search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆவின் விற்பனையகம்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆவின் விற்பனையகம்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஆவின் விற்பனையகம் தொடங்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். #RajendraBalaji #AavinMilk
    விருதுநகர்:

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று சிவகாசியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் செய்யப்படவில்லை என கூறும் தகவல்கள் தவறு. அனைத்து விவசாயிகளிடம் இருந்தும் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தரமில்லாத பால்தான் கொள்முதல் செய்யப்படவில்லை.

    உலக நாடுகளில் ஆவின் பாலை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அண்மையில் கூட ஹாங்காங்கில் ஆவின் பால் கிடைக்குமா? என்று கேட்டார்கள். வளைகுடா நாடுகளில் விரைவில் ஆவின் பால் விற்பனை தொடங்கப்படும்.

    இந்த பட்ஜெட்டில் பால்வளத்துறைக்கு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


    தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஆவின் விற்பனையகம் தொடங்கப்படும். தமிழகத்தில் 6 இடங்களில் ஆவின் பொருட்கள் தயாரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. விருதுநகரில் ரூ.10 கோடி செலவில் இந்த தயாரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
    நீட் தேர்வு தோல்வியால் இறந்த மாணவர்களின் துக்கத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். கால சூழ்நிலைக்கு ஏற்ப போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக மாணவ-மாணவிகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினி தனது மனதில் பட்டதை சொல்லி இருக்கிறார். அதில் ஒன்றும் தவறில்லை. சிலர் அவருடைய கருத்தை திரித்து கூறுகிறார்கள். எது எப்படி இருந்தாலும் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் உண்மை வெளிவரும்.

    தென் மாவட்டங்களில் வன்முறையை தூண்ட சமூக விரோதிகள் முயற்சிக்கிறார்கள். இதை தடுக்க தமிழக முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #RajendraBalaji #AavinMilk
    Next Story
    ×