search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய நெடுஞ்சாலை ஆணையம்"

    • நெடுஞ்சாலைகளில் வரி வசூலிக்க நிறுவப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பெரும்பாலோனோர் பேடிஎம் ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர்
    • தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஃபாஸ்டேக்குகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது

    நெடுஞ்சாலைகளில் வரி வசூலிக்க நிறுவப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பெரும்பாலோனோர் பேடிஎம் ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த பேடிஎம் ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்கள் மார்ச் 15ம் தேதிக்குள் வேறு வங்கிக்கு மாறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

    பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு, அதன் பயனர்கள் தங்கள் பேடிஎம் ஃபாஸ்டேக் பேலன்ஸ்களை ரீசார்ஜ் செய்யவோ அல்லது டாப்-அப் செய்யவோ முடியாது.

    நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தொந்தரவின்றி பயணம் செய்வதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஃபாஸ்டேக்குகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதில், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி லிமிடெட், பந்தன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி , மற்றும் யெஸ் வங்கி போன்ற 39 நிறுவனங்கள் உள்ளன.

    • சாலை பணிகளுக்காக தமிழ்நாட்டில் 833.91 ஹெக்டேர் நிலம் கையக்கப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
    • தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் 54 பாலங்கள், 13 வாகன சுரங்கப்பாதைகள் மற்றும் சுங்கச்சாவடிகள் அமைய உள்ளன.

    சென்னை:

    சென்னை-பெங்களூரு இடையேயான 326 கி.மீ. தூரத்துக்கான விரைவு சாலையில் தினமும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணப்பட்டு வருகின்றன. இந்த சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல சுமார் 5 முதல் 7 மணி நேரம் வரை ஆகிறது. இதனை மாற்றி அமைக்கும் விதமாகவும், வாகன ஓட்டிகளுக்கு பயண அனுபவத்தை இனிமையானதாக மாற்றுவதற்காகவும் சாலைப் பணிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி, குடிப்பாலா-வாலாஜாப்பேட்டை இடையே 24 கி.மீ. தூரத்துக்கும், வாலாஜாப்பேட்டை-அரக்கோணம் இடையே 24.5 கி.மீ. தூரத்துக்கும், அரக்கோணம்-காஞ்சிபுரம் இடையே 25.5 கி.மீ. தூரத்துக்கும், காஞ்சிபுரம்-ஸ்ரீபெரும்புதூர் இடையே 32.1 கி.மீ. தூரத்துக்கும் என 4 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 106.1 கி.மீ. தூரத்துக்கு விரைவுச் சாலைப் பணிகள் நடைபெறுகின்றன.

    106.1 கி.மீ. தூரத்தில் சுமார் 10 கி.மீ. தூரத்துக்கான பகுதிகள் ஆந்திர மாநிலத்துக்குட்பட்ட பகுதிகளாக இருக்கிறது. இதைத் தவிர 96.1 கி.மீ. தூரம் தமிழ்நாட்டுக்குட்பட்ட பகுதியாக உள்ளது.

    இந்த சாலை பணிகளுக்காக தமிழ்நாட்டில் 833.91 ஹெக்டேர் நிலம் கையக்கப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் 95 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள நிலங்கள் விரைவில் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவிக்கிறது.

    சாலைப் பணிகளின் வடிவமைப்பின்படி, தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் 54 பாலங்கள், 13 வாகன சுரங்கப்பாதைகள் மற்றும் சுங்கச்சாவடிகள் அமைய உள்ளன.

    சென்னை-பெங்களூரு தொழில்துறை வழித்தடங்களுக்காக முன்னுரிமை அளிக்கப்படும் திட்டமாக இது கருதப்படுகிறது. மொத்தம் பணிகள் நடைபெறும் 96.1 கி.மீ. தூரத்தில், 14.4 கி.மீ. தூரத்துக்கான பணிகள் நிறைவு பெற்று இருப்பதாகவும், மீதமுள்ள பணிகள் 15 முதல் 16 மாதங்களுக்குள் முடிவடைய இருப்பதாகவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதாவது, 100 சதவீத பணிகளில், தற்போது 15 சதவீத பணிகள் முடிந்து இருக்கின்றன.

    அனைத்து பணிகளும் முடிவடைந்தவுடன், சென்னை-பெங்களூரு இடையே ஏற்கனவே இருக்கும் பயண நேரமான 5 மணி முதல் 7 மணி வரையிலான காலம், 2 முதல் 3 மணி நேரம் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகா-ஆந்திரா-தமிழ்நாடு வழியாக செல்லும் சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை பணிகள் ரூ.16 ஆயிரத்து 730 கோடி மதிப்பில் முடிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×