search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "switch off"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மசோதா ஒரு வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
    • சட்டம் ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி மற்றும் சுயேச்சை செனட்டர்களுடன் விரைவில் நிறைவேற்றப்படுகிறது.

    தொழில் நிறுவனங்களில் வேலை மற்றும் பணியின்போது பயன்படுத்தும் செல்போன்களை பணி முடிந்ததும் 'சுவிட்ச் ஆப்' செய்துகொள்ளும்

    சட்டம் பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

    இதேபோல ஆஸ்திரேலிய நாட்டிலும் அலுவலக நேரத்திற்குப் பிறகு செல்போன்களை 'சுவிட்ச் ஆப்' செய்யும் உரிமை விரைவில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 

    வேலைநேரத்திற்குப்பின் நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு அளிக்கும் புதிய சட்டத்தை ஆஸ்திரேலிய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

    இந்த மசோதா ஒரு வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த சட்டம் ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி மற்றும் சுயேச்சை செனட்டர்களுடன் விரைவில் நிறைவேற்றப்படுகிறது.

    ஏற்கனவே பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியத்தில் இந்த புதிய சட்டம் அமலான நிலையில் உலகில் பல்வேறு நாடுகளும் இந்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.

    • விற்பனைக்காக வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.
    • டாஸ்மாக் கடை நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மரக்காணம் சுற்று வட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக கிராமங்களில் சாராய பாக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட வர்களில் பெரும்பாலா னோர். தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இதனால் மரக்காணம் பகுதியில் சாராய விற்பனை அறவே ஒழிந்தது என்றே கூறலாம். இந்நிலையில் மதுப்பிரி யர்கள் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சென்று மது அருந்து கின்றனர். டாஸ்மாக் கடை நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த கடை திறந்தது முதல் மூடும் வரையில் மது பிரி யர்கள் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர். வழக்கத்தை விட 3 மடங்கு கூடுதலாக மதுபாட்டில்கள் விற்பனை யாவதாக டாஸ்மாக் ஊழி யர்கள் கூறினார்கள்.

    ×