search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Air Asia"

    திருச்சி விமான நிலையத்தில் சுங்க சோதனையின்றி பயணிகளை ஏற்றிச் சென்றதற்காக ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு சுங்க இலாகா சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. #TrichyAirport
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, துபாய், கோலாலம்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் விமானத்தில் ஏறும் முன்பாக சுங்க அதிகாரிகள் அவர்களையும், அவர்களின் உடைமைகளையும் சோதனையிடுவது வழக்கம்.

    இந்நிலையில் இன்று காலை சுங்க இலாகா அதிகாரிகள் 20 பேர் விமான நிலையத்திற்கு வந்தபோது அவர்களை உள்ளே விட மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் மறுத்துவிட்டனர்.

    திருச்சி விமான நிலையத்தில் பணிபுரியும் சுங்கத்துறை ஊழியர்களுக்கு விமான நிலையத்தின் உள்ளே வருவதற்கு நுழைவு பாஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த நுழைவு பாஸை மாதந்தோறும் அவர்கள் புதுப்பித்து கொள்ள வேண்டும்.

    இந்த நிலையில் நுழைவு பாஸ் கடந்த டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகி விட்ட நிலையில் அவர்கள் அதனை புதுப்பிக்காமல் திருச்சி விமான நிலையத்திற்கு பணிக்கு வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் புதிய அடையாள அட்டை கொண்டு வந்தால்தான் அனுமதி அளிக்கப்படும் என்று தொழிற்பாதுகாப்பு படையினர் உறுதியாக தெரிவித்து விட்டனர்.

    இதற்கிடையே ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியாவிற்கு செல்ல 160 பயணிகள் தயாராக இருந்தனர். நீண்ட நேரம் அவர்கள் காத்திருந்தும் சுங்க அதிகாரிகள் இல்லாததால் சோதனை நடத்த முடியவில்லை.

    இதையடுத்து ஏர் ஏசியா மேலாளரின் அனுமதியுடன் சுங்கத்துறை சோதனையின்றி 160 பயணிகளை ஏற்றிக்கொண்டு மலேசியா விமானம் சென்றது. இதையடுத்து சுங்க சோதனையின்றி பயணிகளை ஏற்றிச் சென்றதற்காக ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு சுங்க இலாகா சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ஸ்ரீலங்காவில் இருந்து ஒரு விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. இதில் வந்த பயணிகள் பரிசோதனைக்காக காத்திருந்தனர். ஆனால் சோதனை செய்ய யாரும் வரவில்லை. இதனால் அவர்கள் சத்தம் போட்டனர்.

    இதுகுறித்து மத்திய பாதுகாப்பு படையினர் விமான நிலைய இயக்குனர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக சுங்கத்துறை ஊழியர்களுக்கு தற்காலிக அனுமதி சீட்டு வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து ஊழியர்கள் விரைந்து பணிக்கு சென்றனர். பின்னர் விமான பயணிகள் சோதனை செய்யப்பட்டு வெளியே வந்தனர். இதனால் விமான நிலையத்தில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #TrichyAirport
    லைசன்ஸ் பெறுவதில் விதிமீறலில் ஈடுபட்ட விவகாரத்தில் ஏர் ஏசியா நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் வெங்கடரமணன் ஆஜரான சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. #AirAsia #CBI
    புதுடெல்லி:

    சர்வதேச அளவில் விமான சேவைகளை இயக்குவதற்கான லைசென்ஸ் பெறுவதற்காக விதிகளை மீறியுள்ளதாக ஏர் ஏசியா விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்ணான்டஸ் மீது சிபிஐ சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது. 

    ஏர் ஏசியா மலேசியாவின் குழும தலைமைச் செயல் அதிகாரி, டிராவல்ஃபுட் உரிமையாளர் சுனில் கபூர், ஏர் ஏசியா இந்திய பிரிவு இயக்குநர் ஆர். வெங்கடரமணன், விமானத்துறை ஆலோசகர் தீபக் தல்வார், சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்என்ஆர் டிரேடிங் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேந்திர துபே மற்றும் சில அரசு உயர் அதிகாரிகளின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்திய பிரிவு தலைவர் வெங்கடரமணன் வரும் ஜூலை 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    சர்வதேச அளவில் விமானங்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனம் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உள்நாட்டில் விமானங்களை இயக்கி இருக்க வேண்டும். அத்துடன் 20 விமானங்கள் இருக்க வேண்டும். 

    இந்த விதிமுறைகளை மீறியதாகவும் அதேபோல அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய விதிமுறைகளை மீறியதாகவும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    அரசு அதிகாரிகளை சரிகட்டி, சர்வதேச விமானச்சேவை லைசென்ஸ் பெற்றதாக ஏர் ஏசியா நிறுவன தலைமை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் 6 இடங்களில் சோதனை நடத்துகின்றனர். #AirAsiabookedby #AirAsiaCEO #TonyFernandes
    புதுடெல்லி:

    மலேசியா நாட்டின் குறைந்த கட்டண விமானச்சேவை நிறுவனமான ஏர் ஏசியா, பெங்களூரு நகரை தலைமை இடமாக கொண்டு கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவில் விமானச் சேவையை தொடங்கியது. முதலில் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையில் விமானச் சேவையை தொடங்கிய இந்த நிறுவனத்தின் 49 சதவீதம் பங்குகள் டாட்டா சன்ஸ் நிறுவனத்திடம் உள்ளது.

    உள்நாட்டு விமானச் சேவையை தொடர்ந்து வெளிநாட்டு விமானச் சேவைகளையும் தொடங்கியுள்ள ஏர் ஏசியா கவர்ச்சிகரமான கட்டண சலுகைகளை அவ்வப்போது வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

    இந்நிலையில், வெளிநாட்டு விமானச் சேவைக்கான லைசென்ஸ் பெறுவதற்கு முறைகேடான வழிகளை இந்நிறுவனம் பயன்படுத்தியதாக சமீபத்தில் தெரியவந்தது.

    மத்திய அரசில் உள்ள உயர் அதிகாரிகளை பல்வேறு வழிகளில் சரிகட்டி சர்வதேச விமானச் சேவைக்கான லைசென்ஸ் வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்தியும், மாற்றியும் இந்த முறைகேடு நடந்துள்ளதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    குறிப்பாக, இந்த லைசென்ஸ் பெறுவதற்கான 20 விதிமுறைகளில் ஐந்தாவது விதிமுறையில் இந்தியாவில் இருந்து சர்வதேச விமானச் சேவையை தொடங்க வேண்டுமானால், இந்திய விமான போக்குவரத்து துறையில் ஐந்தாண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    டோனி பிரான்சிஸ்

    மேலும், அந்த நிறுவனத்துக்கு சொந்தமாக குறைந்தபட்சம் 20 விமானங்கள் இருக்க வேண்டும். ஆனால், அரசு அதிகாரிகளின் உதவியுடன் இந்த விதிகளை எல்லாம் மீறி ஏர் ஏசியா சர்வதேச லைசென்ஸ் பெற்றுள்ளது சி.பி.ஐ. விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.

    இதைதொடர்ந்து, ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனர் (சி.இ.ஓ.) மலேசியா நாட்டை சேர்ந்த டோனி பிரான்சிஸ், ஏர் ஏசியா நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.வெங்கடராமன், விமானச்சேவை ஆலோசகர் தீபக் தல்வார் மற்றும் பெயர்கள் வெளியிடப்படாத அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

    டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் உள்ள ஏர் ஏசியாவுக்கு சொந்தமான 6 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். #AirAsiabookedby #AirAsiaCEO #TonyFernandes
    ×