என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்
- பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.
- போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
ஈரோடு:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நாட்டிற்காகப பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பேச்சுப் போட்டிகள் நடத்திப்பரிசு கள் வழங்கப்படுகிறது.
இதையொட்டி அம்பேத்கர் மற்றும் முன்னாள் முதல்- அமை ச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி வரும் 9-ந் தேதி, 10-ந் தேதி பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.
இப்போட்டிகள் கலெக்டர் அலுவலக 2-ம் தளம் கூட்ட அரங்கில் நடை பெற உள்ளது. பள்ளிப்போட்டி காலை 10 மணி முதல், கல்லூரிப் போட்டி மதியம் 2 மணி முதல் நடைபெறும்.
மாணவர்கள் பேச்சுப் போட்டிகளுக்கான தலைப்புகளை அவரவர்கள் பயிலும் பள்ளித் தலைமை யாசிரியர், கல்லூரி முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம் , 3-ம் பரிசாக ரூ.2ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படும்.
மேலும் பள்ளி மாண வர்களுக்கான பேச்சு ப்போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள், அரசு ப்பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2ஆயிரம் வீதம் வழங்க ப்படும் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்