search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பூர் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்.

    பெரம்பூர் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    • காவல்துறை அதிகாரிகளை கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
    • பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு கொடுத்தால் மனு ரசீது கொடுப்பதில்லை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் நிலையத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

    அப்போது பாதிக்கப்பட்ட மக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளிகளுக்கு துணை போகும்பெரம்பூர் காவல்துறை அதிகாரிகளை கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்தி ரன் தலைமை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் சீனிவாசன்மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், துரைராஜ், சிங்காரவேலன், சிம்சன், விஜயகாந்த், வெண்ணிலா, மாவட்டக்குழு உறுப்பினர் மார்க்ஸ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர்.

    சட்டம் ஒழுங்கு சீர்குலை யாமல் தேசத்தின்பாதுகாவலனாக இருக்கவேண்டிய காவல்துறை, பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு கொடு த்தால் மனு ரசீது கொடுப்பதில்லை.

    நேரடி விசாரனை கூட இருப்பதில்லைமாறாக குற்றவாளிகள் தப்பிக்க அனைத்து வழி வகைக ளையும் பெரம்பூர் காவல்துறை செய்து வருகின்றனர்.

    சில புகார்கள் மீது கட்டப்பஞ்சாயத்து பேசி முடித்துள்ளது.

    வழக்கு பதிவு செய்ய நேரிட்டால் புகார்மனு மீது உரிய வழக்கு பதிவு செய்வதில்லை.

    மேலும் காவல்நிலைய ஜாமீனிலே குற்றவாளிகள் தப்பித்து செல்கிறார்கள் என குற்றஞ்சாட்டி முழக்கங்கள் எழுப்பிய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×