search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Commissioner"

    • சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
    • அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கையால் காவல் துறையில் பரபரப்பு.

    சென்னையில் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கனவே 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கையால் காவல் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக மகேஸ்வரி நியமனம் செய்யபட்டார்.
    • முதுநிலை பட்டப்படிப்பு முடித்துள்ள மகேஸ்வரி திருச்சியை சேர்ந்தவர் ஆவார்.

    நெல்லை:

    நெல்லை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த ராஜேந்திரன் தமிழக உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.யாக மாற்றபட்டார். இதனால் அந்த இடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்து வந்தது.

    புதிய கமிஷனர்

    இந்நிலையில் அந்த இடம் நிரப்பட்டு ஐ.ஜி அந்தஸ்த்தில் இருக்கும் மகேஸ்வரி நியமனம் செய்யபட்டார். இதனையடுத்து இன்று அவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.

    போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள மகேஸ்வரி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பியாக தமிழக காவல்துறையில் சேர்ந்து பின்னர் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.

    இவர் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு பிரிவு, சென்னை நகர போக்குவரத்து காவல் ஆகிய இடங்களில் பணியாற்றினார். அதன் பின்னர் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று தென் சென்னை இணை கமிஷனராகவும், சேலம் டி.ஐ.ஜி.யாகவும் பணியாற்றி உள்ளார். கடந்த ஆண்டு மகேஸ்வரிக்கு ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு அவர் சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றினார்.

    முதல் பெண்

    பி.இ. மற்றும் எஸ்.எஸ்.(ஐ.டி.) முதுநிலை பட்டப்படிப்பு முடித்துள்ள மகேஸ்வரி திருச்சியை சேர்ந்தவர் ஆவார். நேர்மையான போலீஸ் அதிகாரி என்ற பெயர் பெற்ற இவர் சட்டம், ஒழுங்கில் அனுபவம் மிக்க அதிகாரியும் ஆவார்.

    மேலும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக முதன் முதலாக பொறுப்பேற்கும் முதல் பெண் ஐ.ஜி.யும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அழகர்சாமி (வயது 53) என்பவரை தெற்கு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
    • கோவை மத்திய சிறையில் உள்ள அழகர்சாமியிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் சர்மியான் சாகிப் வீதியில் உள்ள மதுக்கடை அருகே கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி கஞ்சா விற்பனை செய்த திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அழகர்சாமி (வயது 53) என்பவரை தெற்கு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இவரது சொந்த ஊர் மதுரை ஆரப்பாளையம் ஆகும்.

    அழகர்சாமி மீது தெற்கு, அனுப்பர்பாளையம், சென்னை பூந்தமல்லி போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தையும், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வருவதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார்.

    அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள அழகர்சாமியிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 46 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது.
    • பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதால், காவலர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது.

    சென்னை:

    சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்துப் பணியிலிருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போனைப் பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்யமுடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது.

    இந்த கவனச் சிதறலால் பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.

    குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்புப் பணி, முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்புப் பணி, கோவில் மற்றும் திருவிழாக்கள் பாதுகாப்புப் பணிகளின்போது கண்டிப்பாக செல்போனைப் பயன்படுத்தக் கூடாது என்பதை நியமிக்கும்போதும், பணியைப் பற்றி விவரிக்கும்போதும் காவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

    • தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • 2021ல் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு சங்கர் ஜிவால் பணியாற்றி வந்தார்.

    சென்னையின் புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சைலேந்திர பாபு பதவிக்காலம் நாளையுடன் நிறைவுபெறும் நிலையில், தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    புதிய டிஜிபி சங்கர் ஜிவால் 1990-ல் தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தார். 1993-ல் மன்னார்குடி ஏஎஸ்பி, 1995ல் சேலம் மாவட்ட எஸ்பியாக சங்கர் ஜிவால் பணியாற்றினார்.

    மத்திய போதைப்பொருள் தடுப்படுப்பிரிவு எஸ்.பி மற்றும் திருச்சி போலீஸ் கமிஷனர் போன்ற பதவிகளை சங்கர் ஜிவால் வகித்துள்ளார்.

    2008- 2011ம் ஆண்டு வரை உளவுத்துறையில் டிஜஜி மற்றும் ஜஜி-ஆக இருந்தார்.

    2011- 2021ம் ஆண்டு வரை அதிரடிப்படை, ஆயுதப்படைகளிலும், 2021ல் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு சங்கர் ஜிவால் பணியாற்றி வந்தார்.

    • மாநகர போலீஸ் கமிஷனர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
    • கடந்த 6 மாதங்களில் மட்டும் 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையிலும் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையிலும் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டிபாளையம் பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.இவர் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டார். அதன்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை கோவை சிறையில் உள்ள சரவணனிடம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பள்ளிகளின் அருகே காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்படும்.
    • சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் சாலை விதிகளை பின்பற்றி சாலையின் ஒரமாக பாதுகாப்பாக செல்ல வேண்டும்.

    திருநின்றவூர்:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. 45 நாட்கள் நீண்ட விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கு செல்வதால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று காலை வழக்கமான உற்சாகத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அவர் களை பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் வரவேற்றனர்.

    ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிகள் திறப்பையொட்டி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். மேலும் மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பாக சாலையை கடக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் கூறியதாவது:-

    ஆவடி பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட முக்கிய பிரதான சாலைகள் மற்றும் இதர உட்புற சாலைகளில் 478 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கிவருகின்றன.

    பள்ளிகளில் இயங்கி வரும் வாகனங்களின் தற்போதைய இயக்கநிலை குறித்தும் வாகனங்களின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களின் செயல்பாடுகள், வேகக்கட்டுபாடு, அவசர வழி கதவுகள் ஆகியவைகள் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு பள்ளி நிறுவனங்களுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளிகளின் அருகே காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்படும்.

    இதர உள் சாலைகளில் இயங்கிவரும் பள்ளிகளுக்கு அப்பள்ளிகளில் செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.பி. மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கத்தினர் மூலம் பள்ளி நேரங்களில் பள்ளி மாணவ மாணவிகள் பாதுகாப்பாக சென்றுவர போக்குவரத்தினை சீர்செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் தனியார் ஆட்டோக்கள், வேன்களின் ஓட்டுநர்களுக்கு பள்ளி மாணவ-மாணவி களை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் சென்று வரவேண்டும் என்றும் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பஸ்களில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்த்தும், சாலைகளில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் மட்டும் சாலையை கடந்தும் பாதுகாப்பாக பள்ளி சென்று வர வேண்டும். சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் சாலை விதிகளை பின்பற்றி சாலையின் ஒரமாக பாதுகாப்பாக செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை மாநகரத்தில் ஆணவக் கொலை தடுப்பு தொடர்பாக மாநகர துணை கமிஷனர் (கிழக்கு), மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    • கலப்புத் திருமணம் செய்தவர்களை துன்புறுத்துவது, மிரட்டுவது தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் தனிப்பிரிவு செயல்படும்.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகரத்தில் ஆணவக் கொலை தடுப்பு தொடர்பாக மாநகர துணை கமிஷனர் (கிழக்கு), மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கலப்புத் திருமணம் செய்தவர்களை துன்புறுத்துவது, மிரட்டுவது தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் தனிப்பிரிவு செயல்படும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் புகார் தெரிவிக்க நெல்லை மாநகரம் தனிப்பிரிவு 9498101729 மற்றும் மாநகர காவல் கட்டுப்பாடு அறை எண் 0462-2562651, 100 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் காவல் துறையினருக்கு நீர்மோர் வழங்கினார்.
    • சாலை விதிகளை பின்பற்றாத 1,600 பேரின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் கோடையை சமாளிக்கும் வகையில் போக்குவரத்து போலீசாருக்கு நீர், மோர் மற்றும் வெட்டி வேரினால் ஆன தொப்பிகள் வழங்கும் நிகழ்ச்சி வண்ணார் பேட்டையில் இன்று நடைபெற்றது.

    இதில் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காவல் துறையினருக்கு நீர்மோர் வழங்கினார். வெட்டிவேரிலான தொப்பிகளையும் அவர்க ளுக்கு வழங்கிய பின் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோடையை சமாளிக்க தொப்பியும், நீர் மோரும் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளேன். மாநகரத்தில் சி.சி.டி.வி. காமிராக்கள் உதவியோடு இருசக்கர வாகன திருட்டுகளில் ஈடுபடு பவர்களை கைது செய்து வருகிறோம். நேற்று இருவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் 22 வாகனங்களை திருடியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து அந்த இருசக்கர வாக னங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

    23 ஆயிரம் வழக்குகள்

    சாலை விதிகளை பின்பற்றாத 1,600 பேரின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 23 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனால் சுமார் ரூ. 2 கோடியே 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் 60 லட்சம் ரூபாய் நேரடியாக பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையையும் நீதிமன்றம் மூலம் பெறு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர் திருட்டுகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆம்னி பஸ் நிலையம்

    மாநகரில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காலை 6 மணி முதலே போக்குவரத்து காவலர்கள் பணியில் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பஸ் நிலையத்தை புதிய பஸ் நிலையம் அருகே கொண்டு செல்வதன் மூலம் மாநகர மையப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை இடத்து துணை போலீஸ் கமிஷனர் அனிதா, உதவி கமிஷனர்கள் சரவணன், சதீஷ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்லத்துரை, பேச்சிமுத்து மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகர பகுதியில் 4,052 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • விதிமுறைகளை மீறிய 563 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

    சாலை விதிகளை பின்பற்றாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதம் விதிப்பதுடன் அந்த வாகன ஓட்டுனர்களின் உரிமத்தையும் ரத்து செய்து வருகிறார்.

    இதுதொடர்பாக கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உரிமம் ரத்து

    கடந்த ஆண்டு அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்லுதல், அதிக அளவில் சரக்குகள் ஏற்றிச்செல்லுதல் ஆகிய குற்றங்களின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் 4,052 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்தேன். அதன்பேரில் அவர்களது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 10-ந் தேதி வரை விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் 563 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,665 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் மாதம் தோறும் முதல் மற்றும் 3-வது புதன்கிழமைகைளில் நடைபெற்று வருகிறது.
    • சுமார் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் மாதம் தோறும் முதல் மற்றும் 3-வது புதன்கிழமைகைளில் நடைபெற்று வருகிறது.

    இதில் மாநகர பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த மாதத்தில் 3-வது புதன்கிழமையான இன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராமானோர்கள் கமிஷனர் அவினாஷ்குமாரிடம் நேரடியாக மனு கொடுத்தனர். ஏற்கனவே மனு கொடுத்து 15 நாட்களில் தீர்வு காணாத மனுக்களுக்கு மீண்டும் நடவடிக்கை எடுக்க கோரி முறையிட்டனர்.

    இன்று இடப்பிரச்சினை, அடி தடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் புகார் மனுகொடுத்தனர். சுமார் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. அவற்றை பெற்றுக்கொண்ட சம்பந்தப்பட்ட போலீசாரை உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அறிவுறுத்தினார்.

    முகாமில் மேற்குமண்டல துணை கமிஷனர் சரவணகுமார், கிழக்கு மண்டல துணைகமிஷனர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகரில் காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்க்காவல் படையினர் புதிதாக தேர்வு செய்யப்பட்டு 42 ஆண்கள், மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 49 பேருக்கு கடந்த அக்டோபர் 19-ந் தேதி முதல் கவாத்து மற்றும் பாதுகாப்பு பணிகள் பற்றிய பயிற்சி நெல்லை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் அளிக்கப்பட்டது.
    • ஊர்காவல் படை வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா இன்று நடைபெற்றது.

    நெல்லை,

    நெல்லை மாநகரில் காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்க்காவல் படையினர் புதிதாக தேர்வு செய்யப்பட்டு 42 ஆண்கள், மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 49 பேருக்கு கடந்த அக்டோபர் 19-ந் தேதி முதல் கவாத்து மற்றும் பாதுகாப்பு பணிகள் பற்றிய பயிற்சி நெல்லை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் அளிக்கப்பட்டது.

    ஊர்காவல் படை வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா இன்று நடைபெற்றது.

    ஆயுதப்படை மைதானத்தில் ஊர்காவல் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பயிற்சி முடித்து களப்பணிக்கு செல்லும் ஊர்காவல் படையினர் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனபன போன்ற அறிவுரைகளை வழங்கி கவாத்து பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்கும், கவாத்து போதகர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

    நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா , உதவி கமிஷனர்கள் சரவணன், மாநகர ஆயுதப்படை இன்ஸ் பெக்டர் டேனியல் கிருபாகரன் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×