என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒண்டிவீரன் நினைவுநாள்: ஆளுநர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
    X

    ஒண்டிவீரன் நினைவுநாள்: ஆளுநர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

    • ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம்!
    • ஒண்டிவீரனின் நீடித்த மரபு, மீள்தன்மை மற்றும் சுயசார்பு வளர்ச்சியடைந்த பாரதம் 2047-ஐ உருவாக்க நம்மை தொடர்ந்து வழிநடத்துகிறது.

    சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளனர்.

    ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கொடுங்கோல் காலனித்துவ ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி மகத்தான தியாகம் செய்த அச்சமற்ற தளபதி, தொலைநோக்குத் தலைவர் மற்றும் வீரமிக்க சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துகிறோம். அவரது ஈடு இணையற்ற துணிச்சலும் தியாகமும் நமது நாட்டின் நீண்ட சுதந்திரப் போராட்டத்துக்கு உத்வேகம் அளித்தன. அவரது நீடித்த மரபு, மீள்தன்மை மற்றும் சுயசார்பு வளர்ச்சியடைந்தபாரதம்2047- ஐ உருவாக்க நம்மை தொடர்ந்து வழிநடத்துகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஆங்கிலேயருக்கு நெல்லைக் கப்பமாகக் கட்டமறுத்து, நெற்கட்டும்செவலை நெற்கட்டான்செவலாக மாற்றி, அந்நிய ஆதிக்கத்திற்குச் சவால் விட்ட தென்மலைப் போரின் மாவீரர் ஒண்டிவீரனின் நினைவுநாளில் அவருக்கு என் வீரவணக்கம்!

    சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலை உணர்வோடு தென்தமிழ்நாட்டின் தீரர்களான பூலித்தேவனும் படைத்தளபதி ஒண்டிவீரனும் போர் செய்தனர் எனும் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×