search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஊட்டியில் இன்று நடக்க இருந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் நிறுத்தம்
    X

    ஊட்டியில் இன்று நடக்க இருந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் நிறுத்தம்

    ஊட்டியில் இன்று நடைபெற இருந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. போலீசார் கைதுக்கு பயந்து திருமணம் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. #MahaAkshay #MithunChakraborty
    ஊட்டியில் இன்று நடைபெற இருந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. மணமகன் தலைமறைவாகி விட்டார்.

    பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இவரது மகன் மஹா அக்‌ஷய். இவர் மும்பையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து உள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி இருக்கிறார். அவரை மிதுன் சக்கரவர்த்தி குடும்பத்தினர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் அப்பெண் குடும்பத்தினர் டெல்லி சென்று குடியேறி விட்டனர். இந்த நிலையில் டெல்லி சென்றும் அந்த பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து அந்த பெண் டெல்லி போலீசில் புகார் செய்து இருந்தார். அதனைத் தொடர்ந்து மிதுன் சக்கரவர்த்தி மகனை போலீசார் தேடி வந்தனர்.



    மிதுன் சக்கரவர்த்தி மகன் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    எப்படியும் முன் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் மிதுன் சக்கரவர்த்தி மகன் மஹா அக்‌ஷய்க்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    ஊட்டியில் இன்று இந்த திருமணம் நடைபெறுவதாக இருந்தது. மிதுன் சக்கரவர்த்திக்கு ஊட்டியில் பங்களா மற்றும் தோட்டங்கள் உள்ளது. இதனால் இங்கு வைத்து திருமணத்தை ரகசியமாக நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மிதுன் சக்கரவர்த்தி மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக நீங்கள் டெல்லி நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

    இதனால் கைது செய்யப்படுவோம் என நினைத்த மஹா அக்‌ஷய் தலைமறைவாகி விட்டார். அவருக்கு இன்று ஊட்டியில் நடைபெற இருந்த திருமணமும் ரத்து செய்யப்பட்டது. #MahaAkshay #MithunChakraborty

    Next Story
    ×