search icon
என் மலர்tooltip icon
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 18 நம்பர் ஜெர்சியை நானாக கேட்டுப்பெறவில்லை.
    • நான் முதன்முதலில் இந்தியாவுக்காக விளையாடியது ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி ஆகும்.

    ஐதராபாத்:

    ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் மே 21 முடிவடையவுள்ள நிலையில் ஒரே ஒரு அணி (குஜராத்) மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. மற்ற 3 இடத்தை பிடிக்க 7 அணிகள் போட்டி போடுகின்றனர். இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க பெங்களூர் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். அந்த அணி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது. ஐதராபாத் 4 வெற்றி, 8 தோல்வியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது.

    இந்நிலையில் தனது ஜெர்சி நம்பரான 18 குறித்து விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    18 நம்பர் ஜெர்சியை நானாக கேட்டுப்பெறவில்லை. அவர்களாகவே எனக்கு கொடுத்தது. அதன்பிறகு அது எனது வாழ்வின் முக்கிய எண்ணாக மாறிவிட்டது. நான் முதன்முதலில் இந்தியாவுக்காக விளையாடியது ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி ஆகும். எனது அப்பா டிசம்பர் 18 உயிரிழந்தார். என் வாழ்வின் முக்கிய தேதிகள் 18-ஆக மாறிப்போனது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • போட்டி முடிந்த பிறகும் மைதானத்தில் இருந்த எவரும் நகர்ந்து செல்லாமல் கூட்டம் முழுமையாக அங்கேயே இருந்தது.
    • ரசிகர்களின் இந்த செயல் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிளே-ஆப் சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பும் சிஎஸ்கே அணிக்கு பிரகாசமாக இருக்கிறது.

    தற்போது 13 போட்டிகளில் 15 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கடைசி லீக் போட்டியை டெல்லி அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கும் செல்வார்கள். மேலும் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து நேரடியாக குவாலிபயர்-1-ல் விளையாடும் வாய்ப்பையும் பெரும் அளவிற்கு வலுவாக இருக்கிறது.

    இந்த சீசனின் கடைசி ஹோம் போட்டியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. துரதிஷ்டவசமாக இதில் தோல்வியை தழுவியது. போட்டி முடிந்த பிறகு டோனி உட்பட அணியின் மற்ற வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் இணைந்து மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தவாறு மைதானத்தை சுற்றி வளம் சென்றனர்.

    அந்த இடத்தில் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் இருந்தார். அப்போது நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு, டோனிக்கு இது கடைசி ஐபிஎல் ஆக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கெவின் பீட்டர்சன் கூறியதாவது:-

    டோனி உட்பட பலரும் சேப்பாக்கம் மைதானத்தில் வளம் வந்தபோது நான் அங்கே இருந்தேன். போட்டி முடிந்த பிறகும் மைதானத்தில் இருந்த எவரும் நகர்ந்து செல்லாமல் கூட்டம் முழுமையாக அங்கேயே இருந்தது. ரசிகர்களின் இந்த செயல் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இப்படிப்பட்ட ஆதரவு டோனிக்கு இருக்கும்பொழுது இந்த ஐபிஎல் தொடருடன் அவர் ஓய்வு பெறுவார் என்று எனக்கு தோன்றவில்லை.

    இந்த வருடம் புதிதாக வந்திருக்கும் இம்பேக்ட் வீரர் விதிப்படி, டோனி அடுத்த வருடமும் ஆடலாம். பேட்டிங்கில் 7-வது 8-வது இடத்தில் இறங்குவதால், அதில் கவனம் செலுத்தவில்லை என்றாலும் 20 ஓவர்கள் முழுமையாக அவரால் கீப்பிங் செய்ய முடியும். களத்தில் நின்று கொண்டு முடிவுகளை எடுக்கலாம்.

    அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்னரே காலில் இருக்கும் பிரச்சனையை சரி செய்து கொண்டு இந்த வருடம் போலவே கடைசி கட்டத்திலும் பேட்டிங் இறங்கலாம். ஆகையால் டோனி ஓய்வு பெறுவது சரியாக இருக்காது என நம்புகிறேன். நாட்டு மக்கள் இதைதான் எதிர்பார்க்கிறார்கள். வருவார் என நினைக்கிறேன்.

    என்று அவர் கூறினார்.

    • டெல்லி ஆடுகளம் போல் அல்லாமல், இந்த பிட்ச் சிறப்பாக இருந்தது.
    • பேட்டிங்கில் பிரித்வி ஷா கொடுத்த இம்பேக்ட் பார்ப்பதற்கே சிறப்பாக அமைந்தது.

    ஐபிஎல் தொடரின் மிகமுக்கியமான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடியது. இந்தப் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றிக்கு பவர்பிளே ஓவர்களில் டெல்லி அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா - டேவிட் வார்னர் ஆகியோர் அதிரடியாக செயல்பட்டதே முக்கிய காரணமாக அமைந்தது.

    குறிப்பாக டெல்லி அணியின் பிரித்வி ஷா 38 பந்துகளில் 54 ரன்களை விளாசி அசத்தினார். இது நடப்பு ஐபிஎல் சீசனில் பிரித்வி ஷா விளாசியுள்ள முதல் அரைசதமாகும். இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பிரித்வி ஷாவிற்கு மிகச்சிறந்த சீசனாக அமையும் என்று பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறி இருந்தார். ஆனால் அதற்கு மாறாக பிரித்வி ஷா சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

    ஒரு கட்டத்தில் பிரித்வி ஷாவை டெல்லி அணி இருந்து பிளேயிங் லெவனில் இருந்தே நீக்கியது. ஆனால் மனம்தளராத பிரித்வி ஷா, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசி கம்பேக் கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:-

    களத்தில் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினோம் என்றே நினைக்கிறேன். ஆனால் இந்தப் போட்டியில் எங்களது பலம் என்ன என்பதை அறிந்து செயல்பட்டோம்.

    அதேபோல் டெல்லி ஆடுகளம் போல் அல்லாமல், இந்த பிட்ச் சிறப்பாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கில் பிரித்வி ஷா கொடுத்த இம்பேக்ட் பார்ப்பதற்கே சிறப்பாக அமைந்தது. ரைலி ரூஸோவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். டெல்லி பிட்ச்சில் சிறந்த பேட்டிங்கை செய்ய தவறியுள்ளோம். ஆனால் இன்றையப் போட்டியில் வென்று 2 புள்ளிகளை பெற்று மகிழ்ச்சியளிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அயர்லாந்து கிரிக்கெட்டில் எந்தவொரு பேட்ஸ்மேனும் எட்டிடாத ஐசிசி தரவரிசையை அவர் எட்டி சாதனை படைத்துள்ளார்.
    • பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதில் 23 வயதான அயர்லாந்து பேட்ஸ்மேன் ஹாரி டெக்டர், ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் டாப் 10 பேட்ஸ்மேன்களில் ஒருவராக இணைந்துள்ளார். அதோடு இந்தியாவின் விராட் கோலி மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டிகாக்கை அவர் முந்தியுள்ளார். தற்போது 722 ரேட்டிங் உடன் 7-வது இடத்தில் அவர் உள்ளார்.

    அண்மையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் டெக்டர் அபாரமாக விளையாடி இருந்தார். இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் 140 ரன்களை சேர்த்து அசத்தினார். இதன் மூலம் ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

    முக்கியமாக அயர்லாந்து ஆடவர் கிரிக்கெட்டில் எந்தவொரு பேட்ஸ்மேனும் எட்டிடாத ஐசிசி தரவரிசையை அவர் எட்டி சாதனை படைத்துள்ளார். அதோடு ரோகித், ஸ்மித், டிகாக், பட்லர், கோலி ஆகியோரை அவர் முந்தியுள்ளார்.

    இந்த தரவரிசையில் பாபர் அசாம் (பாகிஸ்தான்), ராசி வான் டெர் டுசென் (தென் ஆப்பிரிக்கா), ஃபகார் ஜமான் (பாக்.), இமாம்-உல்-ஹக் (பாக்.), சுப்மன் கில் (இந்தியா), டேவிட் வார்னர் (ஆஸி.) ஆகியோர் முதல் 6 இடங்களில் உள்ளனர். கோலி 8-வது இடத்தில் உள்ளார். டிகாக் மற்றும் ரோகித் சர்மா அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    • விளம்பர விதிகளை மீறும் பிரபலங்களின் பட்டியலில் நகைசுவை யூடியூபர் புவன் பம் 2-வது இடத்தில் உள்ளார்.
    • விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், உண்மை தன்மை, வசனங்கள் ஆகியவை தெளிவாக இருக்க வேண்டும்.

    பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், விளம்பரம் மூலமாக தங்களது பொருட்களை சந்தையில் அறிமுகம் செய்வதோடு, அந்தப் பொருட்களை வாங்க வைக்கும் அளவிற்கு பிரபலங்களை நாடுகின்றனர். அப்படி சந்தையில் விற்கப்படும் ஒவ்வொரு பொருளின் விளம்பரத்திற்கும் மக்களை கவரும் வகையில் வசனங்கள் இடம் பெற்று, அவை தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.

    இந்த நிலையில் ஏஎஸ்சிஐ எனப்படும் (Advertising Standards Council of India) இந்திய விளம்பர தரநிலை கவுன்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோனி, யூடியூபர் புவன் பம் ஆகியோர் விளம்பர தரநிலையை பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது. அதுமட்டுமின்றி விளம்பர விதிகளை பின்பற்றாதவர்களின் பட்டியலில் டோனி முதலிடத்திலும், புவன் பம் 2-வது இடத்திலும் இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளது.

    இவர்களது விளம்பரத்திற்கு புகார் வந்துள்ள நிலையில், அவை குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 55 விளம்பரங்கள் மீது புகார் வந்துள்ளது. ஆனால், அது தற்போது 503 விளம்பரமாக உயர்ந்துள்ளது. பொருட்களை வாங்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிரபலங்கள் நடிக்கும் விளம்பரத்தில் கவனத்தை ஈர்க்க வழிவகை உண்டு.

    ஆனால், அந்த விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், உண்மை தன்மை, வசனங்கள் ஆகியவை தெளிவாக இருக்க வேண்டும். ஆனால், அந்த விஷயங்களில் விளம்பர நிறுவனங்கள் தோல்வி அடைந்துள்ளன என்று அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றன. இது போன்று உண்மை தன்மையை அறிந்து கொள்ளாத 10 விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட விளம்பரத்தோடு நடித்து டோனி முதலிடத்திலும், புவன் பம் 7 விளம்பரத்துடன் 2-வது இடத்திலும் இருக்கின்றனர்.

    இந்திய விளம்பர தரநிலை கவுன்சில் விதிகளின்படி விளையாட்டு, கல்வி, சுகாதாரம் ஆகிய விஷயங்களில் உள்ள விளம்பரத்தில் நடிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இது போன்றவைகளை பாதிக்கும் விளம்பரங்கள் இருக்கவும் கூடாது. பிரபலங்கள் அவற்றில் நடிக்கவும் கூடாது. நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் தற்போது வரையில் 8,951 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதன் மூலமாக 7,928 விளம்பரங்கள் விதியை மீறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், நான்கில் மூன்று பங்கு ஆன்லைன் என்று சொல்லக் கூடிய டிஜிட்டல் மீடியா மூலமாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஆந்திர வீராங்கனை ஜோதி புதிய சாதனை படைத்ததோடு தங்கப்பதக்கம் பெற்றார்.
    • 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வெள்ளி பதக்கம் வென்றார்.

    ராஞ்சி:

    26-வது தேசிய பெடரேசன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.

    பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஆந்திர வீராங்கனை ஜோதி புதிய சாதனை படைத்ததோடு தங்கப்பதக்கம் பெற்றார்.

    அவர் பந்தய தூரத்தை 12.89 வினாடியில் கடந்தார். இதற்கு முன்பு அவர் 13.43 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. தனது சாதனையை முறியடித்து ஜோதி புதிய சாதனை நிகழ்த்தினார்.

    தமிழக வீராங்கனை நித்யா 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவர் பந்தய தூரத்தை 13.44 வினாடியில் கடந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சப்னாகுமாரி 13.58 வினாடி யில் கடந்த வெண்கல பதக்கம் வென்றார்.

    வட்டு எறியும் போட்டியில் மத்திய பிரதேச வீராங்கனை ஷாலினி சவுத்ரி தங்கம் வென்றார்.

    ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் மராட்டியத்தை சேர்ந்த தேஜஸ் அசோக்கும், சங்கிலி குண்டு எறிதல் பஞ்சாப்பை சேர்ந்த தம்ஜீத் சிங்கும் தங்கம் வென்றனர்.

    • வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் சிவபெருமான் ருத்திரன் என்ற பெயரில் குறிப்பிடுகிறார்.
    • ருத்திரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவன் என்று பொருள்.

    (சிவராத்திரி, சிவபெருமானுக்கு சிறப்பான நாள். தென்னாடுடைய சிவனே போற்றி என்று நாயன்மார்களும் அவரைப் போற்றி ஏத்தியுள்ளனர்.)

    சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள். அன்பாக-அருட் பெருஞ்சோதியாக, இன்பமாக-ஈசுவரனாக, மங்களமாக- மறைப்பொருளாக எங்கும் நீக்க மற நிறைந்திருக்கும் அந்தப் பரமனைக் கடல் கொஞ்சும் குமரி முதல் கைலைப்பனிமலை வரை ஆலயங்கள் பலவற்றில் அமர்த்தி வழிபட்ட பெருமைமிக்கது இந்தப் புண்ணிய பூமி. சிவவழிபாட்டின் சிறப்புகளை வேதங்கள் விளக்குகின்றன. இதிகாசங்கள் எடுத்துரைக்கின்றன். உபநிஷதங்கள் உணர்த்துகின்றன. புராணங்கள் பகருகின்றன. வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் சிவபெருமான் ருத்திரன் என்ற பெயரில் குறிப்பிடுகிறார். ருத்திரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவன் என்று பொருள்.

    'எங்கள் குழந்தைகளைக் காப்பாற்று' 'எங்கள் பெற்றோர்களைக் காப்பாற்று' 'எங்கள் பசுக்களைக் காப்பாற்று' என்று சிவபிரானை வேண்டும் ரிக்குகள் ரிக்வேத மந்திரங்களில் வருகின்றன. பசுபதி, பூதபதி பூதநாதர் என்பன வேதங்கள் ருத்திரனுக்குச் சூட்டும் சிறப்புப் பெயர்கள், சிவன் உக்கிரவடிவினன்; ஜடாமுடி கொண்டவன், என்று ரிக் வேதத்தின் பிற்கால சூக்தங்கள் வருணிக்கின்றன.

    சிவ வழிபாட்டின் மகிமையை முதல் முதலாக உணர்த்திய தனி நூல் சுவேதா சுவேதர உபநிஷதமாகும். ருத்திரனின் பேராற்றல்களை வருணிக்கும் அந்நூல் ருத்திர சிவவழி பாட்டுக்கு ஒரு திறவுகோல் எனலாம், சுக்லயஜுர் வேதத்தில் சிவனின் நூறு நாமங்கள் கூறப்பட்டிருக்கின்றன. யஜுர்வேதம், ' நம சிவாய என்று முழங்குகிறது ' நம : சிவாய சிவதராயச ' என்பது யஜுர்வேதவாக்கு, மகாபாரதம், சிவபிரானின் ஆயிரம் நாமங்களை-சிவசகஸ்ர நாமத்தைக் கூறுகிறது.

    பதஞ்சலி முனிவரின் ' மகாபாஷ்யம் ' சிவனின் பெருமையையும் சிவநடியார் இயல்புகளையும் சுவைபடச் சித்திரிக்கிறது. வியாசர் அருளிய ' சிவபுராணம் ' ஆதிசங்கரரின் ' சிவாநந்தலகிரி, அப்பைய தீட்சதரின் சிவார்க்கமணி தீபிகா ' ஆகியவை ஓப்பற்ற சிவபக்தி நறுமலர்கள்,

    "சைவ சமயமே மிகப்பழமையானது, இப்பொழது உயிருள்ளதுமான சமயம் ; சிந்துசமவெளி எங்கும் சிவலிங்கங்கள் காணப்படுகின்றன " என்கிறார் தொல்பொருள் அறினர் ஜான் மார்ஷல்.

    ஈராஸ் பாரதியார் சிந்து சமவெளியில் " எணான் ' என்று வருவது எண் குணத்தான் என்னும் சிவனே என்று கூறி, சிவ வழிபாட்டின் தொன்மைமைச் சிறப்புக்கு ஒரு கோடி காட்டுகிறார். கிறித்துவ சகாப்தத்துக்குப் பல நுறு ஆண்டுகள் முற்பட்ட மொகஞ்சதாரோவில் கண்டெடுத்த முத்திரைகள் பலவற்றில் சிவ வடிவங்கள் காண்கின்றன. அவற்றில், ஒரு முத்திரையில் இறைவன், தவம் புரியும் ஞானக்கோலத்தில் யோகமூர்த்தியாகச் சித்திரிக்கப்பட்டிருகிறார். கி.மு. இரண்டாயிரம் நுற்றாண்டளவில் சைவம் தனிச் சமயமாகச் செல்வாக்குப் பெற்றுவிட்டது. காந்தாரநாடு சைவத்தின் நிலைகளனாக விளங்கியது. சக வம்சத்து அரசன் மோஹன் வெளியிட்ட செப்பு நாணயங்களிள் நந்தி உருவங்கள் பொறிக்கப்பட்டன. சிவலிங்க வழிப்பாட்டை நாடெங்கும் பிரபலப்படுத்தியவர்கள் நாகவம்சத்து அரசர்களே. ஆர்யாவர்த்தத்துக்குத் தென்புறத்தே இருந்த பாரசிவர், சுட்டு நாகர், மகாநாகர் ஆகிய ரச மரபினரா வழிப்பட்டதால் சிவனை தட்சிணாபதி, தெற்கத்தியர் என்று ஆரியர்கள் வழங்கினர். ரிக்வேதமும் ' தட்சிணாபதம் ' என்றே தென்னாட்டை குறிப்பிடுகிறது. இதனாலேயே இறைவனைத் ' தென்னாடுடைய சிவனே போற்றி !' என்று போற்றினர் போலும் ! சிவபெருமானை லிங்கவடிவில் வழிபடும் தொடர்பாகப் பல புராண வழக்குகள் உள்ளன. திருமாலுக்கும் பிரமனுக்கும் தம் சக்தியை உணர்த்ப் பேரொளிப் பிழம்பாக, அண்ணாமலையாகச் சிவபெருமான் நின்ற வரலாறு அனைவரும் அறிந்ததே, ஜோதி சொருபமே லிங்கம். தென்னகத்தில் சிவசக்தி ஐக்கிய வடிவே லிங்கமாகக் கருதப்படுகிறது. ஆலயங்களில் சிவப்பிரான் லிங்க வடிவிலே எழந்தருளியுள்ளார். ஆந்திரத்து குடிமல்லம் ஆலயத்திலுள்ள சிவ லிங்கமே மிகப் பழமையான லிங்கத் திருமேனி என்று கருதுவர். அந்தக் கோயிலின் காலம் கி.மு. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டாகும்.

    இலிங்க தத்துவம், அவற்றின் அமைப்பு, லட்சணங்கள் ஆகியவை பற்றி மகுடாகமம் என்ற நூல் விரிவாகச் சொல்கிறது. தெய்விகம், அர்ச்சா, காணபம், மானுஷ்யம், என்று லிங்கங்கள் நான்கு வகையானவை. தெய்வீகம், அர்ச்சா என்ற இரண்டும் தேவர்களாலும் ரிஷிகளாலும் ஸ்தாபிக்கப்பட்டவை. காணவம் கணங்களாலும் மானுஷம் மனிதர்களாலும் வணங்கத்தக்கவை. காமிகாகவம், அறுவகை லிங்கங்களை குறிப்பிடுகிறது. அவை சுயம்பு, தெய்வீகம், காணபம், மானுஷ்யம், அர்ச்சா பாணலிங்கம் என்பது சாலக்கிராமம் போன்றக் ஸ்படிகக் கற்களால் ஆனது இவை இயற்கையாகக் கண்டகி, ரேவா, நர்மதா போன்ற நதி தீரங்களில் கிடைக்கின்றன.

    மானுஷ்ய லிங்கம் என்னும் மனிதர்களால் கல்லில் செதுக்கப்படும். லிங்கம் மூன்று பாகங்களாக உருவாக்கப்படவேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. விஷ்ணுபாகம், ருத்திரபாகம் என்னும் மேற்பகுதியே பூஜாபாகம் எனப்படுகிறது. பூஜாபாகத்திலேயே அர்ச்சனை, அபிஷேகம் ஆகியவை செய்தல் வேண்டும் என்பது பொது விதி. பிற்காலத்தில் தோண்றிய சில ஆகம நூல்கள் லிங்கத்தின் ருத்திரபாதம் என்றும் மேற்பகுதியில் பிரம்ம சூத்திரம் என்றும் சில நுட்பமான கோடுகள் அமைப்பது பற்றிக் கூறுகின்றன. இவை மனிதர்களால் அமைக்கப்படும் மானுஷ லிங்கத்துக்கு மட்டும் அமைத்தால் போதும் என்று நூல் கூறுகிறது.

    நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் முதல் கொழும்பில் உள்ள திரிகோணமலை வரையில் தவப்பெருமையும் மிக்க புராதனமான சிவாலயங்கள் பல உள்ளன. தேசம் முழுவதும் சைவம் கொடிகட்டிப் பறந்ததை நாட்டில் பரவலாக அமைந்து போற்றப்படும் கீர்த்திமிக்க பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களிலிருந்து அறியலாம். கொடியவன் கஜினிமுகம்மது அழித்த சோமநாதபுரத்துச் சிவலிங்கம் உஜ்ஜயினி மாநகரத்துச் சிவலிங்கம், நர்மதை நதிக்கரயில் உள்ள ஓங்காதநாதர், இமயமலைச் சாரலில்லுள்ள கேதாரீசுவரர், கர்நூல் மாவட்டத்துச் ஸ்ரீசைலம், மல்லிகார்ஜுனர், இராமேசுவரத்தில்லுள்ள இராமநாத சுவாமி ஆகியவை. அவை சிவலிங்கங்கள், தமிழ் நூல்களில் அண்டலிங்கம், பிண்டலிங்கம், ஆன்மலிங்கம், ஞானலிங்கம் எனக் குறிப்பிடுகின்றன.

    பஞ்சபூதத் தலங்கள் என்னும் ஐந்து தலங்கள் சிவபெருமானுக்கு சிறப்பாக உரியவை. அவ்விடங்களில் இறைவன் நீர், பூமி, வாயு, அக்கினி, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களோடு தொடர்பு கொண்டு விளங்குகின்றான். திருவாரூரில் பிருதுவி (பூமி) வடிவமாகவும், ஜம்புகேஸ்வரத்தில் அப்பு (நீர்) வடிவாகவும், காளஹத்தியில் வாயு வடிவமாகவும், திருவண்ணாமலையில் அக்னி வடிவாகவும் சிதம்பரத்தில் ஆகாய வடிவிலும் சிவபெருமான் விளங்குவதாக ஐதீஹ்யம். இந்தப் பஞ்சபூதத் தலங்களுடன் சிவபெருமானின் தலங்களுடன் சிவபெருமானின் கருணைக்கும் கனிவுக்கும் சான்றாக விளங்கும் புனிதத் தலங்கள் எண்ணற்றவை உள்ளன.

    தென்னாடுடைய சிவனே போற்றி என்று குறிப்பிடுமளவிற்க்கு அப்பெருமானை தென்னகத்தின் நாயகனாகிய பெருமை நாயன்மார்கள் என்ற சைவ அடியார்களுக்கே உரியது. அவர்கள் சொல்லோவியம் தீட்டித் தேவாரமும் திருவாசகமும் புனைந்தார்களென்றால், நாடாண்ட மன்னர்கள் கல்லோவியம் தீட்டி வானளாவும் ஆலயங்களை எழுப்பி மண்ணிலே விண்ணைக்கண்டனர்.

    கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ வேந்தன் மகேந்திரவர்மன் முதலில் சமண மதத்தைச் சார்ந்திருந்து பிறகு திருநாவுக்கரசர் முயற்சியால் சைவரானதை வரலாறு கூறுகிறது. பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த தஞ்சை கண்டராதித்தினின் மனைவி செம்பியன் மாதேவி தம் கணவனையே சிவலிங்கமாகப் பூஜித்தாலாம். சிவ வழிபாடு பிற நாடுகளிலும் செல்வாக்குப் பெற்று விளங்கியதையும், கடல் கடந்த நாடுகளில் சிவாலயங்கள் உள்ளதையும் வரலாறு கூறுகிறது. அமெரிக்காவில் கொலஹடே ஆற்றங்கரையில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவாலயம் இருந்ததாக ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

    பிலிப்பைன்ஸ் மக்கள் சிவனைச் சிவப்பன் என்று வழங்குகின்றனர். ஆசியாவில் சிவாஸ் என்று ஒருநகர் இருக்கிறது. அங்கே சிவவழிபாடும் ரிஷப வழிபாடும் இருந்தன. இந்தோனேசியாவில் இப்போதும் சிவாலயங்கள் உள்ளன. இலங்கையில் சிவன் ஒளி பாதமலை இருக்கிறது. ஜப்பானியரின் புராதனத் தெய்வம் சிவோ என்பது. பின்லாந்து மக்களின் காவல் தெய்வம் சிவனே கொரியாவில் வீதிதோரும் சிவாலயம் அமைத்து வழிபட்டனர். பாபிலோனியாவின் களிமண் ஏடுகளில் சிவன் என்பது மாதப் பெயராகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அக்கேடிய மக்களின் ஏழுமுக்கிய நட்சத்திரப் பெயர்களில் சிவன் என்பதும் ஒன்று. எகிப்திய நதிக்கரையில் சிவலிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சயாம் மன்னரின் முடிசூட்டு வைபவத்தில் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை லோரெம்பாவாய் என்று பாலிலிபியில் எழுதிப்படிக்கப்பட்டு வந்தது.

    சிவபெருமானுடைய திருவிளையாடல்கள் பலவற்றைச் சிவபுரானங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஞான மார்கத்துக்கு வழி காட்டும் சைவம் நளினக் கலைகளையும் வளர்த்து வந்திருக்கிறது. சிற்ப எழில் மிக்க அற்புத ஆலையங்கள் வரிசையில் வடபுலத்தில் உள்ள குலு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பாஜ்ரா மகாதேவர் ஆலையம், அல்மோராவை அடுத்த பீனேஷ்கர் ஆலயம், கேதாரிநாத் கஜுரஹோ மகாதேவர் கோயில்கள், உஜ்ஜைனி, புவனேசுரம், நாசிக் மகேசுவரர் திருக்கோயில்கள், தென்புலத்திய் கர்நாடகத்தில் சிருங்கேரி வித்யாரண்யர் ஆலையம், நஞ்சன்கூடு நஞ்சுண்டேசுவரர் கோயில், ஸ்ரீசைலம், காளஹத்திக் கோயில்கள், கேரளத்துவைக்கம், எட்டுமாணுர், வடக்குநாதர் ஆலயங்கள், தமிழகத்தில் சிதம்பரம், மதுரை, குடந்தை, தஞ்சை, காஞ்சி, திருவண்ணாமலை, இராமேசுவரம், மயிலை ஆலயங்கள் ஆகியவை தலப் பெருமையும், கலைப்பெருமையும் இணைந்தவை.

    தமிழகத்தில் இந்தியர் சிற்பக் கலைக்குப் பெரும் பணிபுரிந்த பல்லவர், பாண்டியர், பல்லவர், சோழர், விஜயநகர அரசர்கள் கைவண்ணத்திலும், மெய்வண்ணத்திலும் மலர்ந்த ஆலயங்கள் பலவற்றில் ஆகமங்கள் வருணிக்கும் அரனின் அழகு வடிவங்களைக் காண்கிறோம். சிவபெருமானின் அர்த்தநாரீச்சரர், சோமாஸ்கநாதர், ஹரிஹரர், தட்சிணாமூர்த்தி கல்யாண சுந்தரர், கங்காதரர், பைரவர். சண்டேச அனுக்கிரகமூர்த்தி ரிஷபாருடர், உமாசதகர், சரபமூர்த்தி, சகாசனர் விருஷாபஹரணா ஆகிய திருக்கோலங்களைக் கல்லிலும், செம்பிலும் கண்ணாரக்காணலாம்.

    சிவபெருமான் ஆடும் அழகன். தமிழகத்துக் கலைப்படைப்புகளில் ஆடல் தேவனின் அழகு வடிவங்கள் தனிஇடம் பெற்றவை. பிறை சூடிய பெருமான் கலைக்கு ஒரு தெய்வம் அல்லவா. அழகுக் கலைகள் அவனைச்சரணடைந்ததில் வியப்பில்லைதான். சிவதாண்டவத்தின் பேரெழிலை, தத்ரூபமான படப்பிடிப்பை, திருவெண்காடு, திருவாலங்காடு, நல்லூர், குடந்தை நாகேசுவர ஆலையப் படிமங்களில் காணலாம். சிவலீலைச் சிற்பங்களைச் சித்தரிக்கும் தமிழகத்துக் கோயில்களில் பல்லவர் படைத்த காஞ்சி கைலாயநாதர் ஆலயம், திருச்சி மலைக்கோயில், சோழர் சமைத்த தஞ்சை பெரியகோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திருபுவனம் ஆலயங்கள் பாண்டியரின் கழுகுமலைக் குகைக்கோயில், பல மன்னர்கள் பாங்கோடு உருவாக்கியதில்லை. மதுரை ஆலயங்கள் சுசீந்தரம் தாணுமாலயப் பெருமாள் கோயில் ஆகியவை காலம் போற்றும் கற்காவியங்களாக விளங்குகின்றன.

    சிவபெருமானுக்குச் சிறப்பாக உரிய திருநாட்கள் மூன்று. மஹா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை நாட்கள் சிவமகிமையை உணர்த்துகின்றன.

    இத்திருநாட்களின் பழமைச் சிறப்பை ஆலயக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆந்திரத்து ஸ்ரீ சைலத்திலுள்ள மல்லிகார்ஜுனர் ஆலய முகமண்டபத்தில் சிவராத்திரி நாளில் விஜய நகர வேந்தர் ஒருவர் அந்த மண்டபத்தை அக கோயிலுக்கு வழங்கியதாகக் கல்வெட்டுகள் உள்ளன. சிவராத்திரி வழிபாட்டுக்காகக் சோழ மன்னன் ஒருவன் திரவியதானம் அளித்ததாகக் திருச்சிக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. திருவள்ளுரை அடுத்த திருப்பாசூரில் உள்ள சிவாலயக் கல்வெட்டு அந்நாளில் ஆடும் அழகனுக்கு ஆதிரைவிழா எடுக்கப்பட்டதை அறிவிக்கிறது. தஞ்சை மாவட்டத்துத் திருக்கோடிக்காவலில் உள்ள மற்றொறு கலிவெட்டு சோழ வேந்தன் குலோத்துங்கனின் முப்பத்து நான்காம் ஆண்டில் தில்லையம்பல விழுப்பரையன என்பான் நடராஜப்பெருமானுக்கு ஆதிரை நாளன்று அபிஷேகம் செய்விப்பதற்காக நிலமளித்த செய்தியைச் சொல்கிறது. இக்கல்வெட்டுக்கள்யாவும் பன்னுறு ஆண்டுகளாகச் சிவனுக்கு உரிய திருவிழாக்களும் கொண்டாடப்பட்டு வந்திருப்பதையும் சிவவழிபாட்டின் பழமைச் சிறப்பையும் பறைசாற்றுகின்றன.

    சிவவழிபாடு காலத்தைவென்று ஞானத்தில் நிலை கொண்டது அவலங்களை விரட்டி அருள் ஒளிபெற அந்த ஞான மூர்த்தியைப் போற்றுவோம். ஹர ஹர மஹாதேவா. சமய பயிற்சி எல்லோரும் பெற வேண்டும். இந்து மதம் என்பது அநாதியானது. எவ்வாறு நில இயல் வள்ளுநர்களாலும், சரித்திர ஆராய்ச்சியாளர்களாலும் உலகம் தோண்றியகாலத்தையும், மனிதன் தோன்றிய காலத்தையும் சரியாக நிர்ணயிக்க முடியவில்லையோ, அதுபோல இந்து மதமும் அநாதியானது. எவ்வாறு மற்ற மதங்களைத் தேதியிட்டுக் கூற முடியுமோ அது போல் இம்மதத்தைக் கூற முடியாது.

    உலகமும் மனிதனும் தோன்றியவுடன் பிரச்சனைகளும் தோன்ற ஆரம்பித்தன. அத்துடன் அதற்கான தீர்வும் தோன்ற ஆரம்பித்தன. இதுதான் இந்து சமயம். இம்மதம் அநாதியானது என்பதற்க்கு சூரிய சந்திரனை நாம் ஒப்பிடுகிறோம். நான் இந்து நாடான நேபாளம் சென்றிருந்தபோது, அந்நாட்டின் தேசியக் கொடியில் சூரியன் சந்திரன் இருந்திருந்தது. சூரிய சந்திரனுக்கு எவ்வாறு அழிவு என்பது இல்லையோ, எவ்வாறு அது பழமையானதோ, எவ்வாறு அது தோன்றிய காலம் நிர்ணயிக்கப்பட முடியாததாக உள்ளதோ, அவ்வாறே இந்து மதமும், சூரியன், உணர்ச்சி, வேகம், சுறுசுறுப்பு இவைகளுக்கு உதாரணமாகவும், சந்திரன், சாந்தம், அமைதி இவைகளுக்கு உதாரணமாகவும் இருக்கின்றன. இதுவே இந்த மதத்தின் சின்னங்களாக இருக்கின்றன சூரியனும் சந்திரனும் இந்த உலகத்தில் ஒரு பகுதியில் தோன்றும் பொழது மற்றொரு பகுதியில் மறைந்திருக்கிறது. அவைகளுக்கு அஸ்தமனம் என்பதே கிடையாது. சில சமயங்களில் சூரியனும், சந்திரனும் மேகங்களால் மறைக்கப்படலாம். அது போலவே சில சமயங்களில் இந்து மதமும் மறைக்கப்பட்டது போல் காணப்படுகிறது.

    மற்ற தெய்வங்கள் போல் அல்லாமல் சிவலிங்கம் தோன்றிய உடனே அதற்கு ஒரு கலை (சக்தி) சக்தி தோன்றுவது போல் அமாவாசை அன்று சந்திரனுக்கும் ஒரு கலை மறையாமல் இருக்கிறது. அது போலவே இந்து சமயம் மறைந்து இருந்தாற் போல் தோன்றிய காலத்திலும் சத்தியம், தர்மம் என்ற இவைகளினால் அது மறையாமல் இருக்கிறது. இவ்வாறு குழப்பங்களை அகற்றி தனி மனிதன் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே இம்மதம் உள்ளது. இந்து சமய மாணவர் மன்றம் மதத்தின் அடிப்பக்கொள்கைகளை சிறுவர்களுக்கு கற்றுக்கொடுப்பதின் முலம் இப்பணியை செய்துவருகிறது. 480 கிளைகள் கொண்ட இதில் மதுரை இந்து சமய மாணவர் மன்றம் சிறப்பாகச்செய்து வருகிறது. இதில் சமயத்தின் அடிப்படைக் கொள்கைகள் பல பயிற்ச்சி வகுப்புகள் மூலமாக மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. மற்றும் தியானம், பஜனை போன்ற நல்வழிகள் மூலமாக மனிதனை நல்வனாக்குகிறது.

    தனி மனிதன் வாழ்வு தூய்மையாக இருந்தால் துன்பம் வராது. ஒரு குடும்பத்தில் ஒருவராவது இப்பயிற்சியைப் பெறவேண்டும். அதுவே அக்குடும்பத்திற்கு நல்ல அஸ்திவாரமாக அமையும். இவ்வாறு குடும்பம் தூய்மை அடையும். அதைத் தொடர்ந்து நகரம் தூய்மை அடையும். அதைத் தொடர்ந்து நாடு தூய்மை அடையும். இப்பயிற்சியின் மூலமாக மாணவர்களை தூய்மை அடயச்செய்வதின் மூலம் தாய், தந்தை, ஆசிரியர்கள் இவர்களுடைய பிரச்சனை நீங்குகிறது. நல்ல சூழ்நிலை ஏற்படுகிறது. மாணவன் தூய்மையடைய பெற்றோர்களும் மதத்தைப்பற்றி அறிந்து இருக்கவேண்டும்.

    பெற்றோர்கள் எவ்வாறு இருப்பார்களோ அவ்வாறே புதல்வர்களும் இருப்பார்கள். நல்ல குடும்ப சூழ்நிலையுள்ள இடத்தில் புதல்வர்களும் நல்லவர்களாகவே இருப்பார்கள். இந்த நல்லனவற்றை நமது பண்பாடு, கலாச்சாரம், தத்துவம், வேதம், சரித்திரம், புராணங்கள் இவைகள் தெரிவிக்கின்றன. நான் திண்டுக்கல்லில் பேசும் போது ஒரு சிருவன் எழுந்து தன்னால் கடவுளைக்காண முடியுமா எனக்கேட்டான். நான் பதில் அளிக்கையில், எவ்வாறு நாம் அத்தியாவஸ்யமான தேவைகளுக்கு முயற்சி செய்கிறோமோ அதுபோலவே கடவுளைக்காண முயற்சிசெய்ய வேண்டும். துன்பம் இல்லாத ஒரு பொருள் ஒன்று கூற வேண்டுமானால் அதுவே கடவுளாகும். அக்கடவுளைக்காண சில அருகதைகள் வேண்டும். அதாவது இந்தத் தூய்மை, உடல், உடை இம்மூன்றிலும் வேண்டும். இம்மூன்று தூய்மைகளும் அமைந்து விட்டால், உள்ளத் தூய்மை தானாகவே வந்துவிடுகிறது. தூய்மை என்பது பனிதத்துவத்தைக் குறிக்கிறது. முதலில், உடலிலும், பிறகு உணவு உடைகளிலும் இப்புனிதத்துவம் ஏற்பட வேண்டும் இம்மூன்றும் வரும்போது உள்ளம் தூய்மையடைந்து உள்ளம் பெருகுகிறது. கடவுளைக்காணவேண்டும் என்றால் அகத்தூய்மை என்ற அருகதை வேண்டும், இத்தூய்மை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதே இந்து சமய மாணவர்மன்றத்தின் பணியாகும்.

    • இவ்விரு அணிகள் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்று வருகின்றன.
    • இதுபோன்ற தொடர்கள் எதிர்காலத்திலோ அல்லது வரவிருக்கும் நாட்களிலோ நடத்த எந்த திட்டமும் இல்லை.

    மும்பை:

    இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 2007-ம் ஆண்டு இருதரப்பு டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதற்குப் பிறகு இரண்டு அணிகளும் தங்களுக்குள் இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் விளையாடவில்லை. பல ஆண்டுகளாக நீடித்து வரும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளால் இரு நாடுகளும் தங்களுக்குள் சுற்றுப்பயணம் செய்து விளையாடவில்லை. இவ்விரு அணிகள் இருதரப்பு போட்டிகளைத் தவிர, ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்று வருகின்றன.

    இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி , நடுநிலையான இடத்தில் பாகிஸ்தான்-இந்தியா டெஸ்ட் தொடர் நடந்த அனுமதி கொடுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டது.

    இந்த நிலையில் இந்த செய்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ ) தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர்கள் எதிர்காலத்திலோ அல்லது வரவிருக்கும் நாட்களிலோ நடத்த எந்த திட்டமும் இல்லை. பாகிஸ்தானுடன் எந்த விதமான இருதரப்பு தொடர்களும் நடத்த நாங்கள் தயாராக இல்லை என பிசிசிஐ தரப்பில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெங்களூரு அணி எஞ்சிய 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழையலாம்.
    • ஒன்றில் தோற்றால் அடுத்த அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் தான் தகுதி பெற முடியும்.

    ஐதராபாத்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் ஐ.பி.எல். திருவிழாவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் பின்தங்கி இருப்பதுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்து விட்டது. அந்த அணிக்கு எஞ்சி இருக்கும் 2 லீக் ஆட்டங்களில் உள்ளூரில் நடைபெறும் கடைசி ஆட்டம் இதுவாகும். பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

    கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை 59 ரன்னில் சுருட்டி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதால் ரன்-ரேட்டில் (+0.166) வலுவான நிலையை எட்டிய பெங்களூரு அணி எஞ்சிய 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழையலாம்.

    ஒன்றில் தோற்றால் அடுத்த அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் தான் தகுதி பெற முடியும். எனவே அந்த அணிக்கு இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. இருப்பினும் வலுவான பெங்களூரு அணியின் சவாலை சமாளிக்க வேண்டும் என்றால் ஐதராபாத் அணி எல்லா துறையிலும் சிறந்து விளங்கினால் மட்டுமே சாத்தியமாகும் என்பதில் சந்தேகமில்லை.

    ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 12 ஆட்டங்களில் ஐதராபாத்தும், 9 ஆட்டங்களில் பெங்களூருவும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    • இதுவரை கங்குலிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.
    • சவுரவ் கங்குலி தற்போது டெல்லி அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார்.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இதுவரை கங்குலிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்புக்கான கால அவகாசம் முடிவுக்கு வந்த நிலையில், கங்குலிக்கான பாதுகாப்பை இசட் பிரிவுக்கு உயர்த்த மேற்கு வங்காள அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில மூத்த அதிகாரி தெரிவித்தார். இசட் பிரிவு பாதுகாப்பின் படி சவுரவ் கங்குலிக்கு 8 முதல் 10 போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள்.

    சவுரவ் கங்குலி தற்போது டெல்லி அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார். வரும் 21-ம் தேதி கங்குலி கொல்கத்தா வருகை தருகிறார். அதன்பிறகு அவருக்கு தினமும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

    • ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்பட்டு வருகிறார்.
    • இந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய டெல்லி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்பட்டு வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய டெல்லி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் பிளே ஆப் சுற்றில் இருந்து இந்த அணி வெளியேறியது. 

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் தனது நிறுவனத்தின் தயாரிப்பான பாண்டிங் ஒயின்சை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் உள்ள டியூட்டி ப்ரீ என்ற வரியில்லா விற்பனை நிலையத்தில் தொடங்கி வைத்தார்.

    • கடைசியாக 2013-ம் ஆண்டு இங்கு ஐ.பி.எல். போட்டிகள் நடந்தன.
    • மைதானம் தொடர்பாக இமாச்சல பிரதேச கிரிக்கெட் கவுன்சில், மாநில அரசு இடையே சட்டப்போராட்டம் நடந்து வந்ததால் இங்கு போட்டிகள் நடைபெறாமல் இருந்து வந்தது.

    தர்மசாலா:

    விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த 20 ஓவர் திருவிழாவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கான ரேசில் 7 அணிகள் இருக்கின்றன.

    இந்நிலையில் தர்மசாலாவில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 64-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு 19,000 பார்வையாளர்கள் கொண்ட தர்மசாலா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி இன்று நடைபெற உள்ளது.

    10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான ஏற்பாடுகளை இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க நிர்வாகம் சிறப்பாக முடித்துள்ளது. இந்த சீசனின் 64வது மற்றும் 66வது ஐ.பி.எல். போட்டிகளை காண மைதானம் தயாராக உள்ளது. தரையைச் சுற்றி ஹார்டிங் மற்றும் எல்இடிகள் நிறுவப்பட்டுள்ளன. மைதானம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கடைசியாக 2013-ம் ஆண்டு இங்கு ஐ.பி.எல். போட்டிகள் நடந்தன. மைதானம் தொடர்பாக இமாச்சல பிரதேச கிரிக்கெட் கவுன்சில், மாநில அரசு இடையே சட்டப்போராட்டம் நடந்து வந்ததால் இங்கு போட்டிகள் நடைபெறாமல் இருந்து வந்தது.

    ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது எஞ்சிய 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியுடன் உள்ளது.

    அத்துடன் அந்த அணி ரன்-ரேட்டிலும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்வி என 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருப்பதுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

    முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த டெல்லி அணி அடுத்த 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்டு எழுச்சி பெற்றது. ஆனால் அதன் பிறகு கடந்த 2 ஆட்டங்களில் சென்னை, பஞ்சாப் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது. ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 ஆட்டங்களில் பஞ்சாப்பும், 15 ஆட்டங்களில் டெல்லியும் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×