search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலம்பியா"

    • முன்னணி அழகான நகரங்களின் பட்டியலில் இந்த நாட்டை ஃபோர்ப்ஸ் பட்டியலிட்டது
    • நிறமற்ற திரவமான ஸ்கொபோலமைன் பானங்களில் கலந்தால் தெரியாது

    தென் அமெரிக்காவில் பெரும் பகுதியை கொண்ட நாடு, கொலம்பியா (Colombia). இதன் தலைநகரம் பொகோடா.

    அமெரிக்காவில் இருந்து கொலம்பியாவிற்கு பலர் சுற்று பயணம் செய்து வருகின்றனர்.

    மெடலின், கார்டகேனா உள்ளிட்ட அழகான நகரங்களையும், இயற்கை எழில் மிகுந்த டேரோனா, சியரா நிவேடா பிரதேசங்களையும் சுற்றி பார்க்க அமெரிக்க மக்கள் அங்கு பல வருடங்களாக சுற்றுலா செல்கின்றனர்.

    கடந்த 2022 செப்டம்பர் மாதம், பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகின் அழகான நாடுகளின் பட்டியலில்  இந்நாட்டை முன்னணியில் வைத்தது.

    ஆனால், கடந்த சில மாதங்களாக அந்நாட்டிற்கு செல்லும் அமெரிக்கர்கள் மற்றும் மேற்கத்திய நாட்டினருக்கு ஆபத்தாக உள்ளது.

    அமெரிக்க மின்னசோட்டா மாநிலத்தை சேர்ந்த டவ் கெர் (50), மெடலின் நகருக்கு 2-மாத சுற்று பயணம் சென்றார். தனது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த டவ் கெர், திடீரென காணாமல் போனார். அவரை கொலம்பியா காவல்துறை தேடி வந்த நிலையில், கொல்லப்பட்ட அவரது உடல் ஒரு காட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

    சுமார் $2000 பணத்திற்காக அவர் கொல்லப்பட்டது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

    டேட்டிங் செயலி ஒன்றில் அறிமுகமான பெண் ஒருவருடன் சென்ற போது அவரை அப்பெண்ணும் அவரது நண்பரும் பணத்திற்காக கொன்றதாக தெரிய வந்துள்ளது.

    இதே போல் ஜெஃப் ஹுவெட் என்பவர் ஓட்டல் அறையில் கொல்லப்பட்டு கிடந்தார்.

    கடந்த 2023 அக்டோபர் வரை 32 வெளிநாட்டினர் கொல்லப்பட்டதாகவும், அதில் 12 அமெரிக்கர்கள், 3 இங்கிலாந்து நாட்டவர்கள் என்றும் கொலம்பியா அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2022-ஐ விட 40 சதவீதம் அதிகம்.

    சுற்றுலா பயணிகளுடன் நட்பாக பேசி, அவர்கள் அருந்தும் பானங்களில் "ஸ்கொபோலமைன்" (scopolamaine) எனும் நிறமற்ற போதை மருந்தை கலந்து கொடுத்து, அவர்களை கடத்தி சென்று, உடைமைகளை திருடி, கொலையும் செய்கின்ற கும்பல் அதிகரித்து வருவதாக அங்குள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

    அறிமுகம் இல்லாத நபர்களுடன் உரையாடும் போது எச்சரிக்கையாக இருக்கவும், எங்கு சென்றாலும் சொந்த நாட்டில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருக்குமாறும், கொள்ளை முயற்சியில் சிக்கி கொள்ள நேரிட்டல் எதிர்க்காமல் இருக்குமாறும், தனது நாட்டிலிருந்து அங்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    • இறுதிக்கட்ட விசாரணையின்போது, ஒடோனியல் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்
    • ஒடோனியலை பாப்லோ எஸ்கோபாருடன் மட்டுமே ஒப்பிட முடியும் என கொலம்பிய அதிபர் கருத்து

    கொலம்பியா நாட்டில் போதை மருந்து கடத்தலும், அது தொடர்பான கொலைகளும் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அங்கு இக்குற்றங்களில் பல குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

    அப்படிப்பட்ட ஒரு குழுவின் தலைவராக விளங்கியவர் ஒடோனியல் என அழைக்கப்பட்ட டெய்ரோ அன்டோனியோ உசுகா. இவர் இத்தொழிலில் வடக்கு கொலம்பியாவின் பெரும் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

    அமெரிக்காவிற்குள் கடத்தி வரப்பட்ட பல டன்கள் போதை பொருள் கடத்தலை ஒடோனியல் நிர்வகித்துள்ளார். இதனால் அவரை அமெரிக்கா தேடி வந்தது. ஒடோனியல் தலைக்கு அமெரிக்கா சுமார் ரூ.40 கோடி ($5 மில்லியன்) பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

    ஒடோனியல் தனது எதிரிகளை கொல்ல இரக்கமின்றி உத்தரவிட்டார். மேலும் பலரை சித்ரவதை செய்துள்ளார். ஒருவரை உயிருடன் புதைத்தார். பொது மக்களை பயமுறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    போலீஸ் தாக்குதலில் அவரது சகோதரர் கொல்லப்பட்ட பிறகு, ஒரு நாள் முழுவதும், "வீட்டிலேயே இருங்கள் அல்லது உயிரை இழப்பீர்கள்" என பொதுமக்களுக்கு உத்தரவிட்டு விட்டு காவல்துறையினரை கொல்பவர்களுக்கு பரிசுகளை அறிவித்து அவர்களை வேட்டையாடினார்.

    இந்நிலையில், 2021ம் வருடம், நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை கொண்ட தேடுதல் வேட்டை ஒன்றில் இறுதியாக அவரது மறைவிடத்தில் இருந்து ஒடோனியல் கைது செய்யப்பட்டார்.

    அதன்பின்னர், கொலம்பியாவில் இருந்து அவரை அமெரிக்காவிற்கு கொண்டு வருவதற்கான நடைமுறைகளை அமெரிக்க அரசு மேற்கொண்டது. கொலம்பியாவுடன், 'நாடு கடத்தல்' நடைமுறைகளை அமெரிக்கா துவங்கியபோது, ஒரு நிபந்தனையாக அவருக்கு ஆயுள் தண்டனையை அமெரிக்க அரசாங்க வக்கீல் கோர வேண்டாம் என்று கொலம்பியா கேட்டுக்கொண்டது. இந்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.

    அதன்பின்னர் அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஒடோனியல் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று நடைபெற்ற இறுதிக்கட்ட விசாரணையின்போது, தனது குற்றங்களை ஒப்புக்கொள்வதாகவும், தனது செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும், தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் ஒடோனியல் கூறினார். இதனையடுத்து அவருக்கு நீதிமன்றம் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.

    கொலம்பிய அதிபர் இவான் டுக், ஒடோனியலை குறித்து கூறியதாவது:

    ஒடோனியலை, போதைப்பொருள் கடத்தலில் பெரும்புள்ளியாக திகழ்ந்த பாப்லோ எஸ்கோபாருடன் மட்டுமே ஒப்பிட முடியும். அவர் உலகின் மிகவும் ஆபத்தான கடத்தல்காரர் மட்டுமல்ல, பல சமூக தலைவர்களை கொலை செய்தவர். சிறுவர்கள், பெண்கள் மற்றும் இளம் பருவத்தினரை துஷ்பிரயோகம் செய்தவர். மேலும், பல காவல்துறையினரை கொன்றவர்.

    இவ்வாறு அதிபர் டுக் தெரிவித்தார்.

    • ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • தேசிய விடுதலை ராணுவ அமைப்பு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தகவல்

    கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும், இதில் எட்டு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்ததாகவும், அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். இது போன்ற கொடூர தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மீதான இந்த தாக்குதல் வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கி மூலம் நடத்தப்பட்டது போல் தெரிவதாக பிராந்திய காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    பெட்ரோ கடந்த மாத தொடக்கத்தில் கொலம்பியாவின் அதிபராக பதவியேற்ற பின்னர் பொது பாதுகாப்பு பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட மிக முக்கியமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. கொலம்பியாவில் செயல்படும் கிளர்ச்சி அமைப்பான தேசிய விடுதலை ராணுவம் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

    கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படையினர் ஆயுதங்களைக் கீழே போட்டு 2016 இல் அரசுடன் சமாதான உடன்படிக்கைக்கு மேற்கொண்டனர். மேலும் பல கிளர்ச்சிக் குழுக்கள் போர் நிறுத்தத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அமைதிக்கு எதிரான நாசவேலை என்று அதிபர் பெட்ரோ கூறியுள்ளார்.

    கேட்கும் திறன் மற்றும் பார்வை இல்லாத நபர் நண்பரின் உதவியால் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தனது நாட்டு அணியின் வெற்றியை கொண்டாடிய நெகிழ்ச்சி நிகழ்வு நடந்துள்ளது. #FIFA #WorldCup
    போகோடா:

    உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடந்து வருகின்றது. கடந்த வாரம் நடந்த குரூப் போட்டியில் கொலம்பியா - போலந்து அணிகள் மோதின. இந்த போட்டியில், கொலம்பியா அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில், இந்த போட்டி நடந்த அன்று கொலம்பியா தலைநகரில் நடந்த ஒரு உணர்ச்சிமிகு நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கொலம்பியா அணியின் தீவிர ரசிகரான ஜோஸ் ரிச்சர்ட், 9 வயதில் தனது பார்வை மற்றும் கேட்கும் திறனை இழந்தவர். போட்டி நடந்த அன்று போகோடா நகரில் உள்ள கிளப்பில் ஆஜரான ஜோஸுக்கு அவரது நண்பர் போட்டியை டிவி.யில் பார்த்து விளக்கியுள்ளார். கால்பந்து மைதானம் போன்ற சிறிய அட்டையை மடிப்பகுதியில் வைத்து, ஜோஸின் இரு கைகளையும் பிடித்து அவரது நண்பர், பந்து போகும் திசையை சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார்.

    பவுல், பெனால்டி, கோல் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் சிறப்பு சங்கேத சைகைகள் மூலம் ஜோஸின் நண்பர் விவரித்துள்ளார். கொலம்பியா அணி கோல் அடித்ததும் உணர்ச்சி பெருக்கால் ஜோஸ் கூச்சலிடும் காட்சிகள் நெகிழ வைக்கின்றன. வீடியோ கீழே..


    கொலம்பியாவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் வலதுசாரி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இவான் டியூக் 54 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். #ColombiaDecide #IvanDuque
    போகோடா:

    மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. வலதுசாரி ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் செனட் உறுப்பினர் இவான் டியூக் மற்றும் முற்போக்காளர் கட்சி சார்பில் முன்னாள் மேயர் மற்றும் கொரில்லா போராளியாக இருந்த கஸ்டாவோ பெட்ரோ போட்டியிட்டனர்.

    வாக்கு எண்ணிக்கையில் இவான் டியூக் 54 வாக்குகளும், கஸ்டாவோ பெட்ரோ 42 சதவிகித வாக்குகள் பெற்றனர். இதன் மூலம், 41 வயதே ஆன இவான் டியூக் வெற்றி பெற்று அந்நாட்டு அதிபராக பதவியேற்க உள்ளார். இதன்மூலம் அந்நாட்டு வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் அதிபரானவர் என்ற பெயரையும் டியூக் பெற உள்ளார். 

    முன்னாள் அதிபர் அல்வோரோ உரைப்-க்கு ஆலோசகராக இருந்த டியூக், அந்நாட்டு அரசு கிளர்ச்சியாளர்களுடன் செய்துகொண்ட சமரச ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×