search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mamata"

    • பா.ஜனதா 200 இடத்தில் கூட வெற்றி பெறாது.
    • பிரதமர் மோடியின் உத்தரவாதம் தேர்தல் பொய்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஜால்பைகுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

    பா.ஜனதா 200 இடத்தில் கூட வெற்றி பெறாது. வடக்கு பெங்காலுக்கு அவர்கள் செய்தது என்ன?. பிரதமர் மோடியின் உத்தரவாதங்களுக்கு இரையாகிவிடாதீர்கள். அதெல்லாம் ஒன்றுமே இல்லை. தேர்தல் பொய். அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட நாட்டின் அரசமைப்பை பா.ஜனதா அழித்து விட்டது.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற முழக்கத்தோடு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பா.ஜனதா 200 இடங்களில் கூட வெற்றி பெறாது எனக் கூறி வருகின்றனர்.

    அதேவேளையில் தேர்தல் கருத்துக் கணிப்பில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாங்கள் 30 இடங்களுக்கு மேல் பிடிப்போம். மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அரசு அமைந்த பிறகு நாங்கள் ஊடுருவலை தடுத்து நிறுத்துவோம்.
    • காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மேற்கு வங்காளத்தில் உள்ள தக்சின் தினாஜ்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மம்தா பானர்ஜி ஊடுருவலை தடுக்கமாட்டார். ஏனென்றால் ஊடுருபவர்கள் மம்தா பானர்ஜியின் வாக்கு வங்கி. பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவல் ஊடுருவலை தடுக்க முடியும். நாங்கள் அசாம் மாநிலத்தில் ஊடுருவலை தடுத்து நிறுத்தினோம். நாங்கள் 30 இடங்களுக்கு மேல் பிடிப்போம். மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அரசு அமைந்த பிறகு நாங்கள் ஊடுருவலை தடுத்து நிறுத்துவோம். பிரதமர் மோடியின் இந்த வாக்குறுதியை கூறுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.

    ஏப்ரல் 17-ந்தேதி ராம் நவமி. கடவுள் ராமர் பிறந்த தினம். ஐந்து வருடத்திற்குள் ராமர் கோவில் விசயத்தை பிரதமர் மோடி முடித்து வைத்தார். பூமி பூஜை நடத்தப்பட்டு கோவில் கட்டப்பட்டது. 500 வருடத்திற்குப் பிறகு கடவுள் ராமர் அவரது பிறந்த இடத்தில் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். ராம நவமி அவரது பிரமாண்ட வீட்டிற்குள் நடைபெற இருக்கிறது.

    காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முஸ்லிம் தனிச்சட்டம் கொண்டு வரப்படும், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது எனச் சொல்கிறார்கள். அவர்களுடைய தேர்தல் பிரசாரத்தில் தாய்லாந்தின் போட்டோ இடம் பிடித்துள்ளது. ஏனென்றால், ராகுல் பாகா தொடர்ச்சியாக விடுமுறைக்காக அங்கே செல்கிறார்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • பொது விநியோகத் திட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார்.
    • விவசாயிகளின் போராட்டத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன், பாஜக தலைமையிலான மத்திய அரசு, தனது அரசின் பல்வேறு சமூக நலத் திட்டங்களின் பலன்களை பொது மக்கள் பெறாத வகையில், மாநிலத்தில் உள்ள மக்களின் ஆதார் அட்டையை முடக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    பிர்பூம் மாவட்டத்தில் நடைபெற்ற பொது விநியோகத் திட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கவனமாக இருங்கள், அவர்கள் (பாஜக தலைமையிலான மையம்) ஆதார் அட்டைகளை செயலிழக்கச் செய்கிறார்கள்.

    வங்காளத்தின் பல மாவட்டங்களில் பல ஆதார் அட்டைகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் (பாஜக தலைமையிலான மையம்) தேர்தலுக்கு முன் மக்கள் பலன்களைப் பெறக்கூடாது என்பதற்காக ஆதார் அட்டைகளை நீக்குகிறார்கள்.

    ஆனால், ஆதார் அட்டை இல்லாவிட்டாலும், திட்டங்களின் பயனாளிகளுக்கு நாங்கள் தொடர்ந்து பணம் செலுத்துவோம். ஒரு பயனாளி கூட பாதிக்கப்பட மாட்டார்கள்.

    அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு உத்தரவாதம் அளிக்கக் கோரி நடத்திய போராட்டத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன். அவர்கள் மீதான தாக்குதலை நான் கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியை வழங்காமல இழுத்தடிக்கிறது என மம்தா குற்றச்சாட்டு.
    • மாநில அதிகாரிகளும் மத்திய அரசு அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பாக பேசினர்.

    மேற்கு வங்காள மாநிலத்திற்கு மத்திய அரசு சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்தும் கோரிக்கை வைத்தார்.

    உடனடியாக நிலுவைத் தொகையை விடுவிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும். பிப்ரவரி 1-ந்தேதிதான் கடைசி நாள் என மத்திய அரசுக்கு காலக்கெடு விதித்திருந்தார் மம்தா பானர்ஜி.

    இந்தநிலையில் காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக விடுவிக்காவிடில் நாளை முதல் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில் "மத்திய அரசுக்கு பிப்ரவரி 1 வரை (இன்று) காலக்கெடு விதித்திருந்தேன். இன்றைக்குள் நிலுவைத் தொகையை விடுவிக்காவிடில் நாளையில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன். அவர்கள் நிலுவைத் தொகையை விடுவிக்கவில்லை என்றால், அதை எப்படி பெற வேண்டும் என்று எனக்குத் தெரியும்.

    இந்த தர்ணா போராட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும், தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். எல்லோருடைய ஆதரவையும் விரும்புகிறேன்" இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • 42 இடங்களை கொண்ட மேற்கு வங்காளத்தில் இரண்டு இடங்களை மட்டுமே காங்கிரஸ்க்கு ஒதுக்க திரிணாமுல் காங்கிரஸ் முடிவு.
    • காங்கிரஸ் அதிகமான இடங்களில் போட்டியிட விரும்புவதால் காங்கிரஸ்- மம்தா கட்சி இடையே மோதல் ஏற்படும் நிலை.

    2024 மக்களவையில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் INDIA (இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி- Indian National Developmental Inclusive Alliance) கூட்டணியை உருவாக்கியுள்ளன.

    இந்தியா கூட்டணியில் 26 கட்சிகளுக்கு மேல் இடம் பிடித்துள்ளன. விரைவில் தேர்தல் வர இருப்பதால் 543 தொகுதிகளில், எத்தனை இடங்களில் யார் யார் போட்டியிடுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளது.

    ஏனென்றால் பெரும்பாலான மாநிலங்களில் அந்தந்த மாநில கட்சிகள் வலுவாக உள்ளன. இதனால் காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை தீர்ப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தொகுதி பங்கீடு சிக்கல் மேற்கு வங்காளத்தில் எதிரெலிக்கிறது. 42 இடங்களை கொண்ட மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் கறாராக தெரிவித்து விட்டது. காங்கிரஸ் கட்சியோ நாங்கள் பிட்சை கேட்கவில்லை. எங்களுடைய முழுப்பலத்துடன் போட்டியிடுவோம் எனத் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் காங்கிரஸ் ஒவ்வொரு மாநில கட்சிகளை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைத்து வருகிறது.

    அந்த வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் எங்கள் கட்சி சார்பில் பிரதிநிதிகள் கலந்த கொள்ளமாட்டார்கள். எங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம் என திரிணாமுல் கட்சி கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஒருவேளை காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை என்றால் இரண்டு கட்சிகளும் அங்கே எதிர்த்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 தொகுதிகள் உள்ளன. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 22 இடங்களில் போட்டியிடுவதாக தெரிவித்தது. இதனால் காங்கிரஸ் கட்சி தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

    • பாராளுமன்றத்திற்கும், மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு ஆலோசனை.
    • சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி தலைமையில் குழு அமைப்பு.

    இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழு ஒவ்வொரு கட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும், அவர் அந்த கடிதத்தில் "1952-ம் ஆண்டு முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலுடன் மாநில தேர்தல்களும் இணைந்து நடத்தப்பட்டன. சில வருடங்களுக்கு இது நீடித்தது. ஆனால், இந்த கூட்டுத் தேர்தல் பின்னர் சிதைந்து விட்டது.

    இந்த கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தெரிவித்துக் கொள்ள வருந்துகிறேன். இதுதொடர்பான உங்களுடைய உருவாக்கம் மற்றும் பரிந்துரையுடன் நாங்கள் உடன்படவில்லை. ஒரே நேரத்தில் தேர்தல் இல்லாதது (மாநிலத்திற்கு அந்தந்த நேரத்தில் தேர்தல்) இந்திய அரசியலமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படை கட்டமைப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • 1998-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சியாக உதயமாகிய திரிணாமுல் காங்கிரஸ், 2001 மற்றும் 2006-ல் தோல்வியடைந்தது.
    • மம்தா பானர்ஜி மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வராக பதவி ஏற்று சாதனைப் படைத்துள்ளார்.

    மேற்கு வங்காளத்தின் முக்கிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1998-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி தொடங்கப்பட்டது. இன்று அந்த கட்சி தொடங்கிய தினம். 26 ஆண்டுகள் முடிவடைந்து, 27-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது.

    கட்சி தொடங்கிய நாளில், தீய சக்திகளை எதிர்ப்போம் என கட்சி தொண்டர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    திரிணாமுல் கட்சிக்காக அர்ப்பணிப்பு மற்றும் சுயத்தியாகம் செய்த ஒவ்வொரு தொண்டருக்கும், ஆதரவாளர்களுக்கும் பணிவுடன் மரியாதை அளிக்கிறேன். இன்று திரிணாமுல் காங்கிரஸ் குடும்பம் அனைவரின் அன்பாலும், பாசத்தாலும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் தளராத ஆதரவின் பலத்தில் மாபெரும் ஜனநாயக நாட்டில் அனைவருக்காகவும் தொடர்ந்து போராடுவோம். எந்த தீய சக்திக்கும் சரணடைய வேண்டாம். அனைத்து பயங்கரவாதத்தையும் மீறி, நமது நாட்டின் பொது மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடுவோம்.

    1998-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சியாக உதயமாகிய திரிணாமுல் காங்கிரஸ், 2001 மற்றும் 2006-ல் தோல்வியடைந்தது. அதன்பின் 2011-ல் ஆட்சியை பிடித்தது. அதன்பின் 2016 மற்றும் 2021-ல் அடுத்தடுத்து ஆட்சியை பிடித்தது. மம்தா பானர்ஜி மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வராக பதவி ஏற்று சாதனைப் படைத்துள்ளார்.

    • வருகிற 20-ந்தேதி காலை 11 மணிக்கு பிரதமர் மோடி சந்திக்க இருக்கிறார்.
    • மேற்கு வங்காள மாநிலத்திற்கான நிலுவைத் தொகையை விடுவிக்க வலியுறுத்துவார் எனத் தகவல்.

    இந்திய அரசியலில் பிரதமர் மோடிக்கு நேர் எதிர் துருவமாக இருப்பவர் மம்தா பானர்ஜி. மாநிலங்களுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி கடும் விமர்சனம் செய்பவர். பிரதமர் மோடி மேற்கு வங்காளம் சென்றபோது ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது பாதிலேயே எழுந்து சென்றனர். இதனால் பிரதமருக்கு மோடிக்கு மதிப்பளிக்கவில்லை என மத்திய அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் மஹுவா மொய்த்ரா விவகாரத்தில் மத்திய அரசை சாடியிருந்தார்.

    இந்த நிலையில் வருகிற 20-ந்தேதி மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார். 20-ந்தேதி பிரதமர் மோடியை சந்திக்க மம்தா நேரம் கேட்டுள்ள நிலையில், பிரதமர் அலுவலகம் அவரது கோரிக்கை ஏற்றுக் கொண்டுள்ளது. டிசம்பர் 20-ந்தேதி காலை 11 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

    100 நாட்கள் வேலை திட்டம் உள்ளிட் பல்வேறு துறைகளில் 1.15 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு மேற்கு வங்காள மாநிலத்திற்கு வழங்காமல் நிலுவை வைத்துள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

    இந்த சந்திப்பின்போது, நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதானி குழுமத்திற்கு எதிராக கேள்வி கேட்க பணம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மீது குற்றச்சாட்டு
    • பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகியோர் இன்று ஆஜராகி அறிக்கை அளிக்க உள்ளனர்

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா, பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழில் அதிபர் தர்ஷன் ஹிராநந்தனிடம் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றதாக, பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். மத்திய அரசியலில் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக குற்றம்சாட்டிய இருவரிடம் பாராளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி மக்களவை நெறிமுறைக்குழு இன்று விசாரணையை தொடங்குகிறது. குற்றம்சாட்டிய பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகியோர், இன்று பாராளுமன்ற மக்களவை நெறிமுறைக்குழு முன் ஆஜராக இருக்கின்றனர்.

    கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த விவாகரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது முதன்முறையாக விசாரணை தொடங்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பணம் பெற்றுக்கொண்டு அதானிக்கு எதிராக கேள்வி எழுப்பியதாக குற்றச்சாட்டு
    • பாராளுமன்ற நெறிமுறைக்குழு இதுகுறித்து விசாரணை நடத்த இருக்கிறது

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா, பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழில் அதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றதாக, பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே மற்றும், வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர்.

    இதுதொடர்பாக குற்றம்சாட்டிய இருவரிடம் பாராளுமன்ற நெறிமுறைக்குழு வருகிற 26-ந்தேதி விசாரணை நடத்தப்பட இருக்கிறது. மத்திய அரசியலில் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விசயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மஹுவாவிடம் இருந்து ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து பா.ஜனதாவின் அமித் மால்வியா கிண்டல் செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மஹுவா மொய்த்ராவை மம்தா பானர்ஜி கைவிட்டதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அவர் அபிஷேக் பானர்ஜியைத் (குற்றத்தில் குறைந்தவர் அல்ல) தவிர மற்ற யாரையும் பாதுகாத்துக் கொள்ளமாட்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் ஊழல் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டு தொடர்பாக ஜெயிலில் உள்ளனர். ஆனால், மம்தா பானர்ஜி மவுனம் காத்து வருகிறார்.

    இவ்வாறு அமித் மால்வியா குறிப்பிட்டுள்ளார்.

    பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே, தொழில் அதிபர் தர்ஷன் ஹிராநந்தனிக்கு மஹுமா மொய்த்ரா, அவருடைய பாராளுமன்ற லாக்கின் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை வழங்கியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுந்திருந்தார்.

    இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், ஒரு வார்த்தைக் கூட வெளியிடப்படாது. இது தொடர்பான நபர் விளக்கம் அளிப்பார் அல்லது இது குறித்து பதில் அளிப்பார். திரிணாமுல் காங்கிரஸ் பதில் அளிக்காது என, அக்கட்சியின் பொது செயலாளர் குனால் கோஷ் தெரிவித்திருந்தார்.

    தன்மீதான புகார்கள் அனைத்தையும் மறுத்துள்ள மஹுவா மொய்த்ரா, ''போலி பட்டம் பெற்றவர்கள் உட்பட பல உரிமை மீறல் பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன. அந்தப் பிரச்சினைகளை எல்லாம் முடித்து விட்டு எனக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை வரவேற்கிறேன்'' என்றார்.

    தொழில் அதிபர் தர்ஷன் ஹிராநந்தனி, மஹுமா மொய்த்ராவின் பாராளுமன்ற லாக்கின் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தியாக தெரிவித்துள்ளார்.

    • லஞ்சம், ஊழலுக்கு எதிரான புகார்களை பொதுமக்கள் அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.
    • மாநில அரசின் நிர்வாகத்திலும், உரிமையிலும் தேவையில்லாமல் தலையிடும் செயலாகும்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்கத்தில் ஊழல் ஒழிப்புப் பிரிவு ஒன்றை கவர்னர் சி.வி.ஆனந்த் போஸ் தொடங்கி உள்ளார். இதற்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊழல் ஒழிப்புப் பிரிவு அமைக்கப்பட்டது. இதில் லஞ்சம், ஊழலுக்கு எதிரான புகார்களை பொதுமக்கள் அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    ஊழல் ஒழிப்புப் பிரிவு என்று ஒன்றை கவர்னர் உருவாக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது கவர்னர் மாளிகையின் வேலையல்ல. நாங்கள் கவர்னர் மீது மரியாதை வைத்துள்ளோம். அதே நேரத்தில் அவர் தன்னிச்சையாக ஒரு பிரிவை உருவாக்கி உள்ளார். இது மாநில அரசின் நிர்வாகத்திலும், உரிமையிலும் தேவையில்லாமல் தலையிடும் செயலாகும்.

    கவர்னர் என்ற முகமூடியை அணிந்துகொண்டு பா.ஜ.க.வின் உத்தரவுகளுக்கு இணங்க செயல்படுவதை ஏற்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தில் கவர்னருக்கான பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

    மேலும் தனது சொந்த மாநிலமான கேரளத்தில் இருந்து ஒருவரை மேற்கு வங்கத்தில் உள்ள பல்கலைக் கழக துணைவேந்தராக கவர்னர் ஆனந்த போஸ் நியமித்துள்ளார்.

    அவருக்கு கல்வித் துறையில் எந்த அனுபவமும் இல்லை. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடலில் குறிப்பிடும்படியாக சுவாச பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய ஒரு வகையை சேர்ந்தது.
    • ஒரு குழந்தைக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் பிடித்துவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் பரவி வரும் அடினோவைரசின் பாதிப்புக்கு குழந்தைகள் அதிக இலக்காகின்றனர். அவர்களில் பலர் உயிரிழந்து உள்ளனர்.

    இதனை தொடர்ந்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறும்போது,

    குழந்தைகள் யாரும் பயப்பட வேண்டாம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார். அடினோவைரசின் பாதிப்புக்கு 19 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என கூறிய அவர், அவர்களில் 13 பேர் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர், ஒரு குழந்தைக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் பிடித்துவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அந்த குழந்தைக்கு காய்ச்சல் பாதிப்பு எதுவும் காணப்பட்டால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டியது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்த அடினோவைரசானது, லேசானது முதல் கடுமையான பாதிப்புகளை உடலில், குறிப்பிடும்படியாக சுவாச பகுதியில் ஏற்படுத்த கூடிய ஒரு வகையை சேர்ந்தது. அது எந்த வயது குழந்தையையும் பாதிக்க கூடியது. புதிதாக பிறக்கும் மற்றும் இளம் குழந்தைகளிடையே அது பரவலாக காணப்படும்.

    கடுமையான பாதிப்பின்போது அறிகுறிகளாக, பொதுவான ஜலதோஷம் போன்ற பாதிப்பையும், காய்ச்சல், வறண்ட தொண்டை, நுரையீரல் பாதிப்பு, நிம்மோனியா, கண்கள் பிங்க் வண்ணத்தில் நிறம் மாறுதல், வாந்தி, குமட்டல், வயிற்று போக்கு உள்ளிட்ட வயிறு மற்றும் குடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட கூடும் என தெரிவித்து உள்ளது.

    ×