என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஆர் நாரயணமூர்த்தி"

    • கடின உழைப்புக்கு மாற்று, வேறு எதுவும் கிடையாது.
    • வாரத்தில் 6 நாட்கள் பணி நாள் என இருந்ததை 5 நாட்களாக மாற்றப்பட்டது எனக்கு ஏமாற்றத்தை தந்தது.

    இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் நாராயணமூர்த்தி. இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர். இவரது மனைவி சுதா மூர்த்தி. இவரும் சமூக சேவைகள் மூலம் மக்கள் பணியாற்றி வருகிறார்.

    இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து நாராயணமூர்த்தி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வருகிறார். மேலும் தொலைக்காட்சிகளில் நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார்.

    அப்போது அவர் கூறும் சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் கடந்த ஆண்டு நாராயண மூர்த்தி கூறிய கருத்து பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, ‛இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்'' என கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளப்பியது. இது பெரிய அளவில் விவாதமாக மாறியது.

    இந்நிலையில் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் நாராயணமூர்த்தி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில், வேலை-வாழ்க்கை சமநிலை என்ற விஷயத்தில் (Work-life balance) எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. கடின உழைப்புக்கு மாற்று, வேறு எதுவும் கிடையாது.

    இந்தியாவில் வாரத்தில் 6 நாட்கள் பணி நாள் என இருந்ததை 1986-ல் 5 நாட்களாக மாற்றப்பட்டது எனக்கு ஏமாற்றத்தை தந்தது. பிரதமர் மோடி வாரத்திற்கு 100 மணிநேரம் பணியாற்றும்போது, அதற்கு ஏற்றபடி நாமும் கடின உழைப்பை செலுத்துவதுதான் அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதையாக இருக்கும் என கூறியுள்ளார்.

    நாராயணமூர்த்தி தம்பதியின் மகள் அக்சதா மூர்த்தியின் கணவரான ரிஷி சுனக் முன்னாள் பிரிட்டன் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று நாராயண மூர்த்தி தெரிவித்திருந்தார்.
    • லாப நோக்கத்திற்காக சட்டவிரோத விசா மோசடியில் இன்போசிஸ் நிறுவனம் ஈடுபட்டதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ள்ளது.

    அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறியதாக இன்போசிஸ் நிறுவனத்திற்கு 238 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையை செலுத்துவதாக இன்போசிஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றும் இன்போசிஸ் ஊழியர்களுக்கு H-1B தொழில் விசா பெறுவதற்கு பதில், B-1 பார்வையாளர் விசாக்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளதை அமெரிக்க குடிவரவு அமைப்பான ஐசிஇ கண்டுபிடித்தது.

    H-1B விசா பயன்படுத்தினால் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம், குடிவரவு ஆகியவற்றில் அமெரிக்க சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும். ஆதலால் இன்போசிஸ் நிறுவனம் H-1B விசாவுக்கு பதில் B-1 பார்வையாளர் விசாக்களை பயன்படுத்தி ஊழியர்களை பணியாற்ற வைத்து குறைவான சம்பளம் கொடுத்துள்ளனர் என்பதை அமெரிக்க குடிவரவு அமைப்பான ஐசிஇ-ன் விசாரணையில் தெரிய வந்தது.

    பிரதமர் மோடி வாரத்திற்கு 100 மணிநேரம் பணியாற்றும்போது, அதற்கு ஏற்றபடி நாமும் கடின உழைப்பை செலுத்த வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நாராயண மூர்த்தியின் இன்போசிஸ் நிறுவனமே லாபநோக்கத்திற்காக மோசடியில் ஈடுபட்டு சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×