search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமிரா உடைப்பு"

    • ராஜபாளையத்தில் சி.சி.டி.வி. காமிராவை உடைத்த 3 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
    • குற்ற சம்பவங்களை தடுக்க முக்கிய பகுதிகளில் போலீசார் சார்பில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் முக்கிய பகுதிகளில் போலீசார் சார்பில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி முடங்கியார் ரோட்டில் உள்ள வனச்சரக சோதனை சாவடியில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. நேற்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அந்த வழியாக வந்த சிலர் சாவடியில் பொருத்தப்பட்டிருந்த காமிரா மீது கல்வீசினர். இதில் ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள கண்காணிப்பு காமிரா உடைந்து சேதமானது. இதுகுறித்து வடக்கு தலைமை காவலர் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கண்காணிப்பு காமிரா மீது கல்வீசி சேதப்படுத்தியது சோமையாபுரம் தெருவைச் சேர்ந்த நீராத்துலிங்கம் மகன் வனஅரவிந்த் என்ற கபாலி, கூடலிங்கம் மகன் தங்கபழம், மாலையாபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வைரவன் என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    ×