என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை செல்வப்பெருந்தகை நேரில் வழங்கி அழைப்பு விடுத்தார்.
- இது தொடர்பான புகைப்படங்களை செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது மகள் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு வழங்கி அழைப்பு விடுத்து வருகிறார்.
அவ்வகையில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு தனது மகள் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை செல்வப்பெருந்தகை நேரில் வழங்கி அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பான புகைப்படங்களை செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும் அவரது தாயார் பெரியம்மாள் அவர்களுக்கும் இன்று 22.02.2026 எனது மகளின் நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கினேன்" என்று தெரிவித்தார்.
- செல்வப்பெருந்தகை தனது மகள் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி வருகிறார்.
- கிறிஸ்தவரான செல்வப்பெருந்தகை தனி தொகுயில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக பாஜக குற்றச்சாட்டு
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது மகள் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு வழங்கி அழைப்பு விடுத்து வருகிறார்.
இந்நிலையில் இந்த அழைப்பிதழை வைத்து கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த செல்வப்பெருந்தகை தனி தொகுயில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக பாஜக தலைமை செய்தி தொடர்பாக நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இணைக்கப்பட்டுள்ள திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழானது காங்கிரஸ் கட்சி தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை அவர்களின் மகளின் நிச்சயதார்த்த அழைப்பிதழ். மணம் முடிக்க காத்திருக்கும் மணமக்களுக்கு நம் வாழ்த்துகளும், ஆசிகளும்.
இந்த அழைப்பிதழ் செல்வப்பெருந்தகை அவர்களால் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அழைப்பிதழின் வாசகங்கள் செல்வப்பெருந்தகை அவர்கள் கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பதை உறுதிபட தெரிவிக்கின்றது. திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் கிருஸ்துவராகவோ, இஸ்லாமியராகவோ, ஹிந்துவாகவோ இருப்பதில் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியானது, பட்டியிலன சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி (Reserved Constituency) என்பதும், அந்த தொகுதியில் பட்டியலினத்தை சார்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்றும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட/வெற்றிபெற்ற ஆனால், தாங்கள் கிருஸ்துவ மதத்தை பின்பற்றுகின்றவர்கள் என்பதை மறைத்து பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்று ஏமாற்றி மோசடி செய்தவர்களை தகுதியிழக்க செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதால், திரு.செல்வப்பெருந்தகை அவர்கள், தான் சார்ந்த சமுதாயத்தை மறைத்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி, உண்மையை மறைத்து மோசடி செய்து தேர்தலில் போட்டியிட்டிருப்பது தெளிவாகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல வெட்கக்கேடான செயல் என்பதோடு பட்டியிலன மக்களுக்கு காங்கிரஸ் கட்சி செய்துள்ள மிகப்பெரிய துரோகமாகும்.
தெரிந்தே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள செல்வப்பெருந்தகை அவர்கள் பதவி விலக வேண்டும், காங்கிரஸ் கட்சி பட்டியிலின மக்களிடம் மன்னிப்பு கேட்பதோடு, செல்வப்பெருந்தகையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வப்பெருந்தகை அவர்களின் வெற்றி செல்லாது என்பதை சட்ட ரீதியாக உறுதி செய்வதோடு, அரசியலமைப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக செல்வப்பெருந்தகையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த பதிவை பகிர்ந்து திருமுருகன் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அந்த பதிவில், "இந்த நாராயணன் போல கீழ்த்தரமானவர்களை நாம் அதிகமாக பாஜகவில்தான் பார்க்க இயலும். இவர்கள் கோமியத்தை மட்டுமே குடித்து வளர்வதால், மூளை செயலிழந்து இருப்பது இயல்பானதுதான். திருமணப்பத்திரிக்கையை பார்த்தால் திரு.செல்வப்பெருந்தகை கிருத்துவராக தெரிகிறது, ஆகவே அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டுமென்பதாக 'தற்குறி' நாராயணன் எழுதுகிறார். தமிழுக்கு எதிரான 'ஸ்மார்த்த மதத்தை' சார்ந்த நாராயணின் சாணிமூளையை எளிதில் அம்பல
திரு.செல்வப்பெருந்தகையும், அவரது மனைவி, மகளின் பெயரும் கிருஸ்துவப்பெயர் அல்ல. திரு.செல்வப்பெருந்தகையின் மனைவி திருமதி உமையாள் என்பதும், மகள் செல்வி அக்ஷயா பிரியா என்பதும் கிருஸ்துவப்பெயரல்ல. நாராயணனின் சாணி மூளைக்கு புரியும்படி சொன்னால்,
'உமையாள்' என்பது முழுமையான தமிழ் தெய்வத்தின் பெயர், சைவப்பெயர். சிவனின் மனைவி பார்வதியின் மற்றுமொரு பெயராக திருவாசகத்தில் குறிப்பிடப்படுகிறது. பிறகெப்படி, திரு.செல்வப்பெருந்தகையை கிருத்துவர் என முத்திரை குத்துகிறார் 'சாணிமூளை' நாராயணன்?
மணமகன் குடும்பத்தார் பெயரே கிருத்துவ பெயராக உள்ளது. மதம்-சாதி கடந்து ஆண்-பெண் நேசத்தை போற்றுகிற பண்பைத்தான் திரு.செல்வப்பெருந்தகையின் இல்லத்திருமணம் நமக்கு உறுதி செய்கிறது.
தன் மகளை திருமணம் செய்யப்போகும், மணமகன் குடும்பம் கிருத்துவராக இருப்பதற்காக திரு.செல்வப்பெருந்தகையை எவ்வாறு கிருத்துவரென முத்திரை குத்தி பதவி நீக்கம் செய்யச் சொல்கிறார் 'சாணிமூளை' நாராயணன்?
மகள் திருமணம், மருமகனின் இல்லவழியில் கிருத்துவ முறையில் நடப்பதால் செல்வப்பெருந்தகை கிருத்துவர், அதனால் சட்டமன்ற உறுப்பினர் பதவி தகுதியிழக்க வேண்டும் என நாராயணன் சொல்வது கலவர புத்தி, சங்கித்தன புத்தி.
சனாதன-சாணிகளுக்கு மதம், சாதி பாகுபாடு பார்ப்பதைத் தவிர, ஆக்கப்பூர்வமாக மூளை செயல்படாது. இவர்களை போன்ற கலவரக் கும்பல்களை குஜராத்துக்கு விரட்டுவதே தமிழ்நாட்டுக்கு நல்லது.
நாராயணன் போன்ற 'ஸ்மார்த்த' மதத்தை சார்ந்த பார்ப்பனர்கள், ஆயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்குள் தமிழர்களுக்கு எதிராக கலவரம், கொலை, கொள்ளை செய்வதை வழக்கமாக கொண்டவர்கள் என்பது வரலாறு.
செல்வப்பெருந்தகையின் இல்லத்திருமண விழாவிற்கு வாழ்த்துகளை தெரிவிப்போம். மணமகள் செல்வி அக்ஷயா ப்ரியா மணமகன் திரு.ஆர்ஜன்ராயர் ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். தமிழ் மொழிபோல், தமிழ்நாடு போல் அனைத்து வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன். உங்களது வம்சாவழியினர், சாதி-மத-சனாதன பேதமற்ற தமிழ்நிலத்தில் வாழும் வகையில் சங்கிகளை விரட்டியடித்து, தமிழ்நாட்டை தூய்மைப்படுத்துவோம் என உறுதி கூறி வாழ்த்துகிறோம். நீங்களும் வாழ்த்துங்கள். சனாதனம் ஒழியட்டும். ஸ்மார்த்த பார்ப்பனர்கள் வெளியேறட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
- கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்கின்றனர்.
விடுமுறை நாட்களிலும், திருவிழா காலங்களிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் 100 ரூபாய் கட்டணம் தரிசனம், பொது தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனை, அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் இன்று மாசி மாத வளர்பிறை முகூர்த்த தினத்தை முன்னிட்டு கோவில் முன்புள்ள சண்முக விலாஸ் மண்டபத்தில் 25-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
- முருக பக்தர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- காங்கிரஸ் கூட்டணியில் இருப்பார்களா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
மதுரை:
மார்ச் 1-ம் தேதி மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 2-வது மாநாட்டு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிலையில் பொது கூட்டத்தன்று அரசு நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதனால் இரண்டு நிகழ்வுகளும் ஒரே இடத்தில் அமைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:-
அனைத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மார்ச் 1-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான கூட்டமாக இருக்கும்.
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது பக்தர்கள் சார்பாக பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. முருக பக்தர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதை நிறைவேற்றும் விதமாக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் நீதியரசர் சுவாமிநாதன் மீதும் தீர்ப்பு வழங்கியதற்காக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என தி.மு.க. ஒரு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க.விற்கு பாடம் புகட்டும் விதமாகவும் தங்களது உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் பக்தர்கள் அனைவரும் தங்களது வீட்டு வாசலில் விளக்கேற்றி 23-ம் தேதி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமருடைய வருகை தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்பி விடும் என்றார். பொது கூட்டத்துக்கு முன்பாக மேலும் கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, எங்கள் கூட்டணி தான் பலமான கூட்டணியாக உள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் இருப்பார்களா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் எங்கு செல்வார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் எங்கள் கூட்டணி வலுவான கூட்டணியாக வலிமையான கூட்டணியாக உள்ளது.
எங்களுடைய கூட்டணியின் தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி பல கட்சிகளுடன் பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆதவ் அர்ஜுனா முன்மொழிந்த தீர்மானத்தை அனைவரும் ஏற்பதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்தார்.
- ஜனநாயகன் படத்தை முடக்கினாலும் ஜனநாயகத்தை காக்கும் ஒரே குரல் த.வெ.க. தலைவர் விஜயின் குரல் தான்.
சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தீர்மானத்தை முன்மொழிந்தார்.
ஆதவ் அர்ஜுனா முன்மொழிந்த தீர்மானத்தை அனைவரும் ஏற்பதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்தார்.
இந்நிலையில் நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
* 234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர் என தீர்மானம் நிறைவேற்றப்படும்.
* ஜனநாயகன் படத்தை முடக்கினாலும் ஜனநாயகத்தை காக்கும் ஒரே குரல் த.வெ.க. தலைவர் விஜயின் குரல் தான்.
* 234 தொகுதிகளிலும் த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி பெறுவார்.
* தமிழ்நாட்டை த.வெ.க. தலைவர் விஜய்தான் ஆள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தான் முன்மொழிந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிமொழிவார் என்று தெரிவித்தார்.
- எந்த தொகுதியில் வளர்ச்சி இல்லையோ அந்த தொகுதியில் நிற்பேன் என விஜய் கூறி இருந்தார்.
சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தான் முன்மொழிந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிமொழிவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
எந்த தொகுதியில் வளர்ச்சி இல்லையோ அந்த தொகுதியில் நிற்பேன் என விஜய் கூறி இருந்த நிலையில் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- 4 தொகுதிகளாவது கொடுக்க வேண்டும் என தி.மு.க.விடம் கேட்டுள்ளோம்.
- தி.மு.க. நல்லாட்சி மீண்டும் வர வேண்டும் என்ற உணர்வோடு தான் கூட்டணி கட்சிகள் பாடுபடுகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் 10-ந்தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்ப டுகிறது.
இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பல தொகுதிகளில் நேரடியாக மோத உள்ளது. இது தவிர நடிகர் விஜயின் த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சியும் தேர்தலில் போட்டியிடுகிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியிலும் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர மேலும் சில சிறிய கட்சிகளும் கூட்டணியில் பங்கு பெற உள்ளது.
இந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, எந்தெந்த தொகுதிகளை கொடுப்பது என்பது பற்றி பேசுவதற்கு தி.மு.க.வில் 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகிய 7 பேர் கொண்ட குழுவை நியமித்து உள்ளது.
இந்த நிலையில் இன்று தி.மு.க. தனது கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தி.மு.க. குழுவினருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் முகம்மது அபு பக்கர், பொருளாளர் ஷாஜ கான், முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை ஒரு மணி நேரம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
* இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் இல்லை என்றாலும் 4 தொகுதிகளாவது கொடுக்க வேண்டும் என தி.மு.க.விடம் கேட்டுள்ளோம்.
* தி.மு.க. நல்லாட்சி மீண்டும் வர வேண்டும் என்ற உணர்வோடு தான் கூட்டணி கட்சிகள் பாடுபடுகிறார்கள்.
* இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை இன்னும் முடிவாகவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒவ்வொரு தேர்தலிலும் ஜனநாயக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன்.
- விஜயகாந்த் இருக்கும் போதும் வந்து வாக்களித்துள்ளேன்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் வாக்களித்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்க ளிடம் கூறுகையில், "நான் 25 வருடங்களாக தயாரிப்பாளராக இருக்கிறேன். ஒவ்வொரு தேர்தலிலும் ஜனநாயக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன். விஜயகாந்த் இருக்கும் போதும் வந்து வாக்களித்துள்ளேன்" என்றார்.
அப்போது அவரிடம் நிருபர்கள், "தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. போனதால் விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது என்று எதிர்க்கட்சியினர் சொல்கிறார்களே" என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அவர், "அரசியல் இங்கு பேச வேண்டாம், இது சினிமா நிகழ்ச்சி' என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.
- தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது இன்றைய ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு.
- தமிழ்நாட்டின் அமைதி நிலை திரும்ப, இந்த திமுக ஆட்சியை முடிவுகட்ட வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழகத்தில் உள்ள திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 பயங்கரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
கொலை, கொள்ளை என்பதையெல்லாம் தாண்டி, பயங்கரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது இன்றைய ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு.
ஏற்கனவே 2022-ல் கோவையில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது, தமிழ்நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதை ஒப்புக்கொள்ளாமல், "சிலிண்டர் வெடிப்பு" என சமாளிக்கவே முயன்றது இந்த விடியா திமுக அரசு.
தொடர்ந்து பயங்கரவாதிகள் கைது என்பது தமிழகத்தில் மத்திய அரசின் NIA போன்ற அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இங்குள்ள மாநில அரசு இதனைத் தடுக்க என்ன செய்தது?
டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை திமுக அரசின் ATS (Anti Terrorism Squad) என்ன செய்துகொண்டு இருந்தது?
இந்த கையாலாகாத ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியைத் தொடர விட்டால், 1998 போல மீண்டும் ஒரு கோரச் சம்பவத்திற்கு கூட வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் தான் மக்களிடையே இருக்கிறது.
எனவே, தமிழ்நாட்டின் அமைதி நிலை திரும்ப, இந்த திமுக ஆட்சியை முடிவுகட்ட வேண்டும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மக்களிடம் இருந்து எடுத்தால் அது மத்திய பா.ஜ.க. அரசு.
- திராவிட மாடல் அரசுக்கும், தமிழ்நாட்டில் டப்பா எஞ்சினை ஓட்ட நினைக்கும் பா.ஜ.க. அரசுக்குமான வேறுபாடு இதுதான்!
மதுரையில் நடைபெற்ற தி.மு.க. வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டு உரையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
மக்களுக்கு கொடுத்தால் அது தி.மு.க. அரசு. மக்களிடம் இருந்து எடுத்தால் அது மத்திய பா.ஜ.க. அரசு.
திராவிட மாடல் அரசுக்கும், தமிழ்நாட்டில் டப்பா எஞ்சினை ஓட்ட நினைக்கும் பா.ஜ.க. அரசுக்குமான வேறுபாடு இதுதான்!
#வெல்வோம்_ஒன்றாக
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஓ.பி.எஸ் தி.மு.க.வில் இணைந்தால் செல்வாக்கை இழப்பார்.
- 75 ஆண்டுகால தி.மு.க.வை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நம்பிக்கையோடு களத்தில் நிற்கின்றார்.
தென்காசி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது
இதில் கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
த.வெ.க தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்க்கும்போது, பல கூட்டத்தை நடத்தியவன் என்ற முறையில் சொல்கிறேன் 39 ஆண்டு காலத்தில் நான் இதேபோல் மிகப்பெரிய கூட்டத்தை பார்த்தில்லை.
அவருக்கு தமிழகத்தில் கிடைக்கும் வரவேற்பு, வளர்ச்சி தமிழகத்தில் புதிய அத்தியாயம் படைக்கும்.
அவர் 75 ஆண்டுகால தி.மு.க.வை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நம்பிக்கையோடு களத்தில் நிற்கின்றார். தி.மு.க. திகைத்து நிற்கிறது.
சட்டம்-ஒழுங்கு கெட்டு தமிழகம் சாம்பல் மேடாக மாறி உள்ளது. இதனை எதிர்த்து கேள்வி கேட்கும் ஆளுமையும், ஆண்மையும் எதிர்கட்சிகள் இழந்துள்ளன. இதனை எதிர்க்கும் ஒரே கட்சி த.வெ.க.
ஓ.பி.எஸ் தி.மு.க.வில் இணைந்தால் இதுவரை பெற்று வந்த செல்வாக்கை இழப்பார் என நினைக்கிறேன். வைகோ தி.மு.க.வுடன் இணைந்துள்ளார்.
தி.மு.க.வுடன் உள்ளோம், இனியும் இருப்போம் என காங்கிரஸ் கூறவில்லை.
மார்ச் 9-ந்தேதி தி.மு.க ஒரு மாநாட்டை திருச்சியில் நடத்துகிறது. அன்று எங்கள் பொலிடிகல் பாம் வெடிக்கும். ராகுல் காந்தியும், விஜய்யும் ஒரே மேடையில் நின்றால் தி.மு.க.வுக்கு மாரடைப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய மக்கள் பணி என்றும் என் மனதில் நிற்கும்.
- தமிழக மக்கள் ஜெயலலிதா மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறேன்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். மேலும் அவர் கூறியதாவது:
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மன் கி பாத் உரையில் ஜெயலலிதாவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பெண்களின் நலனுக்காக அவர் பாடுபட்டார் என்று புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக மோடி தனது உரையில் கூறி இருப்பதாவது:-
பெண்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவே ஜெயலலிதா இருந்தார். அவரின் தேசப்பக்தி மிகப்பெரியது. மாநிலத்தின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க ஜெயலலிதா கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.
சமூக நலனுக்காக பாடுபட்டவர்கள், பொதுமக்களுக்கு முன்னுரிமை அளித்தவர்கள் எப்போதும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறார்கள். ஜெயலலிதா அத்தகைய பிரபலமான தலைவர்களில் ஒருவர். பிப்ரவரி 24-ந் தேதி அவரது பிறந்தநாள் விழா. இன்றும் கூட தமிழகத்துக்கு செல்லும்போது மக்கள் அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தை நான் உணர்கிறேன். அம்மா ஜெயலலிதாவைப் பற்றி குறிப்பிடுவது தமிழக மக்களின் முகங்களில் ஒரு பிரகாசத்தைக் கொண்டு வருகிறது. குஜராத்தில் எனது பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். அவரது சிந்தனை மிகவும் தெளிவாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.






