search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராம் நாத் கோவிந்த்"

    • பாராளுமன்றத்திற்கும், மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு ஆலோசனை.
    • சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி தலைமையில் குழு அமைப்பு.

    இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழு ஒவ்வொரு கட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும், அவர் அந்த கடிதத்தில் "1952-ம் ஆண்டு முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலுடன் மாநில தேர்தல்களும் இணைந்து நடத்தப்பட்டன. சில வருடங்களுக்கு இது நீடித்தது. ஆனால், இந்த கூட்டுத் தேர்தல் பின்னர் சிதைந்து விட்டது.

    இந்த கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தெரிவித்துக் கொள்ள வருந்துகிறேன். இதுதொடர்பான உங்களுடைய உருவாக்கம் மற்றும் பரிந்துரையுடன் நாங்கள் உடன்படவில்லை. ஒரே நேரத்தில் தேர்தல் இல்லாதது (மாநிலத்திற்கு அந்தந்த நேரத்தில் தேர்தல்) இந்திய அரசியலமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படை கட்டமைப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த முடயுமா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.
    • இந்த குழுவின் தலைவராக முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் சேர்த்து தேர்தல் நடத்துவது பற்றி ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்து இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தது. இந்த குழுவுக்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக ராம் நாத் கோவிந்த் எட்டு பேர் அடங்கிய குழுவை நியமித்துள்ளார். இதில் மத்திய மந்திரி அமித் அஷா, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்.கே. சிங், சுபாஷ் சி. காஷ்யப், ஹரிஷ் சால்வே, சஞ்சய் கோதாரி ஆகியோர் அடங்கிய குழு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த குழு இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

    ×