என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Condolence"
- எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. இரங்கல் தெரிவித்தார்.
- அவர் ஆற்றிச் சென்ற பணிகளின் பலன் உலகம் இருக்கும் வரை அவருடைய பெயர் சொல்லும்.
விருதுநகர்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம்தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேளாண் விஞ்ஞானி,பசுமை புரட்சியாளர் டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் வயது முதிர்வு காரணமாக மறைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
இந்தியா இன்று உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்றால் அதற்கு முழு முதற் காரணம் வேளாண் அறிஞர் தமிழ்த்தாயின் தலைமகன்களில் ஒருவரான டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களே.
அவருடைய மறைவு இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே பேரிழப்பாகும். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மறைந்தாலும் அவர் ஆற்றிச் சென்ற பணிகளின் பலன் உலகம் இருக்கும் வரை அவருடைய பெயர் சொல்லும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தி வருத்தம் அளிக்கிறது.
- ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தி வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
இந்த விபத்தில் காயமடைந்தோருக்கு உயர் மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதையும், அவர்கள் மீண்டும் வாழ்வாதாரத்தை தொடங்க போதுமான நிவாரண உதவிகளையும் பெற்றிட அரசு வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், தீபாவளி பண்டிகை வரவிருப்பதால் பட்டாசு தயாரிப்பு பணிகள் அனைத்து தொழிற்சாலைகளிலும் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும், தொழிற்சாலைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும் தமிழக அரசு உறுதிப்படுத்தி, இதுபோன்ற விபத்துகள் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான “கோவைத் தென்றல்” மு. ராமநாதன் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு துடிதுடித்துப் போனேன்.
அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் மீது அளவு கடந்த பற்றும் பாசமும் வைத்திருந்தவர் அவர். அவர்களின் மனமுவந்த பாராட்டுகளைப் பெற்றவர் அவர்.
இந்த இயக்கத்தின் என்றும் தளர்ச்சியடையாத உயிரோட்டம் மிக்க ரத்த நாளமாகத் திகழ்ந்து எண்ணற்ற கொள்கை வீரர்களையும் லட்சிய வேங்கைகளையும் கொங்கு மண்டலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அசையாச் சொத்துக்களாக உருவாக்கியவர். 1992-ல் கழகத்தின் சார்பில் “அண்ணா விருது” வழங்கி பெருமை சேர்க்கப்பட்டது.
திராவிட இயக்கத்தின் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த அவரது மறைவு அவரது உறவினர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் இந்த இயக்கத்தின் கோடானு கோடி தொண்டர்களுக்கும், கொங்கு மண்டல மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MKStalin #Ramanathan
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
5 ரூபாய் டாக்டர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் ஜெயச்சந்திரன் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை-எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த மருத்துவ சேவையை வழங்கியுள்ளார். டாக்டர் ஜெயச்சந்திரனை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், அவருடைய தன்னலமற்ற சேவையை பல ஆண்டுகளாக பெற்று வந்த ராயபுரம் பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
அதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு இரங்கல் செய்தியில், ‘பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவருடைய மறைவு தமிழ் இலக்கிய உலகிறகு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். பிரபஞ்சனை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், எழுத்துலக நண்பர்களுக்கும், அவருடைய எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்:-
தனித்துவமான தமிழ் நடையால் பல படைப்புகளை வழங்கி வாசிப்பு நிலையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றவர் எழுத்தாளர் பிரபஞ்சன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் :-
தமிழ் இலக்கிய உலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய எழுத்தாளர் தோழர் பிரபஞ்சன் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை அனைத்திலும் தடம் பதித்தவர். வானம் வசப்படும் எனும் நாவலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்:-
புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், தமிழ் இலக்கிய ஆளுமையுமான பிரபஞ்சன் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். அவரது இழப்பு தமிழ் எழுத்துலகிற்கும், தமிழ் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:-
தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி தனித்துவமாகத் திகழ்ந்த எழுத்தாளர்-நாடக ஆசிரியர் பிரபஞ்சன் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
சாகித்ய அகாடமி உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்று எழுத்துப்பணியை திறம்பட செய்து வந்த பிரபஞ்சனின் மறைவு எழுத்துலகுக்கு பேரிழப்பாகும். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்!
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #Prapanchan
திராவிடர் கழக பொருளாளராக இருந்தவர் டாக்டர் பிறைநுதல் செல்வி(72).
உதகை மண்டலத்தில் மருத்துவ துணை இயக்குனராக பணிபுரிந்த இவர் விருப்ப ஓய்வு பெற்று திராவிடர் கழகத்தில் முழு நேரம் பணிபுரிந்தார். பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர் 2013-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதியில் திராவிடர் கழக பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.
நேற்று காலை திருப்பூரில் இருந்து குன்னூரில் உள்ள வீட்டுக்கு பிறைநுதல் செல்வி தனது கணவர் டாக்டர் கவுதமனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் இவர்களுடைய கார் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பிறைநுதல் செல்வி மரணம் அடைந்தார்.
அவரது மரணத்துக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்து சென்னை திரும்ப விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தபோது நமது இயக்கக் கண்மணிகள், கொள்கைக் குன்றுகள், குன்னூர் டாக்டர் கவுதமனும், அவரது வாழ்விணையரும், திராவிடர் கழகப் பொருளாளருமான டாக்டர் பிறைநுதல் செல்வியும் விபத்துக்குள்ளானார்கள் என்ற செய்தி கிடைத்தது.
இதில் பிறைதுதல் செல்வி மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரைப் போல் ஒரு கொள்கைச்செல்வம், ஒரு பண்பாட்டின் உருவம், பாசத்தின் ஊற்று, ஒழுக்கம், தன்னடக்கத்தின் எழிற்கோல மனிதத்தை எளிதில் பார்க்க முடியாது. அவரை இழந்துவாடும் எனது கொள்கை உறவுக் குடும்பமே, ஆறுதல் கொண்டு துணிவுடன் அவர் தொண்டை தொடர ஆயத்தமாவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:-
திராவிடர் கழகத்தின் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி அறிந்து துடிதுடித்துப் போனேன். அருமை சகோதரியாரை இழந்த துயரில் துடிக்கும் அவரது வாழ்க்கைத் துணைவர் டாக்டர் கவுதமனுக்கும் அவரது இலத்தவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் துயரம் தோய்ந்த உள்ளத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யு புஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். மறைந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவுடன் இருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் குறிப்பிடுகையில், ‘ஜார்ஜ் புஷ் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்க மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உலகத்தில் முக்கியமான காலக்கட்டத்தில் அவர் சிறந்த தலைவராக செயல்பட்டார்’ என்று அதில் குறிப்பிட்டு உள்ளார். #GeorgeHWBush #PMModi
முதல்-அமைச்சர் நாராயணசாமி தாயார் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.
அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டு, தன்னை ஈன்றெடுத்த தாயாரை இழந்த வேதனையில் இருக்கும் புதுவை முதல்-அமைச்சருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #Narayanasamy #MKstalin
புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மத்திய மந்திரி அனந்த குமார் (வயது 59) காலமானார். பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அனந்தகுமாரின் உடல், குடும்பத்தினர் அஞ்சலிக்காக லால்பக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. மத்திய மந்திரி அனந்த குமார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அனந்தகுமார் மறைவு வருத்தமளிக்கிறது. அனந்தகுமாரின் மறைவு கர்நாடக மக்களுக்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த சகாவும், எனது நண்பருமான அனந்தகுமார் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி சதனாந்த கவுடா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எனது நண்பர் அனந்த குமார் மறைவு அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்பட பலர் அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் தேசியச் செயலாளர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் அனந்தகுமார் ஆவார். 2014 பாராளுமன்ற தேர்தலில், பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். 1996 முதல் 2014 வரை பெங்களூரு தெற்கு தொகுதியில் 6 முறை எம்.பியாக அனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநில பாஜக தலைவராகவும் 2003 ஆம் ஆண்டு அனந்தகுமார் பொறுப்பு வகித்துள்ளார். #AnanthKumar #RamNathKovind #Modi
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே சவுர பஜார் பகுதியில் நேற்று இரவு தசரா விழா கோலகமால கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்ச்சியின் போது, எதிர்ப்பாராதவிதமாக ஏற்பட்ட ரெயில் விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட விபத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் 61 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும், இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இரங்கலை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குறிப்பிட்டுள்ளார். #AmritsarTrainAccident
பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் ஞானம் பெற்ற தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.
இவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளை முன்னாள் பிரதமருக்கு உரிய மரியாதைகளுடன் இறுதி சடங்கு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாரத ரத்னா வாஜ்பாயின் மறைவுக்கு பாகிஸ்தான் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு தெரிவித்த இரங்கல் செய்தியில், இந்தியா பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவதில் இவரது பங்கு மகத்துவமானது என்றும், சார்க் கூட்டமைப்பின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவருமான வாஜ்பாயின் மறைவு வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் அரசும் மக்களும், வாஜ்பாயை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும் தங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee #PakistanGovt
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 93 வயதான இவரது உடல்நிலை இன்று காலை மிகவும் மோசமடைந்ததாக வெளியிடப்பட்ட அறிக்கையை தொடர்ந்து மாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார்.
இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். வாஜ்பாயின் மறைவு தொடர்பான தனது இரங்கல் செய்தியில், இந்தியா தனது மிகச்சிறந்த மகனை இழந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அதேபோல், மிகச்சிறந்த சொற்பொழிவாளரும், ஈர்க்கத்தக்க கவிஞரும், தனித்துவமிக்க பொதுநல சேவகரும், முதன்மை பிரதமருமான வாஜ்பாயின் மறைவு ஆழ்ந்த துக்கம் அளிப்பதாக மன்மோகன் சிங் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #RahulGandhi #ManmohanSingh
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்