என் மலர்tooltip icon

    இந்தியா

    • நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
    • அடிவாங்கிய ராகேஷ் கிஷோர் அவர்களை அடிக்காபாய்ந்து சனாதன தர்மம் வாழ்க என கோஷமிட்டுள்ளார்.

    உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததாக கூறி அவர் மீது காலனியை வீரியவர் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர். இதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்நிலையில் நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் சென்றுகொண்டிருந்தபோது அங்கு நடந்து சென்றுகொண்டிருந்த ராகேஷ் கிஷோர் மீது சிலர் காலணி வீசித் தாக்கி உள்ளனர்.

    அவர்களை மற்ற வழக்கறிஞர்கள் தடுக்க முயன்றுள்ளனர். அடிவாங்கிய ராகேஷ் கிஷோர் அவர்களை அடிக்காபாய்ந்து சனாதன தர்மம் வாழ்க என கோஷமிட்டுள்ளார்.

    ராகேஷ் கிஷோரை காலணியால் தாக்குபவர்கள் யார் என்பது குறித்தும் எந்தவித தகவலும் இல்லை. ஆனால் இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

    • சட்டமன்றத்தில் இதுதொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
    • றுத்தைகள் மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதைத் தடுக்க ரூ.1 கோடி மதிப்புள்ள ஆடுகளை காட்டில் விட வேண்டும்.

    சிறுத்தைகள் உணவுக்காக மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதைத் தடுக்க, அதிக எண்ணிக்கையிலான ஆடுகளை காடுகளில் விட வேண்டும் என்று மகாராஷ்டிர வனத்துறை அமைச்சர் கணேஷ் நாயக் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் சிறுத்தைகள் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவரின் தேசியவாத எம்எல்ஏவும் வனத்துறை அமைச்சருமான ஜிதேந்திரா சட்டமன்றத்தில் இதுதொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

    சட்டமன்றத்தில் பேசிய அவர், அஹல்யா நகர், புனே மற்றும் நாசிக் மாவட்டங்களில் சிறுத்தை தாக்குதல்கள் சமீபத்தில் கணிசமாக அதிகரித்துள்ளன.

    சிறுத்தைகளின் நடத்தை மற்றும் வாழ்க்கை முறை மாறிவிட்டன. முன்பு, அவை வன விலங்குகள் என்று விவரிக்கப்பட்டன, ஆனால் இப்போது கரும்புத் தோட்டங்களும் அவற்றின் வாழ்விடமாக மாறிவிட்டன.

    சிறுத்தை தாக்குதல்களில் மக்கள் இறந்த பிறகு மிகப்பெரிய தொகையை இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக சிறுத்தைகள் மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதைத் தடுக்க ரூ.1 கோடி மதிப்புள்ள ஆடுகளை காட்டில் விட வேண்டும்.

    சிறுத்தைகள் ஆபத்தான பகுதிகளில் இந்த முடிவை விரைவில் செயல்படுத்துவோம்" என்று தெரிவித்தார்.   

    • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யநாதெல்லா இந்தியா வந்துள்ளார்.
    • டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சத்யநாதெல்லா இன்று சந்தித்துப் பேசினார்.

    புதுடெல்லி:

    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யநாதெல்லா இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பாக சத்ய நாதெல்லா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஏஐ வாய்ப்பு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் லட்சியங்களை ஆதரிக்க, ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முதல், எதிர்காலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு திறன்கள், உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது எனபதிவிட்டுள்ளார்.

    சத்யநாதெல்லாவை சந்தித்தது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்யநாதெல்லா உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடந்தது. ஆசியாவிலேயே அதிகளவு முதலீட்டை இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்ய உள்ளது மகிழ்ச்சி. செயற்கை நுண்ணறிவின் சக்தியை பயன்படுத்த இந்த வாய்ப்பை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என தெரிவித்தார்.

    ஏற்கனவே, ஆந்திராவில் மிகப்பெரிய டேட்டா சென்டர் அமைக்க 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • ரெயில்வே பணிகளுக்காக நுள்ளிவிளையில் புதிய மேம்பாலம் அமைக்க ரெயில்வே நிர்வாகம் முன் வந்தது.
    • தற்போதைய பாலத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    நுள்ளிவிளையில் புதிதாகக் கட்டப்படும் ரெயில்வே மேம்பால பணிகளுக்காக தற்பொழுது உபயோகத்தில் உள்ள பாலத்திற்கு பதில் புதிய பாலம் அமைப்பதை மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப திட்டமிட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    நாகர்கோவில்–திங்கள் நகர் ஆகிய ஊர்களை இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது நுள்ளிவிளை. ரெயில்வே இரட்டிப்பு பணிகளுக்காக இங்கு ஒரு புதிய ரயில்வே மேம்பாலத்தை அமைக்க ரயில்வே நிர்வாகம் முன் வந்தது.

    அதை கட்ட தற்போது உபயோகத்தில் உள்ள மேம்பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அன்றாட வாழ்க்கை பாதிக்கும் என பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மக்கள் சார்பாக இன்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவை தொடர்பு கொண்டு இந்தப் பாலத்தை இடிக்கும் பணியினை மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப திட்டமிட வேண்டும்.

    மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில், மக்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களை சிரமத்திற்கு உள்ளாக்காமல், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் இந்தப் பாலத்தினை சீரமைப்பு செய்யும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், அந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்த பின்னரே இந்தப் பாலத்தின் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 175 ரன்கள் எடுத்தது.

    கட்டாக்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

    திலக் வர்மா 26 ரன்னும், அக்சர் படேல் 23 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 28 பந்தில் 59 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர், 6 பவுண்டரி அடங்கும்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டும், லூதோ சிபம்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்குகிறது.

    • மணிப்பூரில் இன வன்முறை மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி ஆட்சி (President's Rule) அமல்படுத்தப்பட்டது.

    மணிப்பூரில் இன வன்முறை மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி ஆட்சி (President's Rule) அமல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில், மணிப்பூரில் வன்முறை உச்சத்தில் இருந்தபோது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படவில்லை. ஆனால், 2025 -ம் ஆண்டின் தொடக்கத்தில் மாநிலத்தில் ஏற்பட்ட ஆட்சியமைப்பு முடக்கம் (Constitutional Breakdown) காரணமாக ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

    மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மைதேயி (Meitei) மற்றும் குக்கி (Kuki) சமூகத்தினருக்கு இடையே இன வன்முறை தொடங்கியது. இது சுமார் 250க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்தது. ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வுக்கு வழிவகுத்தது. 2023-ம் ஆண்டில் வன்முறை உச்சத்தில் இருந்தபோதும், அம்மாநில முதல்வர் ந. பிரேன் சிங் தலைமையிலான அரசு நீடித்தது.


    மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்

    அப்போது, மத்திய அரசு, Article 356 (ஜனாதிபதி ஆட்சி) ஐப் பயன்படுத்தாமல், மத்திய படைகள் மற்றும் நிர்வாகத்தின் மூலம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முயன்றது. இதன் எதிரொலியால், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், முதல்வர் ந. பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவ நெருக்கடி மற்றும் புதிய முதல்வரைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டிய 6 மாத காலக்கெடு காலாவதியானது.

    இதன் விளைவாக, மாநில ஆளுநரின் பரிந்துரையின் பேரில், அரசியலமைப்பின் பிரிவு 356 இன் கீழ், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. இது இன வன்முறையின் தொடர்ச்சியாக உருவான அரசியலமைப்பு இயந்திரத்தின் முடக்கம் (Failure of Constitutional Machinery) என்ற அடிப்படையில் நிகழ்ந்தது.

    மணிப்பூரைப் பொறுத்தவரை, ஆளும் கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியாக இருந்ததால், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்குப் பதிலாக, மத்திய அரசு படைகளை அனுப்பி, மாநில நிர்வாகத்துடன் இணைந்து நிலைமையைச் சமாளிக்க முதலில் முயற்சி செய்தது. சுருக்கமாக, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி, இன வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக அல்லாமல், முதல்வர் ராஜினாமா செய்தபின் புதிய அரசு அமையாததால் ஏற்பட்ட அரசியலமைப்பு நெருக்கடியை (2025) தீர்க்கும் கடைசி முயற்சியாகவே அமல்படுத்தப்பட்டது. 


    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

    ஜனாதிபதி ஆட்சி என்றால் என்ன? (Article 356)

    இந்திய அரசியலமைப்பின் பிரிவு 356 என்பது, ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் முடங்கிவிட்டது என்று குடியரசுத் தலைவர் கருதினால், அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அதிகாரம் அளிக்கிறது.

    உயிரிழப்புகளும் சேதங்களும்:

    மணிப்பூர் வன்முறை மோதல்கள் 2023 மே 3 அன்று தொடங்கி, 2025 ஆம் ஆண்டிலும் ஆங்காங்கே தொடர்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிலவரப்படி, இந்த இன வன்முறையில் 258 பேர் உயிரிழந்துள்ளனர். (மார்ச் 2025 நிலவரப்படி 260 க்கும் அதிகமான உயிரிழப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.)


    கலவரத்தின்போது

    • இதில் மைதேயி மற்றும் குக்கி-ஜோ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் அடங்குவர்.
    • 1,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 30 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
    • 60,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
    • 4,700 க்கும் மேற்பட்ட வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டன.
    • சுமார் 400 க்கும் மேற்பட்ட தேவாலயங்களும் (Churches), 130 க்கும் மேற்பட்ட கோயில்களும் (Temples) சேதப்படுத்தப்பட்டன.
    • காவல் துறையின் ஆயுதக் கிடங்குகளில் இருந்து 5,600 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் வன்முறைக் குழுக்களால் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் 1,800 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    வன்முறைக்குப் பிறகு இரண்டு சமூகத்தினரும் தாங்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளுக்குத் தனித்தனியே சென்று குடியேறிவிட்டதால், இரு சமூகத்தினருக்கும் இடையே கிட்டத்தட்ட முழுமையான பிரிவு நிலை (Segregation) ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான வன்முறைகள் குறைந்தாலும், 2025 மார்ச் மாதத்திலும் சில இடங்களில் மோதல்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

    • இந்தியா, இலங்கை இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்த ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணி வென்று சாதனை படைத்தது.

    இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்த மாதம் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    அதன்படி, இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி 21-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. 2-வது போட்டி 23-ம் தேதி அதே மைதானத்தில் நடைபெற உள்ளது. 26, 28, 30 ஆகிய தேதிகளில் என கடைசி 3 போட்டிகளும் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

    இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய அணியின் விவரம் பின்வருமாறு:

    ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி சர்மா, சினே ராணா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ஹர்லீன் தியோல், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், ரேணுகா சிங் தாக்கூர், ரிச்சா கோஷ், ஜி.கமலினி, ஸ்ரீ சரணி, வைஷ்ணவி சர்மா.

    • முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-0 என வென்றது.
    • அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.

    கட்டாக்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் டெஸ்ட், ஒருநாள் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவும், ஒருநாள் தொடரை இந்தியாவும் கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்ய களமிறங்குகிறது.

    • தேர்தல் ஆணையம் அறிவித்த முடிவுகளின்படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வென்றது.
    • 27 ஆண்டுக்கு பிறகு தலைநகரில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது.

    புதுடெல்லி:

    அது ஒரு அரசியல் கட்சி அலுவலகம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் அனைவரும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

    கட்சியின் தலைவரான சொக்கலிங்கம் அங்கிருந்த நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சண்முகம் என்ற தொண்டர், என்ன தலைவரே, அடுத்த ஆண்டும் நமது வெற்றிப் பயணம் தொடருமா என கேட்டார். அதற்கு தலைவர், நாம் செய்யற வேலைகளில் தான் வெற்றியின் சதவீதம் அதிகரிக்கும். எனவே தீவிரமாக வேலை செய்யணும் என்றார்.

    என்ன செஞ்சு பலன் கிடைக்க மாட்டேங்குதே தலைவரே என சண்முகம் நொந்து கொண்டார்.

    அப்படி சொல்லாதே, நமது செயல் திட்டங்களைப் பார்த்து மக்கள் நம்மை மதிச்சு வாக்களிக்கணும். அப்படி நாம் நடந்துக்கணும் என்ற சொக்கலிங்கம்,இப்படி செஞ்சதாலே தான் போன ஆண்டு டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது என கூறினார்.

    மேலும், 27 ஆண்டுக்கு பிறகு ஆட்சியைப் பிடிச்சுதுன்னா சும்மாவா என அசால்ட்டாக தெரிவித்தார்.

    அப்படியா, எப்படின்னே அவங்களால முடிஞ்சது? அது பற்றி விவரமா சொல்லுங்கன்ண்ணே? என்றார் சண்முகம்.

    இதையடுத்து, சொக்கலிங்கம் கூறியதன் விவரம் வருமாறு:

    டெல்லி சட்டசபையின் 70 தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

    அதன் முடிவுகளின்படி, பா.ஜ.க. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றது.


    தேர்தல் ஆணையம் அறிவித்த முடிவுகளின்படி பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

    2015-ல் நடந்த சட்டசபை தேர்தலில் 3 இடங்களையும், 2020-ல் நடந்த சட்டசபை தேர்தலில் 8 இடங்களையும் பெற்ற பா.ஜ.க. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

    இதன்மூலம் 27 ஆண்டுக்குப் பிறகு பா.ஜ.க. டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


    இதேபோல், கடந்த செப்டம்பரில் நடந்த துணை ஜனாதிபதி தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது என நினைவு கூர்ந்தார்.

    ஓகேண்ணே, சொல்லிட்டீங்கள, இனிமே பாருங்க எப்படி தீயா வேலை செஞ்சு நமது கட்சியை ஆட்சிக்கு வரவைக்கறோம்னு பாருங்க என்று சொன்னபடியே கட்சி அலுவலகத்தை விட்டுக் கிளம்பினார் சண்முகம்.

    • நம் பாதுகாப்பிலும் பொதுமக்கள் பாதுகாப்பிலும் ஜனநாயக அரசியல் மாண்போடு புதுச்சேரி அரசு நடந்துகொண்டிருக்கிறது.
    • எழுச்சி மிக்க நம் இளைஞர் படையினரும் கட்டுக்கோப்பும் பொறுப்பும் மிக்கவர்கள் என்பதை அவதூறாளர்களுக்குப் புரிய வைத்துள்ளார்கள்.

    தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மாநில மக்களுக்கு என் அன்பான வணக்கம்.

    எல்லைகள் கடந்து, மொழியாலும் மனத்தாலும் எப்போதும் இணைந்திருக்கும் நாம், ஒரு புதிய அரசியல் வரலாற்றுக்கான அத்தியாயத்தை இன்று புதுச்சேரி மண்ணில் தொடங்கியிருக்கிறோம்.

    நிலப் பரப்பிலும், நிர்வாகக் கட்டமைப்பிலும் சிறிய யூனியன் பிரதேசம் என்றாலும், கட்சி பேதமின்றி, வெறுப்புணர்வின்றி எதிர்க்கட்சியான நம் நிகழ்வுக்கு மிகப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்து நம் பாதுகாப்பிலும் பொதுமக்கள் பாதுகாப்பிலும் ஜனநாயக அரசியல் மாண்போடு புதுச்சேரி அரசு நடந்துகொண்டிருக்கிறது.

    அந்த வகையில், புதுச்சேரி அரசுக்கும் முதல்வர் அவர்களுக்கும் உள்துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் புதுச்சேரி மாநிலக் காவல் துறைக்கும் நமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    எழுச்சி மிக்க நம் இளைஞர் படையினரும் கட்டுக்கோப்பும் பொறுப்பும் மிக்கவர்கள் என்பதை அவதூறாளர்களுக்குப் புரிய வைத்துள்ளார்கள்.

    அதிகாரத்தை வைத்துக்கொண்டு, சட்டத்தை வளைத்து, சூழ்ச்சிகள் உட்பட என்னென்னவோ திட்டம் போட்டு நம் அரசியல் பயணத்தை, மக்கள் சந்திப்பை, பிரசார முன்னெடுப்புகளை இந்தக் கபட நாடகத் தி.மு.க. அரசு தடுக்கப் பார்த்தாலும், முடக்க முயன்றாலும், அது அணுவளவும் நடக்காது.

    கழகத்தின் எதிர்பார்ப்பை, வேண்டுகோள்களை, உத்தரவுகளை மனதார மதித்து, நிகழ்வை வெகு வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த, அதற்குக் காரணமாயிருந்த தமிழகம், புதுச்சேரி மக்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

    • பாராளுமன்றத்தின் மக்களவையில் எஸ்.ஐ.ஆர். மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
    • இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் எஸ்.ஐ.ஆர். மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

    எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் வெவ்வேறு நடை, உடை, பாவனைகளை பார்க்க முடியும்.

    காஞ்சிபுரம் பட்டு சேலையில் தங்க சரிகை இருக்கும். தங்க சரிகையில் நூல்கள் சேர்க்காவிட்டால் அதில் ஒன்றும் இல்லை.

    150 கோடி மக்களின் வாக்குகளை சேர்த்து பின்னப்பட்ட துணி தான் நமது இந்தியா.

    பல மதங்கள், பல சமுதாயங்கள், பல மொழிகளை கடந்து அனைவரும் ஒன்றாக இணைந்ததே நம் நாடு.

    பாஜக தான் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கவேண்டும், மற்றவர்கள் தனக்கு கீழ் என்று எண்ணுகிறது.

    வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் சட்ட விரோதமானது. அதை நிறுத்த வேண்டும்.

    தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து இந்தியாவின் தலைமை நீதிபதிஏன் நீக்கப்பட்டார்?

    நாட்டின் தலைமை நீதிபதி மீதே நம்பிக்கை இல்லையா?

    பிரதமர் மோடியும், அமித்ஷாவும் குறிப்பிட்ட நபர்களை தேர்தல் ஆணையராக தீர்மானிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என தெரிவித்தார்.

    • கோவில்களில் இதைச் செய்யக்கூடாது, இதைச் செய்ய வேண்டும் என யாரும் சொல்லமுடியாது என தமிழக அரசு வாதிட்டது.
    • தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்திவைக்கிறேன் என்றார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணிலும் தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கு மதுரை ஐகோர்ட்டில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், "மேல்முறையீட்டு வழக்கு முடியும்வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் திரி, எண்ணெய், மலை எங்கும் போய்விடாது. நீதிபதி உத்தரவு சரியா, தவறா என்பதற்கே மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எப்படி இடைக்கால உத்தரவு கோர முடியும். கோவில்களில் இதைச் செய்யக்கூடாது, இதைச் செய்ய வேண்டும் என யாரும் சொல்லமுடியாது. கோர்ட் கூட சொல்லமுடியாது. தேவஸ்தானமே முடிவுசெய்ய இயலும். இதுகுறித்த விரிவான உத்தரவுகள் உள்ளன. பிரச்சனை வந்தால் கோர்ட்டை காரணம் காட்ட இயலாது. அரசே பொறுப்பேற்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டும். மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால் அதன்பின் இந்த வழக்கை பட்டியலிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறுகையில், "திருப்பரங்குன்றம் வழக்கு தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, சொத்து உரிமை தொடர்பானதும் கூட. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்திவைக்கிறேன். ஆனால் அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது இடைக்கால உத்தரவு பெறப்படவில்லை எனில் அப்போதும் ஒத்திவைக்க இயலாது" என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தொடர்ந்து நடந்த விசாரணையின்போது திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட் அவமதிப்பு வழக்கில் வரும் 17-ம் தேதி தலைமைச் செயலாளர், மதுரை மாநகர டிஜிபி ஆகியோர் காணொலியில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

    ×