search icon
என் மலர்tooltip icon
    • திடீர் மழை காரணமாக ஒரு கடலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் குறைந்தது.
    • ஈரப்பதற்காற்று உள்ளே வரும் சமயத்தில் அனல் காற்று கணிசமாக குறைந்து காணப்படும்.

    கடலூர்:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்தது. திடீர் மழை காரணமாக  கடலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் குறைந்தது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 101 டிகிரி வெயில் அளவு பதிவானதும் குறிப்பிடத் தக்கதாகும். தற்போது தமிழகத்தில் சென்னை, கடலூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக 100 டிகிரி வெயில் அளவு பதிவாகி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது மட்டுமின்றி கடந்த மே 4-ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வழக்கத்தை விட அதிக அளவில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கி கடும் அனல் காற்று வீசி வந்தது. இதனால் கடலூர் மாவட்டத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் நடமாட்டம் குறைந்த வண்ணம் இருந்து வந்தது. மேலும் கடலூரில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    கடும் வெயில் மற்றும் அனல் காற்று வீசுவதால் சாலை ஓரங்களில் உள்ள பழச்சாறு, இளநீர், கரும்பு ஜூஸ் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அருந்தி வெயிலின் தாக்கத்தை குறைக்க முயன்றாலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் கடும் வெயில் காரணமாக முகத்தில் துணி கட்டிக் கொண்டும், குடைப்பிடித்த படியும் சென்றதையும் காணமுடிந்தது.

    இந்த நிலையில் மாலை வரை சுட்டெரிக்கும் வெயில் இருந்து வரும் நிலையில் இரவு நேரங்களில் கடுமையான புழுக்கத்தை ஏற்படுத்தும் காரணத்தினால் பொதுமக்கள் இரவு தூக்கம் இல்லாமல் கடும் அவதி அடைந்து வருவதோடு முதியவர்களுக்கு பல்வேறு உடல்நிலை பாதிப்பும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் வெயில் மற்றும் அனல் காற்று அதிகரித்து வரும் காரணங்கள் குறித்து வானிலையாளர் பாலமுருகனிடம் கேட்ட போது கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து தற்போது சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அனல் காற்று வீசி வருகின்றது. மேலும் கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததை காண முடிந்தது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு மோக்கா புயல் உருவாகி மியான்மரில் கரையை கடந்தது. இதன் காரணமாக காற்றில் உள்ள ஈரப்பதம் பெருமளவில் குறைந்து தற்போது மிக குறைந்த அளவில் ஈரப்பதற்காற்று கடல் பகுதியில் வீசி வருகின்றது. மேலும் மேற்கு திசையில் இருந்து காற்று தீவிரமாக வீசி வருகின்றது. இந்த காற்றானது வறண்ட காற்றாகும். இந்த காற்று வங்க கடலில் இருந்து வீசும் நேரத்தில் எப்போதும் மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரை கிழக்கு திசையில் இருந்து ஈரப்பதற்காற்று உள்ளே வரும் சமயத்தில் அனல் காற்று கணிசமாக குறைந்து காணப்படும்.

    ஆனால் தற்போது மேற்கு திசையிலிருந்து வரக்கூடிய காற்று அதி கரித்து வரும் நிலையில் கிழக்கிலிருந்து வரக்கூடிய ஈரப்பதற்காற்று சற்று காலதாமதமாக வருவதால் வெப்ப சலனம் அதிகரித்து அனல் காற்று கடுமையாக வீசி வருகின்றது. ஆனால் நேற்று கிழக்கில் இருந்து வரக்கூடிய ஈரப்பதற்காற்று சரியான நேரத்தில் உள்ளே வந்ததால் நேற்று முன்தினம் 104 டிகிரி வெயில் இருந்த நிலையில் நேற்று 100 டிகிரி வெயிலாக குறைந்து காணப்பட்டது. இன்று முதல் 3நாட்களுக்கு வறண்ட வானிலை மற்றும் அனல் காற்று வீசக்கூடிய நிலையில் தான் தற்போது வரை உள்ளது. இதன் பிறகு வானிலை மாற்றம் காரணமாக எதுவாயினும் நடை பெறலாம். ஆகையால் பொது மக்கள் மற்றும் முதியவர்கள் அனல் காற்று மற்றும் சுட்டெ ரிக்கும் வெயில் காரணமாக பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் கடந்த 14-ம் தேதி முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் விஷ சாராயம் குடித்து 10-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் பலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி, சிதம்பரம் ஆகிய உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கடந்த 14-ம் தேதி முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் 7 தனிப்படை அமைத்து போலீசார் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி விற்பனை செய்வது போன்றவற்றை தடுக்கும் விதமாக அதிரடியாக அனைத்து பகுதிகளிலும் சோதனைகளில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதியிலிருந்து நேற்று (17-ந்தேதி) வரை 199 சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தல், கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து 203 நபர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இதுவரை 920 லிட்டர் சாராயம் மற்றும் 2,133 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    • வேலைக்கு செல்வதாக சென்ற பெண் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் 19 வயது இளம்பெண் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்றுஅப் பெண் வேலைக்கு செல்வ தாக சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்சசியடைந்த அவரது பெற்றோர்கள் இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • பாலமுருகன் மனைவியை மானபங்கபடுத்தியதாக கூறப்படுகிறது.
    • போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 39).தொழிலாளி. இவருக்கும் இவரது அண்ணன் ராமனுக்கும் முன் விரோத தகராறு இருந்து வருகிறது. சம்பவத்தன்று அண்ணன் தம்பிக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராமன் மற்றும் அவருடன் வந்த 4 ேபர்கள் திடீரென்று பாலமுருகனை தாக்கினார்கள். இதனை தடுக்க சென்ற பாலமுருகன் மனைவி யை மானபங்கபடுத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த பாலமுருகன் கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் ராமன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பாரதி நாட்டு துப்பாக்கியுடன் அடிக்கடி காப்புக் காட்டில் வேட்டைக்கு செல்வதாக கூறப்படுகிறது.
    • கலையம்மாள் முண்டியம் பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சி புரத்தை அடுத்துள்ள கடையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது40). விவசாயி.இவரது மனைவி கலையம்மாள் (32). இவர்களுக்கு 3 மகள்கள் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் பாரதியை கோவிந்தன் வளர்ப்பு மகனாக வளர்ந்து வந்தார். கோவிந்தனுடன் சேர்ந்து பாரதி விவசாய பணிகளை கவனித்து வந்தார். மேலும் பாரதி நாட்டு துப்பாக்கியுடன் அடிக்கடி காப்புக் காட்டில் வேட்டைக்கு செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவிந்தனின் மூத்த மகளை பாரதி ஒரு தலையைாக காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு கோவிந்தனிடம் பாரதி கேட்டதாக தெரிகிறது. மேலும் இதில் கோவிந்தன் அவர் மகளை பாரதிக்கு பெண் தர மறுத்துள்ளார்.இதனால் கோவிந்தன் மீது பாரதி ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கோவிந்தன் பால் கறந்து கொண்டிருந்த போது அங்கு நாட்டு துப்பாக்கியுடன் வந்த பாரதி, கோவிந்தனின் தலையில் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தன் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அப்போது அங்கு வந்த அவரது மனைவி கலைய ம்மாளையும் பாரதி நாட்டு துப்பாக்கியால் சுட்டார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த கணவன்-மனைவியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற கோவிந்தன் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார். கலையம்மாள் முண்டியம் பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கண்டா ச்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் விழுப்புரம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்நிலையில் தப்பி ஓடி அப்பகுதியில் உள்ள காப்பு காட்டில் பதுங்கி தலைமறைவாகி இருந்த பாரதியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    • பரிவேட்டை, சாமி வீதி உலா, அரவான் களப்பலி மற்றும் தெருக்கூத்து நடைபெற்றது.
    • நாளை மாலை 6 மணி அளவில் தீமிதி திருவிழாக நடைபெற உள்ளது.

    கடலூர்:

    கடலூர் வில்வராய நத்தத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் தீமிதி பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெறு வது வழக்கம். தீமிதி திருவிழா பிரம்மோற்சவ விழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று வந்தது. நேற்று முக்கிய விழாவான திருக்கல்யாணம உற்சவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத் தில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து வில் வளைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியத்துடன் வேத மந்திரம் முழங்க திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. பின்னர் பரிவேட்டை, சாமி வீதி உலா, அரவான் களப்பலி மற்றும் தெருக்கூத்து நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் 21 சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் அடங்கிய வரிசை தட்டு மற்றும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஸ்ரீ திருப்பதி வெங்கடா ஜலபதி லாரி சர்வீஸ் உரிமையாளர் அருணாச சலம், கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், நிர்வாக செயலாளர் செல்வராஜ், இணை செயலாளர் திருமால்ராஜ், பொருளாளர் ரமேஷ் மற்றும் இளைஞர்கள், விழா குழுவினர் கலந்து கொண்ட னர்.

    இன்று (18 ந்தேதி) மாலை அர்ஜுனன் தபசு, விசேஷ சாந்தி, சாமி வீதி உலா, கரகத் திருவிழா நடைபெறுகிறது. நாளை (19 ந்தேதி) பிரம்ம உற்சவத்தின் சிகர விழாவான தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து காலையில் அரவான் புறப்பாடு, வீர மாங்காளி புறப்பாடு உள் ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணி அளவில் தீமிதி திருவிழாக நடைபெற உள்ளது. விழாவிற்கு அய்யப்பன் எம். எல்.ஏ , 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கு கிறார்கள். கூட்டு றவுத்துறை தனி அதிகாரி கிருஷ்ணராஜ், மகாலட்சுமி கல்வி நிறுவன உரிமையாளர் ரவி ஆகி யோர் கலந்து கொள்கிறார் கள். தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடு களை விழா குழு தலைவரும், ஸ்ரீ திருப்பதி வெங்கடா ஜலபதி லாரி சர்வீஸ் உரிமையாளருமான அருணாச்சலம், நிர்வாக செயலாளர் செல்வராஜ், இணை செயலாளர் திருமால்ராஜ், பொருளாளர் ரமேஷ் மற்றும் விழா குழுவினர் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

    • சரியான அக்கறை காட்டாத தன்மையும் எடுத்துக்காட்டும் விதத்தில் தான் இந்த சம்பவங்கள் நிகழ்துள்ளது.
    • தற்காலிக பணி நீக்கம்,இடமாற்றம் செய்வதால் இந்த பிரச்ச னைகள் தீர்ந்து விடாது.

    விழுப்புரம், மே.18–-

    விழுப்புரம் மாவ ட்டம்,மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச் சாராயம் குடித்தவ ர்கள் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்து வ மனையில் சிகிச்சை பெற்று வருகி ன்றனர். அவர்களை நேற்று ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாள ர்ஜே.சி.டி. பிரபாகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர்அவர் கூறியதாவது:-

    மரக்காணம்,எக்கியார் குப்பம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கும் ஆறுதல் தெரிவிக்க ஓ.பி.எஸ்., கூறியதின் பேரில் இங்கு வந்துள்ளோம். .செங்கல்பட்டு மாவட்டத்தில் இதேபோல் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் அறிக்கை கொடுத்துள்ளார்.அரசினுடைய மெத்த னப்போக்கு காரணமாகவும் மதுவிலக்கு கொள்கையில் இன்னும் சரியான அக்கறை காட்டாத தன்மையும் எடுத்துக்காட்டும் விதத்தில் தான் இந்த சம்பவங்கள் நிகழ்துள்ளது. அரசு முறையான, சீரான ஒரு மதுவிலக்கு கொள்கை யை உடனடி நடவடிக்கை எடுத்து சீர்படுத்த வேண்டும் என அ.தி.மு.க.சார்பில் நாங்கள் முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம். அரசு தனது அலட்சியப் போக்கை விட்டு விட்டு சரி செய்ய வேண்டும். உளவு, காவல்,அமலாக்கம் போன்ற துறைகளில் பணிபுரி வோரை தற்காலிக பணி நீக்கம்,இடமாற்றம் செய்வதால் இந்த பிரச்ச னைகள் தீர்ந்து விடாது. மதுவிலக்கு கொள்கையில் ஒரு நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும். மதுவிலக்கு கொள்கையில் அரசு உடனடியாக மாற்ற ங்கள் கொண்டுவர வேண்டும் என அ.தி.மு.க.சார்பில் கோரிக்கையை வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    விழுப்புரம் மாவட்ட செயலா ளர் ஏழுமலை, துணைச் செயலாளர் டாக்டர் கலைச்செல்வன், ஒன்றிய செயலாளர் வேலு, விழுப்புரம் நகர செயலாளர் கமருதீன், மாநில மீனவர் அணி செயலாளர் ஜெயரா மன், தொகுதி பொறுப்பாளர் சுப்பிரமணி, நகர செயலா ளர் சங்கரலி ங்கம், அண்ணா தொழி ற்சங்க நிர்வாகிகள் ஏழும லை ,துரை, மாவட்ட ஜெயல லிதா பேரவை தனுசு ஜெயரா மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர்உ டனிருந்தனர்.

    • தியாகதுருகம் பகுதியில் மது பாட்டில் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்
    • இவர்களிடமிருந்து 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி

    தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தியாகதுருகம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் அரசு அனுமதி இன்றி தியாகதுருகம் அண்ணா நகர் பகுதியில் டீக்கடையில் மது பாட்டில் விற்பனை செய்த தியாகதுருகம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த சங்கர் (வயது 52), வீட்டின் பின்புறம் மது பாட்டில் விற்பனை செய்தவர்களான பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (60), வேளானந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பத்மா (37), வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் (48), சூளாங்குறிச்சி டாஸ்மார்க் அருகே மது பாட்டில் விற்பனை செய்த க.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி மகன் ராஜா (39) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சேஷ சமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் (வயது21) என்பவர் முருகன் கோவில் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் குபேந்திரனை கைது செய்து, அவரிடமிருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • விற்பனைக்காக வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.
    • டாஸ்மாக் கடை நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மரக்காணம் சுற்று வட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக கிராமங்களில் சாராய பாக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட வர்களில் பெரும்பாலா னோர். தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இதனால் மரக்காணம் பகுதியில் சாராய விற்பனை அறவே ஒழிந்தது என்றே கூறலாம். இந்நிலையில் மதுப்பிரி யர்கள் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சென்று மது அருந்து கின்றனர். டாஸ்மாக் கடை நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த கடை திறந்தது முதல் மூடும் வரையில் மது பிரி யர்கள் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர். வழக்கத்தை விட 3 மடங்கு கூடுதலாக மதுபாட்டில்கள் விற்பனை யாவதாக டாஸ்மாக் ஊழி யர்கள் கூறினார்கள்.

    • புதன்கிழமை மாலை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி யும் நடந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது வீரட்டா னேஸ்வரர் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு திரியோதசி தினத் தில் பிரதோஷ வழிபாடு நடைபெறுவது வழக்கம். வைகாசி மாதம் முதல் திரியோதசி தினமான நேற்று புதன்கிழமை மாலை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை களை தொடர்ந்து மகாதீபாராதனையும் பின்னர் நந்திதேவரின் இரு கொம்பு களுக்கு இடையே சிவனின் நடனக்காட்சி காணும் ஐதீக நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 6 மணிக்கு பிரதோஷ நாதர் ரிஷப வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்த ருளி பிரகார வலம்வரும் நிகழ்ச்சியும் அருள்பிர சாதம் வழங்கும் நிகழ்ச்சி யும் நடந்தது.

    • புதுவை மாநிலத்தை சேர்ந்த பர்கத்துல்லா, ஏழுமலையை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர்.
    • இந்த விசாரணையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்கலாம் என தெரிய வருகிறது.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே எக்கிய குப்பம் மீனவர் பகுதி வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்த கள்ள சாராயத்தை குடித்துவிட்டு 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது சம்பந்தமாக அப்பகு தியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 6 பேர்களை மரக்காணம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் புதுவை மாநிலம் முத்தி யால்பேட்டை பகுதி யை சேர்ந்த பர்கத்துல்லா மற்றும் தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஏழுமலை என்ற மொத்த வியாபாரி களிடம் கள்ளச்சாராயத்தை வாங்கினோம். இந்த சாரா யத்தை நாங்கள் எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் விற்பனை செய்தோம் என்று மரக்காணம் பகுதி யில் கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் போலீசாரிடம் கூறியுள்ளனர் .

    இதனைத் தொடர்ந்து புதுவை மாநிலத்தை சேர்ந்த பர்கத்துல்லா மற்றும் ஏழுமலையை போலீசார் நேற்று கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சென்னை வான கரம் பகுதியில் தொழிற்சா லை அமைத்து அங்கு தயா ரிக்கப்படும் மெத்தனாலை அப்பகுதியை சேர்ந்த இளைய நம்பி வயது (55)ராபர்ட் (50) ஆகியோர் எங்களுக்கு மொத்தமாக வழங்கினர். இந்த மெத்த னால் கலந்த எரி சாரா யத்தை தான் நாங்களும் மரக்காணம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியில் உள்ள சாராய வியாபாரிகளுக்கு விற்பனை செய்தோம் என்று கூறியுள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் சென்னை வானகரம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை அமைத்து மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை விற்பனை செய்த இளைய நம்பி மற்றும் ராபர்ட் உள்ளிட்ட வர்களை கைது செய்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் வைத்து தொடர்ந்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்கலாம் என தெரிய வருகிறது. இதற்கிடையே சாராய வழக்கை கொலை வழக்காக மாற்றி டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். அதன் படி கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் 11 பேர் மீது கோட்டக் குப்பத்தில் டி.எஸ்.பியாக இருந்த சுனில் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×