என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் கிளம்பினார்.
    • திருவாரூரில் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.

    இன்று பிற்பகல் தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் கிளப்பிய விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    இந்நிலையில், திருவாரூரில் விஜய் பரப்புரை செய்யவுள்ள பகுதியில் கோவில் கோபுரத்தின் மீது தவெகவினர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தவெகவிரை கோயில் கோபுரத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

    • வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா.
    • குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால்.., என விஜய் பேச்சு.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது " CM சார் மனசை தொட்டு சொல்லுங்க.. வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா.. * குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் குறித்து விமர்சனம் செய்திருந்தார்.

    வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா என த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சரை பார்த்து விமர்சனம் செய்துள்ளாரா? என தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டி.ஆர்.பி. ராஜா "கண்டது கழியது பற்றி கேள்வி கேட்கிறீர்கள். ஆரோக்கியமான கேள்விகளை கேளுங்கள்" என பதில் அளித்தார்.

    ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியான படம் லப்பர் பந்து.

    தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியான படம் லப்பர் பந்து. இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி அதிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இன்றுடன் லப்பர் பந்து திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதனை நினைவூட்டும் வகையிலும் மக்களுக்கு நன்றி சொல்லும் விதத்திலும் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    அதில் "நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா?? போனா Ad ஆக முடியுமா??Ad ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா??பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ok பண்ண முடியுமா?? நடிகர்கள் ஓகே பண்ண கதைய சரியா படமா எடுக்க முடியுமா?? எடுத்த படத்த என்னையும் எடிட்டரையும் தவிர மத்தவங்களால முழுசா பார்க்க முடியுமா?? இப்டி இன்னும் வெளிய சொல்ல முடியாத நிறைய Insecurities and முடியுமாக்களோட மொத்த உருவமா நான் இருந்தபோது தான் போன வருஷம் இதே செப்டம்பர் 20 லப்பர் பந்து ரிலீஸ் ஆச்சு!

    first show முடிஞ்ச இந்த நாள் தான் என்னோட எல்லா கேள்விகளுக்கும் நீங்க ஒரே பதிலா சொன்னீங்க..

    இங்க முடியாதுன்னு ஒன்னும் இல்ல,எல்லாமே எல்லோரலையும் முடியும்.. மூடிட்டு போய் அடுத்த பட வேலைய பாருன்னு…

    ரொம்ப நன்றி நீங்க குடுத்த அன்புக்கும் மரியாதைக்கும் ?❤️❤️

    இப்டி என்ன motivate பண்ண இந்த நாளுல ஊருக்கே தெரிஞ்ச அந்த update-அ நானும் சொன்னாதான் உங்களுக்கும் அந்த நாளுக்கும் நான் பண்ற நன்றியா இருக்கும்! ஆமாங்க என்னோட அடுத்த படம் தனுஷ் சார் கூட தான் பண்றேன்..

    தனுஷ் சார் ரொம்ப நன்றி கத சொல்லும்போது என் பதட்டத்த பொறுத்துக்கிட்டதுக்கு … நடிப்பு அசுரனுக்கு action, cut சொல்ல காத்திருக்கிறேன்"

    • ரூ.20க்கு 6 பானிபூரி தருவதாக கூறிய கடைக்காரர் கூறியுள்ளார்.
    • கோபமடைந்த பெண் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    குஜராத் மாநிலம் சுர்சாகர் லேக் பகுதியில் சாலையோர பானிபூரி கடை ஒன்றில் பெண் ஒருவர் பானிபூரி சாப்பிட்டுள்ளார்.

    அப்போது ரூ.20க்கு 6 பானிபூரி தருவதாக கூறிய கடைக்காரர் 4 பானிபூரி மட்டுமே கொடுத்ததால் அப்பெண் அதிருப்தி அடைந்துள்ளார்.

    பானிபூரி கொடுக்காததால் கோபமடைந்த பெண் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அப்பெண்ணை அப்புறப்படுத்தினர்.

    • இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
    • நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் திரும்பியுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.

    இன்று பிற்பகல் தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் திரும்பியுள்ளார்.

    இந்நிலையில், திருவாரூக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் அளித்தனர். மேலும், கிரேன் மூலம் விஜய்க்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் அளித்த மாலை மரியாதையை விஜய் ஏற்றுக்கொண்டார்.

    • ஆமாம். நிச்சயமாக. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
    • நேட்டோ ஒப்பந்தத்தின் 5ஆவது பிரிவில், கூட்டு பாதுகாப்பு எனக் குறிப்படப்பட்டுள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையில் மோதல் நீடித்த வந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இருநாடுளுக்கு இடையில் சண்டை ஏற்பட்டது. 3 நாட்கள் நீடித்த இந்த சண்டை, இருநாடுகள் இடையிலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. இருந்தாலும் இருநாடுகளுக்கு இடையிலான விரிசல் அப்படியே நீடிக்கிறது.

    இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் பாகிஸ்தான்- சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் முக்கியம்சம் என்னவென்றால், ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், அது மற்றொரு நாட்டின் மீதான தாக்குதலாக கருதப்படும். இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், சவுதி அரேபியா பாகிஸ்தான் பாதுகாக்க வரும். இது இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. ஏனென்றால், இந்தியா- சவுதி அரேபியா இடையே நல்ல நட்புறவு உள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃபிடம், இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் சவுதி அரேபியா தலையிடுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியதாவது:-

    ஆமாம். நிச்சயமாக. இதில் எந்த சந்தேகமும் இல்லை. நேட்டோ ஒப்பந்தத்தின் 5ஆவது பிரிவில், கூட்டு பாதுகாப்பு எனக் குறிப்படப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் உள்ள ஒரு நாட்டுக்கு எதிராக தாக்கதல் நடத்தப்பட்டால், அனைத்து நாட்டிற்கும் எதிராக தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படும் என்பதுதான் இதன் முக்கிய அர்த்தம். இதேபோன்ற ஒபந்தந்தம்தான் இரு நாடுகளுக்கு இடையில் போடப்பட்டுள்ளது.

    சவுதி அரேபியா உடனான ஒப்பந்தம், தாக்குதல் ஏற்பாடு என்பதை விட, பாதுகாப்பு ஏற்பாடு என்பதுதான். பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியா ஆகியவற்றிற்கு எதிராக ஏதேனும் ஆக்கிரமிப்பு (தாக்குதல்) இருந்தால் அதை நாங்கள் ஒன்றாக எதிர்ப்போம்.

    எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் இந்த ஒப்பந்தத்தை பயன்படுத்துவது எங்களது நோக்கம் அல்ல. ஆனால், மிரட்டில் ஏற்பட்டால், அதன்பின் செயல்பாட்டிற்கு ஏற்பாடு நடைபெறும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் எங்களுடைய திறன்கள் முற்றிலுமாக கிடைக்கும்.

    இவ்வாறு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.

    • ரெயில் நிலையங்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலையை அதிரடியாக குறைத்து இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.
    • 22.09.2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

    ரெயில் பயணங்களின் போது மக்களின் வசதிக்காக ரெயில் நிலையங்களிலும் ரெயில்களிலும் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதில், ரெயில் நீர் பாட்டில் விலை ஒரு லிட்டருக்கு ரூ.15-க்கும் அரை லிட்டர் (500 ml) ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலையை ரூ.1 குறைத்து இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ரெயில் நிலையங்களில் விற்கும் ரெயில் நீர் பாட்டில் மற்றும் மற்ற தண்ணீர் பாட்டில்கள் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ.15-ல் இருந்து ஒரு ரூபாய் குறைந்து ரூ. 14 -க்கும் அரை லிட்டர் (500 ml) பாட்டில் விலை ரூ.10-ல் இருந்து ரூ.9-க்கும் விற்கப்பட உள்ளது.

    மேலும் தண்ணீர் பாட்டில் விலையும் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ.15-ல் இருந்து ஒரு ரூபாய் குறைந்து ரூ. 14 -க்கும் அரை லிட்டர் பாட்டில் விலை ரூ.10-ல் இருந்து ரூ.9-க்கும் விற்கப்பட உள்ளது.

    இது வரும் 22.09.2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • ஜெர்மனி தொழிலதிபர்கள் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
    • முதலீட்டாளர்கள் ஆர்வத்தை அடுத்தக்கட்டம் எடுத்து செல்ல வேண்டும்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐரோப்பிய பயணமும்- ஆக்ஸ்போர்டு நினைகளும் என்ற தலைப்பில் எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில்," தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜெர்மனி தொழிலதிபர்கள் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.

    முதலீட்டாளர்கள் ஆர்வத்தை அடுத்தக்கட்டம் எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகவே தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்துகிறோம்" என்றார்.

    கல்கி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

    கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

    கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டாம் பாகத்தை நோக்கி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாகம் கமல்ஹாசனின் யாஸ்கின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் படக்குழு கல்கி இரண்டாம் பாகத்திலிருந்து நடிகை தீபிகா படுகோனை நீக்கினர். இது பெரும் பேசும் பொருளாக மாறியது. ஆனால் இதற்கான காரணத்தை படக்குழு வெளியிடவில்லை.

    இன்று தீபிகா, ஷாருக்கான் நடிக்கும் கிங் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார்.

    தீபிகா இன்று அவரது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் 18 ஆண்டுகளுக்கு முன் 'ஒம் ஷாந்தி ஓம்' படப்பிடிப்பின் போது கற்றுக் கொண்ட முக்கியமான பாடத்தை பகிர்ந்துள்ளார்.

    " ஷாருக்கான் உடன் நடித்த முதல் படமான ஓம் ஷாந்தி ஓம் படத்தின் நேரத்தில் எனக்கு அவர் கற்றுக் கொடுத்த முதல் பாடம், ஒரு படத்தை எடுக்கும் அனுபவமும், அதில் பணிபுரியும் மக்களும், அதன் வெற்றியை விட அதிகம் முக்கியம் என்பதே. அதன் பின்னர் எடுத்த ஒவ்வொரு முடிவிலும் நான் அந்தக் கற்றலைப் பின்பற்றி வருகிறேன்," என தீபிகா கூறினார்.

    இந்த பதில் சமீபத்தில் அவர் நடிக்க இருந்த கல்கி திரைப்படத்தில் இருந்து விலகியதன் காரணமாக ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    • யதார்த்த நிலையை முற்றிலுமாக அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை நாங்கள் வெளிப்படுத்த இருக்கிறோம்.
    • வாக்கு திருட்டு என நாங்கள் சொல்வதற்கான துல்லியமான, தெளிவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

    வாக்கு திருட்டு தொடர்பாக ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்த இருக்கிறோம் என ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்திருந்தார். கடந்த வாரம் கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்பதை வீடியோ மூலம் வெளியிட்டிருந்தார். முறையாக (systematic) வாக்கு திருட்டில் பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

    இந்த நிலையில், வாக்கு திருட்டு புகாரில் ஆதாரங்கள் உள்ளது. யதார்த்த நிலையை முற்றிலும் அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்த போகிறோம் என்று இன்றும் உறுதியாக வெளிப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி இன்று கூறியதாவது:-

    யதார்த்த நிலையை முற்றிலுமாக அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை நாங்கள் வெளிப்படுத்த இருக்கிறோம். வாக்கு திருட்டு என நாங்கள் சொல்வதற்கான துல்லியமான, தெளிவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. ஆதாரங்கள் இல்லாமல் நான் எதையும் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. நடந்த விசயங்களில் 100 சதவீதம் வெளிவரப் போகின்றன.

    ஹைட்ரஜன் குண்டு குறிப்பாக பிரதமர் மோடிக்கான வாரணாசிக்கு பொருந்துமா? என ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இந்த கேள்வியை ராகுல் காந்தி புறந்தள்ளினார். அது உங்களுடைய யூகம். நான் என்னுடைய வேலையை செய்வேன்.

    மகாதேவ்புரா மற்றும் அலந்து தொகுதியில் நடைபெற்றதை நாங்கள் காண்பித்தோம். நரேந்திர மோடி வாக்கு திருட்டு செய்து தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதை இந்தியாவில் யாரும் சந்தேகிக்காத வகையில் நாங்கள் வெளிக்காட்டப் போகிறோம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இந்த மாதம் முதல்வாரத்தில் "அரசியலமைப்பை அவர்கள் (பாஜக) கொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனால்தான் நாங்கள் பேரணி மேற்கொண்டோம். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மக்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்கு திருட்டு, நாற்காலியில் இருந்து விலகு (ote chor, gaddi chhor) என்ற முழக்கத்தை வெளிப்படுத்தினர்.

    வாக்கு திருட்டு முழக்கம் எல்லா இடத்திலும் எதிரொலிக்கிறது. நான் பாஜக மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அணுகுண்டை விட பெரியதை பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா?. அது ஹைட்ரஜன் குண்டு. பாஜகவினரே, ஹைட்ரஜன் குண்டு வந்து கொண்டிருக்கிறது. தயாராக இருங்கள். நான் உத்தரவாதம் அளிக்கிறேன். ஹைட்ரஜன் குண்டுக்குப் பிறகு நரேந்திர மோடி தனது முகத்தைக் காட்ட முடியாது" எனக் கூறியிருந்தார்.

    • லஷ்கர்-இ-தொய்பா உள்பட 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
    • பாகிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இத்தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் நடத்தியது.

    இதற்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்திய போர் விமானங்கள் ஊடுருவி தாக்கியது.

    பஹாவல்பூர், முரிட்கே, முசாபராபாத் மற்றும் பல இடங்களில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா உள்பட 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலில் தங்களது முகாம்கள் அழிக்கப்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க பயங்கரவாதிகள் ஒப்புக்கொண்டனர்.

    இந்தநிலையில் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை எதிரொலியால் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்களான ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவை பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தங்களது முகாம்களை வேறு இடத்துக்கு மாற்ற தொடங்கி உள்ளன. இதை இந்திய ராணுவ வட்டாரங்கள் கண்டறிந்து உள்ளது.

    பயங்கரவாதிகள் தங்களது முகாம்களை ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியத் தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடியதாக பயங்கரவாதிகள் கருதுகிறார்கள்.

    இதையடுத்து இந்திய எல்லையில் இருந்து அதிக தூரத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாத முகாம்களை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பயங்கரவாதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஓட்டம் பிடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • H-1B விசா பெற ஆண்டுதோறும் ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவு
    • இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "பிரதமர் மோடிக்கு பிறந்தநாளுக்கு டிரம்ப் அழைத்து வாழ்த்து கூறிய பிறகு 'ஆப்கி பார், டிரம்ப் சர்க்கார்' அரசாங்கத்திடமிருந்து நீங்கள் பெற்ற பரிசுகளைப் பார்த்து இந்தியர்கள் வேதனைப்படுகிறார்கள்

    * H-1B விசாக்களுக்கு ஆண்டு கட்டணம் $100,000 (ரூ.88 லட்சம்) ஆக உயர்த்தப்பட்டது இந்திய தொழில்நுட்ப ஊழியர்களை கடுமையாக பாதிக்கும். H-1B விசா வைத்திருப்பவர்களில் 70% பேர் இந்தியர்கள்.

    * ஏற்கனவே இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இதனால் 10 துறைகளில் மட்டும் இந்தியாவிற்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    * இந்திய அவுட்சோர்சிங்கை இலக்காகக் கொண்ட HIRE சட்டம்.

    * சபாஹர் துறைமுக விலக்கு நீக்கப்பட்டது, நமது மூலோபாய நலன்களுக்கு இழப்பு.

    * இந்திய பொருட்களுக்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

    * டிரம்ப் சமீபத்தில் மீண்டும் (பதினொரு முறை!) தனது தலையீட்டால் தான் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் கூறுகிறார்.

    இந்தியாவின் தேசிய நலன்கள் மிக உயர்ந்தவை. கட்டி அணைப்பது, வெற்று முழக்கங்கள் இடுவது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் மக்களை "மோடி, மோடி" என்று கோஷமிட வைப்பது என்பது வெளியுறவுக் கொள்கை அல்ல!

    வெளியுறவுக் கொள்கை என்பது நமது தேசிய நலன்களைப் பாதுகாப்பது; இந்தியாவை முதன்மையாக வைத்திருப்பது மற்றும் ஞானத்துடனும் சமநிலையுடனும் நட்பு நாடுகளை வழிநடத்துவது பற்றியது" என்று தெரிவித்துள்ளார். 

    ×