search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alleged"

    • ஆனால் 24-10-2020 அன்று நோயாளி நினைவிழந்து விட்டார்
    • இதை தொடர்ந்து சபாபதி ஊட்டி நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்

    குன்னூர்

    நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக இருந்ததாக கூறி, அவரின் குடும்பத்திற்கு ரூ.2¾ லட்சம் இழப்பீடு வழங்க கோரி குன்னூர் தனியார் மருத்துவமனைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.  நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த உபதலை காந்திநகரை சேர்ந்தவர் சபாபதி. மத்திய அரசு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி விமலா. கடந்த 19-10-2020 அன்று உடல் நலக்குறைவு காரணமாக குன்னூரில் உள்ள நன்கம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவர் குணமடைந்து வருகிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறி வந்து உள்ளது. ஆனால் 24-10-2020 அன்று நோயாளி நினைவிழந்து விட்டார். அவரை உடனடியாக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று நன்கம் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறி உள்ளனர்.  இந்தநிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விமலா 2-11-2020 அன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிருப்தி அடைந்த சபாபதி இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டார். அதற்கு அவர்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிகிறது.  இதை தொடர்ந்து சபாபதி ஊட்டி நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார. அதில் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் யாரும் இல்லாமல் இது போன்ற தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அனுமதித்து, நோய் மிக தீவிரம் அடைந்த நிலையில் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வைப்பது, பணம் பறிப்பதற்காக செய்யப்படும் மோசடி ஆகும். முதலுதவி மட்டும் வழங்கி விட்டு கோவை மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் நோயாளி உயிர் பிழைத்திருக்கலாம். மருத்துவமனையின் அலட்சியமே எனது மனைவியின் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் பி.ஆல்துரை வழக்கில் வாதாடினார். மருத்துவமனை சார்பில், நோயாளியின் தினசரி மருத்துவ குறிப்பு, தீவிர சிகிச்சை பிரிவில் செய்யப்பட்ட பதிவுகள் என எந்த ஒரு ஆவணமும் சமர்ப்பிக்கப்பட்டு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க இயலவில்லை. எனவே, சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக இருந்து இருக்கிறது என்று கூறி, நோயாளியிடம் வசூலித்த ரூ.1 லட்சத்து 82 ஆயிரம், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவாக ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்தை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் சித்ரா உத்தரவிட்டு உள்ளார்.

    பீகார் மாநிலத்தில் அரசு நிதியுதவி பெறும் சிறுமியர் காப்பகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை இன்று மத்திய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. #CBIinvestigation #abuseofminorgirls #MuzaffarpurShelterHome
    பாட்னா:

    பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சாஹூ சாலையில் அரசு நிதியுதவி பெறும் சிறுமியர் காப்பகம் ஒன்றுள்ளது. இங்கு சுமார் 40 சிறுமியர் தங்கியுள்ளனர். இந்த காப்பகத்தின் நிர்வாகிகள் சிறுமிகளை கற்பழித்ததாகவும், ஒரு பெண்ணை அடித்துக் கொன்று காப்பக வளாகத்துக்குள் புதைத்து விட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

    இதைதொடர்ந்து, இங்குள்ள சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தபோது அவர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.

    காப்பகத்தில் உள்ள இரு சிறுமிகள் அளித்த தகவலின் அடிப்படையில் மோப்ப நாய்களுடன் வந்த போலீசார் காப்பக வளாகத்தில் புதைக்கப்பட்ட பிணைத்தை கைப்பற்றுவதற்காக தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனைக்கு மறுப்பு தெரிவித்த காப்பகத்தை சேர்ந்த சுமார் பத்து பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என சமூக ஆர்வலர்கள் கருதினர். இதே கருத்தை முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் மகனான தேஜஸ்வி யாதவ் நேற்று வலியுறுத்தினார்.

    இந்நிலையில், இந்த காப்பகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை இன்று மத்திய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பீகார் மாநில அரசின் பரிந்துரையை ஏற்று இந்த காப்பகத்தில் உள்ள சிறுமியர்களுக்கு மனதளவிலும், உடல்ரீதியாகவும் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பாக காப்பக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க தொடங்கி உள்ளனர். #CBIinvestigation #abuseofminorgirls #MuzaffarpurShelterHome
    ×