search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school-college students"

    • பைக் சாகசங்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து இளைஞர்களுக்கு புரிய வைக்க வேண்டும்
    • பைக் சாகசங்களை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது

    பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்தாமல், அவர்களை சீர் திருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆலோசனை கூறியுள்ளார்.

    சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி முகமது ஆசிக், சாதிக் ஆகிய இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையில் முக்கிய சாலைகளில் பைக் சாகசங்களை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகளையும், பள்ளி - கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, "பொறுப்பற்ற முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டும் இளைஞர்களை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து, பைக் சாகசங்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளை கையாளுவதற்கு தேவையான நடைமுறையை உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை வழங்கியுள்ளார். இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணையை ஏப்ரல் 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • புதுவை மாநில எல்லையில் உள்ள மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில், கலிதீர்த்தாள்குப்பம், நல்லூர், பள்ளியநேலியனூர், கொத்தபுரிநத்தம், சன்னியாசிகுப்பம், ஆகிய பகுதியை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை கல்வித்துறை இயக்கி வந்த ஒரு ரூபாய் பஸ்களில் பயணம் செய்து வந்தார்கள்.
    • இந்த பஸ்களில் காலை-மாலை வேலைகளில் வேலைக்கு செல்வோர் அதிகம் பேர் புதுவைக்கு வந்து செல்வதால் மாணவர்கள் அதில் பயணம் செய்வதில் பெரும் சிரமமாக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில எல்லையில் உள்ள மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில், கலிதீர்த்தாள்குப்பம், நல்லூர், பள்ளி யநேலியனூர், கொத்தபுரிநத்தம், சன்னியாசிகுப்பம், ஆகிய பகுதியை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை கல்வித்துறை இயக்கி வந்த ஒரு ரூபாய் பஸ்களில் பயணம் செய்து வந்தார்கள்.

    இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு ரூபாய் பஸ் நிறுத்தப்பட்டது.

    விரைவில் இந்த பஸ்கள் இயக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

    ஒரு ரூபாய் பஸ்கள் இயக்கப்படாததால் மதகடி ப்பட்டு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி பள்ளி-கல்லூரி மாணவர்கள் தனியார் பஸ்களில் பயணம் செய்து வருகிறார்கள்.

    இந்த பஸ்களில் காலை-மாலை வேலைகளில் வேலைக்கு செல்வோர் அதிகம் பேர் புதுவைக்கு வந்து செல்வதால் மாணவர்கள் அதில் பயணம் செய்வதில் பெரும் சிரமமாக உள்ளது.

    அடுத்த பஸ்சில் அவர்கள் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் அதிகப்படியான கட்டணம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

    எனவே விரைவில் ஒரு ரூபாய் பஸ் போக்கு வரத்தை தொடங்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    • ஈரோடு கலை மகள் கல்வி நிலையத்திலும், கல்லூரி மாணவர்களு க்கான போட்டிகள் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும் நடைபெறுகிறது.
    • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர்- தலைமை ஆசி ரியர் ஒப்பம் பெற்று போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சி துணை இயக்கு நரிடம் நேரில் அளிக்க வேண்டும்.

    ஈரோடு:

    தமிழக அரசின் ஆணை க்கிணங்க தமிழ் வளர்ச்சித் தறை சார்பில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

    அதன்படி ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி பேச்சு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதையொட்டி வரும் 14-ந் தேதி பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் ஈரோடு கலை மகள் கல்வி நிலையத்திலும், கல்லூரி மாணவர்களு க்கான போட்டிகள் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும் நடைபெறுகிறது.

    எனவே மாணவர்கள் பேச்சுப் போட்டி களுக்கான விண்ணப்பப் படிவங்களை அவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர்வரிடம் இருந்து பெற்று கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர்- தலைமை ஆசி ரியர் ஒப்பம் பெற்று போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சி துணை இயக்கு நரிடம் நேரில் அளிக்க வேண்டும்.

    மாவட்ட அளவில் பள்ளி- கல்லூரிப் போட்டி யில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படும்.

    மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சு போட்டியில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தேர்வு செய்து சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ×