என் மலர்
சினிமா
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம்.
- விக்ரம் திரைப்படம் தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியானது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் 3- ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் இதுவரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விக்ரம்
அடுத்தடுத்து பல புதுப்படங்கள் வெளி வந்தாலும் விக்ரம் மீதான ரசிகர்களின் ஆர்வம் இன்றும் குறையவில்லை. இதையடுத்து விக்ரம் திரைப்படம் 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளதை படக்குழுவினர் போஸ்டருடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும், விக்ரம் படத்தின் மொத்த வசூல் நாளைக்குள் உலக அளவில் ரூ400 கோடியை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக எந்த ஒரு தமிழ்படமும் இந்த வசூலை எட்டவில்லை. இந்த படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி கமல் மட்டும் அல்லாது அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.
- இசையமைப்பாளர் இளையராஜாவின் 80-வது பிறந்த நாள் சமீபத்தில் நிறைவடைந்தது.
- சென்னை மற்றும் கோவையில் நடைபெற்ற இவரது இசை நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவின் 80-வது பிறந்த நாள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை அடுத்து அவரது இசை நிகழ்ச்சிகள் சென்னை மற்றும் கோவையில் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து நாளை மதுரை ஒத்தக்கடை பள்ளிக்கூட வளாகத்தில், 'இசை என்றால் இளையராஜா' கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக இளையராஜா மதுரைக்கு வந்துள்ளார். இந்த நிலையில் அவர் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்தார்.

இளையராஜா
தெற்கு கோபுர வாசல் வழியாக கோவிலுக்குள் சென்ற இளையராஜா பக்தர்களோடு பக்தராக நின்று சுவாமி மற்றும் அம்மன் சன்னதி, கால பைரவர் சன்னதி என மொத்தமாக 45 நிமிடங்கள் கோவிலில் வழிபாடு செய்தார். மேலும் தமிழ் வருட பிறப்பு, ஆங்கில வருடப்பிறப்பு, பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் இளையராஜா மீனாட்சியம்மன் கோவிலில் வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது.
- சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் "பதான்".
- "பதான்" படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் சமீபத்தில் அட்லியின் அடுத்த படமான ஜவான் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதைத்தொடர்ந்து அண்மையில் ஜவான் படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.
இதையடுத்து இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

"பதான்" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
நடிகர் ஷாருக்கான் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆனதையொட்டி "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முன்னோட்டம் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மேலும், பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
- வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'வாரிசு'.
- இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'வாரிசு'. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

வாரிசு ஃபர்ஸ்ட் லுக்
இந்நிலையில், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஓட்டோ நிறுவனத்தின் விளம்பரத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்று வைரலானது. தற்போது இந்த புகைப்படத்திற்கு ஓட்டோ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ஓட்டோ விளக்கம்
அதில், " ஓட்டோவில், நாங்கள் அறிவுசார் சொத்துரிமை மீறலை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். மேலே உள்ள படம் எந்த வகையிலும் ஓட்டோவுடன் தொடர்புடையது அல்ல. மேலும், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே சில மீம் கிரியேட்டர்களால் உருவாக்கப்பட்டது. வாரிசு அணிக்கு எங்கள் தரப்பில் இருந்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளது.
- இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம் 'யானை'.
- யானை திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அருண் விஜய்யின் 33-வது படம் 'யானை'. ஹரி இயக்கத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமத்து பின்னணியில் தயாராகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.

யானை போஸ்டர்
படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து யானை படம் சென்சார் போர்டால் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை பிரத்யேக போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
- பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவங்கள் முதன் முதலாக தமிழில் படமாக்கப்படுகின்றன.
- இந்த படத்தை உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார்.
அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிகர் பாலமுருகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் "குதூகலம்". இப்படத்தில் கதாநாயகியாக அம்மு அபிராமி நடிக்கிறார். இவர்களுடன் கவிதாபாரதி, புகழ், பியான், சஞ்சீவி, அனிஸ், மன்மோகித், பிரேமி, தயாரிப்பாளர் எம்.சுகின்பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
திருப்பூர் பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாக்கப்படும் இப்படத்தை ரெட் & கேட் பிக்சர்ஸ் சார்பில் எம்.சுகின்பாபு முதல் படைப்பாக தயாரிக்கிறார். இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன்.

பாலமுருகன்
இவர், சிவகார்த்திகேயன் நடித்த 'காக்கிசட்டை', 'எதிர்நீச்சல்' படங்களில் துணை இயக்குனராகவும் தனுஷ் நடித்த 'கொடி', 'பட்டாசு' போன்ற படங்களில் இணை இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.
"குதூகலம்" படத்திற்கு பியான் சர்ராவ் இசையமைத்துள்ளார். மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருப்பூரில் படமாக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
- நடிகர் காலித், பெரியார் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்கு அறிமுகமானார்.
- இவர் படப்பிடிப்பின் போது திடீரென மரணமடைந்தார்.
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் நடிகர் காலித். மலையாள பட நகைச்சுவை நடிகரான இவர் 1973-ம் ஆண்டு பெரியார் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தாப்பானா, வெள்ளம் உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.
ஜூட் ஆண்டனியின் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் படத்திற்காக கொச்சியில் நடந்த படப்பிடிப்பில் காலித் பங்கேற்றார். அப்போது படப்பிடிப்பின் இடையில் கழிவறை சென்ற அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

நடிகர் காலித்
மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் காலித் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு காலித் ரகுமான், ஷைஜூ காலித் மற்றும் ஜிம்ஷி காலித் என 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் காலித் ரகுமான் மலையாள பட உலகில் பிரபல இயக்குனராக உள்ளார். மற்ற 2 பேரும் ஒளிப்பதிவாளர்களாக உள்ளனர்.
மரணமடைந்த நடிகர் காலித்துக்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
- இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “மாமனிதன்”.
- இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "மாமனிதன்".
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி - காயத்ரி
"மாமனிதன்" திரைப்படம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்ற நிலையில், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனைவருக்குமான படமாக "மாமனிதன்" இருப்பதால், ஒருமுறையாவது இப்படத்தை காண வேண்டும் என்ற ஆவல் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
சமீப காலமாக வந்த படங்களில், குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமாக "மாமனிதன்" இருப்பதால், பெண்கள் கூட்டம் திரையரங்கில் அலைமோதி வருகிறது. இப்படத்தை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிட்டுள்ளார்.
- மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம்.
- இப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளது. 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தது.

திருச்சிற்றம்பலம்
7 வருடங்களுக்குப் பிறகு தனுஷ்-அனிருத் கூட்டணி இப்படத்தின் மூலம் இணைந்திருப்பதால் படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தின் முதல்பாடலான "தாய் கிழவி" என்ற பாடல் இன்று (24.06.2022) மாலை 6 மணிக்கு வெளியாகும் என வீடியோ பதிவின் மூலம் தனுஷ் சில தினங்களுக்கு முன்பு அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

திருச்சிற்றம்பலம்
இந்நிலையில் அறிவித்தபடி இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. அனிருத் இசையில் தனுஷ் குரலில் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான "தாய் கிழவி" பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கிராமத்து பாணியில் உருவாகி இருக்கும் இப்பாடல் தற்போது சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- சாய் பல்லவி நடித்த ஷியாம் சிங்காராய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- தற்போது கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் கார்கி படத்தில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்திலேயே 'களி' என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.
பின்னர் 'பிடா' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்கு சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்காராய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

கார்கி போஸ்டர்
இதைத்தொடர்ந்து சாய் பல்லவி நடித்துள்ள படம் 'கார்கி'. கெளதம் ராமசந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கவுள்ளது.

படக்குழு
இது குறித்து சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் " கார்கி குழுவுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கார்கி திரைப்படத்தில் சில கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்கும். புது சிந்தனைகளும் எழுத்துக்களும் கொண்டாடப்பட வேண்டும். உங்கள் அனைவருக்கும் 'கார்கி பிடிக்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். மேலும், 'கார்கி படத்தின் போஸ்டரை இணையத்தில் சூர்யா பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் விக்ரம்.
- இப்படம் மூன்று வாரங்களை கடந்து திரையரங்குகள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் வசூல் ரூ.400 கோடியை தாண்டி விடும் என்கிற பேச்சு எழுந்திருக்கிறது. இந்த வெற்றியால் திரையுலகினர் பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள். இளையராஜாவும் வாழ்த்துத்துகள் சகோதரரே என்று சமூக வலைத்தளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த வெற்றிக்கு காரணமானவர்களுக்கு பரிசு கொடுத்த கமல்ஹாசன், முதலில் கவுரவ வேடத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை வீடு தேடிப்போய் பரிசளித்தார். உதவி இயக்குனர்களுக்கு பைக் வாங்கிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் வாங்கிக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார்.

சூர்யா - கமல்
இந்த நிலையில் சூர்யாவுக்கு கொடுத்த ரோலக்ஸ் வாட்ச் புதிதாக வாங்கிக் கொடுக்கப்பட்ட வாட்ச் இல்லை என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய சமயத்தில் முதன் முதலில் வாங்கிய விலை அதிகமான பொருள் இந்த ரோலக்ஸ் வாட்ச்தான். இத்தனை ஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருந்தார். மனதுக்கு நெருக்கமான இந்த வாட்ச்சைத்தான் சூர்யாவுக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன் என்று லோகேஷ் கூறியுள்ளார்.
- வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடிக்கும் அசோக் செல்வன் நடித்துள்ள படம் 'வேழம்'.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் 'வேழம்'. இந்த படத்தில் ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), சங்கிலி முருகன் மற்றும் மராத்தி நடிகர் மோகன் அகாஸ்தே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கே 4 கிரியேஷன்ஸ் சார்பில் கேசவன் தயார