search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Warner"

    • 3 வடிவிலான போட்டிகளும் வார்னர் மிக சிறந்த அதிரடி ஆட்டக்காரர் ஆவார்.
    • டெஸ்ட் போட்டியில் நான் தொடக்க வீரராக விளையாட மகிழ்ச்சியுடன் உள்ளேன்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டியில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார். ஏற்கனவே அவர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்துவிட்டார்.

    3 வடிவிலான போட்டிகளும் வார்னர் மிக சிறந்த அதிரடி ஆட்டக்காரர் ஆவார். அவரது இடத்தை நிரப்புவது என்பது மிகவும் சவாலானதே.

    37 வயதான வார்னர் சர்வதேச போட்டிகளில் 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். 49 சதமும், 94 அரைசதமும் அடித்துள்ளார். தனது 14 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துள்ளார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு தொடக்க வீரராக விளையாட விருப்பத்துடன் இருப்பதாக மற்றொரு முண்ணனி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் போட்டியில் நான் தொடக்க வீரராக விளையாட மகிழ்ச்சியுடன் உள்ளேன். நிச்சயமாக தொடக்க வீரராக களம் இறங்குவதில் ஆர்வத்துடன் இருக்கிறேன். தேர்வு குழு என்னிடம் இதுபற்றி பேசுவார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஏற்கனவே கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், கேமரூன் பேன்கிராப்ட், மேட் ரென்ஷா ஆகியோரும் தொடக்க வீரருக்கான போட்டியில் உள்ளார். அவர்களுடன் ஸ்டீவ் சுமித் தும் தற்போது இணைந்து உள்ளார்.

    அதே நேரத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் கம்மின்ஸ் தொடக்க வீரராக ஸ்டீவ் சுமித் விளையாடுவதை விரும்ப வில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    • வார்னர் விலகியதால் அவருக்கு பதிலாக 2-வது டெஸ்டில் மேட்ரென்ஷா சேர்க்கப்பட்டு உள்ளார்.
    • அதே நேரத்தில் ரென்ஷா பந்து வீசுவதற்கு அனுமதி இல்லை என்பதை ஐ.சி.சி. மேட்ச் நடுவர் ஆண்டி பைகிராப்ட் உறுதி செய்தார்.

    புதுடெல்லி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய தொடக்க வீரரும், முன்னணி பேட்ஸ்மேனுமான டேவிட் வார்னர் 15 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    போட்டியின் போது முகமது சிராஜ் வீசிய பவுன்சர் பந்து வார்னர் ஹெல்மெட்டில் பட்டு காயம் ஏற்பட்டது. ஹெல்மெட்டில் பந்து பட்டதால் அவர் நிலை குலைந்தார். உடனடியாக ஆஸ்திரேலிய அணியின் டாக்டர் அவரை பரிசோதித்தார்.

    ஆனால் அவர் மூளை அதிர்ச்சி சோதனைக்கு உட்படுத்தவில்லை. மேலும் ஹெல்மெட்டில் அடிபட்ட பிறகு அதை மாற்றவில்லை. தொடர்ந்து விளையாடி அவர் ஆட்டம் இழந்தார்.

    இந்திய அணி பேட்டிங் செய்த போது அவர் பீல்டிங் செய்ய களத்துக்கு வரவில்லை.

     

    இந்த நிலையில் வார்னர் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவர் இன்றும் பீல்டிங் செய்ய வரவில்லை. 2-வது இன்னிங்சில் அவர் விளையாட மாட்டார். வார்னர் விலகியதால் அந்த அணிக்கு பாதிப்பாகும்.

    இந்தூரில் நடைபெறும் 3-வது டெஸ்டில் அவர் ஆடுவாரா? என்பது உறுதியாகவில்லை. முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இது குறித்து முடிவு செய்யப்படும்.

    வார்னர் விலகியதால் அவருக்கு பதிலாக 2-வது டெஸ்டில் மேட்ரென்ஷா சேர்க்கப்பட்டு உள்ளார். அவர் 2-வது இன்னிங்சில் வார்னர் இடத்தில் பேட்டிங் செய்கிறார்.தொடக்க வீரராக ஆடுவார்.

    அதே நேரத்தில் ரென்ஷா பந்து வீசுவதற்கு அனுமதி இல்லை என்பதை ஐ.சி.சி. மேட்ச் நடுவர் ஆண்டி பைகிராப்ட் உறுதி செய்தார்.

    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய சுமித், வார்னரின் தண்டனை காலம் முடிவடைந்ததை யொட்டி அவர்கள் மீண்டும் தங்களது ஐபிஎல் அணிகளோடு இணைந்து கொண்டனர். #IPL2019 #Smith #Warner
    புதுடெல்லி:

    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு 1 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

    இந்த தடை இந்த மாதம் முடிகிறது. இருவரும் சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரர்களோடு துபாயில் பயிற்சியில் இணைந்தனர்.

    இந்த நிலையில் இருவரும் ஐ.பி.எல். போட்டியில் ஆடுகிறார்கள். இதற்காக இருவரும் தங்களது அணிகளோடு இணைந்து கொண்டனர். சுமித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் வார்னர் சன்ரைசஸ் ஐதராபாத் அணியிலும் ஆடுவார்கள். #IPL2019 #Smith #Warner
    டி20 லீக் தொடரில் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு இடம் கிடைக்கும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
    பால் டேம்பரிங் விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்துள்ளது. இந்த தடைக்காலம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமலில் இருந்து வருகிறது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் அவர்கள் மீதான தடைக்காலம் முடிவிற்கு வரும்.

    இரண்டு பேரும் அணிக்கு திரும்புவதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருக்கும் இருவரும் டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார்கள்.

    விரைவில் தொடங்க இருக்கும் வங்காள தேசம் பிரிமீயர் லீக்கில் இருவரும் களம் இறங்க இருக்கின்றனர். அதன்பின் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் விளையாடுகிறார்கள். இதில் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் அவர்களுக்கு நிச்சயமாக இடம்கிடைக்கும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில் ‘‘வங்காள தேச பிரிமீயர் லீக் மற்றும் ஐபிஎல் தொடரில் இருவருடைய ஆட்டம் எப்படி இருக்கிறது என்பது உண்மையிலேயே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இரு தொடர்களையும் கண்காணிப்பது முக்கியமானது.



    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துதல், நியாயம் மற்றும் நீதி ஆகியவற்றின் அடிப்படையில் எங்களுடைய தேர்வு இருக்கும். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் அணிக்கு திரும்ப வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

    இருவருடைய பார்ம் குறித்து நாங்கள் கேட்டறிந்த வகையில் எந்த கவலையும் இல்லை. அவர்கள் தொடர்ந்து வலைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் அவர்களுடன் போதுமான அளவிற்கு தொடர்பு கொண்டு அவர்களை மதிப்பிடுவோம்’’ என்றார்.
    ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரின் மீதான தடையை நீக்கக்கூடாது என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதற்கு மூளையாக செயல்பட்டது வார்னர் என்றும், இந்த விவகாரம் கேப்டன் ஸ்மித்திற்கு தெரியும் என்று விசாரணையில் தெரிய வந்தது.

    இதனால் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். ஸ்மித், வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலியா தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. இதனால் இருவர் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

    இதுகுறித்து இந்த வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மூவரின் தடைக்காலத்தை குறைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் உள்ளூர் தொடரின் கடைசி ஆட்டத்தில் விளையாட முடியும் என்று கிரிக்கெட் நிருபர் ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.

    அதற்கு முனன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் பதில் ட்வீட் செய்திரந்தார். அதில் ‘‘மூன்று வீரர்கள் தடை பெற்றிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தண்டனை குறைக்கப்படும் என்ற செய்தி முன்னோக்கிச் சென்றால், பான்கிராப்ட் தண்டைனை குறைக்கப்படும் அளவிற்கு ஸ்மித் மற்றும் வார்னரின் தண்டனை குறைக்கப்படலாம். மூன்று பேரும் அவர்களுடையை தண்டனையை ஏற்றுக் கொண்டார்கள். அதை எதிர்த்து முறையீடு செய்யவிலலை. ஆகவே, தடைக்காலம் தொடர்ந்து நீடிக்க வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.


    ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராப்ட் தடையை விலக்குவது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்த வாரம் இறுதி முடிவை எடுக்கிறது. #CA #Warner #Smith
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதற்கு மூளையாக செயல்பட்டது வார்னர் என்றும், இந்த விவகாரம் கேப்டன் ஸ்மித்திற்கு தெரியும் என்று விசாரணையில் தெரிய வந்தது.

    இதனால் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். ஸ்மித், வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலியா தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. இதனால் இருவர் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களின் சங்கமும் இவர்களுக்கு ஆதரவாக இருந்து. ஓராண்டு தண்டனையை பாதியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.



    டிசம்பர் 6-ந்தேதி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதன்முறையாக இந்தியாவிடம் ஆஸ்திரேலியா தொடரை இழக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்தியாவிடம் தொடரை இழந்தால் மிகப்பெரிய அளவில் விமர்சனத்திற்குள்ளாக வேண்டியிருக்கும் என ஆஸ்திரேலியா நினைக்கிறது. இதனால் தண்டனை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில் மூன்று பேரின் தடையை நீக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து இந்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தடை ஸ்மித் மற்றும் வார்னருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி வரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    வீடியோக்களை பார்த்து ஆஸ்திரேலியா தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். #AUSvIND
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்பவர் முகமது ஷமி. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்திய போதிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா 1-4 எனத் தொடரை இழந்தது.

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இங்கிலாந்து ஆடுகளத்தை போன்று ஆஸ்திரேலியா ஆடுகளத்தில் அதிக அளவில் ஸ்விங் இருக்காது. ஆனால் பவுன்சர், ரிவர்ஸ் ஸ்விங் இருக்கும்.

    இதனால் முகமது ஷமி, உமேஷ் யாதவ், இசாந்த ஷர்மா ஆகியோர் முக்கிய பங்காற்றுவார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பந்து வீச, வீடியோக்களை பார்த்து தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.



    ஆஸ்திரேலியா தொடர் குறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘வேகப்பந்து வீச்சுக்குழு இங்கிலாந்தில் சிறப்பாக பந்து வீசினோம். ஏராளமான வீடியோக்களை பார்த்து ஆஸ்திரேலியா தொடருக்காக தயாராகிக் கொண்டிருக்கிறோம். எதிரணி மிகவும் வலுவாக உள்ளதால், முடிந்த வகையில் தொடர் முழுவதும் கவனம் செலுத்துவதுதான் திட்டம். சரியான லைன் மற்றும் லெந்த் ஆகியவற்றில் துல்லியமாக பந்து வீச முயற்சி செய்வோம்.

    எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். வெற்றி அல்லது தோல்வி அதிர்ஷ்டத்தை சார்ந்தது. 100 சதவீத பங்களிப்பை வெளிப்படுத்துவோம். ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் விளையாடவில்லை என்றால், ஆஸ்திரேலியா அணி உண்மையிலேயே பலவீனமான அணியாகத்தான் இருக்கும். ஆனால், நம்முடைய திட்டத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்’’ என்றார்.
    வார்னர், சுமித் மீதான தடையை நீக்குவது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாக கெவின் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். #stevesmith #davidwarner
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

    அப்போது பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய அணி மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது டெலிவி‌ஷன் கேமராவில் தெளிவாக தெரிந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர் தனது தவறை ஒப்புக்கொண்டார்.

    இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர் மூளையாக செயல்பட்டதாகவும், கேப்டன் ஸ்டீவ்சுமித் அதற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது.

    ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்தது. இதைத் தொடர்ந்து வார்னர், சுமித்துக்கு தலா 1 ஆண்டும், பேன்கிராப்ட்டுக்கு 9 மாதமும் தடை விதித்து நடவடிக்கை எடுத்தது.

    வீரர்கள் மீதான நடவடிக்கை கடுமையானது என்று விமர்சிக்கப்பட்டது. இதனால் தடையை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

    இந்த பிரச்சினை தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட சுயேச்சை குழுவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை சாடியிருந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் தலைவர் டேவிட் பீவர், தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர் லேண்ட், இயக்குனர் மார்க் டெய்லர் ஆகியோர் தங்கள் பதவிகளை ஏற்கனவே ராஜினாமா செய்து இருந்தனர்.

    இதன் தொடர்ச்சியாக அணியின் செயல்திறன் தலைவர் ஹோவர்ட், ஒளிபரப்பு இயக்குனர் பென் அமர்பியோ ஆகியோரும் பதவி விலகினர்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பின் புதிய தலைமை செயல் அதிகாரியாக கெவின் ராபர்ட்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.

    ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் மற்றும் வீரர்கள் சங்கம் தடையை நீக்க தொடர்ந்து வலியுறுத்தியது.

    இந்த நிலையில் வார்னர், சுமித் மீதான தடையை நீக்குவது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாக கெவின் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வார்னர், சுமித் மீதான தடையை நீக்க வீரர்கள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. அது பரிசீலனை செய்யப்படும். வீரர்களின் உணர்வு மதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் மோசமாக தோற்றது. இதனால் வார்னர், சுமித் ஆகியோரது பணி ஆஸ்திரேலியாவுக்கு தேவையாக இருக்கிறது.

    இதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவர்கள் மீதான தடை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி வருகிற 21-ந் ளேததி முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆஸ்திரேலியா சென்று மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. #stevesmith #davidwarner
    பால் டேம்பரிங் என்பது சர்வதேச அளவிலான பிரச்சனை என்று ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார். #JustinLanger
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடும்போது கேப் டவுனில் நடைபெற்ற போட்டியில் வார்னர், ஸ்மித், பான்கிராப்ட் ஆகியோருக்கு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஒரு வருடம் தடைவிதித்துள்ளது.

    இந்த விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. முக்கிய வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் ஆஸ்திரேலியா அணி திணறி வருகிறது.

    உட்சக்கட்டமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பால் டேம்பரிங் தனித்துவிடப்பட்ட விஷயம் அல்ல. எனது காலக்கட்டத்தில் இதுபோன்று நடக்கவே நடக்காது என்று ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜஸ்டின் லேங்கர் கூறுகையில் ‘‘விளையாட்டு நடந்த கொண்டிருக்கும்போது ஆஸ்திரேலிய வீரர்கள் உப்பத்தாளை (sandpaper) என்படி எடுத்தார்கள் என்பதை ஒரு நொடி என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. எனக்கு தெரிந்த வகையில் பால் டேம்பரிங் என்பது உலகளவில் இருந்து கொண்டு வருகிறது. இது மிகவும் கவலைத்தரக்கூடிய விஷயம். குறிப்பாக ஆடுகளம் பந்து வீச்சுக்கு எடுபடாத நிலையில்தான் இதுபோன்ற சம்பவம் அரங்கேறுகிறது’’ என்றார்.
    ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் தேசிய அணிக்கு திரும்புவதற்கு பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். #Smith
    ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பான் கிராப்ட் ஆகியோர் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ளனர். ஸ்மித், வார்னருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓராண்டும், பான் கிராப்ட்டிற்கு 9 மாதமும் தடை விதித்துள்ளது.

    இந்த தடை முடிந்த பின்னர் மூன்று பேரும் எளிதாக மீண்டும் அணிக்கு திரும்ப முடியுமா? என்ற கேள்வி எழுந்து கொண்டே வருகிறது.

    வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலியா அணியின் முதுகெலும்பாக திகழ்வதால் அணிக்கு திரும்ப வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.



    இந்நிலையில் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் தடைக்காலம் முடிந்து மீண்டும் தேசிய அணிக்கு ஏன் திரும்ப முடியாது என்பதற்கான எந்த காரணமும் இல்லை ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.

    இதனால் அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் ஸ்மித் மற்றும் வார்னர் பங்கேற்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
    ஆடுகளத்தில் மூர்க்கத்தனமாக செயல்படும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக அனுதாபம் என்ற பேச்சுக்கு இடமில்லை என மொயீன் அலி தெரிவித்துள்ளார். #MoeenAli
    இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மொயீன் அலி. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்று ஆஷஸ் தொடரில் விளையாடியபோது அந்த அணியில் இடம்பிடித்திருந்தார். அப்போது மொயீன் அலி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பினார். இதனால் இந்தியாவிற்கு எதிரான முதல் மூன்று டெஸ்டிலும் அவர் இடம்பெறவில்லை.

    கவுன்ட்டி கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் சவுத்தாம்ப்டன் டெஸ்டில் களம் இறக்கப்பட்டார். இதில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணி தோல்வியடைய முக்கிய காரணமாக இருந்தார்.

    இவர் ஆஸ்திரேலியா சென்று விளையாடும்போது, அந்த அணி வீரர்கள் மிகவும் மோசமாக நடந்துள்ளனர். இதற்கிடையில் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில விமர்சித்தாலும் சிலர் இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திருக்கக்கூடாது என்று அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மூர்க்கத்தானமாக செயல்படும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்களுக்காக அனுதாபம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மொயீன் அலி கூறுகையில் ‘‘நான் விளையாட விரும்பாத ஒரே அணி எது என்றால், அது ஆஸ்திரேலியாதான். அவர்கள் எங்களது பழைய எதிரிதான். என்றாலும், அவர்கள் வீரர்களுக்கும் மக்களுக்கும் மதிப்பு அளிப்பதில்லை.



    கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன் முதன்முதலாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான் சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் விளையாடும்போது, அவர்கள் எனக்கு எதிராக கடினமாக மட்டும் நடந்து கொள்ளவில்லை. என்னை இழிவுப்படுத்தினார்கள். அது என்னை முதன்முறையாக தாக்கியது. 2015 ஆஷஸ் தொடரிலும் மோசமாக நடந்து கொண்டார்கள்.

    தவறு செய்த மூன்று பேர் மீதும் சிலருக்கு அனுதாபம் ஏற்படலாம். ஆனால், அவர்களுக்காக வருத்தம் பட கடினமாக உள்ளது’’ என்றார்.
    ஓராண்டு தடைபெற்றுள்ள வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் பிக் பாஷ் லீக்கில் விளையாட இயலாது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார். #Warner #Smith
    ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய வழக்கில் ஓராண்டு தடைபெற்றுள்ளனர். இதனால் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டது.

    தற்போது ஆஸ்திரேலியாவின் கீழ்மட்ட போட்டிகளிலும், வெளிநாட்டு லீக் தொடர்களிலும் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடைக்குப்பின் முதன் முறையாக இருவரும் கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 லீக் தொடரில் பங்கேற்றார்கள்.



    ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் பலர் இருவரையும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் பிக் பாஷ் டி20 லீக் தொடரின் தலைவர் கிம் மெக்கோனி ‘‘ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தடை ஆஸ்திரேலியா தேசிய அணிக்கும், கிளப் லெவல் ஆன தொடருக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் வரும டிசம்பர் மாதம் தொடங்கும் 2018-19 சீசனில் விளையாட வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
    ×