என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்திருந்தார்.
- வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறை பாலியல் வன்கொடுமையை விசாரிக்க அதிகாரம் உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யமுடியாது எனக்கூறி சீமான் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது
இவ்வழக்கின் விசாரணையில் வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறை பாலியல் வன்கொடுமையை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து இவ்வழக்கு விசாரணையை 12 வாரத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
- பீகாரில் உள்ள ரெயில் நிலையங்களில் பிரயாக்ராஜ் செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
- கூட்டத்தை கட்டுப்படுத்த செல்லத்தக்க டிக்கெட் இல்லாதவர்கள் நுழைய தடைவித்துள்ளது ரெயில்வே நிர்வாகம்.
மகா கும்பமேளா விழா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வருகிறது. 45 நாள் திருவிழாவான இந்த கும்பமேளா வருகிற 26-ந்தேதி சிவராத்தியுடன் முடிவடைகிறது.
கும்பமேளா தொடங்கியதில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் புனித நீராடி வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக உ.பி. அரசு தெரிவித்திருந்தது.
இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பிரயாக்ராஜ் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் பிரயாக்ராஜ் நகருக்கு வர முடியாமல் பல கி.மீ. தொலைவிற்கு அப்பால் மக்கள் வாகனங்களில் தவித்து வருகின்றனர்.
மேலும் பிரயாக்ராஜ் செல்லும் ரெயில்களில் ஏறுவதற்காக பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பீகாரில் உள்ள ரெயில் நிலையத்தில் பிரயாக்ராஜ் செல்லும் ரெயிலில் கூட்டம் அலைமோதியதால் இடம் கிடைக்காதவர்கள் ஆத்திரத்தில் ஏ.சி. பெட்டி மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
சனிக்கிழமை இரவு டெல்லியில் பிரயாக்ராஜ் செல்லும் சிறப்பு ரெயிலுக்காக பக்தர்கள் காத்திருந்த நேரத்தில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கிழக்க மத்திய ரெயில்வே (ECR) பீகார் மாநிலத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் செல்லத்தக்க டிக்கெட் இல்லாத பயணிகள் ரெயில் நிலையத்திற்கு நுழைய தடைவிதித்துள்ளது.
கிழக்கு மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு தலைமை அதிகாரி சரஸ்வதி சந்த்ரா இது தொடர்பாக கூறுகையில் " கிழக்கு மத்திய ரெயில்வேயின் அதிகார வரம்பிற்குட்பட்ட ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை முறையாக நிர்வகிப்பதை உறுதி செய்வதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மகா கும்பமேளாவிற்கு மக்கள் சுமூகமாக பயணம் மேற்கொள்வதை உறுதி செய்ய ரெயில்வே உறுதிப்பூண்டுள்ளது. பீனார் மாநிலத்தில் உள்ள ரெயில் நிலையங்கள் நுலைவு வாயில் செல்லத்தக்க டிக்கெட் இல்லாமல் நுழைய தடைவிதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், டிக்கெட் இல்லாத பயணிகளை தடை செய்ய உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காவல்துறையின் உதவியை ரெயில்வே கேட்டுள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை தடுக்க கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திடீரென கூடும் கூட்டத்தை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் ஊழியர்கள் குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
பாட்னா, தனாபூர், ஆரா, கயா, சாசராம், முசாபர்பூர், சிதாமர்ஹி, தர்பங்கா உள்ளிட்ட பீகார் மாநிலங்களில் உள்ள ரெயில் நிலையங்களக்கு இதுவரை இல்லாத அளவிற்கு பிரயாக்ராஜ் செல்ல பயணிகள் வருகை தருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- உள்துறை அமைச்சகத்தின் அனைத்து கோப்புகளும் இந்தியில் மாற்றப்பட்டுள்ளது என்று அமித்ஷா கூறினார்.
- மொழி திணிப்பு நடந்தால் அதை ஒரு போதும் ஏற்கமாட்டோம் என்று ஒன்றிய அரசு உணர்ந்து கொள்ளவேண்டும்.
மும்மொழிக் கொள்கை திணிப்பு குறித்து தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
இதையெல்லாம் இந்தி திணிப்பு அல்ல என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்வாரா?
ஒன்றிய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தி மொழியே கட்டாய பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசுப் பணிகளுக்கு இந்தியைக் கட்டாயமாக்குவது உட்பட 112 பரிந்துரைகளை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்றத்தின் அலுவல் மொழிக்குழு குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது.
இந்தியாவிலேயே முதன்முறையாக மத்தியபிரதேச மாநிலத்தில் எம்பிபிஎஸ் பாடங்கள் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அந்த புத்தகங்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டது. மேலும் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்ப பாடங்களையும் இந்தி மொழியாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் அனைத்து கோப்புகளும் இந்தியில் மாற்றப்பட்டுள்ளது என்று அமித்ஷா கூறினார்.
அதாவது ஆங்கிலம் இருக்கும் இடத்தில் இனிமேல் இந்தி இருக்க வேண்டும். அதுதான் பாஜகவினரின் விருப்பம். உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல ஒன்றிய அரசுக்கான போட்டித்தேர்வுகள் அத்தனையிலும் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியே பிரதானமாக இருக்க வேண்டும் என்பது மறைமுகமாக ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள பிறமொழி பேசும் மாநிலங்களில் இந்தியை திணிக்கும் முயற்சியின் உச்சகட்டம்.
மேலும், ஒன்றிய அரசு அதிகாரிகள் இந்தியை பயன்படுத்தாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அமித்ஷா தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது இந்தி மொழி ஆதிக்கத்தின் பேராவல் தானே தவிர வேறு என்ன சொல்வது?.
யார் மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்பதை ஒன்றிய அமைச்சர் உணர்ந்து பேச வேண்டும். எந்த மொழியை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் மொழி திணிப்பு நடந்தால் அதை ஒரு போதும் ஏற்கமாட்டோம் என்று ஒன்றிய அரசு உணர்ந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அமெரிக்காவில் வசிக்கும் தனது சகோதரர் பரத்துக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு சேத்தன் போன் செய்தார்.
- சேத்தன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பும் வேலை செய்துவந்தார்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (திங்கள்கிழமை) காலை மைசூருவில் விஸ்வேஸ்வரய்யா நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
போலீசாரின் கூற்றுப்படி, இறந்தவர்கள் சேத்தன் (45), அவரது மனைவி ரூபாலி (43), அவர்களது 15 வயது மகன் மற்றும் சேதனின் தாயார் பிரியம்வதா (62) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சேத்தன் முதலில் மூவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு, பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறுகின்றனர்.
சேத்தனின் தாயார் பிரியம்வதா குடியிருப்பின் ஒரு வீட்டில் இறந்து கிடந்தனர். அதில் அவர் தனியாக வசித்து வந்தார். மற்ற மூவரும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் வசித்து வந்த மற்றொரு வீட்டில் இறந்து கிடந்தனர்.
அமெரிக்காவில் வசிக்கும் தனது சகோதரர் பரத்துக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு சேத்தன் போன் செய்து, தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்யபோவதாக கூறியுள்ளார். பரத் உடனடியாக ரூபாலியின் பெற்றோரை அழைத்து சேத்தனின் வீட்க்கு சென்று பார்க்க சொல்லியுள்ளார்.
ஆனால் ரூபாலியின் பெற்றோர் அங்கு சென்றபோது ஏற்கனவே அவர்கள் உயிரிழந்து கிடந்தனர். காலை 6 மணி அளவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வித்யாரண்யபுரம் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சேத்தன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பும் வேலை செய்துவந்ததாகவும் நிதி நெருக்கடி காரணமாக அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட கடித்தத்தில் சேதன் எழுதியதாவது, எனது மரணத்திற்காக எனது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை காவல்துறை துன்புறுத்தக்கூடாது. இதற்கு நானே பொறுப்பு.
- சட்டென சாலையை குறுக்கிட்ட நாயால் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் நூலிழையில் உயிர் தப்பினர்.
- விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கலைஞர் நகரில் சட்டென சாலையை குறுக்கிட்ட நாயால் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் நூலிழையில் உயிர் தப்பினர்.
சாலையின் குறுக்கே நாய்கள் ஓடியதால் பைக், கார், லாரி என அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னல் அமர்ந்து வந்த பெண் நிலைதடுமாறி கீழ விழுந்தார். இதை கவனித்த கார் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தினார். அதற்கு பின்னல் வேகமாக லாரி கார்மீது மொத, கார் பைக் மீது மோதியது. இதனால் பைக்கை ஓட்டி வந்த நபர் தடுமாறி கீழே விழுந்தார்.
நல்வாய்ப்பாக பைக்கில் வந்த இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது தொடர்பான சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாளை போராட்டம் நடைபெறும்.
- தமிழ்நாட்டில் மத்திய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே இல்லை.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மருத்துவர் அணி செயலாளர் எழிலன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு திணிக்க முயலும் மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை திணிக்க முயற்சிக்கிறது.
மாநில அரசின் சுயமரியாதையை மத்திய அரசு கொச்சைப்படுத்துகிறது.
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாளை போராட்டம் நடைபெறும்.
தமிழ்நாட்டில் மத்திய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே இல்லை.
ஒற்றை ஆட்சி முறையை திணிக்கும் முயற்சியாகவே தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப்படுகிறது.
பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான எந்த திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. தமிழ்நாட்டுக்கான புயல் பாதிப்பு நிதியைக் கூட மத்திய அரசு விடுவிக்க மறுக்கிறது.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும். கல்வித்துறையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏஜென்ட் ரூ.40 லட்சம் கேட்டார். அதை இரண்டு தவணைகளில் செலுத்தினேன்.
- இங்கே அதிகமாக கேள்வி கேட்டால் சுடப்படலாம் என சக பயணிகள் எங்களிடம் சொன்னார்கள்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் முதற்கட்டமாக 104 இந்தியர்கள் இந்த மாத முதல் வாரத்திலும், 116 இந்தியர்கள் நேற்று முன் தினமும் அமெரிக்கப் போர் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். மூன்றாம் கட்டமாக 112 பேருடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம் நேற்று இரவு 10 மணிக்கு அமிர்தசரஸ் வந்து சேர்ந்தது.

இரண்டாவதாக இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட 116 பேரில் 38 வயதான மன்தீப் சிங் ஒருவர். அவர் தனது ஆபத்தான அமெரிக்க டாங்கி ரூட் பயணம் குறித்து செய்தியாளர்களிடம் இப்படி விவரிக்கிறார்.
"நான் என் ஏஜென்ட்டுடன் பேசியபோது, ஒரு மாதத்திற்குள் என்னை சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்வேன் என்று அவர் கூறினார். ஏஜென்ட் ரூ.40 லட்சம் கேட்டார். அதை இரண்டு தவணைகளில் செலுத்தினேன். கடந்த ஆகஸ்ட் மாதம் அமிர்தசரஸிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணம் தொடங்கியது.
டெல்லியில் இருந்து, நான் மும்பைக்கும், பின்னர் நைரோபிக்கும், பின்னர் வேறு நாடு வழியாக ஆம்ஸ்டர்டாமுக்கும் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கிருந்து, எங்களை சுரினாமுக்கு அழைத்துச் சென்றனர்.
நான் அங்கு சென்றதும், துணை ஏஜென்ட்கள் ரூ.20 லட்சத்தைக் கேட்டனர். அதை எனது குடும்பம் இந்தியாவில் உள்ள ஏஜென்டிடம் செலுத்தியது.
அதன்பின் சுரினாமிலிருந்து, என்னைப் போன்ற பலருடன் நெரிசலான ஒரு வாகனத்தில் ஏறினோம். நாங்கள் கயானாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கிருந்து பல நாட்கள் இடைவிடாத பயணம். நாங்கள் கயானாவையும், பின்னர் பொலிவியாவையும் கடந்து ஈக்வடாரை அடைந்தோம்.
பின்னர் எங்கள் குழுவினரை ஏஜென்ட்கள் கடுமையான பனாமா காடுகளைக் கடக்கச் செய்தனர்.
இங்கே அதிகமாக கேள்வி கேட்டால் சுடப்படலாம் என சக பயணிகள் எங்களிடம் சொன்னார்கள்.
13 நாட்களுக்கு, 12 கால்வாய்களை உள்ளடக்கிய கடினமும் ஆபத்தும் நிறைந்த பாதையில் நாங்கள் சென்றோம். முதலைகள், பாம்புகள் என அனைத்தையும் நாங்கள் கடந்து சென்றோம்.
பாம்பு உள்ளிட்ட ஆபத்தான ஊர்வன ஜந்துக்களை சமாளிக்க குச்சிகள் வழங்கப்பட்டன. சரியான உணவு என்பது குறித்து சிந்திக்கவே முடியாது. அரை வேக்காட்டில் வேகவைத்த 'ரொட்டிகள்' மற்றும் சில நேரங்களில் நூடுல்ஸ் சாப்பிட்டோம். நாங்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பயணம் செய்தோம்.
பனாமாவைக் கடந்த பிறகு, எங்கள் குழு கோஸ்டாரிகாவில் உள்ளூர் ஏஜென்சியை தொடர்பு கொண்டு, பின்னர் ஹோண்டுராஸுக்கு எங்கள் பயணத்தைத் தொடங்கியது. அங்கு எங்களுக்கு சாப்பிட கொஞ்சம் அரிசி சாப்பாடு கிடைத்தது.
ஆனால் அதன்பின் நிகரகுவா வழியாக கடக்கும்போது எங்களுக்கு எதுவும் சாப்பிட கிடைக்கவில்லை. இருப்பினும், குவாத்தமாலாவில், தயிர் சாதம் சாப்பிடும் அதிர்ஷ்டம் எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் டிஜுவானாவை அடைந்தபோது, சீக்கியனான என் தாடி வலுக்கட்டாயமாக வெட்டப்பட்டது.

ஜனவரி 27 ஆம் தேதி காலை, அமெரிக்காவிற்குள் பதுங்கிச் செல்லும் எல்லை வழியாக கடந்து சென்றபோது அமெரிக்க எல்லைக் காவல்துறையினரால் நாங்கள் கைது செய்யப்பட்டோம்.
நாங்கள் நாடு கடத்தப்படுவோம் என்று அதிகாரிகள் எங்களிடம் கூறினர். நாங்கள் திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்பு சில நாட்கள் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டோம். அதன் பின் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
- பும்ரா கடந்த 2 வருடம் இந்திய அணிக்கு பங்காற்றிய விதத்தை எல்லோரும் பார்த்திருப்போம்.
- அவருக்குப் பதிலாக முகமது ஷமி அணியில் இடம் பிடித்துள்ளது மிகப்பெரியது.
இந்திய அணியின் நட்சத்திர வேகபந்து வீச்சாளரான பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடாததை வங்கதேசம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது என அந்நாட்டு முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் இம்ருல் கெய்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. கடந்த மாதம் சிட்னியில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பந்து வீசும்போது, பும்ராவிற்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் பந்து வீசவில்லை.
அவருக்கு ஓய்வு தேவை என மருத்துவக்குழு அறிவுறுத்தியதால், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இடம் பிடித்துள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை வருகிற 20-ந்தேதி சந்திக்கிறது. இந்த போட்டியில் பும்ரா இல்லாததை வங்கதேசம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என வங்கதேச அணியின் முன்னாள் தொடக்க வீரர் இம்ருல் கெய்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இம்ருல் கெய்ஸ் கூறியதாவது:-
தலைசிறந்த பந்து வீச்சு அட்டாக் மற்றும் பேட்டிங் வரிசையில் இந்தியா பலமான அணி. ஆனால், பும்ரா இந்திய அணியில் இல்லை. கடந்த இரண்டு வருடமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு அவர் செய்தது நாம் எல்லோருக்கும் தெரியும். அவர் இல்லாததை வங்கதேசம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்.
முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளது மிகப்பெரியது. தற்போது அவர் உடற்தகுதி விசயம் சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால் அவருடைய ரிதத்தை பிடித்து விட்டால், வங்கதேச அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.
சாகிப் அல் ஹசன் சிறந்த வீரர் என்பதால் நான் அவரை தவற விடுகிறேன். எந்த போட்டியிலும் அவருடைய தாக்கம் மிகப்பெரிய அளவிலானது. இந்த தருணத்தில் வங்கதேசம் திணறி வருகிறார். சாகிப் இல்லாததால் வங்கதேசம் திணறிக் கொண்டிருக்கிறது. அவர் இல்லாததால் வங்கதேசம் கூடுதல் ஒரு ஸ்பின்னருடன் களம் இறங்கலாம். இது வங்கதேச அணிக்கு பிரச்சனை.
லிட்டோன் தாஸ் ஃபார்ம் அணிக்கு மிப்பெரிய கவலையாக இருந்தது. ஆனால் வங்கதேச ப்ரீமியர் லீக்கின் கடைசி சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். எனினும், சவுமியா சர்கார், தன்ஜித் தமிம் சிறப்பாக விளையாடினர். பேட்டிங் துறையில் அணி சிறந்த வடிவத்தை பெற்றுள்ளது.
இவ்வாறு இம்ருல் இம்ருல் கெய்ஸ் தெரிவித்துள்ளார்.
- 2026 சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி எந்தவொரு தேர்தல் வந்தாலும் நமக்கான வெற்றியை அந்த இயற்கையே உருவாக்கி கொடுக்கும்.
- வாரிசு அரசியல் வேண்டாம் என்பதற்காகவே நான் எனது மகன்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வேண்டாம் என்று கூறினேன்.
மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் எனது விசுவாசத்திற்கு ஜெயலலிதா பலமுறை சான்று அளித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகள் அனைத்தும் ஒன்றாக இணைய வேண்டும்.
6 மாதம் நான் அமைதியாக இருந்தால் அ.தி.மு.க.வில் என்னை சேர்த்துக் கொள்வதற்காக சிபாரிசு செய்கிறேன் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியிருக்கிறார்.
என்னை அழைத்துச்சென்று அ.தி.மு.க.வில் சேர்த்துவிடுமாறு நாங்கள் யாரையும் கேட்கவில்லை. எனக்காக யாரும் சிபாரிசு செய்ய வேண்டாம்.
ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி எந்தவொரு தேர்தல் வந்தாலும் நமக்கான வெற்றியை அந்த இயற்கையே உருவாக்கி கொடுக்கும்.
இதற்காக எந்தவிதமான சிபாரிசோ, பரிந்துரையோ செய்ய தேவையில்லை. என்னை அ.தி.மு.க.வில் சேர்த்துவிடுமாறு யாரிடமும் சொல்லவும் இல்லை. சொல்லவும் மாட்டோம்.
ஆர்.பி.உதயகுமார் பற்றி நான் கருத்து சொல்ல தேவையில்லை. அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளராக வெங்கடேசன் இருந்தபோது என்னுடைய மகன்கள் 2 பேரில் ஒருவரை மாவட்ட செயலாளராக நியமனம் செய்ய இருப்பதாக கூறினார்.
அப்போது ஆர்.பி.உதயகுமார் எந்த நிலையில் இருந்தார் என்பதை நான் கண்கூடாக பார்த்தேன். அதை சொல்வது அரசியல் நாகரீகமாக இருக்காது. வாரிசு அரசியல் வேண்டாம் என்பதற்காகவே நான் எனது மகன்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வேண்டாம் என்று கூறினேன்.
இதுபற்றி ஜெயலலிதாவும் உங்கள் மகன்களில் ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவி அளிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.
எனவே இனிமேலும் ஆர்.பி.உதயகுமார் என்னைப்பற்றி விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கையை அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் பின்பற்றி வந்தனர். எனவே இருமொழிக்கொள்கையே தமிழர்களின் உயிர் மூச்சாக இருந்து வருகிறது.
செங்கோட்டையன் தனது மனத்தாங்கலை வெளிப்படுத்தியுள்ளார். விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லாததால் அவர் மனம் வெதும்பி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
- இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார். திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில் ரெட்ரோ படம் மே 1 வெளியாகவுள்ளது.
படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் படப்பிடிப்பு காட்சியை படக்குழு காமிக் வடிவத்தில் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்து இருந்த நிலையில் அதன் முதல் எபிசோடை கடந்த வாரம் வெளியிட்டனர். அதை தொடர்ந்து தற்பொழுது காமிக்கின் இரண்டாம் எபிசோடை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முதல் நாளிலிருந்தே சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்" என சாம் பிட்ரோடா தெரிவித்தார்.
- சாம் பிட்ரோடாவின் இந்த கருத்தை அடுத்து காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்தியா - சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சனை இருந்துவருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்யமுடியாமல் இருக்கிறது.
அதற்குப் பதிலாக எல்.ஏ.சி. எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் ரோந்து செல்கின்றன. அவ்வப்போது இந்தியப் பகுதிகளுக்குச் சீனா பெயர் வைப்பதும், தங்களது எல்லையில் குடியேற்றங்களை நிறுவுவதுமாகச் சீனா இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, "இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை பிரதமர் மோடி மறுக்கிறார். ஆனால், பிரதமரின் கூற்றை ஏற்காத ராணுவம், 4000 சதுர கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறுகிறது" என்று தெரிவித்திருந்தார்.
அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இணைந்து சீனாவின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது
அதற்கு பதில் அளித்த அவர், "சீனாவிடம் இருந்து நமக்கு என்ன அச்சுறுத்தல் வருகிறது என்று எனக்கு புரியவில்லை. அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். நமது அணுகுமுறை ஆரம்பத்திலிருந்தே மோதலாக உள்ளது. மேலும் இந்த அணுகுமுறை எதிரிகளை உருவாக்குகிறது. ஆனால் இது நாட்டிற்குள் ஆதரவைப் பெறுகிறது. இந்த மனநிலையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். முதல் நாளிலிருந்தே சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
சாம் பிட்ரோடாவின் இந்த கருத்தை அடுத்து காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் துஹின் சின்ஹா, "காங்கிரஸ் 40,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனாவுக்கு விட்டுக்கொடுத்தவர்கள். இன்னும் சீனாவின் அச்சுறுத்தலை அவர்கள் காணவில்லை. சீனா மற்றும் பாகிஸ்தானின் நலன்களை நமது நாட்டின் நலன்களுக்கு மேலாக காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. ராகுல் காந்தியின் ரிமோட் கண்ட்ரோல் ஜார்ஜ் சோரஸ் மற்றும் சீனாவின் கைகளில் உள்ளது" என்று தெரிவித்தார்.
- கோலி போன்ற பிரபல வீரர்கள் தங்களுக்கு என தனியாக சமையல் கலைஞர்களை அழைத்து வருவார்கள்.
- உணவுக்கு என தனி சமையல் கலைஞர்களை அழைத்து வரக்கூடாது என பிசிசிஐ தெரிவித்தது.
துபாய் :
பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது அடுத்து பிசிசிஐ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதில் முக்கிய கட்டுப்பாடுகள் வீரர்கள் வெளிநாட்டு தொடரில் குடும்பத்தினருடன் அதிக நாட்கள் செலவிடக்கூடாது. அதிக உடைமைகளை வீரர்கள் எடுத்து வரக்கூடாது மற்றும் உணவுக்கு என தனி சமையல் கலைஞர்களை அழைத்து வரக்கூடாது என பல விதிகள் விதிக்கப்பட்டிருந்தன.
பொதுவாக வீரர்கள் தங்கும் ஹோட்டலில் இந்திய வீரர்களுக்கு என உணவு கலைஞர்கள் இருப்பார்கள். இல்லையெனில் ஹோட்டலில் இருக்கும் உணவு கலைஞர்கள் தயாரித்து பிரத்தியேக உணவுகளை இந்திய அணியினருக்கு வழங்குவார்கள்.
ஆனால் விராட் கோலி போன்ற பிரபல கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு என தனியாக சமையல் கலைஞர்களை அழைத்து வந்து தங்க வைத்திருந்தார்கள். தற்போது இதற்கு பிசிசிஐ அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்து தமக்கு எந்த மாதிரி உணவு வேண்டும் என்பதை விராட் கோலி துபாயில் உள்ள பிரபல ஹோட்டலை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்.
இதனை அடுத்து அந்த ஹோட்டல் சமையல் கலைஞர்கள் விராட் கோலிக்கு என தனி உணவுகளை சமைத்து அவருக்கு டெலிவரி செய்து இருக்கிறார்கள். இதனால் விராட் கோலி பயிற்சிக்கு வரும்போது கூடவே உணவு பொட்டணங்களையும் எடுத்து வந்திருக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் பயிற்சிக்கு பிறகு விராட் கோலி தனது உணவை எடுத்து சாப்பிட்டு இருக்கிறார். உணவுக் கலைஞர்களுக்கு பிசிசிஐ தடை விதித்ததை அடுத்து விராட் கோலி இந்த முறையில் பின்பற்றுகிறார்.






