். இவர் மும்பையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து உள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி இருக்கிறார். அவரை மிதுன் சக்கரவர்த்தி குடும்பத்தினர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் அப்பெண் குடும்பத்தினர் டெல்லி சென்று குடியேறி விட்டனர். இந்த நிலையில் டெல்லி சென்றும் அந்த பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து அந்த பெண் டெல்லி போலீசில் புகார் செய்து இருந்தார். அதனைத் தொடர்ந்து மிதுன் சக்கரவர்த்தி மகனை போலீசார் தேடி வந்தனர்.



    மிதுன் சக்கரவர்த்தி மகன் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    எப்படியும் முன் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் மிதுன் சக்கரவர்த்தி மகன் மஹா அக்‌ஷய்க்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    ஊட்டியில் இன்று இந்த திருமணம் நடைபெறுவதாக இருந்தது. மிதுன் சக்கரவர்த்திக்கு ஊட்டியில் பங்களா மற்றும் தோட்டங்கள் உள்ளது. இதனால் இங்கு வைத்து திருமணத்தை ரகசியமாக நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மிதுன் சக்கரவர்த்தி மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக நீங்கள் டெல்லி நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

    இதனால் கைது செய்யப்படுவோம் என நினைத்த மஹா அக்‌ஷய் தலைமறைவாகி விட்டார். அவருக்கு இன்று ஊட்டியில் நடைபெற இருந்த திருமணமும் ரத்து செய்யப்பட்டது. #MahaAkshay #MithunChakraborty

    சத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கருதி வருமான வரித்துறையினர் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் 12 மணி நேரம் சோதனை நடத்தினர்.

    சென்னை:

    சத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கருதி வருமான வரித்துறையினர் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் முட்டை வினியோக நிறுவன தலைவர் குமாரசாமி ஆகியோரின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.

    முட்டை, சத்து மாவு, பருப்பு ஆகியவற்றை அரசு பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு வினியோகிக்கப்பட்டதில் வரிஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரே‌ஷன் நிர்வாக அலுவலர் எம்.சுதாதேவி ஐ.ஏ.எஸ். வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. நெற்குன்றத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் 16-வது மாடியில் அவர் வசித்து வருகிறார்.

    நேற்று காலை 6 மணிக்கு அவரது வீட்டிற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இரவு 2 மணி வரை சோதனை நீடித்தது. அப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி அங்கு இருந்துள்ளார். 12 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி முடித்து அதிகாரிகள் வெளியே வந்தனர். அவரது வீட்டில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றினார்களா? என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    இன்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் குமாரசாமியிடம் விசாரணை நடத்துகின்றனர். தேவைப்பட்டால் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் விசாரணை நடத்தப்படும் என்று வருமான வரித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. 

    நடிகையை கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மஹா அக்‌ஷய் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #MahaAkshay #MithunChakraborty
    முன்னாள் பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

    இவரது மகன் மஹா அக்‌ஷய். இவரும் நடிகர் ஆவார். இந்தி மற்றும் போஜ்புரி மொழி படங்களில் நடிக்கிறார்.

    இந்த நிலையில் மஹா அக்‌ஷய் மீது மும்பையை சேர்ந்த போஜ்பூரி நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    திருமணம் செய்வதாக கூறி மஹா அக்‌ஷய் என்னை கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் நான் கர்ப்பம் ஆனேன். இதை தொடர்ந்து மாத்திரைகள் கொடுத்து கருவை கலைக்க வற்புறுத்தினார். இதை அறிந்த மஹா அக்‌ஷயின் தாயாரும், முன்னாள் நடிகையுமான யோசிதா பாபி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.



    இந்த மனுவை டெல்லி தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரட் ஏக்தா கவுபா விசாரித்தார்.

    இதுதொடர்பாக நடிகர் மஹா அக்‌ஷய், அவரது தாயார் யோசிதா பாலி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். #MahaAkshay #MithunChakraborty

    ஆஸ்திரேலியா நாட்டில் பள்ளி, பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரம் பேருக்கு இழப்பீடாக பணம் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
    கான்பெரா:

    ஆஸ்திரேலியா நாட்டில் பள்ளி, பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆண் - பெண்களுக்கு   இழப்பீடாக பணம் வழங்கும் திட்டத்துக்கு அந்நாட்டு சமூக நலத்துறை அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

    பாதிக்கப்பட்டவர்கள் முறையீடு செய்யும் வகையில் தனி அமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை முகமையின் பரிந்துரையின் பேரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு சராசரியாக 67 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களும், அதிகபட்ச தொகையாக ஒன்றரை லட்சம் டாலர்களும் இழப்பீடாக வழங்க அரசு தீர்மானித்தது.


    இதற்கான நிதியை அந்நாட்டின் பல்வேறு மாநில அரசுகளும், கத்தோலிக்க தேவாலயங்களும் அளிக்க முன்வந்துள்ளன.

    பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் மனக்காயங்களை ஆற்றும் மகத்தான திட்டம் என ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் குறிப்பிட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு நிதி அளிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று தெரிவித்துள்ளன.

    இந்த திட்டத்தின்கீழ் பணம் பெற்று கொள்பவர்கள் தங்களை கொடுமைப்படுத்தியவர்கள் மீது இனி வழக்கு ஏதும் தொடர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். #TNMminister#SellurRaju
    திருச்சி:

    திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 63-வது கிளை கே.கே.நகர் தென்றல் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு, புதிய கிளையை தொடங்கி வைத்து குத்துவிளக்கேற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் இதுவரை 104 கூட்டுறவு வங்கி கிளைகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 23 மாவட்ட வங்கிகள் மற்றும் 848 கிளைகள் உள்ளது. வரலாறு காணாத அளவுக்கு ரூ.27ஆயிரத்து 750 கோடி கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ளனர். இதன் மூலம் நகைக்கடன், பயிர்க்கடன், வாகனக்கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் என பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனைபெற்று பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.


    நடப்பாண்டில் விவசாய கடனுக்கு ரூ.8ஆயிரம் கோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியுள்ளார். கடன் வழங்குவது தொடர்பாக 8 டெல்டா மாவட்டங்களில் இன்று ஆய்வு செய்ய உள்ளேன். 8ஆயிரம் கோடியில் இதுவரை ரூ.500 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தங்கு தடையின்றி பாரபட்சமில்லாமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்ந்த உறுப்பினருக்கு 30 சதவீதமும், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகளை தடுக்க விஜிலென்ஸ் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில் நடந்தது போல் அல்லாமல் தற்போது முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளதோடு பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் பற்றிய உண்மை நிலை மக்களுக்கு தெரியும். முதல்வரின் விளக்கத்தை கேட்டு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினே ஆதரவு தெரிவித்து விட்டார். சில சுயநலவாதிகள் தங்களை பிரபலபடுத்துவதற்காக அத்திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தூண்டி விடுகின்றனர். தமிழகத்தின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சிக்கு 8 வழி பசுமை சாலை உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMminister#SellurRaju
    உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். #vaiko

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புக்களை தானம் பெற்று, அவற்றை ஏற்கனவே காத்திருக்கின்ற நோயாளிகளுக்கு பொருத்த உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்கின்றனர்.

    இந்த உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் வெளி நாட்டு நோயாளிகளே அதிக அளவில் பயன் பெற்றுள்ளனர் என்று உறுப்பு மாற்று-திசு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான தேசிய அமைப்பின் இயக்குநர் பேராசிரியர் விமல் பண்டாரி கவலை தெரிவித்து இருக்கிறார்.

    தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாட்டு நோயாளிகள் 31 பேருக்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் இதயமும், 32 பேருக்கு நுரையீரல் மேலும் 32 பேருக்கு இதயம் மற்றும் நுரையீரல் பொருத்தப்பட்டுள்ளன.

    ஜூன் 9, 2018 வரையில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக காத்திருக்கும் வெளிநாட்டு நோயாளிகள் 53 பேர் மட்டுமே. ஆனால், இந்தியாவில் 5310 நோயாளிகள் உடல் உறுப்பு தானம் வேண்டி காத்திருக்கின்றார்கள். இந்நிலையில், மனித உடல் உறுப்பு மாற்றுச் சட்டம் 1994 விதிமுறைகளை மீறி, வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக மூளைச் சாவு அடைந்தோரின் உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதும், அதற்காகவே சில பெரும் மருத்துவமனைகள் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டு இருப்பதும் மிகப் பெரிய முறைகேடு ஆகும்.

    கடந்த மாதம் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில், “கேரளாவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் விபத்து ஏற்பட்டு சேலம் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு இருந்ததாகவும், விபத்தில் மூளைச்சாவு அடைந்த மணிகண்டன் சேலத்திலிருந்து சென்னை தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டு, அவருடைய குடும்பத்தினர் ஒப்புதல் பெறாமல், உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு, உக்ரேனியர் ஒருவருக்கு இதயமும், இத்தாலி நாட்டைச் சேர்ந்தவருக்கு நுரையீரலும் பொருத்தப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

    கேரள முதல்வரின் கடிதத்திற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி இருக்கிறது.

    உடல் உறுப்புகள் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக நம் நாட்டு நோயாளிகள் ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும்போது, வெளிநாட்டு நோயாளிகளிடம் பணம் கொட்டிக்கிடக்கிறது என்பதற்காக விதிமுறைகளை மீறி உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

    சென்னையில் நடைபெற்று வரும் இதுபோன்ற முறைகேடுகள் குறித்து ஏப்ரல் 3, 2018-ல் டெல்லியில் மத்திய அரசு நடத்திய உயர்நிலைக் கூட்டத் தில் விவாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதையேக் காரணமாகக் கூறி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொது சுகாதாரத்துறையை மத்திய அரசின் அதி காரப்பட்டியலில் சேர்க்கவும் முயற்சிகள் நடைபெறுவதாகத் தெரிகிறது.

    மாநில உரிமைகள் ஒவ்வொன்றையும் டெல்லியின் காலடியில் அடகு வைத்து வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு சுகாதாரத்துறையையும் மத்திய அரசுக்கு தாரை வார்த்துக்கொடுத்துவிடக் கூடாது.

    உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் நடைபெற்று வரும் சட்ட மீறல்களை களைய வேண்டும்.

    இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் என்று சிறப்பு பெற்றுள்ள சென்னையில், உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews #vaiko

    அங்கன்வாடி, சத்துணவு மைய ஊழியர்களுக்கும், முட்டைகள் முறைகேடாக விற்பதற்கும் தொடர்பு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. #anganwadi #governmentschool
    நாமக்கல்:

    தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையம், அரசு பள்ளிகளில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டன. 2017- 18-ம் ஆண்டிற்கு ரூ.4.34-க்கு முட்டை வழங்க 3 தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டன.

    அவ்வாறு வழங்கப்படும் முட்டை ஒன்றின் எடை 45 முதல் 52 கிராம் நிகராமல் இருக்க வேண்டும். சராசரி 10 முட்டைகளின் எடை 445 கிராம் முதல் 525 கிராம் வரை இருக்க வேண்டும். அக்மார்க் தரத்தில் ஏ மீடியம் ரக முட்டைகளாகவும், சுத்தமாகவும், பாக்டீரியா மற்றும் கிருமிகள் இல்லாமல் இருக்க வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகளில் மாறுபாடு கண்டறியப்பட்டால் இரட்டிப்பு தொகை வழங்க வேண்டும் என இந்த ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு வழங்கப்படும் முட்டைகளில் முறைகேடு நடப்பதாக திடீரென புகார் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 3 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. அதில் சுமார் 1 கோடி முட்டைகள் கேரளா மாநிலத்திற்கு சென்று விடுகிறது.



    சுமார் 52 லட்சம் முட்டைகள் மதிய உணவு திட்டத்திற்காக அரசு வாங்குகிறது. மீதமுள்ள சுமார் 1½ கோடி முட்டைகள் தமிழக மக்களின் நுகர்வுக்காக செல்கிறது. இதில் சென்னையில் மட்டும் சுமார் 40 லட்சம் முட்டைகள் விற்பனையாகிறது.

    பொதுமக்களுக்கு விற்கப்படும் முட்டைகளில் இருந்து அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக சத்துணவு கூடங்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் நீல நிறத்தில் சீல் வைத்து வழங்கப்படுகின்றன.

    சமீபகாலமாக அரசு முத்திரை வைக்கப்பட்டுள்ள சத்துணவு கூடங்களுக்கான முட்டைகள் வெளிசந்தைகளிலும், சில்லரை விற்பனை கடைகளிலும் தாராளமாக கிடைப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. சத்துணவு மையங்களுக்கு வாங்கப்படும் முட்டைகள் எப்படி கடைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன என்பது பற்றி கேள்விக்குறி எழுந்துள்ளது.

    இதுபற்றி நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. சத்துணவு மையங்களுக்கும், அங்கன்வாடி மையங்களுக்கும் தேவையான முட்டைகளை சப்ளை செய்ய திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    அதன்படி சராசரியாக 30 முதல் 40 கிராம் எடையுள்ள முட்டைகளை ஒரு ஆண்டுக்கு சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    வெளிசந்தைகளில் ஒரு முட்டையின் விலை ரூ.4.60 ஆக உள்ளது. ஆனால் ஒரு ஆண்டுக்கு சப்ளை செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால் அந்த நிறுவனத்திடம் இருந்து அரசுக்கு ரூ.3.50க்கு முட்டை வாங்கப்படுகிறது. அந்த நிறுவனம் தினமும் ஒப்பந்தப்படி முட்டைகளை விநியோகித்து வருகிறது.

    அதன்பிறகு அந்த முட்டைகள் அங்கன்வாடி மையங்களுக்கும், சத்துணவு கூடங்களுக்கும் சென்ற பிறகு முறைகேடு நடப்பதாக தெரிய வந்துள்ளது. சில பள்ளிகளில் மாணவர்கள் சத்துணவு சாப்பிட வருவது குறைவாக இருக்கும். ஆனால் வருகை பதிவேட்டில் அதிகம் பேர் சாப்பிடுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கும்.

    அப்படி மிச்சமாகும் முட்டைகள் கடைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பதாக கூறப்படுகிறது.

    இதுதவிர முட்டைகளை எடுத்துச் செல்லும்போது கணிசமான அளவு முட்டைகள் சேதம் ஆவது உண்டு. அந்த முட்டைகளையும் வெளியில் உள்ள கடைகளுக்கு கொடுத்து விடுவதாக கூறப்படுகிறது. சில இடங்களில் முட்டைகளில் வைக்கப்பட்டுள்ள அரசு முத்திரையை ரசாயனம் கொண்டு அழித்து விற்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    ஆனால் சென்னை உள்பட சில நகரங்களில் சமீபகாலமாக சத்துணவு கூடங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் சீல் அழிக்கப்படாமலேயே கடைகளுக்கு விற்பனைக்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    முதல் கட்ட விசாரணையில் அங்கன்வாடி, சத்துணவு மைய ஊழியர்களுக்கும், முட்டைகள் முறைகேடாக விற்பதற்கும் தொடர்பு இருப்பது பற்றி தெரிய வந்துள்ளது.

    இதுபற்றி தமிழக அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்களுக்கு இது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. உரிய ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் சத்துணவு முட்டைகளை வெளிசந்தைகளில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    அங்கன்வாடி மையம் மற்றும் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகள் அரசு ஒப்பந்தத்தில் நிர்ணயித்த முட்டையை காட்டிலும் புல்லட் எனப்படும் சிறிய அளவில் குறைந்த எடையில் முட்டைகள் வழங்கப்படுகின்றன. இதனால் மாணவர்களின் உடல் நலனுக்கு அரசு வழங்கும் முட்டையில் முறைகேடு செய்வதை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    எனவே முட்டை வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபடும் தனியார் ஒப்பந்ததார்கள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தலைவர் சின்ராஜ் கூறியது:-

    முட்டைகளை கோழிப் பண்ணையாளர்கள் நேரிடையாக கொடுத்தால் முட்டை சரியாக வழங்க முடியும். ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனத்தினர் முட்டைகளை குடோனில் வாங்கி பிறகு பள்ளிகளுக்கு முட்டை அனுப்புகின்றனர்.

    அப்படி வழங்கப்படும் முட்டைகள் சிறியதாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. வெளிமாநிலத்தில் சிறிய முட்டைகளை குறைவாக வாங்கி அவற்றை பள்ளிகளுக்கு அனுப்பி வருகின்றனர். இதனை தவிர்க்க கோழிப்பண்ணையாளர்களுக்கு அரசு நேரிடையாக முட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #anganwadi #governmentschools #MidDayMealScam #MidDayMealEgg

    அரசு அதிகாரிகளை சரிகட்டி, சர்வதேச விமானச்சேவை லைசென்ஸ் பெற்றதாக ஏர் ஏசியா நிறுவன தலைமை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் 6 இடங்களில் சோதனை நடத்துகின்றனர். #AirAsiabookedby #AirAsiaCEO #TonyFernandes
    புதுடெல்லி:

    மலேசியா நாட்டின் குறைந்த கட்டண விமானச்சேவை நிறுவனமான ஏர் ஏசியா, பெங்களூரு நகரை தலைமை இடமாக கொண்டு கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவில் விமானச் சேவையை தொடங்கியது. முதலில் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையில் விமானச் சேவையை தொடங்கிய இந்த நிறுவனத்தின் 49 சதவீதம் பங்குகள் டாட்டா சன்ஸ் நிறுவனத்திடம் உள்ளது.

    உள்நாட்டு விமானச் சேவையை தொடர்ந்து வெளிநாட்டு விமானச் சேவைகளையும் தொடங்கியுள்ள ஏர் ஏசியா கவர்ச்சிகரமான கட்டண சலுகைகளை அவ்வப்போது வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

    இந்நிலையில், வெளிநாட்டு விமானச் சேவைக்கான லைசென்ஸ் பெறுவதற்கு முறைகேடான வழிகளை இந்நிறுவனம் பயன்படுத்தியதாக சமீபத்தில் தெரியவந்தது.

    மத்திய அரசில் உள்ள உயர் அதிகாரிகளை பல்வேறு வழிகளில் சரிகட்டி சர்வதேச விமானச் சேவைக்கான லைசென்ஸ் வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்தியும், மாற்றியும் இந்த முறைகேடு நடந்துள்ளதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    குறிப்பாக, இந்த லைசென்ஸ் பெறுவதற்கான 20 விதிமுறைகளில் ஐந்தாவது விதிமுறையில் இந்தியாவில் இருந்து சர்வதேச விமானச் சேவையை தொடங்க வேண்டுமானால், இந்திய விமான போக்குவரத்து துறையில் ஐந்தாண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    டோனி பிரான்சிஸ்

    மேலும், அந்த நிறுவனத்துக்கு சொந்தமாக குறைந்தபட்சம் 20 விமானங்கள் இருக்க வேண்டும். ஆனால், அரசு அதிகாரிகளின் உதவியுடன் இந்த விதிகளை எல்லாம் மீறி ஏர் ஏசியா சர்வதேச லைசென்ஸ் பெற்றுள்ளது சி.பி.ஐ. விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.

    இதைதொடர்ந்து, ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனர் (சி.இ.ஓ.) மலேசியா நாட்டை சேர்ந்த டோனி பிரான்சிஸ், ஏர் ஏசியா நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.வெங்கடராமன், விமானச்சேவை ஆலோசகர் தீபக் தல்வார் மற்றும் பெயர்கள் வெளியிடப்படாத அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

    டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் உள்ள ஏர் ஏசியாவுக்கு சொந்தமான 6 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். #AirAsiabookedby #AirAsiaCEO #TonyFernandes
    வேலூர்-திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 2015-2016-ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ரூ.100 கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    வேலூர்-திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 2015-2016-ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ரூ.100 கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதில் 2003-2004-ம் கல்வி ஆண்டில் இருந்து கடந்த 13 ஆண்டுகளாக செலவு செய்யப்பட்ட ரூ.67.59 கோடிக்கான காரணங்கள் அறிக்கையில் தாக்கல் செய்யப்படவில்லை.

    மேலும் 574 காரணங்களுக்காக செலவு செய்யப்பட்டுள்ள ரூ.36.62 கோடிக்கு சரியான கணக்குகள் இல்லை. ஆக மொத்தம் ரூ.100 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    உள்ளூர் நிதி தணிக்கை துறையின் மண்டல இணை இயக்குனர் ஸ்ரீனிவாசன் இதுகுறித்த அறிக்கையை பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் நிதி அதிகாரி (பொறுப்பு) வி.பருவழுதிக்கு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி அனுப்பினார்.

    அதில் தேர்வு பணிக்காக பல்கலைக்கழக அதிகாரிகள் ரூ.31.42 கோடி முன்பணமாக எடுத்துள்ளனர். அதுதவிர மற்ற பணிக்காக ரூ.40.31 கோடி பணம் பெற்றுள்ளனர். அதற்காக ரூ.4.15 கோடி மற்றும் ரூ.71.74 கோடிக்கு ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன.

    பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் நிதிஅதிகாரி 2015-16-ம் ஆண்டில் ரூ.33.16 கோடி ஒதுக்கியுள்ளார். ஆசிரியர்கள் மற்றும் துறை தலைவர்கள் அவற்றை முன்பணமாக பெற்றுள் ளனர்.

    ஆனால் ரூ.32.35 கோடி செலவு செய்ததற்கான ரசீதுகள் மற்றும் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை.

    ஆசிரியர்கள் அல்லாத 22 பணியிடங்கள் மட்டுமே நிரப்ப பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி அளித்தது. ஆனால் 35 இடங்கள் கூடுதலாக அதாவது 57 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதற்காக பணிநியமன கோப்பு மற்றும் நிறைவேற்றப்பட்ட சிண்டிகேட் தீர்மானம் போன்றவை தணிக்கையின் போது சமர்ப்பிக்கப்படவில்லை.

    தணிக்கை அறிக்கையில் எழுப்பபட்ட மறுப்புகளுக்கு 2 மாதத்தில் பதில் அளிக்கும் படி தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பல் கலைக்கழகம் சார்பில் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

    உள்ளூர் தணிக்கை இன்ஸ்பெக்டர் கே.பிரேம்நாத் கடந்த ஆண்டு (2017) ஜூலை 10, ஜூலை 24 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு இதுகுறித்து எழுதினார். அவற்றுக்கு 3 நாட்களில் உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

    இதற்கும் பல்கலைக்கழகம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.#tamilnews
    ×