search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Big Bash League"

    • முதலில் ஆடிய பிரிஸ்பேன் அணி 166 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய சிட்னி அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சிட்னி:

    பிக்பாஷ் லீக் தொடரின் 13-வது சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. ஜோஷ் பிரவுன் 53 ரன்னும், ரென்ஷா 40 ரன்னும் அடித்தனர்.

    சிட்னி அணி சார்பில் சீன் அபாட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற இலக்குடன் சிட்னி அணி களமிறங்கியது.

    பரபரப்பாக நடைபெற்ற ஆட்டததில் சிட்னி அணி 17.3 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, பிரிஸ்பேன் ஹீட் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.

    பிரிஸ்பேன் அணியின் ஸ்பென்சர் ஜான்சன் 4 விக்கெட்டும், பார்ட்லெட், ஸ்வெப்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஸ்பென்சர் ஜான்சனுக்கு அளிக்கப்பட்டது.

    • டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
    • தற்போது பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் முக்கியமான வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். இந்த மாதம் தொடக்கத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆனால், டி20-யில் மட்டும் விளையாடுவதாக அறிவித்துள்ளார்.

    தற்போது ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இன்று சிட்னி மைதானத்தில் சிட்னி தண்டர்- சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின.

    சிட்னி தண்டர் அணிக்காக டேவிட் வார்னர் விளையாடி வருகிறார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்திற்குள் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்து தரையிறங்கியது. போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள் என்னடா? மைதானத்திற்குள் ஹெலிகாப்டர் தரையிறங்குகிறது என அச்சமைடந்தனர்.

    ஆனால் ஹெலிகாப்டரில் இருந்து டேவிட் வார்னர் ஹாலிவுட் பட பாணியில் ஒய்யாரமாக இறங்கி வந்தார். இதனால் ஆச்சர்யம் அடைந்த ரசிகர்களுக்கு டேவிட் வார்னர் ஏன் ஹெலிகாப்டர் மூலம் வர வேண்டும்? என்ற கேள்வி எழுந்தது.

    டேவிட் வார்னரின் சகோதரர் திருமணம் ஹன்டர் பள்ளத்தாக்கில் நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்ட பிறகு போட்டி நடைபெறும் இடத்திற்கு வாகனத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவது இயலாத காரியம். இதனால் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ளார்.

    கிரிக்கெட்டால் மட்டுமல்ல பொழுதுபோக்கு போன்ற செயல்களாலும் ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் டேவிட் வார்னர்.

    • முதலில் ஆடிய பிரிஸ்பேன் அணி 175 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பெர்த் அணி 19.3 ஓவரில் 177 ரன்கள் எடுத்து வென்றது.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் தொடரின் 12வது சீசன் நடைபெற்றது. இந்த தொடர் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று பெர்த்தில் நடைபெற்றது. இதில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. மெக்ஸ்வீனி 41 ரன்னும், ஹேஸ்ல்லெட் 34 ரன்னும் அடித்தனர்.

    பெர்த் அணி சார்பில் பெஹண்ட்ராப், கெல்லி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற இலக்குடன் பெர்த் அணி களமிறங்கியது.

    பரபரப்பாக நடைபெற்ற ஆட்டததில் பெர்த் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அத்துடன் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. கேப்டன் ஆஷ்டன் டர்னர் 53 ரன்கள் அடித்தார். இறுதியில் நிக் ஹாப்சன் 7 பந்தில் 18 ரன்களும், கூப்பர் கன்னோலி 11 பந்தில் 25 ரன்னும் எடுத்து அணியின் வெற்றியை எளிதாக்கினர்.

    ஆட்ட நாயகன் விருது ஆஷ்டன் டர்னருக்கும், தொடர் நாயகன் விருது மேத்யூ ஷார்ட்டுக்கும் அளிக்கப்பட்டது.

    • முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 224/5 ரன்கள் குவித்து மிரட்டியது.
    • 225 ரன்களை துரத்திய சிட்னி 20 ஓவர்களில் 209 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

    ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பாஷ் பிரீமியர் லீக் டி20 தொடர் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்தொடரில் 2023 புத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியன்று நடைபெற்ற 25 வது லீக் போட்டியில் பிரிஸ்பென் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின.

    காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 224/5 ரன்கள் குவித்து மிரட்டியது.

    அதை தொடர்ந்து 225 ரன்களை துரத்திய சிட்னி 20 ஓவர்களில் 209 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

    முன்னதாக அப்போட்டியில் மிடில் ஓவர்களில் களமிறங்கி மிரட்டலாக பேட்டிங் செய்த ஜோஸ் சில்க் 3 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக ரன்களை சேர்த்து சிட்னி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வர போராடினார். குறிப்பாக 19-வது ஓவரின் முதல் பந்தில் அதிரடி காட்டிய அவர் டீப் திசையில் சிக்சரை பறக்க விட்டார். அதை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் நாசீர் முடிந்தளவுக்கு தாவி பந்தை பிடித்தார். அதே சமயம் பேலன்ஸ் செய்ய முடியாமல் பவுண்டரி எல்லையை கடந்த அவர் வழக்கம் போல பந்தை மேலே தூக்கி போட்டு பவுண்டரி எல்லைக்குள் சென்றார்.

    ஆச்சரியப்படும் வகையில் அவர் வீசிய கோணத்தில் மைதானத்திற்குள் செல்லாத பந்து தொடர்ந்து அவரை நோக்கியே பவுண்டரி எல்லைக்குள் காற்றில் இருந்தது. அப்போது பவுண்டரிக்குள் சென்று 3- 4 அடிகள் மெதுவாக ஓடிய அவர் தன்னை நோக்கி வந்த பந்து கச்சிதமாக பிடிக்க முயற்சிதார். ஆனால் பவுண்டரிக்குள் இருந்த அவர் தனது கையால் கீழே வந்து கொண்டிருந்த பந்தை பிடிக்க சென்ற போது ஒரு காலில் தாவி இன்னொரு காலையும் தரையிலிருந்து எடுத்த பின்னர் பந்தை பிடித்து அடுத்த அரை நொடிக்குள் மீண்டும் மைதானத்திற்குள் இருக்கும் வகையில் காற்றில் தூக்கி போட்டார். அதாவது பந்தை பிடிக்கும்போது அவரது இரு கால்களும் அரை நொடிப் பொழுது காற்றில் இருந்தது. அதனால் மீண்டும் களத்திற்குள் வந்து பந்தை பிடித்த அவர் கேட்ச் பிடித்து விட்டதாக நடுவரிடம் வாதாடினார்.

    அதை தொடர்ந்து அதை சோதித்த 3-வது நடுவர் அழைத்த நிலையில் ஒன்றுக்கு 2 முறை அவரது இந்த சாதுரியமான வேலையை சோதித்து பார்த்தார். இறுதியில் பவுண்டரிக்குள் சென்றாலும் பந்தை அவர் கையில் பிடிக்கும் போது 2 கால்களும் தரையில் இல்லாத காரணத்தால் அது அவுட் என்று நடுவர் அறிவித்தார்.

    அதனால் வர்ணையாளர்கள் மிகவும் ஆச்சரியமடைந்து வியப்பில் ஆழ்ந்தது போலவே ரசிகர்களும் வாய் மேல் கை வைத்து நின்றார்கள். மேலும் இது நான் பார்த்ததிலேயே மிகவும் சர்ச்சையான அவுட் என்று வர்ணனையாளர்கள் செய்த ஆடம் கில்கிறிஸ்ட், சைமன் டௌல் ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 

    • சிட்னி தண்டர்ஸ் அணி வெறும் 5.5 ஓவர்கள் மட்டும் விளையாடியது.
    • முடிவில் வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமாக தோற்றது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான டி20 கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான ஆண்கள் பிக்பாஷ் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

    மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்பேன் ஹீட், ஹோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ், சிட்னி தண்டர்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி தண்டர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற அடிலெய்டு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய அடிலெய்டு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 36 ரன்களும் , காலின் டி கிராண்ட்கோம் 33 ரன்களும் எடுத்தனர்.

    இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்தது.

    தொடக்க வீரர்கள் மட்டுமின்றி பின்னர் வந்த அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். சிட்னி அணியில் 5 பேட்ஸ்மேன்கள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், சிட்னி தண்டர்ஸ் அணி 5.5 ஓவர்கள் முடிவில் வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான தோல்வியை கண்டது. இதன்மூலம் அடிலெய்டு அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அடிலெய்டு அணியில் ஹென்றி தோர்ன்டன் 5 விக்கெட்டும், வெஸ் அகர் 4 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதன்மூலம் பிக்பாஷ் லீக் தொடரில் வெறும் 15 ரன்னில் சுருண்டு சிட்னி அணி மோசமான சாதனையைப் படைத்துள்ளது.

    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சிட்னி சிக்சர்ஸ் அணி. #BigBashLeague
    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஜேம்ஸ் வின்ஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ஜோர்டான் சிக் ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 41 ரன்களில் அவுட்டானார். வின்ஸ் 75 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால், சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

    பிரிஸ்பேன் ஹீட் சார்பில் ஜோஷ் லலோர் 5 விக்கெட் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணி களமிறங்கியது.

    ஆனால், சிட்னி சிக்சர்ஸ் அணியின் அபாரமான பந்து வீச்சில் சிக்கி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், பிரிஸ்பேன் ஹீட் அணி 18.1 ஓவரில் 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 75 ரன்கள் எடுத்த ஜேம்ஸ் வின்ஸ் ஆட்ட நாயகனாக தேவு செய்யப்பட்டார். #BigBashLeague
    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ். #BigBashLeague
    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில் சிக்கிய மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியினர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 

    இறுதியில், மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி 19.3 ஓவரில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக மொகமது நபி 28 ரன்னும், டாம் கூப்பர் 24 ரன்னும் எடுத்தனர்.

    மெல்போர்ன் ஸ்டார்ஸ் சார்பில் ஸ்டோனிஸ் 3 விக்கெட்டும், ஜாக்சன் பேர்ட், பிளங்கெட், சம்பா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் மார்க் ஸ்டோனிசின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 19.2 ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் 124 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டோனிஸ் 70 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். #BigBashLeague
    பிக் பாஷ் டி20 லீக் தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் பிரிஸ்பேன் ஹீட் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #BigBashLeague
    ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரின் 2018-19 சீசன் இன்று தொடங்கியது. பிரிஸ்பேனில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின.

    முதன்முறையாக காய்ன் சுண்டப்படுவதற்குப் பதிலாக பேட் தூக்கிப்போடப்பட்டது. இதில் அடிலெய்டு அணி டாஸ் வென்று பந்து வீச்சு தொடங்கியது.

    அதன்படி பிரிஸ்பேன் ஹீட் அணியின் பிரெண்டன் மெக்கல்லம், பிரையன்ட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெக்கல்லம் 4 ரன்னில் ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளித்தார். பிரையன்ட் 22 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் கிறிஸ் லின் 20 பந்தில் நான்கு பவுண்டரி, 2 சிக்சருடன் 33 ரன்கள் சேர்த்தார். விக்கெட் கீப்பர் பெய்ர்சன் 13 பந்தில் 24 ரன்கள் சேர்க்க பிரிஸ்பேன் ஹீட் 19.4 ஓவரில் 146 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.



    பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடிலெய்டு அணியின் கேப்டன் அலெக்ஸ் கேரி, வெதரால்டு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வெதரால்டு 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி 46 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 70 ரன்கள் குவித்தார். வெல்ஸ் ஆட்டமிழக்காமல் 22 பந்தில் 24 ரன்கள் சேர்க்க அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரில் இரண்டு கோடிக்கு மேல் ஏலம் போன அடிலெய்டு கேப்டன் இன்ங்கிராம் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான வெயின் பிராவோ-வை மெல்போர்ன் ஸ்டார்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. #BigBash
    ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் நடைபெறும். 2018-19 சீசன் விரைவில் தொடங்குகிறது.

    பிக் பாஷ் டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான வெயின் பிராவோ மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடினார்.



    இந்நிலையில் இந்த சீசனில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஸ்டார்ஸ் அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் உள்ளார். இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இணைந்து பணியாற்றியுள்ளனர்.

    பிராவோ மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மானை பிக் பாஷ் அணியான பிரிஸ்பேன் ஹீட் ஒப்பந்தம் செய்துள்ளது. #BigBash
    ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான். 17 வயதே ஆன இவரை ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசியதால், சர்வதேச அளவில் புகழ் பெற்றார்.



    இதனால் சர்வதேச அளவில் பெரும்பாலான டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் தொடரில் விளையாடும் பிரிஸ்பேன் ஹீட் அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.

    ஐபிஎல் தொடரில் 11 போட்டியில் 14 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் முஜீப் உர் ரஹ்மான்.
    ஓராண்டு தடைபெற்றுள்ள வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் பிக் பாஷ் லீக்கில் விளையாட இயலாது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார். #Warner #Smith
    ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய வழக்கில் ஓராண்டு தடைபெற்றுள்ளனர். இதனால் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டது.

    தற்போது ஆஸ்திரேலியாவின் கீழ்மட்ட போட்டிகளிலும், வெளிநாட்டு லீக் தொடர்களிலும் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடைக்குப்பின் முதன் முறையாக இருவரும் கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 லீக் தொடரில் பங்கேற்றார்கள்.



    ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் பலர் இருவரையும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் பிக் பாஷ் டி20 லீக் தொடரின் தலைவர் கிம் மெக்கோனி ‘‘ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தடை ஆஸ்திரேலியா தேசிய அணிக்கும், கிளப் லெவல் ஆன தொடருக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் வரும டிசம்பர் மாதம் தொடங்கும் 2018-19 சீசனில் விளையாட வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
    இந்திய வீரர்கள் மற்ற டி20 லீக் தொடர்களிலும் விளையாட வேண்டும் என்று அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் விருப்பம் தெரிவித்துள்ளார். #ChrisGayle
    இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. இதுபோன்று ஆஸ்திரேலியா பிக்பாஷ், வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் டி20 லீக், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்காள தேசம் வங்காளதேசம் பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகிறது.

    மற்ற நாட்சைச் சேர்ந்த வீரர் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்ற டி20 லீக் தொடரில் விளையாட வீரர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை.

    இந்நிலையில் இந்தியாவில் திறமையான வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் வெளிநாட்டு டி20 லீக் தொடரில் விளையாட வேண்டும் என்று டி20 ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் விருப்பம் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘இந்தியாவில் திறமையான வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்கு ஐபிஎல் தொடர் விளையாடு வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்கள் வெளிநாட்டில் நடைபெறும் லீக் தொடரில் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்.

    இதுபோன்ற வீரர்களுக்கு தேசிய அணியில் விளையாட இடம் கிடைக்கமாமல் போகிறது. இதனால் இந்திய அணியில் இடம்பிடிப்பது கடினமாகிறது. இதனால் மற்ற டி20 லீக்கில் ஆடினால் சர்வதேச அளவிற்கான அனுபவத்தை பெற முடியும்’’ என்றார்.
    ×