search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மித்"

    • 2018-19 ஆண்டில் ஸ்மித் என்கிற குடும்ப பெயரை சிங் என்கிற குடும்ப பெயர் தாண்டியது
    • ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தற்போது தெற்காசிய வம்சாவளியை சேர்ந்த 70,000 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இனி இந்தியர்களே அதிகம் இடம் பெறப் போகிறார்கள் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் அதிக அளவில் கிரிக்கெட் ஆடி வருவதாக குறிப்பிட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள "Play HQ" என்ற செயலி ஒன்று உள்ளது.

    அதில், 2023-24-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளில் பதிவு செய்யப்பட்ட வீரர்களில் 4262 பேர் சிங் என்கிற குடும்ப பெயர்களை கொண்டுள்ளனர். இதற்கு அடுத்து, ஸ்மித் என்கிற குடும்ப பெயரை 2,364 பேர் கொண்டுள்ளனர். படேல் என்கிற குடும்ப பெயரை 2323 பேர் கொண்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் கணிசமானோர் ஸ்மித் என்கிற குடும்ப பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில், ஸ்மித் என்கிற குடும்ப பெயரை விட சிங் என்கிற குடும்ப பெயர் கொண்டோர் ஆஸ்திரேலிய அணியில் அதிகம் இடம் பிடித்துள்ளனர்.

    2018-19 ஆண்டில் ஸ்மித் என்கிற குடும்ப பெயரை சிங் என்கிற குடும்ப பெயர் தாண்டியது. அன்றிலிருந்து இப்போது வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சிங் பெயர் கொண்டவரே அதிகமாக உள்ளனர்.

    சர்மா, கான், குமார் ஆகிய இந்திய வம்சாவளி குடும்ப பெயர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பதிவு செய்யப்பட்ட முதல் 16 பெயர்களில் இடம் பெற்றுள்ளது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தற்போது தெற்காசிய வம்சாவளியை சேர்ந்த 70,000 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் முதல்தர, ஆண்கள் மற்றும் பெண்கள் பிக் பாஷ் லீக்கில் (BBL) கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு 100 வீரர்களில், தெற்காசிய வம்சாவளியினரின் பிரதிநிதித்துவம் 4.2 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடங்க உள்ளது.
    • ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடினார்.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் மெல்போர்ன் பூங்காவில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சுடன் நட்புரீதியான டென்னிஸ் விளையாடி அசத்தினார்.

    இரு நட்சத்திரங்களுக்கு இடையேயான டென்னிஸ் போட்டியானது ஆஸ்திரேலிய ஓபன் 2024- க்கு ஒரு முன்னோடியாக திகழும்.

    ஸ்மித் கிரிக்கெட்டில் பெயர் பெற்றவர் என்றாலும், அவர் ஜோகோவிச்சின் ஒரு சர்வீஸை தாக்கு பிடிப்பாரா என்ற கோணத்தில் ரசிகர்கள் எதிர் நோக்கி இருந்தனர். அனைவரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அவரது சர்வீஸை ஸ்மித் கோர்ட்டிற்குள் திருப்பி அனுப்பினார். இது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை கண்ட ஜோகோவிச் கூட அதிர்ச்சியடைந்தார். கூட்டத்தில் இருந்த ரசிகர்களின் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் ஸ்மித்க்கு தலைவணங்கி தனது பாராட்டை ஜோகோவிச் வெளிப்படுத்தினார்.

    அதன்பிறகு ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடினார். அவர் முதல் பந்தை அடிக்க முற்பட்டார். அது பேட்டில் படவில்லை. உடனே அடுத்து பந்து போடப்பட்டது. பேட் நமக்கு செட் ஆகாது என தெரிந்து கொண்ட ஜோகோவிச் மறைத்து வைத்திருந்த டென்னிஸ் மட்டையால் பந்தை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

    இவர்கள் இருவரும் டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • 2-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கடந்த 26-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் 264 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 54 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    317 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 237 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.

    2-வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்மித் - பாபர் அசாம் குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மைதானத்தில் களமிறங்கும் பேட்டர்கள் ஸ்டெம்ப் பக்கத்தில் நின்று லெக் ஸ்டெம்ப் மற்றும் நடு ஸ்டெம்ப் திசையில் சரியாக நிற்கிறேனா என்பதை நடுவரிடம் கேட்டு அதற்கு ஏற்றார்போல் மார்க் பண்ணுவார்கள்.

    அந்த வகையில் பாபர் அசாம் ஆடுகளத்திற்கு வந்து ஸ்டெம்ப் பக்கத்தில் நின்று நடுவரிடம் கேட்பார். அப்படி எடுக்கும் போது ஸ்டெம்ப் பின்னால் நின்ற ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஏதோ (சரியாவே எடுக்க தெரியல என்பது போல) கூறினார். உடனே பாபர் அசாம் பேட்டை நீட்டி ஏதோ (நீ எடுத்து கொடுக்கிறாயா என்பது போல) கூறினார். உடனே ஸ்மித் கையெடுத்து கும்பிட்டு ஆள விடு சாமி என்பது போல சென்றார்.

    பேட்டர்கள் இப்படி எடுக்க வரும் போது எல்லாம் ஸ்மித் இது மாதிரி எதாவது சொல்லுவது வழக்கமாக கொண்டுள்ளார். அதற்கும் மேலாக அவர்கள் மார்க் செய்து வச்ச இடத்தை தடம் தெரியாத மாதிரி அழித்து விடவும் செய்துள்ளார். அந்த வகையில் இது நடந்துள்ளது. ஆனால் இது சற்று வித்தியாசமாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    • பந்து வீச்சாளர்களில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • பேட்ஸ்மேன்களில் மாரன்ஸ் லபுசேன் 903 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    ஐசிசி இன்று வெளியிட்டுள்ள சிறந்த பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் 884 புள்ளிகளுடன் ஹெட் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது . இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்சில் சதம் (163) அடித்தும், 2வது இன்னிங்சில் 18 ரன்களும் எடுத்தார். முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய அவர் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஸ்மித் 885 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் நீடிக்கிறார் ஆஸ்திரேலிய வீரர் மாரன்ஸ் லபுசேன் 903 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

    மேலும் 39 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே அணியைச் சேர்ந்த மூன்று பேட்ஸ்மேன்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். ஒரே அணியை சேர்த்த வீரர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பது அரிதான நிகழ்வு. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இது கடைசியாக 1984-ல் நிகழ்ந்தது. மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் கோர்டன் கிரீனிட்ஜ் (810 ரேட்டிங் புள்ளிகள்), கிளைவ் லாயிட் (787) மற்றும் லாரி கோம்ஸ் (773) ஆகியோர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர்.

    இந்தியா சார்பில் ரிஷப் பண்ட் 10-வது இடத்தில் உள்ளார். ரகானே முதல் இன்னிங்சில் 89 மற்றும் 2-வது இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்ததன் மூலம் அவர் 37-வது இடத்திற்குத் திரும்பினார். ஷர்துல் தாக்கூர் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்ததன் மூலம் 6 இடங்கள் முன்னேறி 94-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    பந்து வீச்சாளர்களில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

    • இங்கிலாந்து சமீபத்தில் 13 போட்டிகளில் 11-ல் வெற்றி கண்டுகள்ளது
    • பேட்ஸ்மேன்கள் அச்சமின்றி அதிரடியாக விளையாட வேண்டும் என்பதே இங்கிலாந்து அணியின் நோக்கம்

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்த கையோடு ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது. வருகிற 16-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 31-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் பாரம்பரியமான தொடர். இந்தத் தொடரை இழக்க இரு அணிகளும் விரும்பாது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலும், மெக்கல்லம் பயிற்சிலும் இங்கிலாந்து அணி 'பாஸ்பால்' என்ற பயமறியாமல் அதிரடியாக விளையாடி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்கும் அணுமுறையை மேற்கொண்டுள்ளது.

    இதன்காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக 13 டெஸ்ட் போட்டிகளில் 11-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆஷஸ் தொடரில் இந்த அணுகுமுறையை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து கடைபிடிக்குமா? என ரசிகர்கள் எதிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இங்கிலாந்தின் 'பாஸ்பால்' ஆட்டம் குறித்து ஸ்மித் கூறியதாவது:-

    இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எங்களது பந்துவீச்சுக்கு எதிராக எப்படி பாஸ்பால் கிரிக்கெட் விளையாட இருக்கிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். எப்போதும் இதை நான் கூறி வருகிறேன். உண்மையிலேயே அதை பார்க்க ஆர்வமாக இருக்கும். கடந்த 12 மாதங்களாக தங்களது அணுகுமுறையை மாற்றி சிறப்பாக விளையாடும் இங்கிலாந்து ஆட்டத்தை பார்த்து ரசிப்பேன் என்பதை உறுதியாக கூறுவேன்.

    ஆனால், எங்களுக்கு எதிராக அவர்கள் எப்படி விளையாட இருக்கிறார்கள் என்பதை பார்க்க காத்திருக்க வேண்டும்.

    ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகிய தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஹேசில்வுட் காயத்தால் ஓய்வில் உள்ளார். காயம் குணமடைந்தால் அணியில் இணைவார். இல்லையெனில் ஸ்காட் போலண்ட் அவருக்குப் பதிலாக களம் இறங்க வாய்ப்புள்ளது. இந்தியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் போலண்ட்தான் களம் இறங்கியுள்ளார்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் சராசரி 60-க்கு மேல் ஆகும்
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 31 சதங்கள் விளாசியுள்ளார்

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவன் ஸ்மித் சதம் விளாசினார். இது அவரின் 31-வது சதம் ஆகும்.

    இந்த போட்டி தொடங்குவதற்கு முன் ஸ்மித் குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்று வரும்போது, இந்த தலைமுறையில் ஸ்மித் சிறந்த வீரர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எந்தவொரு வீரரும் அவரை நெருங்க முடியும் என நான் நினைக்கவில்லை.

    அவருடைய திறமை, போட்டிக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்வது, சூழ்நிலைக்கு ஏற்றபடி விளையாடுவதில் அவருக்கு இணை எவரும் இல்லை. அவருடைய சாதனை அவரைப் பற்றி பேசும். 85 முதல் 90 போட்டிகளில் விளையாடி 60-க்கு மேல் சராசரி வைத்திருப்பது நம்ப முடியாதது.

    இவ்வாறு விராட்  கோலி குறிப்பிட்டிருந்தார்.

    விராட் கோலி கூறியதுபோல் சிறந்த வீரர் என்பதை ஸ்மித் நிரூபித்து விட்டார். ஆஸ்திரேலியா 76 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஸ்மித் 4-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சதம் விளாசினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 285 ரன்கள் குவித்தது. ஸ்மித் 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    469 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆன நிலையில், இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. விராட் கோலி 14 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். நேற்றை 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து தடுமாற்றத்தில் உள்ளது.

    ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இல்லாமல் இளம் வீரர்கள் ஆசிரியர் இல்லாத மாணவர்கள் போன்று தவித்து வருகிறார்கள் என்று ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றுள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர். அவர்களை வழி நடத்த மூத்த வீரர்களான ஸ்மித், வார்னர் இல்லாமல் போய்விட்டனர்.

    ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர்கள் ஆசிரியர் இல்லாத மாணவர்கள் போன்று தவிக்கிறார்கள் என்ற ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹசில்வுட் கூறுகையில் ‘‘முதல் முறையாக முதல் 6 முன்னணி பேட்ஸ்மேன்கள் சீனியர் வீரர்கள் இல்லாமல் களம் இறங்கும்போது, பயிற்சியாளரிடம் மட்டுமே இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.



    ஒவ்வொரு முறையும் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்ய களம் இறங்கும்போது சதம் அடிக்கும் நிலையில் இருப்பார். அதனால்  வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி ஏற்படாது. ஆறு புதுமுகங்கள் இருக்கும்போது இரண்டு முன்னணி வீரர்கள் அணியில் இருந்து கற்றுக்கொடுப்பது அவசியம்.

    அனைத்து விஷயங்களையும் பயிற்சியாளர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியாது. சீனியர் வீரர்களுடன் ஆடுகளத்தில் இணைந்து விளையாடும்போது, அவர்களிடம் இருந்து இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள முடியும்’’ என்றார்.
    முழங்கை காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் ஸ்டீவன் ஸ்மித் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்ததுள்ளது. #Smith
    கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய, அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒரு ஆண்டு விளையாட தடை விதித்தது.

    அவரது தடைக்காலம் வருகிற மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அவர் மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    தடைக்காலத்தில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் வங்காளதேச பிரிமீயர் லீக்கில் விளையாடி வந்தார்.

    இந்நிலையில் ஸ்டீவன் ஸ்மித்துக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வங்காளதேசத்தில் இருந்து நாடு திரும்புறார். அவரது காயத்துக்கு நாளைமறுதினம் ஆபரேஷன் செய்து கொள்கிறார். இதனால் அவர் குறைந்தது 6 வார காலம் கிரிக்கெட் விளையாட முடியாது.

    எனவே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித் இடம் பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு 78 நாட்களே உள்ளதால் ஸ்டீவன் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பங்கேற்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
    ×