என் மலர்tooltip icon

    இந்தியா

    • முத்துராமலிங்க தேவரின் புனிதமான குரு பூஜையின்போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன்.
    • விவசாயிகளின் நலனுக்கு தேவரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது.

    பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்குப் புனிதமான குரு பூஜையின்போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன்.

    நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது.

    கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    • காரில் நம்பர் பிளேட் இல்லை.
    • இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 55 வினாடிகளே ஓடும் அந்த வீடியோவில், குடியிருப்புகள் நிறைந்த தெருவில் 3 வயது சிறுமி தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தெருவுக்குள் கார் ஒன்று நுழைகிறது. அந்த காரை சிறுவன் ஓட்டி வருகிறான். அச்சிறுவன் சிறுமி விளையாடிக் கொண்டிருப்பதை கவனிக்காமல் சிறுமி மீது மோதி காரை ஓட்டிச் செல்கிறான்.

    அந்த கார் சிறிது தூரம் சென்றவுடன் நிற்கிறது. அப்போது காருக்கு அடியில் சிக்கிய சிறுமி காயமின்றி உயிர் தப்பிக்கிறார். சத்தமிட்டபடியே காரின் அடியில் இருந்து ஊர்ந்து சிறுமி வெளியே வருகிறாள். அச்சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தினர் ஓடி வருகின்றனர்.

    இதனிடையே, காரில் இருந்து இறங்கிய சிறுவனை, சிறுமியின் தாயார் கடுமையாக தாக்குகிறார். விபத்தை ஏற்படுத்திய காரில் நம்பர் பிளேட் இல்லை. இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் சிறுமி மற்றும் சிறுவனின் பெற்றோரின் கவனக்குறைவாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வாதாக சமூக வலைத்தள பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



    • 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சாமி தரிசனம் செய்ய முடியும்.
    • தரிசனத்திற்கு திருப்பதியில் டோக்கன்கள் வழங்கப்படுவது சிரமத்தை ஏற்படுத்தும்.

    திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி எஸ். சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் 5, ஆயிரம் கோவில்கள் கட்டப்பட உள்ளன.

    நாட்டில் உள்ள அனைத்து தேவஸ்தான கோவில்களிலும் அன்னபிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்டராமர் கோவிலில் ரூ.37 கோடியில் 100 அறைகள் கொண்ட தங்குமிட வளாகத்தைக் கட்டவும், மேலும் ரூ.3 கோடியில் ஒண்டிமிட்டாவில் ஒரு புனித வனத்தை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    வரும் டிசம்பர் மாதம் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் 10 நாட்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இதனால் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சாமி தரிசனம் செய்ய முடியும்.

    இந்த தரிசனத்திற்கு திருப்பதியில் டோக்கன்கள் வழங்கப்படுவது சிரமத்தை ஏற்படுத்தும். எனவே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    நேரடியாக எத்தனை டோக்கன்கள் எவ்வாறு வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய குழு உறுப்பினர்கள் மற்றும் நிபுணர் குழுவை அமைப்பதற்கு அறங்காவலர் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிபுணர் குழு வழங்கும் அறிக்கையை பொறுத்து இன்னும் 20 நாட்களில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

    திருப்பதி கோவிலில் நேற்று 64048 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 19838 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.4 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

    • 2 போக்குவரத்து போலீசார் வாலிபரை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாததற்காக அவருக்கு அபராதம் விதித்தனர்.
    • விதிமுறைகளை மீறிய போலீசாருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று வாலிபருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் குரல் எழுப்பினர்.

    மும்பையை அடுத்த தானே நகரில் உள்ள வாக்ளே எஸ்டேட் பகுதியில் சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அந்த பகுதியில் பணியில் இருந்த 2 போக்குவரத்து போலீசார் வாலிபரை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாததற்காக அவருக்கு அபராதம் விதித்தனர். பின்னர் 2 போலீசாரும் தாங்கள் வந்த ஸ்கூட்டரில் ஏறி அங்கிருந்து கிளம்ப தொடங்கினர். அப்போது போக்குவரத்து போலீஸ்காரர் ஓட்டிய ஸ்கூட்டரில் நம்பர் பிளேட் தெளிவில்லாமல், எண்கள் அழிந்து இருந்ததை வாலிபர் கண்டார்.

    சட்டம் அனைவருக்கும் ஒன்று தானே!, பொதுமக்களுக்கு ஒரு நீதி, அதிகாரத்தில் உள்ள போலீசாருக்கு ஒரு நீதியா? என பொங்கி எழுந்த வாலிபர் அந்த போலீஸ்காரரிடம் தட்டிக்கேட்டார். ஆனால் அவர் அலட்சியமாக ஸ்கூட்டரில் கிளம்பி சென்றார். உடன் இருந்த போலீஸ்காரரும் பின்னால் அமர்ந்து பயணித்தார். கடுப்பான வாலிபர் ஸ்கூட்டரை துரத்தி சென்று, அதை பின்னால் பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தினார். பின்னர் விதிமுறையை மீறிய உங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என போலீசாருடன் அந்த வாலிபர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே போலீசாரை நோக்கி தனது செல்போனில் வீடியோவும் எடுக்க தொடங்கினர். இதை வேடிக்கை பார்த்தவர்களும் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

    விதிமுறைகளை மீறிய போலீசாருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று வாலிபருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் குரல் எழுப்பினர். இந்த விவகாரம் உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. இதுகுறித்து தானே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ்காரருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாலிபருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இரு தரப்பின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் மேல் விசாரணை நடந்து வருகிறது என்றார். இருப்பினும் வாலிபருக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் சலசலப்பையும், பொதுமக்கள் மத்தியில் விறுவிறுப்பையும் எகிற செய்துள்ளது.



    • ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
    • பிஆர்எஸ் வேட்பாளர் மாகாந்தி கோபிநாத்திடம் தோல்வியடைந்தார்.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீன், தெலங்கானா மாநில அமைச்சரவையில் இடம்பெற உள்ளார்.

    வரும் வெள்ளிக்கிழமை அன்று அசாருதீன் அமைச்சராகப் பதவியேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    நவம்பர் 11 அன்று ஐதராதாபாத் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அசாருதீனை அமைச்சரவையில் சேர்க்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.

    இந்தத் தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் அசாருதீனை அமைச்சராக்குவது, இடைத்தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை கவரும் காங்கிரசின் வியூகம் என்று கூறப்படுகிறது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் அசாருதீன் சட்ட மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

     2023 சட்டமன்றத் தேர்தலில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்ட அசாருதீன், பிஆர்எஸ் வேட்பாளர் மாகாந்தி கோபிநாத்திடம் தோல்வியடைந்தார்.

    பிஆர்எஸ் எம்எல்ஏ மாகாந்தி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் காலமானதால் அந்தத் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடக்கிறது.

    தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஒரு முஸ்லிம் எம்எல்ஏவோ அல்லது அமைச்சரோ இல்லை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

    • ஒரு வருடம் எல்லாம் நன்றாக இருந்தாலும், அதன் பிறகு முகேஷின் நடத்தை மாறியது.
    • தீஜாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    உத்தரப்பிரதேசத்தில் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கணவன் வீட்டு மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

     ஜான்சியில் ராணிப்பூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த தீஜா (26 வயது) 2022 ஆம் ஆண்டு முகேஷ் அஹிர்வாரை  திருணம் செய்தார்.

    திருமணத்திற்குப் பிறகு ஒரு வருடம் எல்லாம் நன்றாக இருந்தாலும், அதன் பிறகு முகேஷின் நடத்தை மாறியது.

    அவர் வீட்டை விட்டு அதிகம் விலகி இருந்த முகேஷ் செல்லும்போதெல்லாம் தீஜாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

    இந்த வரிசையில் நீண்ட நாள் கழித்து நேற்று முன் தினம், முகேஷ் வீட்டிற்கு வந்து தீஜாவை தாக்கி, கட்டாய உடலுறவு கொண்டுள்ளார்.

    நேற்று, மீண்டும் உடலுறவு கொள்ள முயன்றபோது தீஜா கடுமையாக எதிர்வினை ஆற்றினார். இதனால் கோபமடைந்த முகேஷ் தீஜாவை அவர்கள் வசிக்கும் இரண்டு மாடி கட்டிட வீட்டின் மாடிக்கு மாடிக்கு தூக்கிச் சென்று அங்கிருந்து கீழே போட்டுள்ளார்.

    தீஜாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஜான்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர் தெரிவித்தனர்.

    கணவர் மீது தீஜா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
    • பீகார் தேர்தலுக்கான 101 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது.

    பீகாரில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் என்டிஏ கூட்டணி மற்றும் மகாபந்தன் (இந்தியா) கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து 32 இடங்களில் மட்டும் களம் காண்கிறது.

    இந்நிலையில் பீகாரின் கோபால்கஞ்ச் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த ஓவைசி, தேர்தல் பிரச்சாரத்தின் போது பீகாரில் இருந்து ஊடுருவல்காரர்களை ஒழிப்போம் என்று அமித் ஷா பலமுறை கூறி வருகிறார்.

    இருப்பினும், மோடிக்கும் ஷாவுக்கும் மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். ஊடுருவல்காரர்கள் டெல்லியில் உள்ளனர்.

    வங்கதேச மக்களால் வெளியேற்றப்பட்ட ஒரு ஊடுருவல்காரரை மோடி வரவேற்று, அவரை சகோதரி என்று அழைத்து வருகிறார்" என்று ஷேக் ஹசீனாவை மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சித்தார்.

    தொடர்ந்து பேசிய ஓவைசி,"அனைவரின் வளர்ச்சிக்கும் பாடுபடுவதாகக் கூறும் நரேந்திர மோடி, பீகார் தேர்தலில் ஒரு முஸ்லிமுக்கும் ஒரு சீட் கூட வழங்கவில்லை. பீகார் தேர்தலுக்கான 101 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இடம்பெறவில்லை" என்று குறிப்பிட்டார்.   

    • மில்லியன் கணக்கான மக்கள் அவாமி லீக்கை ஆதரிக்கிறார்கள்.
    • செயல்படும் ஒரு அரசியல் அமைப்பை விரும்பினால், மில்லியன் கணக்கான மக்களின் வாக்குரிமையை பறிக்க முடியாது.

    வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இளைஞர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது.

    ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வசித்து வரும் ஷேக் ஹசீனா, "டெல்லியில் சுதந்திரமாக வாழ்கிறேன். ஆனாலும், சொந்த நாடு திரும்ப விரும்புகிறேன். அதேவேளையில், தேர்தலுக்கு பிறகு எந்த அரசு அமைந்தாலும் வங்கதேசம் திரும்ப போவதில்லை. தனது கட்சியை ஒதிக்கு வைத்து விட்டு தொடர்ந்து இந்தியாவில் இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

    அவாமி லீக் கட்சிக்கு தடைவிதித்தது, அநீதி மட்டுமல்ல. ஆது தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்வதாகும். அடுத்த அரசாங்கம் தேர்தல் சட்டப்பூர்வத்தை கொண்டிருக்க வேண்டும். மில்லியன் கணக்கான மக்கள் அவாமி லீக்கை ஆதரிக்கிறார்கள். எனவே தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள். செயல்படும் ஒரு அரசியல் அமைப்பை விரும்பினால், மில்லியன் கணக்கான மக்களின் வாக்குரிமையை நீங்கள் பறிக்க முடியாது.

    அவாமி கட்சி வாக்காளர்களை மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க நாங்கள் கேட்கமாட்டோம். பொது அறிவு மேலோங்கி, நாங்களே தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவோம் என்று இன்னும் நம்புகிறோம். வங்கதேசத்தின் எதிர்காலத்தில் அவாமி லீக் இறுதியாக முக்கிய பங்கு வகிக்கும் வகையில் திரும்பும். அது அரசாக அல்லது எதிர்க்கட்சியாக இருக்கலாம். எனது குடும்பத்தினர் தலைமை தாங்க தேவையில்லை.

    நாம் அனைவரும் விரும்பும் வங்கதேசத்திற்காக, முதலில் அரசியலமைப்பு சட்டம் திரும்ப வேண்டும். அரசியல் நிலைத்தன்மை ஏற்பட வேண்டும். தனிநபர் அல்லது குடும்பம் நாட்டின் எதிர்காலத்தை வரையறுக்க முடியாது.

    அரசாங்கம் சட்டப்பூர்வமாகவும், அரசியலமைப்புச் சட்டம் நிலைநிறுத்தப்பட்டு, சட்டம் ஒழுங்கு உண்மையிலேயே நிலைத்திருக்கும் வரையில் நான் சொந்த நாடு செல்ல விரும்புகிறேன்.

    இவ்வாறு ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

    • சான்றிதழ்களை கொடுக்கச் சொல்லுங்கள். அதன்பின் பிரசாரத்திற்கு அனுமதியுங்கள்.
    • மரங்கள், மின்சார கம்பங்களில் கட்டி வையுங்கள். ஆனால், உங்களுடைய கைகளை நீட்டி விடாதீர்கள்.

    இந்திய தேர்தல் ஆணையம் 2ஆம் கட்டமாக 12 மாநிலங்களில் SIR பணி மேற்கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது. இதற்கான பணி நேற்றில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியில் பெயர் தக்கவைக்க, சேர்க்க பிறப்பு சான்றிழல் தேவை என தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலானவர்களிடம் பிறப்பு சான்றிதழ் இருக்காது. மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பலர் பிறந்திருப்பார்கள். இதனால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், SIR பணியை கடுமையாக எதிர்க்கின்றனர்.

    இந்த நிலையில்தான், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான அபிஷேக் பானர்ஜி, பாஜக உள்ளூர் தலைவர்கள் பிரசாரம் செய்து வந்தால், அவர்களிடம் பிறப்பு சான்றிதழ்களை கேளுங்கள் என மக்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.

    இது தொடர்பாக அபிஷேக் பானர்ஜி கூறியதாவது:-

    பிரசாரத்திற்கான லோக்கல் பாஜக தலைவர்கள் உங்கள் இடங்களுக்குள் நுழைந்தால், அவர்களை தடுத்து நிறுத்துங்கள். பின்னர் அவர்களுடைய தந்தை மற்றும் தாத்தா ஆகியோரின் பிறப்பு சான்றிதழ்களை காண்பிக்க சொல்லுங்கள்.

    சான்றிதழ்களை கொடுக்கச் சொல்லுங்கள். அதன்பின் பிரசாரத்திற்கு அனுமதியுங்கள். அது வரைக்கும் அவர்களை கட்டி வையுங்கள். மரங்கள், மின்சார கம்பங்களில் கட்டி வையுங்கள். ஆனால், உங்களுடைய கைகளை நீட்டி விடாதீர்கள். நான் அமைதியை நம்புகிறேன். அவர்களை சான்றிதழ்களை கொடுக்க சொல்லுங்கள். அதன்பின் அவிழ்த்து விடுங்கள். அமித் ஷா மற்றும் பாஜக அரசு உங்களிடம் கேட்பதை, முதலில் அவர்களை காண்பிக்க சொல்லுங்கள்.

    இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    தேர்தல் ஆணையம் ஆதார்டு கார்டு உள்பட 12 ஆவணங்களை கேட்கிறது. அதில் ஒன்றுதான் பிறப்பு சான்றிதழ் ஆகும்.

    • புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வான்வழியாக ஆய்வு செய்தார்.
    • சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தார்.

    வங்கக் கடலில் உருவான புயல் மோன்தா தீவிர புயலாக மாறியது. இந்த புயல் நேற்று இரவு மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் இடையே கரையை கடந்தது.

    இந்த புயல் காரணமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    பல இடங்களில் மரங்கள் பலத்த காற்றால் சாய்ந்தன. ஆபத்தான பகுதிகளில் இருந்து 76,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். 800 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டது.

    இந்நிலையில், ஆந்திராவில் மோன்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டர் மூலம் வான்வழியாக ஆய்வு செய்தார்.

    இதனையடுத்து கொனசீமா மாவட்டத்தில் மோன்தா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட மறுவாழ்வு மையத்தை பார்வையிட்ட சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தார்.

    பின்னர், நீரில் மூழ்கிய பயிர் வயல்களை ஆய்வு செய்த அவர், பயிர் சேதம் விரைவில் மதிப்பிடப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

    • பிரதமர் மோடி உங்கள் வாக்குகளை விரும்புகிறார். நீங்கள் டான்ஸ ஆட சொன்னால் ஆடுவார்.
    • வாக்காளர்களையும், இந்திய ஜனநாயகத்தையும் கேலி செய்துவிட்டார்- பாஜக.

    பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று பிரசாரத்தை தொடங்கினார்.

    முதல் பிரசார கூட்டத்திலேயே பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். பிரதமர் குறித்து ராகுல் காந்தி கூறியதாவது:-

    பிரதமர் மோடி உங்கள் வாக்குகளை விரும்புகிறார். நீங்கள் நரேந்திர மோடியை டான்ஸ ஆட சொன்னால், அவர் டான்ஸ் ஆடுவார். அவர்கள் உங்கள் வாக்குகளை திருடுவதில் ஈடுபட்டுள்ளனர். ஏனென்றால், அவர்கள் இந்த தேர்தலை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள். மகாராஷ்டிரா, அரியானாவில் தேர்தல்களை திருடினார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். பீகாரில் அவர்கள் உங்களுடைய சிறப்பை திருட முயற்சி செய்வார்கள்.

    இவ்வாறு ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார்.

    இதற்கு பாஜக உடனடியாக பதலடி கொடுத்துள்ளது. பாஜக-வின் செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி "ராகுல் காந்தி லோக்கல் குண்டர் போல் பேசுகிறார். பிரதமருக்காக வாக்களித்த அனைத்து மக்களையும் அவமதித்துள்ளார். வாக்காளர்களையும், இந்திய ஜனநாயகத்தையும் கேலி செய்துவிட்டார்" என பதில் கொடுத்துள்ளார்.

    • டெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடுக்கப்பட்டதால் காற்று மாசுபாடு அதிகரித்தது.
    • டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டமிட்டது

    தீபாவளி பண்டிகையன்று டெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடுக்கப்பட்டதால் காற்று மாசுபாடு அதிகரித்தது.

    காற்றின் தரம் மிக மோசமடைந்ததால் டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டமிட்டது.

    அவ்வகையில் டெல்லியில் காற்று மாசை குறைக்க கிளவுட் சீடிங் மூலம் செயற்கை மழையை பெய்ய வைக்க உத்தரபிரதேசத்தின் IIT கான்பூரிலிருந்து நேற்று ஒரு விமானம் புறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் காற்று மாசை குறைக்க ரூ.3.2 கோடி செலவில் செயற்கை மழை பெய்விக்க IIT கான்பூர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இதுகுறித்து விளக்கம் அளித்த IIT கான்பூர் இயக்குநர், "6,000 அடி உயரத்தில் பறந்த விமானம் மூலம் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் திரண்டிருந்த மேகங்கள் மீது ரசாயனங்கள் தெளித்து மழை பெய்விக்க முயன்ற நிலையில், மேகங்களில் போதிய ஈரப்பதம் இல்லாததால் திட்டம் தோல்வி அடைந்தது" என்று தெரிவித்தார். 

    ×