என் மலர்tooltip icon

    உலகம்

    • பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் இரு கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை
    • தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் யூன் சுக் யோல் அறிவித்துள்ளார்

    தென் கொரியாவில் இரவோடு இரவாக எமர்ஜென்சி ராணுவ சட்டத்தை அந்நாட்டின் அதிபர் யூன் சுக் யோல் அமல்படுத்தி உள்ளார்.

    பட்ஜெட் மசோதா தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் ஒருமித்த கருத்து எட்டாத நிலையில் எதிர்க்கட்சிகள் வடகொரிய கம்யூனிச சக்திகளுடன் சேர்ந்து தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அதிபர் யூன் சுக் யோல் குற்றம் சாட்டி அவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எமர்ஜென்சி ராணுவ சட்டத்தை அமலப்படுவதாகத் தேசிய ஊடகத்தில் தோன்றி நாட்டு மக்களுக்கு இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    தென் கொரியாவில் அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் அதிபர் யூன் தலைமையிலான ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் ஒருமித்த கருத்து ஏற்படாததால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.

     

    இந்நிலையில் திடீரென தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் யூன் சுக் யோல், வட கொரியாவின் கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து தென் கொரியாவைப் பாதுகாக்கவும், மக்களின் சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைக் கொள்ளையடிக்கும் தேச விரோத சக்திகளை அகற்றவும், நான் இதன் மூலம் அவசரகால இராணுவச் சட்டத்தை அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.

    மேலும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பொருட்படுத்தாமல், எதிர்க்கட்சிகள் தங்கள் தலைவரை, குற்றச்சாட்டுகள்,விசாரணைகள் மற்றும் நீதியிலிருந்து காப்பாற்றுவதற்காக மட்டுமே ஆட்சியை முடக்கியுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

     

    இந்த திடீர் எமர்ஜென்சி ராணுவ சட்டத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் இயல்பு வாழ்க்கையில் ஏற்படும்  பாதிப்புகள் குறித்த அச்சத்தில் தென் கொரிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சர்வதேச அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த நவம்பர் 25ம் தேதி சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டார்.
    • மத கடமைகளை வீட்டுக்குள்ளேயே அல்லது கோயிலுக்குள்ளேயே வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினோம்

    கடந்த ஆகஸ்ட் மாதம் சஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு கவிழ்ந்ததிலிருந்து வங்கதேசத்தில் மக்கள் தொகையில் 22 சதவீதம் இருக்கும் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிராக இந்துக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்பட்டன.

    வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த இயக்கத்தில் செய்தி தொடர்பாளராக இருந்த இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த இந்து சாமியார் சின்மோய் கிருஷ்ண தாஸ் மீது வங்கதேச கொடியை அவமதித்து இந்துக்களைப் போராட்டத்துக்குத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது.

     

    டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த நவம்பர் 25ம் தேதி சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டார்.நவம்பர் 26ஆம் தேதி சட்டோகிராம் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தது. இதனை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

     இதற்கிடையில் சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நடந்த வன்முறையில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆஜராக வழக்கறிஞர்கள் சங்கம் தடை விதித்தது.

     

     

    இந்நிலையில் இன்று சின்மோய் தாஸ் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த நிலையில் சின்மோய் தாஸ்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகாத நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மத்தியில் சின்மோய் தாஸ்க்கு உணவு கொண்டுசென்ற ருத்ரப்ரோட்டி கேசப் தாஸ் மற்றும் ரங்கநாத் சியாமா சுந்தர் தாஸ் ஆகிய இரு இஸ்கான் இளம் சாமியார்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழல் நிலவுவதால் இஸ்கான் அமைப்பை சேர்ந்தவர்கள் தங்கள் மத அடையாளங்களை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள வேண்டாம் என்று அவ்வமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

     இதுகுறித்து பேசிய கொல்கத்தா இஸ்கான் செய்தி தொடர்பாளர் ராதாராமன் தாஸ், எங்களின் பக்தர்கள் தாக்கப்படுவது கவலையளிக்கிறது.

    வெளிப்படையாகத் தெரியும் நெற்றித் திலகங்கள் இட்டுக்கொள்ள வேண்டாம், மாலைகள் அணிய வேண்டாம், காவி உடை அணிய வேண்டாம், மத கடமைகளை வீட்டுக்குள்ளேயே அல்லது கோயிலுக்குள்ளேயே வைத்துக்கொள்ளும்படியும் தேவையில்லாத கவனத்தை ஈர்க்க வேண்டாம் எனவும் அவர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

    இதற்கிடையில் இந்திய தொலைக்காட்சி சேனல்களை தடை செய்ய வங்கதேச உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

    • செமிகண்டெக்டர் தொழிற்சாலை வர்த்தகம் அதிகம் பாதிக்கட்டும் அபாயம் உள்ளதால் சீனா தற்போது பதிலடி கொடுத்துள்ளது.
    • காலியம் மற்றும் ஜெர்மானியத்தின் மிகப்பெரிய ஆதாரமாக சீனா உள்ளது

    கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் வரும் ஜனவரி மாதம் 2 வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்கிறார்.

    கடந்த 2016 முதல் 2020 வரையிலான டிரம்பின் ஆட்சிக்காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததைப்போல் அவரது இரண்டாவது பதவிக்காலமும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தான் பதவியேற்றதும் கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.

    இந்நிலையில் டிரம்ப் அறிவிப்பு எதிரொலியாகவும் ஏற்கனவே சீனா மீது அமெரிக்கா செய்யப்படுத்தியுள்ள செமிகண்டக்டர் கட்டுப்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும்  சீனா அமெரிக்கவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.   சீனாவில் செமிகண்டெக்டர் தொழிற்சாலை வர்த்தகம் அதிகம் பாதிப்படடும் சூழலில் டிரம்ப் அறிவிப்பும் சேர்ந்து சீனாவை கோபப்படுத்தி உள்ளது. 

     

    அமெரிக்காவுக்கு சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும், காலியம்[gallium], ஜெர்மானியம்[germanium], ஆண்டிமனி[antimony] மற்றும் பிற முக்கிய உயர் தொழில்நுட்ப பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதாக சீனா நேற்று அறிவித்துள்ளது.

    செமிகண்டெக்டர் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், சீன நிறுவனங்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள், சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு தீங்கிழைக்கும் வகையில் உள்ள அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா கடுமையான எதிர்ப்பை பதவி செய்வதாக நேற்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் பேசியுள்ளார்.

     

    தடைவிதிப்பதாகக் கூறியுள்ள காலியம் மற்றும் ஜெர்மானியத்தின் மிகப்பெரிய ஆதாரமாக சீனா உள்ளது. மொபைல் போன்கள், கார்கள், கணினி பாகங்கள் , சோலார் பேனல்கள் மற்றும் இராணுவ தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்க இவை தேவைப்படுகிறது. பேட்டரிகள் முதல் ஆயுதங்கள் வரை தயாரிப்பதற்கு ஆண்டிமனி பயன்படுகிறது.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 14,000 இந்திய பழங்குடியின பள்ளி மாணவிகளிடையே நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விபரீதத்தில் முடிந்தது
    • விழிப்புணர்ச்சி இல்லாததால் ஆராய்ச்சிக்குப் பழங்குடியினர் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

    ஆய்வுகூடமான இந்தியா

    இந்தியா புதிய விஷயங்களைச் சோதனை செய்வதற்கான ஆய்வுக்கூடம் என உலகப் பணக்காரர் பில் கேட்ஸ் கூறியுள்ள கருத்துக்கு கண்டங்கள் எழுந்துள்ளது. வேலை தேடும் தளமான லிங்க்ட்இன் தளத்தின் இணை நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் உடன் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

    அப்போது பேசிய அவர், இந்தியாவில் கடினமான விஷயங்கள் ஏராளமாக உள்ளன. உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவை மேம்பட்டு வருகின்றன, மேலும் அவை போதுமான அளவு நிலையான வருவாய் உருவாகி வருகிறது.

    இன்னும் 20 வருடங்கள் கழித்து அங்குள்ள மக்கள் வியத்தகு முறையில் முன்னேறி இருப்பார்கள். எனவே இந்தியா [புதிய] விஷயங்களை முயற்சி செய்து பார்க்கும் ஆய்வுக்கூடம் போன்றது. அங்கு நிரூபனம் ஆன பிறகு அவற்றை [திட்டங்களை] இடங்களுக்கு[ நாடுகளுக்கு] எடுத்துச் செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.

     

     

     சோதனை எலிகளான பழங்குடியின மாணவிகள் 

    முன்னதாக பில் கேட்ஸ் தனது மனைவி பெயரில் நடத்தும் தொண்டு நிறுவனமான மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன்14,000 இந்திய பழங்குடியின பள்ளி மாணவிகளிடையே நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விபரீத முடிவுகளைசுட்டிக்காட்டி பலர் பில் கேட்ஸ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இயங்கும் PATH (Programme for Appropriate Technology in Health) என்ற அரசு சாரா நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் [ ICMR] உடன் இணைத்து தெலுங்கானா மற்றும் குஜராத் வதோதரா பகுதிகளில் உள்ள 14,000 பழங்குடியின மாணவிகளுக்குப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்டு அதன் விளைவுகள் பரிசோதிக்கப்பட்டது.

    இந்த சோதனை தொடங்கி சில மாதங்களுக்குப் பிறகு, பல மாணவிகளுக்குக் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டது. 7 பழங்குடியின மாணவிகள் சோதனை தடுப்பூசி விளைவுகளால் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் அவர்களின் இறப்புக்கான காரணம் தொற்று பாதிப்பு, தற்கொலை என வேறு விதமாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    கோப்புப் படம்

     

    விழிப்புணர்ச்சி 

    விசாரணையின்மூலம் ஆராய்ச்சியில் நடந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. சுகாதார முன்னெடுப்பு என கூறி இந்த சோதனைகள் நடத்தப்பட்டது என்றும் சம்மத படிவத்தில் பழங்குடியின மாணவிகளின் பெற்றோருக்குப் பதில் அவர்கள் தங்கிப் படித்து வந்த விடுதி காப்பாளர்கள் கையெழுத்திட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதிக விழிப்புணர்ச்சி இல்லாததால் ஆராய்ச்சிக்குப் பழங்குடியின சிறுமிகள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.  

    ஸ்கின் டாக்டர் 

     2009 தடுப்பூசி சோதனைகள், வெளிநாட்டு நிதியுதவியுடன் நிறுவனங்களால் இந்தியாவும் பிற வளரும் நாடுகளும் எவ்வாறு சோதனைக் களமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு எச்சரிக்கை மணியாக அமைந்தது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 'ஸ்கின் டாக்டர்' என்ற விமர்சகர், நிதியுதவி பெறும் எத்தனை என்ஜிஓக்கள் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இதேபோன்ற சோதனைகளை நடத்துகிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்?

     

    எங்களை வெளிப்படையாகக் கினிப் பன்றிகளாக நடத்தும் அதே வேளையில், எங்கள் ஆட்சியாளர்களை அவர்கள் எவ்வளவு எளிதாக அணுகுகிறார்கள் என்பது கவலை அளிக்கிறது என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    கடந்த மார்ச் மாதம் முகேஷ் அம்பானி மகன் திருமணத்துக்காக இந்தியா வந்த பில் கேட்ஸ் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.

    • இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று நாராயண மூர்த்தி தெரிவித்திருந்தார்.
    • லாப நோக்கத்திற்காக சட்டவிரோத விசா மோசடியில் இன்போசிஸ் நிறுவனம் ஈடுபட்டதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ள்ளது.

    அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறியதாக இன்போசிஸ் நிறுவனத்திற்கு 238 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையை செலுத்துவதாக இன்போசிஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றும் இன்போசிஸ் ஊழியர்களுக்கு H-1B தொழில் விசா பெறுவதற்கு பதில், B-1 பார்வையாளர் விசாக்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளதை அமெரிக்க குடிவரவு அமைப்பான ஐசிஇ கண்டுபிடித்தது.

    H-1B விசா பயன்படுத்தினால் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம், குடிவரவு ஆகியவற்றில் அமெரிக்க சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும். ஆதலால் இன்போசிஸ் நிறுவனம் H-1B விசாவுக்கு பதில் B-1 பார்வையாளர் விசாக்களை பயன்படுத்தி ஊழியர்களை பணியாற்ற வைத்து குறைவான சம்பளம் கொடுத்துள்ளனர் என்பதை அமெரிக்க குடிவரவு அமைப்பான ஐசிஇ-ன் விசாரணையில் தெரிய வந்தது.

    பிரதமர் மோடி வாரத்திற்கு 100 மணிநேரம் பணியாற்றும்போது, அதற்கு ஏற்றபடி நாமும் கடின உழைப்பை செலுத்த வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நாராயண மூர்த்தியின் இன்போசிஸ் நிறுவனமே லாபநோக்கத்திற்காக மோசடியில் ஈடுபட்டு சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இஸ்ரேல் மீது முதன் முதலாக ஹிஸ்புல்லா இந்த ராக்கெட் தாக்குதலை நடத்தி உள்ளது.
    • கிராமங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    பெய்ரூட்:

    பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் தாக்குதலில் இது வரை 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

    ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவத்தினர் லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகளை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் ஹிஸ்புல்லா தலைவர் உள்பட பலர் உயிர் இழந்து விட்டனர்,

    இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் புதன் கிழமை இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இருந்த போதிலும் இரு படையினருக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சில இடங்களில் தாக்குதல் நடந்து வருகிறது. இஸ்ரேல், லெபனான், சிரியா நாடுகளின் எல்லையையொட்டி உள்ள இஸ்ரேல் வடக்கு மவுண்ட் டோஸ் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினர் 2 ராக்கெட்டுகளை வீசினர்.

    இஸ்ரேல் மீது முதன் முதலாக ஹிஸ்புல்லா இந்த ராக்கெட் தாக்குதலை நடத்தி உள்ளது, இந்த 2 ராக்கெட்டுகளும் திறந்த வெளியில் விழுந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள ஹரிஸ், டல்லூசா, ஆகிய கிராமங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இந்த பகுதியில் சரமாரியாக நடத்திய வான்வழித் தாக்குதலில் 11 பேர் உயிர் இழந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. பலர் காயம் அடைந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியதாக ஹிஸ்புல்லா குற்றம்சாட்டி உள்ளது.

    • நண்பர்கள் உதவியுடன் கிட்டார் வடிவமைக்கப்பட்டது.
    • ஒரு உலோக கம்பியை எலும்புக்கூட்டில் முதுகெலும்பு பகுதியுடன் இணைத்து கிட்டார் வடிவமைத்தனர்.

    புளோரிடாவை சேர்ந்த இசைக்கலைஞர் பிரின்ஸ். இவர் யூடியூப்பில் மிட்நைட் பிரண்ட்ஸ் என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவராக திகழ்கிறார். இவரது மாமா பிலிப் கடந்த 1996-ம் ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது எலும்பு கூடு மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. 20 ஆண்டுகளாக ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் கல்வி நோக்கங்களுக்காக எலும்புகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டதால் அந்த எலும்பு கூட்டை திருப்பி அனுப்ப வேண்டியது இருந்தது. இதனால் பிரின்ஸ் தனது மாமா பிலிப்பின் எலும்பு கூட்டை அமெரிக்காவுக்கு கொண்டு சென்றார்.



    பின்னர் அந்த எலும்பை வைத்து ஒரு கிட்டாரை வடிவமைக்க முடிவு செய்தார். அதன்படி நண்பர்கள் உதவியுடன் கிட்டார் வடிவமைக்கப்பட்டது. ஒரு உலோக கம்பியை எலும்புக்கூட்டில் முதுகெலும்பு பகுதியுடன் இணைத்து கிட்டார் வடிவமைத்தனர்.

    இந்த எலும்பு கிட்டார் தனது மாமாவின் இனிய நினைவாக எப்போதும் செயல்படும் என்று பிரின்ஸ் கூறுகிறார். மேலும் அவர் இந்த கிட்டாரை வாசிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

    • மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
    • தடையை மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் மசூதிக்கு அபராதம் விதிக்கப்படும்.

    இஸ்ரேல் நாட்டில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர், காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தடையை மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் மசூதிக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அமைச்சர் இதாமர் பென் க்விர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "மசூதிகளில் இருந்து வரும் சத்தம் இஸ்ரேல் மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. பெரும்பாலான மேற்கத்திய நாடுகளும், சில அரபு நாடுகளும் கூட, ஒலிபெருக்கி சத்தம் தொடர்பான விஷயத்தில் பல சட்டங்களை இயற்றியுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.

    இஸ்ரேல் அரசின் இந்த உத்தரவுக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

    • சுமார் 2.3 டன் அளவிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • இந்த விவகாரத்தில் 2 சிறுவர்கள் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து கடற்கரையில் பழுதடைந்த படகு ஒன்றில் இருந்து 2.3 டன் அளவிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த விவகாரத்தில் 2 சிறுவர்கள் உட்பட 13 பேரை கைது செய்துள்ள போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு இந்திய ரூபாயில் 4,157 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    • மாகாண அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
    • பல நாட்களாக நீடித்த சண்டை முடிவுக்கு வந்தது.

    பெஷாவர்:

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினர் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த மாதம் 21-ந் தேதி குர்ரம் மாவட்டத்தில் ஒரு பிரிவினர் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 57 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் 130 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    மாகாண அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 7 நாள் சண்டை நிறுத்தம், 10 நாள் சண்டை நிறுத்தம், சமாதான பேச்சுவார்த்தை என அவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் மீண்டும் மீண்டும் வன்முறை சம்பங்கள் அரங்கேறின. எனினும் தொடர்ந்து சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    அதிகாரிகளின் தொடர் முயற்சிகளுக்கு பிறகு இரண்டு பழங்குடியின சமூகத்தினரிடையே நேற்று சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பல நாட்களாக நீடித்த சண்டை முடிவுக்கு வந்தது. குர்ரம் மாவட்டத்தில் மோதல் ஏற்பட்ட பகுதிகள் முழுவதும் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை துணை ஆணையர் ஜாவேதுல்லா மெஹ்சூத் தெரிவித்தார்.

    மோதல் நடைபெற்ற பகுதிகளில் சாலைகளை மீண்டும் திறப்பது மற்றும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக பழங்குடியின தலைவர்களின் கவுன்சிலான ஜிர்கா பேச்சுவார்த்தை நடத்தும். ஆயுதமேந்திய பழங்குடியினர் துப்பாக்கிச் சூடு நடத்திய பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டு, காவல்துறை மற்றும் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் துணை ஆணையர் மெஹ்சூத் தெரிவித்தார்.

    • ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் 7 பெரிய திட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் 100 பில்லியன் டாக்கா செலவிடப்பட்டுள்ளது.
    • இந்த 7 திட்டங்களின் ஆரம்ப செலவு 1.14 டிரில்லியன் டாக்கா என மதிப்பிடப்பட்டது.

    வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது நடைபெற்ற கொலைக்கு ஷேக் ஹசீனாதான் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் பொருளாதார நிபுணர் தேபப்ரியா பட்டாச்சார்யா தலைமையிலான குழு வங்கதேச பொருளாதாரத்தின் வெள்ளை அறிக்கையை முகமது யூனுஸ் அவர்களிடம் வழங்கியுள்ளனர்.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 16 பில்லியன் அமெரிக்க டாலர் சட்டவிரோதமாக வெளியேறியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த அறிக்கையில், "வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி காலத்தில் 29 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அதில் குறிப்பாக 7 பெரிய திட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் 100 பில்லியன் டாக்கா ($836 மில்லியன்) செலவிடப்பட்டுள்ளது.

    இந்த 7 திட்டங்களின் ஆரம்ப செலவு 1.14 டிரில்லியன் டாக்கா என மதிப்பிடப்பட்டது. பின்னர் ஹசீனாவின் அரசாங்கம் இந்த திட்டங்களின் செலவுகளை 1.95 டிரில்லியன் டாக்காவாக அதிகபடுத்தியது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொது மன்னிப்பு மூலம் குற்ற வழக்குகளில் சிக்கிய நபரின் சிறை தண்டனையை ரத்து செய்ய முடியும்.
    • என் மகன் மீதான விசாரணை நியாயமற்ற முறையில் நடந்த போதும் நான் என் வார்த்தையைக் காப்பாற்றினேன்

    நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்த அமரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜோ பைடன் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்து முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார். அடுத்த ஜனவரியுடன் ஜோ பைடன் பதவிக்காலம் முடிவடைகிறது.

    பதவியேற்கும் முன்பே டிரம்ப் முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறார். இதற்கிடையே பதவியில் இருந்து வெளியேறும் ஜோ பைடனும் கடைசியாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி முக்கிய முடிவுகளை செயல்படுத்தி வருகிறார்.

    ரஷியா மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கி ஜோ பைடன் திடீர் அதிரடி காட்டினார். இந்நிலையில் கிரிமினல் வழக்கில் சிக்கியுள்ள தனது மகன் ஹண்டர் பைடனுக்கு ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

     

    ஜோ பைடனின் மூத்த மகனான ஹண்டர் பைடன் [54 வயது] சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்த வழக்கிலும், பத்து ஆண்டுகளில் சுமார் 1.4 மில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பு செய்த வழக்கிலும் சிக்கியுள்ளார். இதற்கிடையே தனது போதைப் பழக்கத்தில் இருந்தும் அவர் மீண்டு வருகிறார்.

    அமெரிக்காவில் அதிபராக இருக்கும் ஒருவர் பொது மன்னிப்பு மூலம் குற்ற வழக்குகளில் சிக்கிய நபரின் சிறை தண்டனையை ரத்து செய்ய முடியும். ஆனால் தனது மகனுக்கு அவ்வாறு மன்னிப்பு வழங்கமாட்டேன் என ஜோ பைடன் கூறி வந்த நிலையில் தற்போது அதற்கு மாறாக ஹண்டர் பைடனுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

     

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இன்று, என் மகன் ஹண்டருக்கு பொது மன்னிப்பு வழங்கி கையெழுத்திட்டேன். நான் பதவியேற்ற போது நீதித்துறையின் முடிவுகளில் தலையிட மாட்டேன் என்று கூறியிருந்தேன், அதை இதுநாள் வரை காப்பாற்றி வந்துள்ளேன்.

    என் மகன் மீதான விசாரணை நியாயமற்ற முறையில் நடந்த போதும் நான் என் வார்த்தையைக் காப்பாற்றினேன். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மகன் என்ற ஒரே காரணத்தால் ஹண்டர் மீது விசாரணை நடந்துள்ளது. என் மகனை வைத்து எனது செயல்பாடுகளை நிறுத்த முயற்சி நடந்தது. எனவே தற்போது மன்னிப்பு வழங்கியுள்ளேன் என்று பைடன் குறிப்பிட்டுள்ளார். 

     தனது மகன் சிறைக்குச் செல்வதிலிருந்து ஜோ பைடன் காப்பாற்றி உள்ள நிலையில் அடுத்து அதிபராகப்போகும் டிரம்ப் இதை விமர்சித்துள்ளார். நீதித்துறையே கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

     

    மேலும் ஹண்டருக்கு பொது மன்னிப்பு வழங்கியதுபோல் 2021 இல் டிரம்ப் ஆட்சியை இழந்தபோது வெள்ளை மாளிகை பகுதியில் போராட்டம் நடத்தி தற்போது சிறையில் இருக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் சேர்த்து பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    டிரம்ப் பாலியல் குற்றச்சாட்டு உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில் பதவியேற்றதும் தனக்குத் தானே பொது மன்னிப்பு வழங்கிக்கொள்வார் என்ற கருத்தும் நிலவுவது குறிப்பிடத்தக்கது.  

    ×