search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டீவ் சுமித்"

    • சமீபத்தில் டேவிட் வார்னர் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
    • இதனால் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் சுமித் களம் இறங்குகிறார்.

    சிட்னி:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் சுமித் களம் இறங்குவார். உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து தொடக்க வீரராக அவர் ஆடுகிறார்.

    டேவிட் வார்னர் சமீபத்தில் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக தொடக்க வீரராக யார் களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆஸ்திரேலிய தேர்வு குழு ஸ்டீவ் சுமித் தொடக்க வீரராக ஆடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    இந்நிலையில், டெஸ்ட் அணிக்கு தொடக்க வீரராக விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என ஸ்டீவ் சுமித் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:

    லபுசேன் 3-வது வரிசையில் களம் இறங்குவதால் நான் பேட்டிங் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. பேட்டிங் செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருப்பதை நான் விரும்பவில்லை. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.

    புதிய பந்தினைச் சந்திப்பது எனக்கு பிடிக்கும். 2019-ம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரின்போது நான் சீக்கிரமாக களம் இறங்கி புதிய பந்தினைச் சந்தித்தேன்.

    3-வது வரிசையில் களம் இறங்கி பல ஆண்டுகளாக புதிய பந்துகளில் சிறப்பாக விளையாடி உள்ளேன். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த தொடக்க ஆட்டக்காரர் பொறுப்பு ஒன்றும் புதிதாக இருக்கப் போவதில்லை.

    இந்தப் பொறுப்பை மகிழ்ச்சியுடனும், சவாலாகவும் ஏற்றுக்கொண்டு தொடக்க வரிசையில் விளையாடுவேன் என தெரிவித்தார்.

    • 3 வடிவிலான போட்டிகளும் வார்னர் மிக சிறந்த அதிரடி ஆட்டக்காரர் ஆவார்.
    • டெஸ்ட் போட்டியில் நான் தொடக்க வீரராக விளையாட மகிழ்ச்சியுடன் உள்ளேன்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டியில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார். ஏற்கனவே அவர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்துவிட்டார்.

    3 வடிவிலான போட்டிகளும் வார்னர் மிக சிறந்த அதிரடி ஆட்டக்காரர் ஆவார். அவரது இடத்தை நிரப்புவது என்பது மிகவும் சவாலானதே.

    37 வயதான வார்னர் சர்வதேச போட்டிகளில் 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். 49 சதமும், 94 அரைசதமும் அடித்துள்ளார். தனது 14 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துள்ளார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு தொடக்க வீரராக விளையாட விருப்பத்துடன் இருப்பதாக மற்றொரு முண்ணனி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் போட்டியில் நான் தொடக்க வீரராக விளையாட மகிழ்ச்சியுடன் உள்ளேன். நிச்சயமாக தொடக்க வீரராக களம் இறங்குவதில் ஆர்வத்துடன் இருக்கிறேன். தேர்வு குழு என்னிடம் இதுபற்றி பேசுவார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஏற்கனவே கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், கேமரூன் பேன்கிராப்ட், மேட் ரென்ஷா ஆகியோரும் தொடக்க வீரருக்கான போட்டியில் உள்ளார். அவர்களுடன் ஸ்டீவ் சுமித் தும் தற்போது இணைந்து உள்ளார்.

    அதே நேரத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் கம்மின்ஸ் தொடக்க வீரராக ஸ்டீவ் சுமித் விளையாடுவதை விரும்ப வில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    • 5 பேட்ஸ்மேன்களுமே அவர்களது அணிக்காக அதிக ரன்களை குவித்து உள்ளனர்.
    • உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பதால் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    மெல்போர்ன்:

    கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் 'பேபுலஸ் போர்' (மிகச்சிறந்த நால்வர்) என்ற வார்த்தை பிரபலமானது. வீராட்கோலி (இந்தியா), ஜோரூட் (இங்கிலாந்து), வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவ் சுமித் (ஆஸ்திரேலியா) ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

    தற்போது இந்த அடை மொழியில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் 5-வதாக இணைந்துள்ளார். அதனால் 'பேப் 5' என அழைக்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த 5 வீரர்களில் உலக கோப்பை போட்டியில் வீராட்கோலியும், ஸ்டீவ் சுமித் தான் முத்திரை பதிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த 5 பேட்ஸ்மேன்களுமே அவர்களது அணிக்காக அதிக ரன்களை குவித்து உள்ளனர். இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் இந்த 5 பேருமே ரன்களை குவிக்க வாய்ப்பு உள்ளது. ஒருநாள் போட்டி, டெஸ்ட், 20 ஓவர் என 3 வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக இருப்பது வீராட்கோலி, ஸ்டீவ் சுமித் மட்டுமே.

    இருவரும் இந்த உலக கோப்பை போட்டியில் தங்களது முத்திரையை பதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பதால் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆசிய அணிகள் இந்தியாவில் சிறப்பாக செயல்படும்.

    ஆனால் சமீபகாலமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவில் அபாரமாக ஆடுகிறார்கள். இந்தியாவில் அவர்கள் தங்கள் நேரத்தை செலவிடு கிறார்கள். இதனால் உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு அதிகமான வாய்ப்பு உள்ளது.

    34 வயதான வீராட்கோலி டெஸ்டில் 8676 ரன்னும் (111 போட்டி) ஒருநாள் போட்டியில் 12,898 ரன்னும் (275), 20 ஓவரில் 4008 ரன்னும் (115) எடுத்துள்ளார். அவரது சராசரி முறையே 49.29, 57.32 மற்றும் 52.73 ஆக இருக்கிறது.

    34 வயதான ஸ்டீவ் சுமித் டெஸ்டில் 9320 ரன்னும் (102), ஒருநாள் போட்டியில் 4939 ரன்னும் (142) எடுத்து உள்ளார். அவரது சராசரி முறையே 58.61 மற்றும் 44.49 ஆக இருக்கிறது.

    • ஆஸ்திரேலியாவை விட இந்திய ரசிகர்களே அதிகமாக இருப்பார்கள்.
    • இது சிறப்புமிக்க ஜாலியான ஒரு போட்டியாக இருக்கப்போகிறது.

    லண்டன்:

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க உள்ள லண்டன் ஓவலில் குறிப்பிட்ட பகுதியில் சுழற்பந்து வீச்சு எடுபடும் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார்.

    2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் வருகிற 7-ந்தேதி (மாலை 3மணி) தொடங்குகிறது. இதில் புள்ளிப் பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையொட்டி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணி பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆயத்தமாகி வருகிறது.

    இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவன்சுமித் நேற்று அளித்த ஒரு பேட்டியில், 'டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க உள்ள ஓவலில் போக போக ஆடுகளத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டு கொஞ்சம் சுழற்பந்து வீச்சு எடுபட வாய்ப்புள்ளது. இந்தியாவில் நாங்கள் எந்த மாதிரி சவாலை எதிர்கொண்டோமோ அதே போன்று இங்கும் சந்திக்க நேரிடலாம். ஒட்டுமொத்தத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கு அற்புதமான ஒரு இடம் ஓவல். நிலைத்து நின்று விட்டால் பேட்டிங் செய்வதற்கு அருமையான இடம். இதே போல் வேகத்துடன் கூடிய பவுன்சும் ஓரளவு இருக்கும்' என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், 'இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதுவது உற்சாகம் அளிக்கிறது. நிச்சயம் அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் திரள்வார்கள். அனேகமாக ஆஸ்திரேலியாவை விட இந்திய ரசிகர்களே அதிகமாக இருப்பார்கள். இது சிறப்புமிக்க ஜாலியான ஒரு போட்டியாக இருக்கப்போகிறது. அதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்' என்றார்.

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். கணுக்கால் காயத்தால் பாதியில் ஒதுங்கிய அவர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகிக்கிறார். அவர் கூறுகையில், 'எனது உடல்தகுதி இப்போது நன்றாக இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் முழு உடல்தகுதியை அடைவதற்கான பயிற்சியை மேற்கொள்வேன். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவேன் என்று நம்புகிறேன்' என்றார்.

    • தனது மனைவியின் பெயரை டேக் செய்வதற்குப் பதிலாக வேறொரு பெண்ணை டேக் செய்து அவருக்கு காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
    • ஸ்டீவ் சுமித் மற்றும் டேனி வில்லீஸ் இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் சுமித் இடம் பெற்று உள்ளார்.

    ஏற்கனவே நாக்பூர் மைதானத்தில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் வரும் 18-ம் தேதி நடக்கிறது.

    இந்த நிலையில், தனது மனைவிக்கு காதலர் தின வாழ்த்து கூறுவதாக நினைத்து வேறொரு பெண்ணிற்கு ஸ்டீவ் சுமித் வாழ்த்து கூறி பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

    டுவிட்டரில் அழகான மனைவி டேனி வில்லீஸூக்கு காதலர் தின வாழ்த்துக்கள்...! உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. இன்னும் சிறிது நாட்களில் உன்னை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

    ஆனால், அவர் டேக் செய்தவர் தான் தவறு. ஸ்டீவ் சுமித்தின் மனைவி டேனி வில்லீஸ் (Danielle Willis நிக் நேம் Dani), Dani_willis இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கிறார். ஆனால், டுவிட்டரில் டி.குயீன் என்ற வேறு ஒருவர் தான் இருக்கிறார். இதனை சற்றும் யோசிக்காத ஸ்டீவ் சுமித், தனது மனைவியின் பெயரை டேக் செய்வதற்குப் பதிலாக வேறொரு பெண்ணை டேக் செய்து அவருக்கு காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார்.

    ஸ்டீவ் சுமித் மற்றும் டேனி வில்லீஸ் இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தனது கணவரை பார்ப்பதற்காக டேனி வில்லீஸ் விரைவில் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×