என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய பா.ஜ.க.வின் மோடி அரசு எடுத்து வருகிறது.
    • வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும்.

    சென்னை:

    நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கும், மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன், மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாசலம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய பா.ஜ.க.வின் மோடி அரசு எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர முடியாது என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார். நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டிற்கான நிதியைத் தருவதில் பாரபட்சம் காட்டி, பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களை புறக்கணிக்கிறார்.

    பதவிக்காலம் முடிந்து போன கவர்னரை வைத்துக் கொண்டு அத்துமீறல்கள், யு.ஜி.சி. மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பை சிதைப்பதற்கான நடவடிக்கைகள், தொடர்ச்சியான திராவிட - தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் என தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகிறார்கள்.

    தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும், கல்வி - வேலைவாய்ப்பு - சமூகநீதி - வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும் மோடி அரசின் கண்களை உறுத்துகிறது. அது, அரசியல் ரீதியாக பா.ஜ.க.வை அண்டவிடாத தமிழ்நாட்டு மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திவிட முயற்சிக்கிறது.

    வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும். எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும்.

    அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதல்கட்டமாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை 4 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளும் மத்திய அரசு, தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்? என உரக்கக் குரல் எழுப்புவோம். தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம் என்பதை உணர்த்துவோம். ஒன்றிணைவோம், உரக்கக் குரல் எழுப்புவோம், உரிமைகளை மீட்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவை ஸ்ரீ கோனியம்மன் பூச்சாற்று விழா.
    • முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-6 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சஷ்டி நாளை காலை 6.13 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: சித்திரை காலை 6.57 மணி வரை பிறகு சுவாதி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். கோவை ஸ்ரீ கோனியம்மன் பூச்சாற்று விழா. ராமநாதபுரம் செட்டித்தெரு ஸ்ரீ முத்தாலம்மன் உற்சவம் ஆரம்பம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதர் உற்சவம் ஆரம்பம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோ வில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. திருநறை யூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. திருவேல்வேலி சமீபம் 3-ம் நவ திருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித்தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-புகழ்

    ரிஷபம்-சுபம்

    மிதுனம்-ஜெயம்

    கடகம்-நன்மை

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-ஆக்கம்

    துலாம்- வரவு

    விருச்சிகம்-தெளிவு

    தனுசு- நிறைவு

    மகரம்-போட்டி

    கும்பம்-நற்செய்தி

    மீனம்-நலம்

    • பிரதமர் முன்மொழியும் ஒருவரை ஜனாதிபதி நியமனம் செய்து வந்தார்.
    • இந்த குழுவில் ஒரு மத்திய அமைச்சர், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் இடம் பெறுவர்.

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (பிப்ரவரி 18-ம் தேதி) ஒய்வு பெறுகிறார். இதனால், புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை பொறுத்தவரை பிரதமர் முன்மொழியும் ஒருவரை ஜனாதிபதி நியமனம் செய்து வந்தார்.

    தேர்தல் ஆணையர்கள் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி உயர்த்தப்பட்டு வந்தனர். இந்நிலையில், மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, பிரதமர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும். பிரதமர் தலைமையிலான இந்த குழுவில் ஒரு மத்திய அமைச்சர், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் இடம் பெறுவர்.

    இந்த சூழலில், ராஜீவ் குமார் பணி ஓய்வுக்கு பிறகு அடுத்த ஆணையர் யார் என்பதை முடிவு செய்ய இந்த குழு நேற்று கூடியது. பிரதமர் தலைமையிலான இந்த குழுவில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் (EC) உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான புதிய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட முதல் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆவார்.

    தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ் குமாரின் பதவிக்காலம் ஜனவரி 26, 2029 வரை நீடிக்கும். 1989-ஆம் ஆண்டு ஹரியானா-கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான விவேக் ஜோஷி, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மே 21, 1966 அன்று பிறந்த விவேக் ஜோஷி (58), 2031 வரை தேர்தல் ஆணையத்தில் பணியாற்றுவார். அரியானாவின் முன்னாள் தலைமைச் செயலாளரான ஜோஷி, ஜனவரி 2019 முதல் மத்திய பிரதிநிதியாக இருந்தார்.

    • வனப்பகுதியை சுற்றிலும் 233 கிராமங்கள் உள்ளன.
    • கடந்த ஆண்டில் மட்டும் 9 பேர் பலியாகினர்.

    புனே:

    புனே மாவட்டத்தின் ஜுன்னார் பகுதியில் மலைப்பாங்கான வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியை சுற்றிலும் 233 கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. ஜுன்னார் வனப் பிரிவில் ஒவ்வொரு 100 சதுர கி.மீட்டருக்குள் 44 சிறுத்தைப் புலிகள் உள்ளன என டேராடூன் இந்திய வனவிலங்கு சரணாலயம் தெரி்வித்து உள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் சிறுத்தைப்புலி தாக்குதலால் இந்த பகுதிகளில் 17 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். கடந்த ஆண்டில் மட்டும் 9 பேர் பலியாகினர். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சிறுத்தைப்புலிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துமாறு வனத்துறையிடம் வலியுறுத்தினர்.

    இந்நிலையில் அந்த பகுதியில் வனத்துறை சார்பில் மனிதர்களை பாதுகாக்க நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சிறப்பு புலி பாதுகாப்பு படையை போலவே சிறப்பு சிறுத்தைப்புலி பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு உள்ளது. சிறுத்தைப்புலிகளால் அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் சுமார் 150 வீடுகளில் சூரிய சக்தி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 650 வீடுகளுக்கு வேலிகள் அமைக்க பரிந்துரைக்கபட்டு உள்ளது. இந்த வேலியை சிறுத்தைப்புலிகள் கடக்க முயன்றால், அது உயிருக்கு பயந்து திரும்ப ஓடி விடும்.

    மேலும் பல இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கேமராக்களில் சிறுத்தைகள் பதிவானால் இந்த அமைப்பு வன அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்யும் அலாரத்தை எழுப்பும். இரவு நேரத்தில் சிறுத்தைப் புலி இருப்பதை கண்டறியக்கூடிய விலங்கு ஊடுருவல் கண்டறிதல் மற்றும் விரட்டும் அமைப்புகள் நிறுவப்பட்டு உள்ளது.

    மேலும், இப்பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு நவீன கழுத்து பட்டைகளை வினியோகித்துள்ளோம். பொதுவாக, சிறுத்தைப்புலிகள் ஒரு நபரின் கழுத்தை தாக்கும். அந்த சூழ்நிலையில் இந்த கழுத்து பட்டைகள் அவர்களின் உயிரை பாதுகாக்கும்.

    கொரோனா காலத்தில் மனித செயல்பாடு குறைந்து சிறுத்தைகள் செழித்து வளர்ந்தன. மேலும் ஜுன்னாரில் சிறுத்தைப்புலி மீட்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையங்கள் கிராமவாசிகளின் தாக்குதல்களில் காயமடைந்த அல்லது மோதல்களில் சிக்கிய சிறுத்தைப்புலிகளுக்கு பராமரிப்பை வழங்குகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அயல்நாட்டு நிறுவனங்களும் அந்த திட்டத்தில் முதலீடு செய்து வீடுகளை வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.
    • சீனா, நெதர்லாந்து, அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் வீடுகளை வாங்கி குவித்து வந்தனர்.

    கான்பெரா:

    தனி கண்டமாகவும், தீவு நாடாக விளங்கும் ஆஸ்திரேலியாவில் அரசு சார்பில் வீடு கட்டி தரப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனைக்காக வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

    வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும், அயல்நாட்டு நிறுவனங்களும் அந்த திட்டத்தில் முதலீடு செய்து வீடுகளை வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

    சீனா, நெதர்லாந்து, அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் வீடுகளை வாங்கி குவித்து வந்தனர். இந்தநிலையில் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்குவதற்கு அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது.

    உள்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கத்தில் வருகிற 2027-ம் ஆண்டு வரை 2 ஆண்டுகளுக்கு இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மொரிசியசில் இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள்.
    • அவர் பதவியில் இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தது.

    போர்ட் லூயிஸ்:

    இந்திய பெருங்கடலில் ஆப்பிரிக்கா அருகே உள்ள தீவு நாடாக மொரிசியஸ் உள்ளது. குட்டித்தீவு நாடான மொரிசியசில் இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். அந்த நாட்டின் பிரதமராக பிரவிந்த் ஜக்நாத் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு நடந்த பொது தேர்தலில் அவர் தலைமையிலான கட்சி தோல்வி அடைந்தது.

    முன்னதாக பாதுகாப்பு, நிதித்துறை, உள்துறை மற்றும் வெளியுறவு மந்திரியாகவும் பிரவிந்த் ஜக்நாத் பொறுப்பு வகித்தார். இந்தநிலையில் அவர் பதவியில் இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தது.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.20 ¾ ஆயிரம் கோடி (2.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை அந்த நாட்டின் ஊழல்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    • டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • 19.3 ஓவர்கள் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    வதோதரா:

    5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று 4-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு தொடக்க வீராங்கனைகளான மெக் லானிங் 17 ரன்களிலும், ஷபாலி வர்மா ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறிது நிலைத்து விளையாட மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. அவரும் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    19.3 ஓவர்கள் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு களமிறங்க உள்ளது.

    இறுதியில் பெங்களூரு அணி 16.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அருந்ததி ரெட்டி மற்றும் ஷிகா பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதன்மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    • குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் ஏராளமான சிங்கங்கள் உள்ளன.
    • சிங்கம் சாலையை கடந்தபிறகு மீண்டும் போக்குவரத்து சீரானது.

    குஜராத் மாவட்டம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பாவ்நகர்-சோம்நாத் நெடுஞ்சாலையில் இன்று சிங்கம் சாலையை கடந்து சென்றதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சிங்கம் சாலையை கம்பீரமாக கடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. சிங்கம் சாலையை கடந்தபிறகு மீண்டும் போக்குவரத்து சீரானது.

    குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் ஏராளமான சிங்கங்கள் உள்ளன. அவ்வப்போது வனப்பகுதியை தாண்டும் சிங்கங்கள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை.
    • போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்படும்.

    கல்வி நிறுவனங்களில் பாலியல் குற்றங்களை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் இப்பொருள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தனியார், அரசு பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் பள்ளி மற்றும் உயர்கல்வி சான்றிதழ்கள் தகுந்த விதிமுறைகளை பின்பற்றி ரத்து செய்யப்படும்.

    கல்வி நிறுவனங்களில் புதியதாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களை (தற்காலிக மற்றும் நிரந்தர) பணி நியமனம் செய்யும் முன் காவல்துறை சரிபார்ப்பு சான்று (Police verification certificate) பெறுவது கட்டாயமாக்கப்படும்.

    பணியாளர்கள் அனைவரும் "குழந்தை பாதுகாப்பு உறுதி மொழி " ஆவணத்தில் (Child Safeguarding Declaration Document) கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்படும்.

    அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பாலியல் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து "சுய பாதுகாப்பு கல்வி" (Personal Safety Education) அளிக்கப்பட வேண்டும்.

    குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கவும், அவர்கள் உள்ள சூழலில், எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை அறியவும், பிரச்னை ஏற்படும் சூழலில், எவ்வாறு, யாரிடம் உதவியை நாடுவது போன்றவற்றிக்கு இக்கல்வியானது உதவுகிறது.

    இதனை திறம்பட நடைமுறைப்படுத்த முதலில் நிபுணர்களால் (NGO's and Subject matter experts) கையேடு தயாரிக்கப்பட்டு, அவர்களால் முதன்மை பயிற்சியாளர்கள் (Master Trainers) தயார் செய்யப்படுவார்கள். பின்னர், முதன்மை பயிற்சியாளர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

    ஆசிரியர்கள் இதனை குழந்தைகளுக்கு முழுமையாக கற்பிக்க வேண்டும். இப்பயிற்சி மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்டாயமாக்கபட வேண்டும்.

    அனைத்து ஆசிரியர் பட்டய/ பட்டப்படிப்பு பாடத்திட்டங்களில் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்த பாடத்திட்டம் (Education on Child Protection against Sexual Abuse) சேர்க்கப்படும். மேலும், அனைத்து ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படும்.

    அனைத்து கல்வி நிறுவனங்களிலும் போக்சோ வழக்குகள் தொடர்பான அனைத்து விவரங்கள் பற்றி தொகுக்கவும் மற்றும் கண்காணிக்கவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலராக தொடர்பு அலுவலர் (Nodal officer) நியமிக்கப்படுவார்கள்.

    மாணவிகள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர்கள் பணியமர்த்தப்படவேண்டும்.

    இருபாலர்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களில் பெண் உயர்கல்வி ஆசிரியைகள் நியமனம் செய்யப்படவேண்டும்.

    விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்விச் சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆசிரியர்களே மாணவிகளை அழைத்துச் செல்ல வேண்டும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வெளியே முகாம்களில் தங்க நேரும் பட்சத்தில் மாணவிகளுடன் பெண் ஆசிரியர்கள் மட்டுமே தங்குவது உறுதி செய்யப்படவேண்டும்.

    மாணவிகள் விடுதிகளுக்குள் வெளிநபர்கள் அனுமதிக்கப்படக்கூடாது. விடுதி பராமரிப்பு பணி பெண் விடுதி காப்பாளர்கள் மேற்பார்வையில் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும்.

    அனைத்து கல்வி நிறுவனங்களிலும், 1098 & 14417 ஆகிய உதவி எண்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் கூடுதலாக அமைக்கப்படவேண்டும்.

    பாலியல் குற்றங்கள் பற்றி தெரிய வந்தால் அப்பள்ளியின் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்கள் உடனடியாக காவல் துறைக்கு புகார் அளித்து அதன் விவரத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

    புகார் அளிக்கும் மாணவன்/மாணவியின் பெயர் விவரம் எக்காரணம் கொண்டும் வெளிவரக்கூடாது. இதற்கு அந்த கல்வி நிலைய தலைமை ஆசிரியர் பொறுப்பாவார்.

    "மாணவர் மனசு புகார் பெட்டி" அனைத்து பள்ளிகளிலும் இருப்பது உறுதி செய்யப்படவேண்டும்.

    அனைத்து திங்கட்கிழமைகளிலும், காலையில் நடக்கும் கூட்டங்களில் (School Assembly) தலைமை ஆசிரியர்களும், அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு, "மாணவர் மனசு புகார் பெட்டி" மற்றும் குழந்தை பாலியல் வன்கொடுமை பற்றி புகார் அளிக்கும் முறை, குழந்தைகள் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாணவ/ மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்படவேண்டும். தனிப்பட்ட புகார்கள் குறித்து அங்கு குறிப்பிடவே கூடாது.

    அனைத்து பள்ளிகளிலும் முக்கியமான இடங்களில் CCTV கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது உறுதிப்படுத்தப்படவேண்டும்.

    மேற்கண்ட அனைத்து பரிந்துரைகளையும் தனியார் மற்றும் அரசுக் கல்வி நிறுவனங்கள் /உயர் கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.
    • புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்ந்தெடுக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் இருந்து வருகிறர். இவர் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் புதிய தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட வேண்டும். வழக்கமாக அவருக்கு அடுத்தப்படியாக உள்ளவர் தலைமை தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்படுவார். 3-வது நபரை பிரதமர் தலைமையிலான குழு தேர்வு செய்யும்.

    பிரதமர் தலைமையிலான குழுவில் பிரதமர், கேபினட் அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இருப்பார்கள். அந்த வகையில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் 22-ந்தேதி இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. அதுவரை இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தக்கூடாது என ராகுல் காந்தி தனக்கு இந்த கூட்டம் தொடர்பாக கருத்து வேறுபாடு இருப்பதாக கடிதம் கொடுத்துள்ளார்.

    ஆனால், தேர்தல் ஆணையத் தலைவர் பதவி காலியிடமாக இருக்கும் என்பதால் தேர்வு செய்யப்படுவதை மத்திய அரசு தள்ளிப்போட விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    நீதிமன்றம் நியமனத்திற்கு தடை விதிக்கவில்லை. மேலும், சட்டப்பூர்வ கருத்து கோரப்பட்டு வழங்கப்பட்டது, பிரதமர் தலைமையிலான குழு தொடர்ந்து செயல்படுமாறு கூறப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கான கோப்பிலும், புதிய அதிகாரியை நியமிப்பதற்கான கோப்பிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக காங்கிரஸ் கூறுகையில் "தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் நியமிப்பது தொடர்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் வருகிற 22-ந்தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் நாங்கள் ஆலோசனை கூட்டத்தை ஒத்திவைக்க விரும்புகிறோம். காங்கிரஸ் கட்சியுடன் சட்டக்குழு இதை ஆதரிக்கிறது. நாம் ஈகோவில் செயல்பட முடியாது, மேலும் உச்ச நீதிமன்றம் முன்கூட்டியே முடிவெடுக்கும் வகையில் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு தேர்தல் ஆணையத்தை தன்னுடன் கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறது. அதனுடைய நம்பகத்தன்யை குறித்து கவலைப்படுவதில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளது.

    வழக்கமாக பிரதமரின் ஆலோசனைப்படி தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் தேர்வு செய்யப்படுவார். தலைமை தேர்தல் ஆணையருக்கு கீழ் உள்ள மற்ற இரண்டுபேரில் சீனியர் அடிப்படையில் மூத்த ஆணையர் தலைமை ஆணையராக தேர்வு செய்யப்படுவார். அதன்படி ஞானேஷ் குமார் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

    சட்ட அமைச்சர் ஐந்து பேர் கொண்ட பட்டியலை தயார் செய்து தேர்வுக்குழுவிற்கு அனுப்புவார். தேர்தல் குழுவில் பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர், கேபினட் அமைச்சர் ஆகியோர் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுப்பார்கள்.

    ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பதிலாக கேபினட் அமைச்சர் குழுவில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    • கரூரில் 13 வயது சிறுமி பள்ளி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
    • இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கரூர் மாவட்டம் ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 13 வயது சிறுமி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராயனூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் கண்ணாவின் மகள் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இன்று வழக்கம் போல் பள்ளி சென்ற மாணவி 2வது தளத்தில் இருந்து விழுந்து விட்டதாக பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.

    மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கால்கள் செயல்படாமல் போய் விட்டதாக அவரது பெற்றோர் கண்ணீர்விட்டு கதறி அழுகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • பைசன் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
    • பைசன் படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் 'பைசன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை கேக் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×