search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speech competitions for"

    • பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.
    • போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

    ஈரோடு:

    தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நாட்டிற்காகப பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பேச்சுப் போட்டிகள் நடத்திப்பரிசு கள் வழங்கப்படுகிறது.

    இதையொட்டி அம்பேத்கர் மற்றும் முன்னாள் முதல்- அமை ச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி வரும் 9-ந் தேதி, 10-ந் தேதி பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.

    இப்போட்டிகள் கலெக்டர் அலுவலக 2-ம் தளம் கூட்ட அரங்கில் நடை பெற உள்ளது. பள்ளிப்போட்டி காலை 10 மணி முதல், கல்லூரிப் போட்டி மதியம் 2 மணி முதல் நடைபெறும்.

    மாணவர்கள் பேச்சுப் போட்டிகளுக்கான தலைப்புகளை அவரவர்கள் பயிலும் பள்ளித் தலைமை யாசிரியர், கல்லூரி முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

    மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம் , 3-ம் பரிசாக ரூ.2ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படும்.

    மேலும் பள்ளி மாண வர்களுக்கான பேச்சு ப்போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள், அரசு ப்பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2ஆயிரம் வீதம் வழங்க ப்படும் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு கலை மகள் கல்வி நிலையத்திலும், கல்லூரி மாணவர்களு க்கான போட்டிகள் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும் நடைபெறுகிறது.
    • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர்- தலைமை ஆசி ரியர் ஒப்பம் பெற்று போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சி துணை இயக்கு நரிடம் நேரில் அளிக்க வேண்டும்.

    ஈரோடு:

    தமிழக அரசின் ஆணை க்கிணங்க தமிழ் வளர்ச்சித் தறை சார்பில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

    அதன்படி ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி பேச்சு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதையொட்டி வரும் 14-ந் தேதி பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் ஈரோடு கலை மகள் கல்வி நிலையத்திலும், கல்லூரி மாணவர்களு க்கான போட்டிகள் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும் நடைபெறுகிறது.

    எனவே மாணவர்கள் பேச்சுப் போட்டி களுக்கான விண்ணப்பப் படிவங்களை அவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர்வரிடம் இருந்து பெற்று கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர்- தலைமை ஆசி ரியர் ஒப்பம் பெற்று போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சி துணை இயக்கு நரிடம் நேரில் அளிக்க வேண்டும்.

    மாவட்ட அளவில் பள்ளி- கல்லூரிப் போட்டி யில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படும்.

    மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சு போட்டியில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தேர்வு செய்து சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ×