என் மலர்
நீங்கள் தேடியது "நாராயணன் திருப்பதி"
- செல்வப்பெருந்தகை தனது மகள் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி வருகிறார்.
- கிறிஸ்தவரான செல்வப்பெருந்தகை தனி தொகுயில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக பாஜக குற்றச்சாட்டு
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது மகள் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு வழங்கி அழைப்பு விடுத்து வருகிறார்.
இந்நிலையில் இந்த அழைப்பிதழை வைத்து கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த செல்வப்பெருந்தகை தனி தொகுயில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக பாஜக தலைமை செய்தி தொடர்பாக நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இணைக்கப்பட்டுள்ள திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழானது காங்கிரஸ் கட்சி தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை அவர்களின் மகளின் நிச்சயதார்த்த அழைப்பிதழ். மணம் முடிக்க காத்திருக்கும் மணமக்களுக்கு நம் வாழ்த்துகளும், ஆசிகளும்.
இந்த அழைப்பிதழ் செல்வப்பெருந்தகை அவர்களால் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அழைப்பிதழின் வாசகங்கள் செல்வப்பெருந்தகை அவர்கள் கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பதை உறுதிபட தெரிவிக்கின்றது. திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் கிருஸ்துவராகவோ, இஸ்லாமியராகவோ, ஹிந்துவாகவோ இருப்பதில் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியானது, பட்டியிலன சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி (Reserved Constituency) என்பதும், அந்த தொகுதியில் பட்டியலினத்தை சார்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்றும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட/வெற்றிபெற்ற ஆனால், தாங்கள் கிருஸ்துவ மதத்தை பின்பற்றுகின்றவர்கள் என்பதை மறைத்து பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்று ஏமாற்றி மோசடி செய்தவர்களை தகுதியிழக்க செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதால், திரு.செல்வப்பெருந்தகை அவர்கள், தான் சார்ந்த சமுதாயத்தை மறைத்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி, உண்மையை மறைத்து மோசடி செய்து தேர்தலில் போட்டியிட்டிருப்பது தெளிவாகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல வெட்கக்கேடான செயல் என்பதோடு பட்டியிலன மக்களுக்கு காங்கிரஸ் கட்சி செய்துள்ள மிகப்பெரிய துரோகமாகும்.
தெரிந்தே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள செல்வப்பெருந்தகை அவர்கள் பதவி விலக வேண்டும், காங்கிரஸ் கட்சி பட்டியிலின மக்களிடம் மன்னிப்பு கேட்பதோடு, செல்வப்பெருந்தகையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வப்பெருந்தகை அவர்களின் வெற்றி செல்லாது என்பதை சட்ட ரீதியாக உறுதி செய்வதோடு, அரசியலமைப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக செல்வப்பெருந்தகையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த பதிவை பகிர்ந்து திருமுருகன் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அந்த பதிவில், "இந்த நாராயணன் போல கீழ்த்தரமானவர்களை நாம் அதிகமாக பாஜகவில்தான் பார்க்க இயலும். இவர்கள் கோமியத்தை மட்டுமே குடித்து வளர்வதால், மூளை செயலிழந்து இருப்பது இயல்பானதுதான். திருமணப்பத்திரிக்கையை பார்த்தால் திரு.செல்வப்பெருந்தகை கிருத்துவராக தெரிகிறது, ஆகவே அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டுமென்பதாக 'தற்குறி' நாராயணன் எழுதுகிறார். தமிழுக்கு எதிரான 'ஸ்மார்த்த மதத்தை' சார்ந்த நாராயணின் சாணிமூளையை எளிதில் அம்பல
திரு.செல்வப்பெருந்தகையும், அவரது மனைவி, மகளின் பெயரும் கிருஸ்துவப்பெயர் அல்ல. திரு.செல்வப்பெருந்தகையின் மனைவி திருமதி உமையாள் என்பதும், மகள் செல்வி அக்ஷயா பிரியா என்பதும் கிருஸ்துவப்பெயரல்ல. நாராயணனின் சாணி மூளைக்கு புரியும்படி சொன்னால்,
'உமையாள்' என்பது முழுமையான தமிழ் தெய்வத்தின் பெயர், சைவப்பெயர். சிவனின் மனைவி பார்வதியின் மற்றுமொரு பெயராக திருவாசகத்தில் குறிப்பிடப்படுகிறது. பிறகெப்படி, திரு.செல்வப்பெருந்தகையை கிருத்துவர் என முத்திரை குத்துகிறார் 'சாணிமூளை' நாராயணன்?
மணமகன் குடும்பத்தார் பெயரே கிருத்துவ பெயராக உள்ளது. மதம்-சாதி கடந்து ஆண்-பெண் நேசத்தை போற்றுகிற பண்பைத்தான் திரு.செல்வப்பெருந்தகையின் இல்லத்திருமணம் நமக்கு உறுதி செய்கிறது.
தன் மகளை திருமணம் செய்யப்போகும், மணமகன் குடும்பம் கிருத்துவராக இருப்பதற்காக திரு.செல்வப்பெருந்தகையை எவ்வாறு கிருத்துவரென முத்திரை குத்தி பதவி நீக்கம் செய்யச் சொல்கிறார் 'சாணிமூளை' நாராயணன்?
மகள் திருமணம், மருமகனின் இல்லவழியில் கிருத்துவ முறையில் நடப்பதால் செல்வப்பெருந்தகை கிருத்துவர், அதனால் சட்டமன்ற உறுப்பினர் பதவி தகுதியிழக்க வேண்டும் என நாராயணன் சொல்வது கலவர புத்தி, சங்கித்தன புத்தி.
சனாதன-சாணிகளுக்கு மதம், சாதி பாகுபாடு பார்ப்பதைத் தவிர, ஆக்கப்பூர்வமாக மூளை செயல்படாது. இவர்களை போன்ற கலவரக் கும்பல்களை குஜராத்துக்கு விரட்டுவதே தமிழ்நாட்டுக்கு நல்லது.
நாராயணன் போன்ற 'ஸ்மார்த்த' மதத்தை சார்ந்த பார்ப்பனர்கள், ஆயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்குள் தமிழர்களுக்கு எதிராக கலவரம், கொலை, கொள்ளை செய்வதை வழக்கமாக கொண்டவர்கள் என்பது வரலாறு.
செல்வப்பெருந்தகையின் இல்லத்திருமண விழாவிற்கு வாழ்த்துகளை தெரிவிப்போம். மணமகள் செல்வி அக்ஷயா ப்ரியா மணமகன் திரு.ஆர்ஜன்ராயர் ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். தமிழ் மொழிபோல், தமிழ்நாடு போல் அனைத்து வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன். உங்களது வம்சாவழியினர், சாதி-மத-சனாதன பேதமற்ற தமிழ்நிலத்தில் வாழும் வகையில் சங்கிகளை விரட்டியடித்து, தமிழ்நாட்டை தூய்மைப்படுத்துவோம் என உறுதி கூறி வாழ்த்துகிறோம். நீங்களும் வாழ்த்துங்கள். சனாதனம் ஒழியட்டும். ஸ்மார்த்த பார்ப்பனர்கள் வெளியேறட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- நிலத்தடி நீர் ஆணைய விளம்பரத்தை சுட்டிக்காட்டி தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின
- தமிழகத்தில் நிலத்தடி நீர் மேலாண்மை விதிமுறைகள் தமிழக அரசினால் கையாளப்பட்டு வருகின்றன.
சென்னை:
தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நிலத்தடி நீர் எடுப்பதற்கு அனைவரும் முறையான அனுமதி பெற வேண்டும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கடந்த சில தினங்களாக, அந்த ஆணையத்தின் விளம்பரத்தை சுட்டிக்காட்டி தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்திற்கு இது பொருந்தாது என்பதை அறிந்துகொள்ளாமல் சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த பல நிறுவனங்கள் வெளி மாநிங்களில் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வரும் நிலையில், பொதுவான விளம்பரமாகவே இது கொடுக்கப்பட்டுள்ளது. 20 மாநிலங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் ஆணையங்கள் இல்லாத நிலையில், அந்த மாநிலங்களில் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அப்பணியினை செய்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீர் ஆணையங்கள் நிலத்தடி நீர் குறித்த விவகாரங்களை கவனித்து கொள்ளும். மேலும், தமிழகத்தில் நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் தமிழக அரசினால் கையாளப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் வழிகாட்டுதலோடு முறையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது உள்ள விதிமுறைகளே தொடர்கிறது.

இந்த பொது அறிவிப்பு எண் : 3 /2022 விளம்பரம் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 20 மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் இணைய தளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறி உள்ளார்.
- படுகொலை செய்வதை வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் பதிந்தது கொடூர செயல்.
- மதத்தின் பெயரால் சட்டத்தை கையிலெடுத்து, கொலை செய்யம் உரிமை யாருக்கும் இல்லை.
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ராஜஸ்தானில் கன்ஹையாலால் என்ற தையற்காரர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். துணி தைக்க அளவு கொடுப்பதாக சொல்லிக் கொண்டு தையற்கடைக்குள் சென்ற ரியாஸ் மற்றும் முகமது என்ற இரு நபர்கள் கன்ஹையா லாலை கடைக்குள்ளே வெட்டி படுகொலை செய்வதை அவர்களே வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் பதிந்ததும் உள்ளது கொடூர செயல்.
கன்ஹையாலால் நுபூர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவு செய்ததை அடுத்து இந்த படுகொலை நடைபெற்றுள்ளது. கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு விட்டாலும், ஏற்கனவே பல மிரட்டல்கள் விடப்பட்டிருந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு கன்ஹையாலாலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தவறியது. கொடூரமான இந்த கொலைச் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மதத்தின் பெயரால் சட்டத்தை கையிலெடுத்து, கொலை செய்யம் உரிமை யாருக்கும் இல்லை. காட்டுமிராண்டித்தனமான இந்த கொடூர செயலை செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதோடு மதத்தின் பெயரால் நடைபெறும் படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






