என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- மாநாடு நடைபெறும் பகுதி மற்றும் சாலைகளில் சிறிய உணவு கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ளன.
மதுரை:
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை அருகே உள்ள பாரபத்தியில் நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் மாநாடு திடலில் குவிய தொடங்கி உள்ளனர். பெண்கள் உட்பட லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் மாநாட்டு நடைபெறும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மாநாட்டை முன்னிட்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக பாரப்பத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை (21-ந் தேதி) ஒரு நாள் மட்டும் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் அறிவித்துள்ளார்.
அதன்படி மாநாட்டு நடைபெறும் திடலை ஒட்டியுள்ள கூடக் கோவில், மேல உப்பிலிக்குண்டு சந்திப்பு, தூம்பைக்குளம், கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, வலையங்கு ளம் டோல்கேட், திருமங்கலம்-உசிலம்பட்டி சந்திப்பு, ஆலம்பட்டி, மொட்டமலை, தோப்பூர், அருப்புக்கோட்டை ரோடு சந்திப்பு, சிவரக்கோட்டை, திருமங்கலம்-உசிலம்பட்டி சந்திப்பு, கூத்தியார்குண்டு ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை ஒருநாள் அடைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழக மாநாட்டை முன்னிட்டு பாரபத்தியில் திடீர் கடைகள் முளைத்துள்ளன. மாநாடு நடைபெறும் பகுதி மற்றும் சாலைகளில் சிறிய உணவு கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கு போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். மாநாடு நடைபெறும் பகுதியில் கடை அமைப்பவர்கள் வாகனங்கள் செல்லும் வழியில் ஆக்கிரமித்து அமைக்கக்கூடாது என கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடையூறாக அமைக்கப்பட்டால் கடைகள் அகற்றப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
கடந்த முறை விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டின்போது கடைகள் எதுவும் இல்லாததால் மாநாட்டிற்கு வந்த ஏராளமானோர் தண்ணீர் பாட்டில், உணவு உள்ளிட்டவர்களை வாங்க முடியாமல் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாநாட்டு திடலுக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் வருவதற்கு தனித்தனி நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
- மாநாட்டு பாதுகாப்பு பணியில் 3500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட இருக்கின்றனர்.
மதுரை:
த.வெ.க. 2-வது மாநில மாநாடு நாளை (வியாழக்கிழமை) மதுரை பாரபத்தியில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்குகிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை தஞ்சை, மதுரையை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் நடத்த இருக்கின்றனர். 2 மணி நேரம் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளுக்கு பிறகு 4 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் விழா மேடைக்கு வருகிறார். தொடர்ந்து மேடை முன்பு அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார்.
தொண்டர்கள் சந்திப்பு முடிந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்குகிறது. நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வரவேற்புரை ஆற்றுகிறார். அடுத்ததாக மேடையில் நின்றபடி கட்சி கொடியை 'ரிமோட்' மூலம் விஜய் ஏற்றுகிறார். தொடர்ந்து கொள்கை தலைவர்கள் படங்களுக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அடுத்ததாக உறுதிமொழி எடுக்கப்பட்டு கட்சி கொள்கை பாடல்கள் ஒளிபரப்பப்படுகிறது.
இதை தொடர்ந்து மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. நிறைவாக கட்சி தலைவர் விஜய் சிறப்புரை ஆற்றுகிறார். சிறப்புரையில் முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிடுகிறார். விஜய் பேச்சுடன் விழா நிறைவு பெறுகிறது.
மாநாட்டுக்கான பந்தல் அமைப்பு பணி உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் இன்று காலையில் இருந்தே மதுரையில் குவியத் தொடங்கி உள்ளனர். மாநாடு பந்தலில் அதிகாலை நடந்த சிறப்பு யாகத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கலந்து கொண்டார்.
மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் த.வெ.க. தலைவர் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.
இந்திய அளவில் எந்த ஒரு அரசியல் கட்சி மாநாடும் இதுவரை நடந்திராத வகையில் நாடே திரும்பி பார்க்கும் மாநாடாக த.வெ.க. மாநாடு அமையும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மாநாட்டு மேடையின் முகப்பு தோற்றத்தில் அண்ணா, எம்.ஜி.ஆருடன் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் மற்றும் 'வரலாறு திரும்புகிறது' என்ற வாசகத்துடன் கட்அவுட் வைக்கப்பட்டு உள்ளது. மேடையின் அருகே கொள்கை தலைவர்களுடன் விஜய் இருப்பது போன்ற பேனர்கள் வரிசையாக வைக்கப்பட்டு உள்ளது.
மாநாட்டில் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல் வாகனம் நிறுத்தும் இடங்கள், குடிநீர் வசதி, மருத்துவ குழு, சுகாதார வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்கள் அமர்வதற்கு 60 பாக்ஸ்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பாக்ஸ்களிலும் சுமார் 2,500 பேர் அமரும் வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.
குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க ராட்சத குடிநீர் தொட்டிகள் மாநாடு பந்தலை சுற்றிலும் அமைக்கப்பட்டு உள்ளது.
தொண்டர்கள் அனைவருக்கும் தண்ணீர் பாட்டில், ஜூஸ், பிஸ்கட் வழங்கப்பட உள்ளது. மாநாட்டுக்கு வரும் ஒவ்வொருவரின் கைகளிலும் ஒரு லிட்டர் காலி பாட்டில் வழங்கப்பட்டு குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் பிடித்துக் கொள்ளும் வகையில் 10 லட்சம் பாட்டில்கள் கொடுக்கப்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மீறி வரும் பெண்களுக்கு முன்னேற்பாடாக பிங்க் அறை அமைக்கப்பட்டு உள்ளது.
மாநாட்டு திடலில் 400 மருத்துவ குழுக்கள், அவசர மருத்துவ சிகிச்சைக்காக தயார் நிலையில் மாநாட்டு பந்தலை சுற்றி இருப்பார்கள். கூட்டத்தில் யாரேனும் பாதிக்கப்பட்டால் டிரோன் மூலம் அவசர மருத்துவ சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இது மட்டுமின்றி தொண்டர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் 50 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளது.
கூட்டத்தில் நெரிசல் ஏற்படாத வண்ணம் கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புக்கு கட்சி சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய சீருடையணிந்த தன்னார்வலர்கள் ஈடுபட இருக்கின்றனர்.
மாநாட்டு திடலுக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் வருவதற்கு தனித்தனி நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநாட்டு பாதுகாப்பு பணியில் 3500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட இருக்கின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த விக்கிரவாண்டி மாநாட்டை விட மதுரை மாநாட்டுக்கு 3 மடங்கு கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மதுரை த.வெ.க. மாநில மாநாடு தமிழக அரசியலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சாமி சிலைக்கு நகை சாத்துவதில் சிவாச்சாரியார்கள் - திரிசுந்தரர்கள் இடையே ஏற்பட்ட மோதல்
- சப்பரத்தில் சாமி புறப்பாடு 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் 6-ம் நாளான இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி சிலைக்கு நகை சாத்துவதில் சிவாச்சாரியார்கள் - திரிசுந்தரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால், சப்பரத்தில் சாமி புறப்பாடு 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
இதனால் சாமி புறப்பாட்டை பார்ப்பதற்காக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே கோயில் நிர்வாகத்தினர் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
- தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் கணக்கெடுக்கப்படுவார்கள்.
- தமிழ்நாட்டில் தற்போது சுமார் 35 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் கணக்கெடுக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் தற்போது சுமார் 35 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் வருகைக்கான காரணம், எங்கு உள்ளனர், வாழ்க்கை நிலை, சுகாதார நிலை, என்ன பணி செய்கின்றனர் என்பதை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார்.
- கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
தி.மு.க. பொருளாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த சில மாதங்களாக தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி மறைவையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் எம்.பி. அவரது வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மகன்கள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, செல்வம், தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார் என்றார்.
- மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. அரவிந்தை சந்தித்து புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதை பார்த்து, கோபமடைந்த அவர், தி.மு.க. அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் இது போன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்கின்றனர். ஆம்புலன்சில் நோயாளி இல்லை. நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத தி.மு.க. அரசு வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார் என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பள்ளிக்கொண்டாவில் வேலை பார்க்கிறேன். பெண் நோயாளி ஒருவரை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அணைக்கட்டு சென்ற போது அ.தி.மு.க.வினரிடம் கூட்டம் முடிந்து விட்டதா என கேட்டேன். கூட்டம் முடிந்து விட்டது என கூறியதால் அவ்வழியாக சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை தாக்கி, வாகனத்தை சேதப்படுத்தினர் என்றார்.
இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை மிரட்டும் வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. அரவிந்தை சந்தித்து புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.
- ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
- மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
ராமேசுவரம்:
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து 55 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 61 பேர் எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட் டது.
கைதான மீனவர்கள் இலங்கை மன்னார் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 11-ம் தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
இதனால் ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று 10-வது நாளாக ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. வேலைநிறுத்தத்தால் இதுவரை ரூ.15 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். 10 நாட்களாக நீடிப்பதால் வருமானமின்றி குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளது. இதனால் கடன் வாங்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைக்கு தான் செல்ல வேண்டும். எனவே இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். வேலைநிறுத்தம் வாபஸ் பெறாவிட்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கவலையுடன் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று மீனவர்களின் விடுதலை கோரிக்கையை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் பெண்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தங்கச்சிமடம் ரெயில் தண்டவாளத்தில் போராட்டக்காரர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் ராமேசுவரம்-தாம்பரம் ரெயில் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் அதன் பின் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதனிடையே இலங்கை சிறையில் உள்ள பாம்பன் நாட்டு படகை மீனவர்கள் ஒன்பது பேருக்கு தலா ரூ.3.50 கோடி (இலங்கை பணம்-இந்திய மதிப்பில் ரூ.ஒரு கோடி) கூடிய அபராதத்துடன் விடுதலை செய்து புத்தகம் நீதிமன்றம் உத்தரவிட்டது. மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் பாம்பன் பகுதி மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம்!
- ஒண்டிவீரனின் நீடித்த மரபு, மீள்தன்மை மற்றும் சுயசார்பு வளர்ச்சியடைந்த பாரதம் 2047-ஐ உருவாக்க நம்மை தொடர்ந்து வழிநடத்துகிறது.
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில்,
கொடுங்கோல் காலனித்துவ ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி மகத்தான தியாகம் செய்த அச்சமற்ற தளபதி, தொலைநோக்குத் தலைவர் மற்றும் வீரமிக்க சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துகிறோம். அவரது ஈடு இணையற்ற துணிச்சலும் தியாகமும் நமது நாட்டின் நீண்ட சுதந்திரப் போராட்டத்துக்கு உத்வேகம் அளித்தன. அவரது நீடித்த மரபு, மீள்தன்மை மற்றும் சுயசார்பு வளர்ச்சியடைந்தபாரதம்2047- ஐ உருவாக்க நம்மை தொடர்ந்து வழிநடத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஆங்கிலேயருக்கு நெல்லைக் கப்பமாகக் கட்டமறுத்து, நெற்கட்டும்செவலை நெற்கட்டான்செவலாக மாற்றி, அந்நிய ஆதிக்கத்திற்குச் சவால் விட்ட தென்மலைப் போரின் மாவீரர் ஒண்டிவீரனின் நினைவுநாளில் அவருக்கு என் வீரவணக்கம்!
சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலை உணர்வோடு தென்தமிழ்நாட்டின் தீரர்களான பூலித்தேவனும் படைத்தளபதி ஒண்டிவீரனும் போர் செய்தனர் எனும் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
- மேடை முன்பு அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார்.
மதுரை:
த.வெ.க. 2-வது மாநில மாநாடு நாளை மதுரை பாரபத்தியில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்குகிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை தஞ்சை, மதுரையை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் நடத்த இருக்கின்றனர். 2 மணி நேரம் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு பிறகு 4 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் விழா மேடைக்கு வருகிறார். தொடர்ந்து மேடை முன்பு அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார்.
நாளை நடைபெற உள்ள மாநாட்டில் த.வெ.க. விஜய் என்ன பேசப்போகிறார் என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே த.வெ.க. மாநாட்டுக்காக பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இனாம்கரிசல்குளத்தில் பேனர் வைக்க கம்பி எடுத்துச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் காளீஸ்வரன் (19) உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் - சுகதுக்கங்கள் எல்லாவற்றையும் இணைந்தே எதிர்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவுச் செய்கிறார்கள்.
- பொதுவாழ்வுக்கு நான் வரும் வரை, அப்பாவுக்கு செல்லப்பிள்ளை - அம்மா என்றால் கண்டிப்பு.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 50-வது திருமண நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அம்மா - அப்பா இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்க என் அன்பு வாழ்த்துகள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அம்மாவும் - அப்பாவும் இல்வாழ்வில் இன்று பொன்விழா காண்கிறார்கள்!
வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் - சுகதுக்கங்கள் எல்லாவற்றையும் இணைந்தே எதிர்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவுச் செய்கிறார்கள்.
மணமான சில மாதங்களிலேயே மிசா சிறைவாசம் - இடைவெளியில்லா சுற்றுப்பயணங்கள் - கடும் அரசியல் சூழல்கள் - தொடர் மக்கள் பணி என எல்லாவற்றிலும் அப்பாவுக்கு பெருந்துணையாக இருந்து வருகிறார் அம்மா!
அம்மாவின் உணர்வுகள்- நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் குடும்பத்தலைவராக அவருக்கு பக்கபலமாக திகழ்கிறார் அப்பா!
பொதுவாழ்வுக்கு நான் வரும் வரை, அப்பாவுக்கு செல்லப்பிள்ளை - அம்மா என்றால் கண்டிப்பு.
இப்போது, அப்பா கண்டிப்பவராகவும் - அம்மா அன்பு காட்டி அரவணைப்பவராகவும் பொதுவாழ்வில் என்னை வழிநடத்துகிறார்கள்!
அம்மா - அப்பா இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்க என் அன்பு வாழ்த்துகள் - முத்தங்கள்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை.
- கடைசியாக தூய்மைப் பணியாளர்கள் பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 1ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு திரண்டனர்.
இதற்கிடையே, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, 'சாலையை மறித்து போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.
இதனையடுத்து 14 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் செய்தனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
தூய்மை பணியாளர்கள் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை. தமிழ்நாடு அரசு மற்றும் மாநகராட்சி பேச்சுவார்த்தை நடத்தி கடைசியாக தூய்மைப் பணியாளர்கள் பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.
- தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும் சமூகநீதியின் அடிப்படையில் உருவாக்கித் தருவது தான்.
- இப்போது இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் யாரை வேண்டுமானாலும் தனியார் நிறுவனங்கள் நியமிக்கும் நிலை உருவாகியுள்ளது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகத்திற்கு 1020 ஓட்டுனர்களும், 1172 நடத்துனர்களும் தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் நியமிப்படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை மறைமுகமாக தனியார் மயமாக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்தே மாநகரப் போக்குவர்த்துக் கழகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகள் தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன. விரைவில் மேலும் 505 மின்சாரப் பேருந்துகள் சென்னையில் இயக்கப்படவுள்ளன. இவை அனைத்துமே ''சென்னை மாநகர கூட்டாண்மை: நீடித்த நகர்ப்புற சேவைகள் திட்டம்'' என்ற தலைப்பிலான ஒப்பந்தத்தின்படி தனியாரால், தனியார் நிறுவனங்களின் ஓட்டுனர்கள் மட்டும் நடத்துனர்களைக் கொண்டு இயக்கப்படவுள்ளன.
மாநகரப் போக்குவரத்துக் கழகங்களில் ஏற்கனவே 875 ஓட்டுனர்கள், 625 நடத்துனர்கள் தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போது மேலும் 2192 ஓட்டுனர்களும், நடத்துனர்களும் குத்தகை முறையில் நியமிக்கப்படும் போது, குத்தகை முறை பணியாளர்களின் எண்ணிக்கை 3692 ஆக அதிகரிக்கும். மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தமுள்ள சுமார் 16 ஆயிரம் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களில் இது கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகும். மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளும், மனிதவளமும் பெருமளவில் தனியார் மயமாக்கப்பட்டு விட்ட நிலையில், அதன் பெயர் மட்டும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் என்று இருப்பது, "மாப்பிள்ளை அவர் தான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" என்ற நகைச்சுவையைத் தான் நினைவுபடுத்துகிறது.
மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை போக்குவரத்துக் கழகங்கள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் மக்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவது மட்டுமல்ல... தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும் சமூகநீதியின் அடிப்படையில் உருவாக்கித் தருவது தான்.
போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் நேரடியாக ஓட்டுனர்களும், நடத்துனர்களும் நியமிக்கப்படும் போது அவர்களுக்கு கவுரமான ஊதியம் வழங்கப்படுவது மட்டுமின்றி, அவர்கள் அனைவரும் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், இப்போது இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் யாரை வேண்டுமானாலும் தனியார் நிறுவனங்கள் நியமிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, பணியாளர்களின் உழைப்பும் சுரண்டப்படும்.
போக்குவரத்துக் கழகங்களுக்கு குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்களை நியமிப்பதன் மூலம் சமூகநீதியை குழி தோண்டி புதைத்தல், உழைப்புச் சுரண்டலை ஊக்குவித்தல், அரசின் வளங்களை தனியாருக்கு தாரை வார்த்தல் ஆகிய முப்பெரும் பாவங்களை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. இதற்காக திமுகவுக்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.






