search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "criminals"

    • பைக் சாகசங்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து இளைஞர்களுக்கு புரிய வைக்க வேண்டும்
    • பைக் சாகசங்களை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது

    பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்தாமல், அவர்களை சீர் திருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆலோசனை கூறியுள்ளார்.

    சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி முகமது ஆசிக், சாதிக் ஆகிய இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையில் முக்கிய சாலைகளில் பைக் சாகசங்களை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகளையும், பள்ளி - கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, "பொறுப்பற்ற முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டும் இளைஞர்களை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து, பைக் சாகசங்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளை கையாளுவதற்கு தேவையான நடைமுறையை உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை வழங்கியுள்ளார். இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணையை ஏப்ரல் 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • முன்னணி அழகான நகரங்களின் பட்டியலில் இந்த நாட்டை ஃபோர்ப்ஸ் பட்டியலிட்டது
    • நிறமற்ற திரவமான ஸ்கொபோலமைன் பானங்களில் கலந்தால் தெரியாது

    தென் அமெரிக்காவில் பெரும் பகுதியை கொண்ட நாடு, கொலம்பியா (Colombia). இதன் தலைநகரம் பொகோடா.

    அமெரிக்காவில் இருந்து கொலம்பியாவிற்கு பலர் சுற்று பயணம் செய்து வருகின்றனர்.

    மெடலின், கார்டகேனா உள்ளிட்ட அழகான நகரங்களையும், இயற்கை எழில் மிகுந்த டேரோனா, சியரா நிவேடா பிரதேசங்களையும் சுற்றி பார்க்க அமெரிக்க மக்கள் அங்கு பல வருடங்களாக சுற்றுலா செல்கின்றனர்.

    கடந்த 2022 செப்டம்பர் மாதம், பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகின் அழகான நாடுகளின் பட்டியலில்  இந்நாட்டை முன்னணியில் வைத்தது.

    ஆனால், கடந்த சில மாதங்களாக அந்நாட்டிற்கு செல்லும் அமெரிக்கர்கள் மற்றும் மேற்கத்திய நாட்டினருக்கு ஆபத்தாக உள்ளது.

    அமெரிக்க மின்னசோட்டா மாநிலத்தை சேர்ந்த டவ் கெர் (50), மெடலின் நகருக்கு 2-மாத சுற்று பயணம் சென்றார். தனது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த டவ் கெர், திடீரென காணாமல் போனார். அவரை கொலம்பியா காவல்துறை தேடி வந்த நிலையில், கொல்லப்பட்ட அவரது உடல் ஒரு காட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

    சுமார் $2000 பணத்திற்காக அவர் கொல்லப்பட்டது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

    டேட்டிங் செயலி ஒன்றில் அறிமுகமான பெண் ஒருவருடன் சென்ற போது அவரை அப்பெண்ணும் அவரது நண்பரும் பணத்திற்காக கொன்றதாக தெரிய வந்துள்ளது.

    இதே போல் ஜெஃப் ஹுவெட் என்பவர் ஓட்டல் அறையில் கொல்லப்பட்டு கிடந்தார்.

    கடந்த 2023 அக்டோபர் வரை 32 வெளிநாட்டினர் கொல்லப்பட்டதாகவும், அதில் 12 அமெரிக்கர்கள், 3 இங்கிலாந்து நாட்டவர்கள் என்றும் கொலம்பியா அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2022-ஐ விட 40 சதவீதம் அதிகம்.

    சுற்றுலா பயணிகளுடன் நட்பாக பேசி, அவர்கள் அருந்தும் பானங்களில் "ஸ்கொபோலமைன்" (scopolamaine) எனும் நிறமற்ற போதை மருந்தை கலந்து கொடுத்து, அவர்களை கடத்தி சென்று, உடைமைகளை திருடி, கொலையும் செய்கின்ற கும்பல் அதிகரித்து வருவதாக அங்குள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

    அறிமுகம் இல்லாத நபர்களுடன் உரையாடும் போது எச்சரிக்கையாக இருக்கவும், எங்கு சென்றாலும் சொந்த நாட்டில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருக்குமாறும், கொள்ளை முயற்சியில் சிக்கி கொள்ள நேரிட்டல் எதிர்க்காமல் இருக்குமாறும், தனது நாட்டிலிருந்து அங்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    • கோடநாடு பங்களாவில் நடந்த கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
    • தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான சம்பவத்தில் குற்றவாளிகளை உடனே தண்டிக்கக்கோரியும், இது குறித்து தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க ( ஓ. பன்னீர்செல்வம் அணி ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அ.ம.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    அதன்படி தஞ்சை ரயிலடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. ( ஓ.பி.எஸ் அணி ) வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஓ. பன்னீர்செல்வம் அணியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் சத்யராஜ், பகுதி செயலாளர்கள் அறிவுரை நம்பி, ரமேஷ், சாமிநாதன் ,சண்முக பிரபு, திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன்,

    ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன், அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் வீரராஜ், தொகுதி செயலாளர் மோகன்தாஸ், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன், கவுன்சிலர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மகளிர் அணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், அ.ம.மு.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் வேலு கார்த்திகேயன், மாணவர் அணி செயலாளர் வக்கீல் நல்லதுரை, பூக்கார தெரு பகுதி செயலாளர் செந்தில் குமார், ஒன்றிய செயலாளர் மனோகரன், வேலாயுதம், கவுன்சிலர் கன்னுக்கினியாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • முதல்கட்டமாக 1336 இடங்களில் 4008 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
    • கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை போலீஸ் அதிகாரிகள் நேரடியாக நேரலையில் பார்க்கும் வசதியும் உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகரில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். இருப்பினும் செயின் பறிப்பு, பாலியல் சீண்டல் உள்ளிட்ட குற்றசெயல்களில் ஈடுபடுவோர் அடிக்கடி கைவரிசை காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு கேமராக்களே பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன.

    இந்த நிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நிர்பயா பாதுகாப்பு மற்றும் சென்னை மாநகர பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை தொடங்கி வைத்தார். சென்னை மாநகர் முழுவதும் 1750 முக்கிய இடங்களில் 5250 கேமராக்களை நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக 1336 இடங்களில் 4008 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இந்த கேமராக்கள் மூலமாக கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும் என்பது கட்டுப்பாட்டு அறையின் சிறப்பம்சமாகும்.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக புதிய தொழில் நுட்பத்தின்படி கேமராக்கள் கண்காணிக்கப்படுவதால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் யாரும் தப்ப முடியாது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நவீன கேமராக்கள் குற்ற செயல்களை பகுப்பாய்வு செய்து எச்சரிக்கை தகவல்களையும் உடனுக்குடன் அளிப்பதால் போலீசார் விரைந்து செயல்பட முடியும் என்பது இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக உள்ளது.

    செயின் பறிப்பு, பெண்களை கிண்டல் செய்து பாலியல் சீண்டலில் ஈடுபடுதல், கடத்தல் சம்பவங்கள், பொருட்களை சூறையாடுதல், வாகன திருட்டு உள்ளிட்ட அனைத்து குற்றசெயல்களில் ஈடுபடுவோரையும் கண்டுபிடிப்பதற்கு வசதியாக கேமரா காட்சிகளை ஆய்வு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கேமராவில் பதிவாகும் அவசர காட்சிகளை கூட செயற்கை தொழில்நுட்ப மென்பொருள் உதவியுடன் ஆய்வு செய்யமுடியும் என்பதும் கூடுதல் சிறப்பம்சமாகும்.

    இப்படி கேமராவில் பதிவாகும் காட்சிகளை சேமித்து வைத்து தேவைப்படும்போது பார்ப்பதற்கும் வசதி உள்ளது. அதே நேரத்தில் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை போலீஸ் அதிகாரிகள் நேரடியாக நேரலையில் பார்க்கும் வசதியும் உள்ளது. இந்த காட்சிகளை சென்னை மாநகரில் உள்ள 6 இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள் ஆகியோர் தங்களது அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இப்படி பெண்களின் பாதுகாப்பை முதன்மையாக கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு திட்டத்தால் போலீசார் தங்களது பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களில் கூடுதல் கவனம் செலுத்தி குற்றவாளிகளை விரைந்து பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்வதால் குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
    • ஜேப்படி ஆசாமிகள் மக்களோடு மக்களாக கூட்டத்தில் கலந்து கொண்டு கைவரிசை காட்டுகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் மத்திய பஸ் நிலையம், கோவில் வழி, புதிய பஸ் நிலையம் இயங்கி வருகின்றன. கோவில்வழி பஸ் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புது பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. மத்திய பஸ் நிலையத்திலருந்து டவுன்பஸ்கள் மற்றும் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் செல்கின்றன. தினந்தோறும பல ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்வதால் குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனை கட்டுப்படுத்தவும் பழைய குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும் எப்.ஆர்.எஸ் என்னும் சாப்ட்வேர் மூலம் போலீசார் ரகசிய சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில்:-

    திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பனியன் கம்பெனிகளில் லட்சக்க ணக்கான தொழிலா ளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு வாரத்தில் சனி ஞாயிறுகளில் சம்பளம் அளித்து விடுமுறையும் அளிக்கப்படுகிறது. இதனால் சிலர் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். சிலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பஸ் மூலம் திருப்பூர் நகரத்துக்கு வருகிறார்கள். இது போன்ற நேரத்தில் ஜேப்படி ஆசாமிகள், செல்போன்கள் திருட்டு, நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மக்களோடு மக்களாக கூட்டத்தில் கலந்து கொண்டு கைவரிசை காட்டுகின்றனர். மேலும் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம்நகை பறிக்கப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் மத்திய பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனைகளில் ஈடுபடுகிறோம். குற்றங்களை தடுக்கும் வகையில் சோதனையில் சிக்கக்கூடிய சந்தேக நபர்கள் ஏதாவது வேறு வழக்கில் தொடர்புடையவர்களாக உள்ள பழைய குற்றவாளி களை உடனே கண்டறியும் வகையில் எப்.ஆர்.எஸ். என்னும் முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் துணையுடன் சோதனை செய்யப்படுகிறது. இந்த செயலி மூலம் போட்டோ எடுத்தால் அவர்கள் பழைய குற்றவாளியாக இருந்தால் முழுமையான விவரமும் வந்துவிடும் . இதனால் எளிதாக குற்றவாளிகளை கைது செய்ய முடிகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

    • 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருந்தது.
    • குற்றவாளிகள் சிலர் மீண்டும் வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.

    கோவை,

    கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொள்ளை, வழிப்பறி, அடிதடி, மோதல், பாலியல் தொந்தரவு போன்ற வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த ஆண்டு கோவை மாநகர் மற்றும் புறநகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருந்தது. இதில் சில குற்ற வழக்குகளில் கைதான நபர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளிகள் சிலர் மீண்டும் வழக்கு விசாரணையில் ஆஜரா காமல் தலைமறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.

    கோவை மாநகர் மற்றும் புறநகரில் 200-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    இவர்களைப் பிடிக்க 'ஆபரேஷன் வாரண்ட்' என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்து தமிழக டி.ஜி.பி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

    கோவை நகரில் மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் மேற்பா ர்வையிலும் கோவை மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் மேற்பார்வை யிலும் பிடிவாரண்ட் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒரு போலீஸ் நிலையத்துக்கு 2 போலீசார் வீதம் மாநகர் புறநகரில் சுமார் 100 தனிப்படை போலீசார் பிடிவாரண்ட் குற்றவாளிகளை தேடும் பணியை இன்று முதல் தொடங்ககி உள்ளனர்.

    முதல் கட்டமாக கோவை கோனியம்மன் கோவில் விழாவிற்கு வந்திருந்த 10 பிடிவாரண்ட் குற்றவாளிகள் போலீசில் சிக்கினார். ஒரு வார காலத்திற்குள் அனைத்து தலைமறைவு குற்றவா ளிகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இது மட்டுமின்றி பல்வேறு குற்றவாளிகளில் இதுவரை சிக்காத நபர்கள், பல்வேறு பகுதிகளில் குற்றம் செய்துவிட்டு கோவையில் தஞ்சம் அடைந்துள்ள நபர்கள், பண மோசடி மற்றும் பல்வேறு மோசடிகளில் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டிருக்கிறது.

    • 3 மாநிலங்களை புதுவை இணைந்து உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த ஆலோசனை நடத்தப்படுகிறது.
    • காவல்துறையில் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் சமூக விரோத சக்திகளின் செயல்பாடுகள் காணப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் கலெக்டர் மணிகண்டன் போலீஸ் அதிகாரிகளிடையே பேசியதாவது:-

    தமிழகம்,ஆந்திரா, கேரளா ஆகிய 3 மாநிலங்களை புதுவை இணைந்து உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த ஆலோசனை நடத்தப்படுகிறது. அமைதியாக இருக்கும் புதுவையில் கடந்த சில நாட்களாக சமூக விரோத சக்திகளின் செயல்பாடு அதிகரித்துள்ளது.

    காவல்துறையில் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் சமூக விரோத சக்திகளின் செயல்பாடுகள் காணப்படுகிறது. இதனால் போலீஸ் சூப்பிரண்டுகள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.

    எந்த ஒரு ரவுடிகளுக்கும் புதுவையில் இடம் இல்லை. குற்றம் இழைக்க கூடிய நபர்களுக்கு ஆதரவாக காவல் துறை அதிகாரிகள் செயல்பட கூடாது. சிலர் குற்றவாளிகளை வெளியே விடும் வகையில் முதல் தகவல் அறிக்கையை எழுதுவதாக புகார் வருகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நானே பரிந்துரை செய்வேன்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • இரட்டை கொலையில் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என கிராமமக்கள் அறிவித்துள்ளனர்.
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணா விரதம் இருந்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த மாதம் 11-ந் தேதி அதிகாலையில் தாய், மகளை கொலை செய்து 60 நகைகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்து தப்பினர்.

    இரட்டை கொலை நடந்து 27 நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன், உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு இரவுசேரி நாடு, தென்னிலைநாடு உட்பட 14 நாட்டார்கள் முன்னிலையில் நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணா விரதம் இருந்தனர்.

    இதில் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர் ரமேஷ், தேவகோட்டை யூனியன் தலைவர் பிர்லா கணேசன், கண்ணங்குடி யூனியன் தலைவர் சித்தானூர் சரவணன் மெய்யப்பன் கார்த்திக், த.மா.கா மாநில செயலாளர் இருமதி துரைகருணாநிதி, பா.ஜ.க. மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் காமராஜ் மற்றும் வர்த்தக சங்கத்தினர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கடையடைப்பு செய்து உண்ணாவிரதம் இருந்தனர்.

    உண்ணாவிரத்தை முடித்து கொண்ட காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறுகையில், இந்த வழக்கு சம்பந்தமாக கூடுதலாக ஒரு மாதத்திற்குள் போலீசார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இல்லை யென்றால் அடுத்த நிகழ்வு மிகப்பெரிய அளவில் நடைபெறும்.

    ஒரு மாத காலத்திற்குள் போலீசார் குற்றவாளிகளை கைது செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். தேவகோட்டை துணைக் கண்காணிப்பாளர் பிரகாஷ், காரைக்குடி துணை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் ேபாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ராஜபாளையத்தில் சி.சி.டி.வி. காமிராவை உடைத்த 3 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
    • குற்ற சம்பவங்களை தடுக்க முக்கிய பகுதிகளில் போலீசார் சார்பில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் முக்கிய பகுதிகளில் போலீசார் சார்பில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி முடங்கியார் ரோட்டில் உள்ள வனச்சரக சோதனை சாவடியில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. நேற்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அந்த வழியாக வந்த சிலர் சாவடியில் பொருத்தப்பட்டிருந்த காமிரா மீது கல்வீசினர். இதில் ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள கண்காணிப்பு காமிரா உடைந்து சேதமானது. இதுகுறித்து வடக்கு தலைமை காவலர் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கண்காணிப்பு காமிரா மீது கல்வீசி சேதப்படுத்தியது சோமையாபுரம் தெருவைச் சேர்ந்த நீராத்துலிங்கம் மகன் வனஅரவிந்த் என்ற கபாலி, கூடலிங்கம் மகன் தங்கபழம், மாலையாபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வைரவன் என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • கொலை குற்றவாளிகள் தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கொலை குற்றவாளிகள் தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் அண்டோ (எ) பன்னீர்செல்வம் 25/22, த/பெ. பலராமன், ஜோதி அண்ணாமலை நகர், சென்னை, அர்ஜுன் 26/22, த/பெ. அசோகன் வியாசர்பாடி, சென்னை, நெட்ட சக்தி (எ) சக்திவேல்20/22, த/பெ. ரமேஷ், வியாசர்பாடி, சென்னை, வில்லன் காசி என்கிற காசி28/22, த/பெ. முனுசாமி, சாஸ்திரி நகர், வியாசர்பாடி, சென்னை, ஜில்லா சுசி என்கிற சுசீந்தர் 24/22, ஆகிய இருவரும் தகப்பனார் வெங்கடேசன், சாஸ்திரி நகர், வியாசர்பாடி, சென்னை ஆகியோர் மீது கொலை முயற்சி மற்றும் கொலை வழக்கு உள்ளது.

    இதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர் பரிந்துரையின்படி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • இந்துக்களின் எழுச்சித் திருவிழாவான விநாயகா் சதுா்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.
    • சமூக விரோதிகள் இரு கோவில்களில் விநாயகா் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனா்.

    திருப்பூர் :

    திருப்பூரில் 2 கோவில்களில் விநாயகா் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்துக்களின் எழுச்சித் திருவிழாவான விநாயகா் சதுா்த்தி பெருவிழா தமிழகமெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.

    இந்து முன்னணி சாா்பில் நிகழாண்டு 'பிரிவினை வாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனையை வளா்ப்போம்' என்ற தலைப்பில் ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகா் சிலைகள் பொதுமக்களின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது. திருப்பூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவானது பல்லாயிரக்கணக்கானோா் கலந்துகொண்ட மாபெரும் மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாடப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத சமூக விரோதிகள் இரு கோவில்களில் விநாயகா் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனா்.சிலைகளை சேதப்படுத்தியவா்களை காவல் துறையினா் உடனடியாக கைது செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் இந்து முன்னணி சாா்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜக சாா்பில் மனு :

    விநாயகா் சிலைகளை சேதப்படுத்திய நபா்களைக் கைது செய்யக் கோரி பாஜக. சாா்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவா் பி.செந்தில்வேல் திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழகம் முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.இந்நிலையில், திருப்பூா் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், சக்தி மாரியம்மன் கோவில் ஆகிய இடங்களில் விநாயகா் சிலைகளை சிலா் சேதப்படுத்தியுள்ளனா்.சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.ஆகவே விநாயகா் சிலைகளை தேதப்படுத்தியவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காவல்துறை அதிகாரிகளை கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
    • பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு கொடுத்தால் மனு ரசீது கொடுப்பதில்லை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் நிலையத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

    அப்போது பாதிக்கப்பட்ட மக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளிகளுக்கு துணை போகும்பெரம்பூர் காவல்துறை அதிகாரிகளை கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்தி ரன் தலைமை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் சீனிவாசன்மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், துரைராஜ், சிங்காரவேலன், சிம்சன், விஜயகாந்த், வெண்ணிலா, மாவட்டக்குழு உறுப்பினர் மார்க்ஸ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர்.

    சட்டம் ஒழுங்கு சீர்குலை யாமல் தேசத்தின்பாதுகாவலனாக இருக்கவேண்டிய காவல்துறை, பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு கொடு த்தால் மனு ரசீது கொடுப்பதில்லை.

    நேரடி விசாரனை கூட இருப்பதில்லைமாறாக குற்றவாளிகள் தப்பிக்க அனைத்து வழி வகைக ளையும் பெரம்பூர் காவல்துறை செய்து வருகின்றனர்.

    சில புகார்கள் மீது கட்டப்பஞ்சாயத்து பேசி முடித்துள்ளது.

    வழக்கு பதிவு செய்ய நேரிட்டால் புகார்மனு மீது உரிய வழக்கு பதிவு செய்வதில்லை.

    மேலும் காவல்நிலைய ஜாமீனிலே குற்றவாளிகள் தப்பித்து செல்கிறார்கள் என குற்றஞ்சாட்டி முழக்கங்கள் எழுப்பிய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×