என் மலர்
நீங்கள் தேடியது "ripon building"
- தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை.
- கடைசியாக தூய்மைப் பணியாளர்கள் பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 1ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு திரண்டனர்.
இதற்கிடையே, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, 'சாலையை மறித்து போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.
இதனையடுத்து 14 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் செய்தனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
தூய்மை பணியாளர்கள் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை. தமிழ்நாடு அரசு மற்றும் மாநகராட்சி பேச்சுவார்த்தை நடத்தி கடைசியாக தூய்மைப் பணியாளர்கள் பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.
- அத்துமீறிய காவல் துறையினர் மீதும், அதற்கு உத்தரவிட்டவர்கள் மீதும் உடனடி நடவடிக்கை வேண்டும்.
- போராட்டங்களை எதிர்கொள்ள காவல்துறையை நம்புவதைப் போன்ற அரசியல் பலகீனம் வேறெதுவுமில்லை
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் சிபிஐ(எம்) கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "இரவோடு இரவாக காவல்துறை நடத்திய 'அப்புறப்படுத்துதல்' முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான மனித உரிமை மீறல்.
அதைக் கேள்வி கேட்க சென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் ஏற்றி சுற்றிக்கொண்டே அலைந்தது நாகரீக சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நடவடிக்கை.
அத்துமீறிய காவல் துறையினர் மீதும், அதற்கு உத்தரவிட்டவர்கள் மீதும் உடனடி நடவடிக்கை வேண்டும்.
உரிமைகளுக்காக நடக்கும் போராட்டங்களை எதிர்கொள்ள காவல்துறையை நம்புவதைப் போன்ற அரசியல் பலகீனம் வேறெதுவுமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு அரசு உடனடியாக போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும்.
- கைது செய்யப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களை விடுதலை செய்ய வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் சிபிஐ(எம்) கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பணி நிரந்தரம், தனியார்மய எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய தூய்மை பணியாளர்கள் மிகக் கடுமையாக தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு வெவ்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இரவோடு இரவாக காவல்துறை நடத்திய இந்த 'அப்புறப்படுத்துதல்' முற்றிலும் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் புறம்பானது மட்டுமல்ல, மனித உரிமை மீறலுமாகும்.
ஒரு ஜனநாயக நாட்டில் தங்களுடைய கோரிக்கைகளுக்காக தொழிலாளர்கள் போராடுகிற போது காவல்துறை, நீதிமன்றம், நிர்வாகம் இவற்றின் அணுகுமுறையும் அரசின் அணுகுமுறையும் எளிய மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும்; சட்டத்திற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஆனால், இந்த பிரச்சனையில் மேற்கண்ட அனைத்து அரசு அமைப்புகளும் மூர்க்கத்தனமாகவே இதை கையாண்டுள்ளது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர்களை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்துவதும், அதைக் கேள்வி கேட்க சென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக சொல்லி நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் ஏற்றி சுற்றிக்கொண்டே அலைவதும் நாகரீக சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நடவடிக்கைகள்.
தமிழ்நாடு அரசு உடனடியாக போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். போராட்டத்திற்கு ஆதரவாக பேசியவர்களையும், ஆதரவு தெரிவிக்க வந்தவர்களையும் காவல்துறையினர் தாக்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. சம்பந்தப்பட்ட காவலர்கள் மீதும், தாக்குவதற்கு உத்தாவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், உடனடியான மற்றும் நேரடி தலையீட்டின் மூலம் தூய்மை பணியாளர்களின் பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு காண வேண்டும். அத்துமீறி நடந்து கொண்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக இன்று மாலை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நள்ளிரவில் தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
- தூய்மை பணியாளர்களிடம் அமைச்சர் சேகர் பாபு பேச்சுவார்த்தை நடத்தியது விமார்சனத்துக்கு உள்ளது.
தனியார்மயத்தை கைவிடக்கோரி போராட்டம் நடத்திய தூய்மைப்பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூய்மை பணியாளர்களின் கோரிக்கையும் போராட்டமும்:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 1ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு திரண்டனர்.
வளாகத்திற்குள் அவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை வெளியே அப்புறப்படுத்தினார்கள். அவர்கள் மாநகராட்சி கட்டிடத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டம் செய்தார்கள். பின்னர், கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டமாக நடத்தப்படும் என அறிவித்து நடைபாதையில் பந்தல் அமைத்து தங்களது போராட்டத்தை தொடங்கினார்கள்.

தூய்மைப்பணியாளர்கள் நேற்று 13-வது நாளாக தங்களுடைய போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. பாலகங்கா, த.வெ.க. தலைவர் விஜய் உள்பட ஏராளமானோர் தூய்மைப் பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கிடையே, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, 'சாலையை மறித்து போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.
இதையடுத்து, சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு நள்ளிரவில் தூய்மை பணியாளர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். போராட்டத்தின்போது அனைத்து தூய்மைப்பணியாளர்களும் கையில் தேசிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சேகர் பாபு மீதான விமர்சனம்:
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கே.என். நேரு பேச்சுவார்த்தை நடத்தாமல் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேச்சுவார்த்தை நடத்தியது விமார்சனத்துக்கு உள்ளது.
குறிப்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சேகர் பாபுவிடம், "தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது குறித்து கேட்டதற்கு பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் சேகர் பாபு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
முதலமைச்சர், துணை முதலமைச்சரின் செயல்பாடுகள்:
சென்னையில் கனமழை, வெள்ளம் ஏற்பட்ட பொது தூய்மை பணிகளை துரிதமாக செய்த பணியார்களை நேரில் வந்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் அமர்ந்து உணவும் அருந்தினார். ஆனால் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை பார்க்க முதலமைச்சர் ஒருமுறை கூட நேரில் வரவில்லை. ஏன் துணை முதலமைச்சர் உதயநிதி கூட வரவில்லை.
அதே சமயம் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் கூலி படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர். கூலி தொழிலாளர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் கைது செய்யப்பட்ட நிலையில், கூலி படத்தை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பார்த்தது இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

விடியல் பயணம், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் என்று எளிய மக்களுக்காக பல கோடி ரூபாய் செலவில் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தி வரும் ஸ்டாலின் அரசு போராடி வரும் தூய்மை பணியாளர்களின் குரலை செவிக்கொத்து கேட்காதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. தனியாருக்கு கொடுக்காமல் தூய்மை பணிகளை அரசே ஏற்று நடத்த எது தடுக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
உளவுத்துறை மற்றும் காவல்துறை செயல்பாடுகள்:
நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தான் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை கலைத்து அவர்களை கைது செய்தோம் என்று அரசு தரப்பு கூறுவது ஏற்கத்தக்கதா?
மேலும், தூய்மை பணியாளர்களின் போராட்டத்தில் அந்நிய சக்திகள் நுழைந்து போராட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. அதனால் தான் போராட்டத்தை போலீசார் வைத்து கலைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்ற வாதத்தை அரசு தரப்பு முன்வைக்கிறது என்றால், அந்நிய சக்திகள் நுழையும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.

எதிர்கால விளைவுகள்:
ஒட்டுமொத்தத்தில் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை சரியாக கையாள தெரியாத ஸ்டாலின் அரசின் இந்த செயல் திமுக ஆட்சியின் அழிக்க முடியாத கரும்புள்ளியாக இருக்கப்போகிறது என்றும் ரோம் நகரம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில் நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிந்த கதை போல தூய்மை பணி மேற்கொள்ளும் கூலி தொழிலாளர்களை சந்திக்காமல் கூலி படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல் வரலாற்றின் கருப்பு பக்கத்தில் இடம்பெறும் என்றும் இணையத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
- போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்த தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
- போலீசார் நள்ளிரவில் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
தனியார்மயத்தை கைவிடக்கோரி போராட்டம் நடத்திய தூய்மைப்பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிலையில், 4 இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 1ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு திரண்டனர்.
வளாகத்திற்குள் அவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை வெளியே அப்புறப்படுத்தினார்கள். அவர்கள் மாநகராட்சி கட்டிடத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டம் செய்தார்கள். பின்னர், கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டமாக நடத்தப்படும் என அறிவித்து நடைபாதையில் பந்தல் அமைத்து தங்களது போராட்டத்தை தொடங்கினார்கள்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் நாளுக்குநாள் தீவிரம் அடைந்தது. பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்தநிலையில், தூய்மைப்பணியாளர்கள் நேற்று 13-வது நாளாக தங்களுடைய போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. பாலகங்கா, த.வெ.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் தூய்மைப் பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கிடையே, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, 'சாலையை மறித்து போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.
இதன் காரணமாக காலை 10.30 மணி முதல் ரிப்பன் மாளிகை முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் குவியத் தொடங்கினார்கள். இதனால், ரிப்பன் கட்டிடம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.
பின்னர், 8-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மதியம் 12 மணியளவில் போராட்ட குழுவினருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் போராட்டகுழுவினர் மாலை 4.15 மணியளவில் ரிப்பன் மாளிகை வந்தனர். பின்னர் பேச்சுவார்த்தை தொடங்கிய 15 நிமிடத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் போராட்ட குழுவினர் ரிப்பன் மாளிகையில் இருந்து வெளியேறினார்கள். போராட்டம் நடந்த இடத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவியது. ஐகோர்ட்டு உத்தரவை மீறி தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கோயம்பேட்டில் இருந்து பிராட்வே செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரிப்பன் மாளிகை அருகில் உள்ள போக்குவரத்து சிக்னல் முதல் சென்டிரல் ரெயில் நிலையம் முன்பு உள்ள சிக்னல் வரையில் தடுப்புகள் கொண்டு போலீசார் அடைத்தனர். மறுபகுதியில் உள்ள ஒரு வழி போக்குவரத்து இருவழி போக்குவரத்தாக மாற்றப்பட்டது. இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களை கைது செய்து அழைத்து செல்வதற்காக 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் போராட்டம் நடைபெறும் பகுதியில் நிறுத்தப்பட்டன. போலீசார் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை. தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
காலையில் தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் மாலை 6 மணியளவில் மீண்டும் தனது ஆதரவாளர்களோடு வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்ட பகுதி வழியாக தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக ஏராளமானோர் உள்ளே நுழைய முற்பட்டனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப முயன்றனர். அப்போது, போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்தநிலையில், நள்ளிரவில் தூய்மை பணியாளர்களை போலீசார் அதிரடியாக குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று போராட்டத்தின்போது அனைத்து தூய்மைப்பணியாளர்களும் கையில் தேசிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அடையாறு, கிண்டி, சைதாபேட்டை, வேளச்சேரியில் உள்ள சமூகநல கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
- உத்தேச மதிப்பீடு தயாரித்து அதற்கான ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது.
- இதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை.
சென்னை மாநகராட்சியில் நவம்பர் மாதத்துக்கான மாதாந்திர மன்றக் கூட்டம் கடந்த 29-ந்தேதி ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 358 அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்குவதை வெளி நிறுவனம் மூலம் ஓராண்டுக்கு ஒப்பந்தம் வழங்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, காலை உணவு திட்டத்தை தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்கும் முறைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கவுன்சிலர்களின் எதிர்ப்பையும் மீறி காலை உணவு திட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரித்தன. இந்த நிலையில், காலை உணவு திட்டத்தை தனியாருக்கு கொடுக்கும் டெண்டர் அறிவிப்பு தற்போது கோரப்படவில்லை எனவும், மாநகராட்சி சார்பிலேயே தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சியில் 358 பள்ளிகளில் 1 முதல் 5 - ம் வகுப்பு வரை பயிலும் 65 ஆயிரத்து 30 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், நிர்மாணிக்கப்பட்ட 35 சமையல் கூடங்களில் இருந்து, தினசரி உணவு வழங்கப்பட வேண்டிய அட்டவணையின்படி உயர் அலுவலர்களின் கண்காணிப்பில் காலை உணவு தரமாக தயாரித்து வழங்கும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணியில் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்புடன் ஒப்பந்த அடிப்படையில் காலை உணவு தரமாகத் தயாரித்து வழங்குவதற்கான நிலை ஏற்படுமாயின் அதற்கான உத்தேச மதிப்பீடு தயாரித்து அதற்கான ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது.
இதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






