என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pakistan govt"
- நாட்டில் முடிந்த வரையில் செலவினங்களை குறைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- நாடே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் சிக்கனமும், தியாகமும், எளிமையும் நமக்கு தேவை.
பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 350 பில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட உலகின் ஐந்தாவது அதிக மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தான் அதன் மதிப்பீட்டின்படி வெறும் 3 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்புடன், ஆபத்தான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மேலும், டாலர் அழுத்தத்தையும் எதிர்கொள்கிறது.
இதனால் நாட்டில் முடிந்த வரையில் செலவினங்களை குறைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு நடவடிக்கையாக, பாகிஸ்தானில் அமைச்சர்கள் இனி பிசினஸ் கிளாஸில் பயணிக்கக்கூடாது என்றும் வெளிநாடுகளுக்கு செல்லும்போது நட்சத்திர விடுதிகளில் தங்கக்கூடாது எனவும் அந்நாட்டு அரசு அறிவித்து தடை விதித்துள்ளது.
நாடே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் சிக்கனமும், தியாகமும், எளிமையும் தங்களுக்கு தேவை என அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக பேசிய அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கூறியதாவது:-
இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அடுத்த பட்ஜெட்டில் அரசாங்கம் மேலும் சிக்கன நடவடிக்கைகளைப் பின்பற்றும். இது காலத்தின் தேவை. காலம் நம்மிடம் இருந்து என்ன கோருகிறது என்பதை நாம் செயலில் காட்ட வேண்டும். அதுதான் சிக்கனம், எளிமை மற்றும் தியாகம்
நாட்டில் 764 மில்லியன் டாலர் செலவைக் குறைக்கும் நடவடிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர்களும் தானாக முன்வந்து பங்களிக்கின்றனர். உயர் அதிகாரிகள் தவிர பல மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் தங்கள் சம்பளம் மற்றும் சலுகைகளை கைவிட முன்வந்துள்ளனர்.
செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு வரை ஆடம்பர பொருட்கள் மற்றும் கார்களை வாங்குவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு பணத்தை பாதுகாக்கவும் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
- இதையடுத்து பணக்காரர்கள் மீதான வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு கடன் கேட்டுள்ளது. பாகிஸ்தானிடம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவாக உள்ளதால் வரும் நாட்களில் நெருக்கடி அதிகரிக்கும் நிலை உள்ளது.
கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு பணத்தை பாதுகாக்கவும் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பணக்காரர்கள் மீதான வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் அரசு அதிகாரிகள் புதிய கார் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வெளியிடும் அமைச்சர் இஸ்மாயில் கூறும்போது, பணக்காரர்கள் மீதான வரி உயத்தப்படுகிறது. கார்கள் இறக்குமதி, அரசு அதிகாரிகள் புதிய வாகனங்கள் வாங்குவது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது என்றார்.
பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் ஞானம் பெற்ற தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.
இவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளை முன்னாள் பிரதமருக்கு உரிய மரியாதைகளுடன் இறுதி சடங்கு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாரத ரத்னா வாஜ்பாயின் மறைவுக்கு பாகிஸ்தான் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு தெரிவித்த இரங்கல் செய்தியில், இந்தியா பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவதில் இவரது பங்கு மகத்துவமானது என்றும், சார்க் கூட்டமைப்பின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவருமான வாஜ்பாயின் மறைவு வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் அரசும் மக்களும், வாஜ்பாயை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும் தங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee #PakistanGovt
அதன்படி, பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியர்கள் 471 பேரின் பட்டியலை அந்த நாட்டு அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் நேற்று வழங்கியது. இந்த 471 பேரில் 418 பேர் மீனவர்கள் ஆவார்கள். பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் சட்டவிரோதமாக சென்றதாக கூறி இவர்கள் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த தகவலை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது. #Pakistan #IndianPrisoner #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்