search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Highways"

    • அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் விளக்குக் கம்பங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் தானியங்கி எச்சரிக்கை பலகைகள் இயங்கும்.
    • சாதனம் தெரு விளக்குகள் எரியும் நேரமான மாலை 6 மணிக்கு அதனுடன் சேர்ந்து இயங்கும்.

    வேலூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா முதல் திருப்பத்தூர் இடையே சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது.

    இதை தடுக்கும் வகையில் அப்பகுதியில் ஆபத்தான விபத்துகளை குறிக்கும் கரும்புள்ளிகளில், சிறிய எல்.இ.டி. புரொஜெக்டர்கள் மூலம் தானாகவே இயங்கும் எச்சரிக்கை பலகைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்துள்ளனர்.

    இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை-பெங்களூரு சாலையில் தினமும் 1.2 லட்சம் வாகனங்கள் செல்கின்றன.

    தற்போது, பகல் நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில், எச்சரிக்கை பலகைகள் உள்ளன. இருப்பினும், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் நிகழும் போது, அதனை தடுப்பதற்கு ஏற்ற எச்சரிக்கை பலகைகள் இல்லை.

    "முதன்முறையாக எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க உதவும். இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும்போது தானியங்கி புரொஜெக்டர்கள் மூலம் சாலையின் நடுவில் கோ ஸ்லோ (மெதுவாக செல்லுங்கள்) என ஆங்கில எழுத்துக்கள் மிளிர்கின்றன.

    எச்சரிக்கை பலகைகள் வாகன ஓட்டிகளை எச்சரிக்கின்றன" இரவு நேரங்களில், சில இடங்களில் மக்கள் கடப்பதை நாம் திடீரென்று கவனிக்கிறோம்.

    அந்த இடங்களில் விபத்தை இதன் மூலம் தவிர்க்க முடியும்.

    சிறிய தானாகவே இயங்கும் எல்.இ.டி புரொஜெக்டர்கள் சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியன் உள்ள மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்த எச்சரிக்கை பலகைகள் சாலையின் மையத்தில் 'மெதுவாக செல்லுங்கள்', 'குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்' மற்றும் 'போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிதல்' போன்ற சாலை விதிகளை பிரதிபலிக்கும்.

    வேலூரில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமுக்கு அருகிலும், கோணவட்டம் மற்றும் மேல்மொணவூர், பச்சை குப்பம், வெலக்கல்நத்தம் மற்றும் திருப்பத்தூரில் வளையாம்பட்டு பாலம், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் 13 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

    அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் விளக்குக் கம்பங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் தானியங்கி எச்சரிக்கை பலகைகள் இயங்கும்.

    இந்த சாதனம் தெரு விளக்குகள் எரியும் நேரமான மாலை 6 மணிக்கு அதனுடன் சேர்ந்து இயங்கும். அதன்படி காலை தெரு விளக்குகள் அனைக்கும் நேரமான காலை 6 மணி வரை செயல்பாட்டில் இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பெங்களூரு-சென்னை விரைவு சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்படும்.
    • மகாபலிபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 சுங்கச்சாவடிகள்.

    அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இது தொடர்பான விவரங்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிட்டப்படி, பெங்களூரு-சென்னை விரைவு சாலையில் ஸ்ரீபெரும்புதூர், மொளசூர், கோவிந்தவாடி, பாணாவரம், மேல்பாடி, வசந்தபுரம் இடங்களிலும் சுங்கச்சாவடி அமைக்கப்படும்.

    விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை: கெங்கராம்பாளையம்(விழுப்புரம்), கொத்தட்டை(கடலூர்), ஆக்கூர் பண்டாரவாடை (மயிலாடுதுறை), விக்கிரவாண்டி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்கச்சாவடிகள், ஓசூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்கச்சாவடிகள், சித்தூர்-தச்சூர் விரைவு சாலையில் 3 சுங்கச்சாவடிகள், மகாபலிபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 சுங்கச்சாவடிகள் என மொத்தம் 20 சுங்கச்சாவடிகளை அடுத்த 2 ஆண்டுகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது

    • நெடுஞ்சாலைகளில் வரி வசூலிக்க நிறுவப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பெரும்பாலோனோர் பேடிஎம் ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர்
    • தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஃபாஸ்டேக்குகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது

    நெடுஞ்சாலைகளில் வரி வசூலிக்க நிறுவப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பெரும்பாலோனோர் பேடிஎம் ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த பேடிஎம் ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்கள் மார்ச் 15ம் தேதிக்குள் வேறு வங்கிக்கு மாறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

    பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு, அதன் பயனர்கள் தங்கள் பேடிஎம் ஃபாஸ்டேக் பேலன்ஸ்களை ரீசார்ஜ் செய்யவோ அல்லது டாப்-அப் செய்யவோ முடியாது.

    நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தொந்தரவின்றி பயணம் செய்வதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஃபாஸ்டேக்குகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதில், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி லிமிடெட், பந்தன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி , மற்றும் யெஸ் வங்கி போன்ற 39 நிறுவனங்கள் உள்ளன.

    • 50 லட்சம் மதிப்பில், சாலை மைய தடுப்பில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன.
    • போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்துக்கள் நேரும் அபாயமும் உள்ளது

    பல்லடம் :

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பொள்ளாச்சி, உடுமலை, மங்கலம், உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.இந்த நிலையில் பல்லடம் நகரில், விபத்துக்களை தவிர்க்கவும், நகரத்திற்கு அழகு சேர்க்கும் விதமாகவும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், சுமார் 50 லட்சம் மதிப்பில், சாலை மைய தடுப்பில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன.

    இதனால் பல்லடம் நகரமே ஜொலித்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக, சாலை தடுப்பில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. மேலும் நால்ரோடு சந்திப்பில் உள்ள, உயர் மின் கோபுர விளக்குகளும் எரிவதில்லை.  இதனால், அந்த இடமே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்துக்கள் நேரும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை எரியச் செய்ய வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.     

    • செங்கோட்டை கூட்டுறவு பால்பண்ணை அருகே திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.
    • அந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை கூட்டுறவு பால்பண்ணை அருகே திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.

    அதனை நகராட்சி ஊழியர்கள் சீரமைக்கும் போது தோண்டப்படும் பள்ளங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    மேலும் அந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

    இச்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரகணக்கான வாகனங்கள் சென்றுவரும் நிலையில் தற்போதும் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் சென்று வருகிறது.

    எனவே உயர் அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குறைந்த காலக்கட்டத்தில் அதிக கி.மீ. சாலை அமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அசத்தல்.
    • புது சாதனை குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரி பெருமிதம்.

    தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிதாக உலக சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையின் மூலம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தி இருக்கிறது. அமராவதி மற்றும் அகோலா இடையிலான 75 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை ஐந்தே நாட்களில் கட்டி முடித்ததை அடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை பெற்றது.

    தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் பெற்றுருக்கும் தகவலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத் துறை மந்திரி நிதின் கட்கரி தனது ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார். தனது ட்விட்டர் பதிவில் புதிதாக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை மற்றும் கின்னஸ் சாதனை சான்றிதழ் ஆகியவற்றின் புகைப்படங்களையும் அவர் இணைத்து இருந்தார்.


    கின்னஸ் சாதனை படைத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அமைச்சர் நிதின் கட்கரி தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார். அமராவதி மற்றும் அகோலா இடையே NH 53 தொடர்ச்சியான சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 105 மணி நேரங்கள், 33 நிமிடங்களில் அமைத்து சாதனை படைத்தது.

    அமராவதி மற்றும் அகோலா இடையிலான நெடுஞ்சாலையின் கட்டுமான பணி சனிக்கிழமை காலை 6 மணிக்குத் துவங்கி நேற்று முடிக்கப்பட்டது. இந்த நெடுஞ்சாலை கொல்கத்தா, ராய்ப்பூர், நாக்பூர், அகோலா, துலே மற்றும் சூரத் ஆகிய நகரங்களை இணைக்கிறது. இந்த சாலையை அமைக்க 800 ஊழியர்கள், 700 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 

    தேசிய நெடுஞ்சாலைகளில் 20 சுங்கச் சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. #TollGate
    சென்னை:

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 43 சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் சாலை கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக சுங்க சாவடிகளில் வாகன கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளிலும் தரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    தேசிய நெடுஞ்சாலைகளில் 20 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

    6 இடங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளான சென்னை- பெங்களூர், சேலம், மதுரை சுங்கசாவடிகள் செங்கல்பட்டு பரனுர், சூரப்பேடு, சென்னை பைபாஸ் ஆகியவற்றில் 2005-ம் ஆண்டு முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2016 வரை ரூ.1,500 கோடி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.


    பிற இடங்களில் உள்ள சுங்க சாவடிகளின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, வேலூர் (2), கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி (3), சிவகங்கை (2) ஆகியவற்றின் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    சுங்க சாவடி கட்டண உயர்வு குறித்து மதுரையைச் சேர்ந்த வணிகர் எஸ்.அருண் கூறியதாவது:-

    மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு முறை செல்ல வாகன சுங்க கட்டணம் ரூ.800 செலுத்தி வருகிறோம். சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதால் கூடுதல் பணம் செலுத்த வேண்டி வரும்.

    ஆம்னி பஸ் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

    சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன. சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. பெருங்களத்தூர்- செங்கல்பட்டு வரை வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. தினமும் 1 லட்சம் வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்கின்றன.

    டீசல் கட்டணம் உயர்வு, சுங்க கட்டண உயர்வால் ஆம்னி பஸ்களை நஷ்டத்தில் இயக்கி வருகிறோம். சுங்க சாவடிகளில் சுங்க கட்டண உயர்வால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TollGate
    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஆவின் விற்பனையகம் தொடங்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். #RajendraBalaji #AavinMilk
    விருதுநகர்:

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று சிவகாசியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் செய்யப்படவில்லை என கூறும் தகவல்கள் தவறு. அனைத்து விவசாயிகளிடம் இருந்தும் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தரமில்லாத பால்தான் கொள்முதல் செய்யப்படவில்லை.

    உலக நாடுகளில் ஆவின் பாலை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அண்மையில் கூட ஹாங்காங்கில் ஆவின் பால் கிடைக்குமா? என்று கேட்டார்கள். வளைகுடா நாடுகளில் விரைவில் ஆவின் பால் விற்பனை தொடங்கப்படும்.

    இந்த பட்ஜெட்டில் பால்வளத்துறைக்கு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


    தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஆவின் விற்பனையகம் தொடங்கப்படும். தமிழகத்தில் 6 இடங்களில் ஆவின் பொருட்கள் தயாரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. விருதுநகரில் ரூ.10 கோடி செலவில் இந்த தயாரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
    நீட் தேர்வு தோல்வியால் இறந்த மாணவர்களின் துக்கத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். கால சூழ்நிலைக்கு ஏற்ப போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக மாணவ-மாணவிகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினி தனது மனதில் பட்டதை சொல்லி இருக்கிறார். அதில் ஒன்றும் தவறில்லை. சிலர் அவருடைய கருத்தை திரித்து கூறுகிறார்கள். எது எப்படி இருந்தாலும் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் உண்மை வெளிவரும்.

    தென் மாவட்டங்களில் வன்முறையை தூண்ட சமூக விரோதிகள் முயற்சிக்கிறார்கள். இதை தடுக்க தமிழக முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #RajendraBalaji #AavinMilk
    ×