தமிழ்நாட்டை த.வெ.க. தலைவர் விஜய்தான் ஆள்வார் - செங்கோட்டையன்

ஆதவ் அர்ஜுனா முன்மொழிந்த தீர்மானத்தை அனைவரும் ஏற்பதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்தார்.ஜனநாயகன் படத்தை முடக்கினாலும் ஜனநாயகத்தை காக்கும் ஒரே குரல் த.வெ.க. தலைவர் விஜயின் குரல் தான்.
தமிழ்நாட்டை த.வெ.க. தலைவர் விஜய்தான் ஆள்வார் - செங்கோட்டையன்
Published on

சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தீர்மானத்தை முன்மொழிந்தார்.

ஆதவ் அர்ஜுனா முன்மொழிந்த தீர்மானத்தை அனைவரும் ஏற்பதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்தார்.

இந்நிலையில் நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

* 234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர் என தீர்மானம் நிறைவேற்றப்படும்.

* ஜனநாயகன் படத்தை முடக்கினாலும் ஜனநாயகத்தை காக்கும் ஒரே குரல் த.வெ.க. தலைவர் விஜயின் குரல் தான்.

* 234 தொகுதிகளிலும் த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி பெறுவார்.

* தமிழ்நாட்டை த.வெ.க. தலைவர் விஜய்தான் ஆள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com