search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெல்மெட்"

    • பேரணியானது கூட நாணல், விண்ணமங்கலம், பூதலூர் சென்று மீண்டும் திருக்காட்டுப்பள்ளி வந்தடைந்தது.
    • ஏராளமானோர் ஹெல்மெட் அணிந்தபடி பேரணியில் கலந்து கொண்டனர்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளியில் திருச்சி மலைக்கோட்டை மாநகர இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம், திருக்காட்டுப்பள்ளி கிளை சங்கம் மற்றும் 11 சங்கங்கள் இணைந்து ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    திருக்காட்டுப்பள்ளி அண்ணா சிலையில் இருந்து தொடங்கிய ஹெல்மெட் விழிப்புணர்வு வாகன பேரணிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

    பேரணியை திருக்காட்டு ப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெ க்டர் ஜெயக்குமார் கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியை வாழ்த்தி திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன், வழக்கறிஞர் ஜெயக்குமார், சங்க மாவட்ட செயலாளர் அன்பு ராஜா, மாவட்ட பொருளாளர் செல்வமணி, கூட்டுறவு சங்க தலைவர் செந்தில்நாதன், வரகூர் கார்த்திகேயன், வக்கீல் ரமேஷ், இளங்காடு தங்கதுரை, திருக்கா ட்டுப்பள்ளி பெரியண்ணன், சாகுல் ஹமீது ஆகியோர் பேசினார்கள்.

    திருக்காட்டுப்பள்ளி நிர்வாகிகள் திராவிட மணி ,கிள்ளிவளவன் ,தாமஸ், சதீஷ், பாபு வரதராஜ், விஜயகுமார் ,செல்லையா, ஜீவா உள்ளிட்ட ஏராளமா னோர் ஹெல்மெட் அணிந்த படி பேரணியில் கலந்து கொண்டனர்.

    திருக்காட்டுப்பள்ளியில் தொடங்கிய பேரணி கூட நாணல் ,விண்ணமங்கலம், பூதலூர் சென்று விட்டு மீண்டும் திருக்காட்டுப்பள்ளி வந்தடைந்தது.

    பேரணி தொடங்குவதற்கு முன்னதாக திருக்காட்டு ப்பள்ளியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

    மதுரை

    வாடிப்பட்டி வட்டார வைகை இருசக்கர வாகன மற்றும் மெக்கானிக்கல் பொதுநல சங்கம் சார்பில் மே தின விழா, ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாநில தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார்.

    பொதுச் செயலாளர் சக்திவேல், பொருளாளர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் ஜாபர் சாதிக் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ரமேஷ்குமார் அறிக்கை வாசித்தார்.

    வல்லப கணபதி கோவிலில் இருந்து ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன பழுது பார்ப்பவர்கள் பேரணியாக சென்றனர். வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்று மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

    மாலையில் மழலையார் ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் சிவஞானம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட சாலைப்பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு க்கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர், துறைசார்ந்த அலுவலர்க ளுடன் ஆய்வு மேற் கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் சென்ற மாதம் விபத்து களினால் உயிரிழப்பு ஏற்பட்ட பகுதிகளில் விபத்து கள் ஏற்படா வண்ணம் மேற் கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகள் குறித்தும், தற்போது விபத்து ஏற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப் பட்டது.

    நாகர்கோவில் மாநகராட்சி யில் நெருக்கடி பகுதிகளான வடசேரி, கார்மல் மேல்நிலைப் பள்ளி எதிர்புறம், புன்னைநகர், பால்பண்ணை சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணம் பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கு மாநகராட்சி ஆணையர், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், போக்குவரத்துத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொண்ட குழுவினர் இட ஆய்வு செய்து, பணிகளை முடிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை பலகைகள், வேகத்தடை அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதிவேகமாக இருசக்கர வாகனங்கள் போட்டி ப்போட்டு ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுனர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அபராதம் விதிக்க போலீ சாருக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீர் செய்திட நெடுஞ் சாலைத்து றைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, முக்கியமான சாலைகளில் தெருவிளக்குகள் இல்லாத காரணத்தினால் விபத்துகள் ஏற்படுவதை கருத்தி ல்கொண்டு, அந்தந்த பகுதி நகராட்சி ஆணை யாளர்கள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உதவி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெடுஞ்சாலை யோரங்களி லுள்ள மரங்களில் ஒளிரும் வண்ண பூச்சுகள் மேற்கொள்ளுமாறும், சாலையோரங்களி லுள்ள மரங்களின் கிளைகள், மின்விளக்கு கள் மற்றும் மின்தடத்தில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அப்புறப் படுத்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலு வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு சென்ற மாதம் 8141 நபர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இருச்சக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிவதோடு, நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட்பெல்ட் போட்டு பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வுக்கூட்டத்தில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை –நிலமெடுப்பு) ரேவதி, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுரா மலிங்கம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) சுப்பையா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, நெடுஞ் சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன், உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிர மணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சாலை விதிகளை மதிப்பது குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது.

    திருவாரூர்:

    திருவாரூர் வலங்கைமான் பகுதியில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    ஊர்வலத்தை நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இ்ந்த ஊர்வலம் வலங்கைமான் கடைத்தெரு, கும்பகோணம் ரோடு, மகா மாரியம்மன் கோவில், வடக்கு அக்ரஹாரம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று போலீஸ் நிலையம் முன்பு முடிவடைந்தது.

    இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது, மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது,

    சாலை விதிகளை மதிப்பது குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை டிரைவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, பொதுமக்களுக்கு போலீசார் வழங்கினர்.

    இதில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் மற்றும் வலங்கைமான், குடவாசல் போலீசார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • சேலம் மாநகர காவல் துறையின் சார்பாக அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல துப்புரவு பணியாளர்கள், சாலையோர கடை வியாபாரிகள், மற்றும் இடம் விட்டு இடம் சென்று வியாபாரம் செய்து பிழைத்து வரும் வியாபாரிகளிடம் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தும் போது கட்டாயம் ஹெல்மெட் பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார்.

    சேலம்

    சேலம் குமரகிரியில் பங்குனி உத்திரம் திருவிழா நடைபெற்றது. விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் துறையின் சார்பாக அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல துப்புரவு பணியாளர்கள், சாலையோர கடை வியாபாரிகள், மற்றும் இடம் விட்டு இடம் சென்று வியாபாரம் செய்து பிழைத்து வரும் வியாபாரிகளிடம் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தும் போது கட்டாயம் ஹெல்மெட் பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார். சேலம் மாநகர காவல் துறை சார்பாக 50 பேருக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது.

    • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்குதல் தவிர்க்க பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை காவல்நிலையம், லயன்ஸ் சங்கம் மற்றும் ஜெசிஐ இணைந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி அம்மாபேட்டையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு லயன் சங்க நிர்வாகிகள், தலைவர் முரளி, செயலாளர்வேல்மணி, பொருளாளர் ஜனார்த்தனன், மாவட்ட தலைவர் நைனா குண சேகரன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அம்மாபேட்டை காவல்உதவி ஆய்வாளர் சேகரன் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது ஹெல்மெட் அணிந்து செல்ல வலியுறுத்தியும், போதையில் பயணம் செய்தல், வாகனங்களில் அதிக சுமை ஏற்றி செல்லுதல், செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்குதல், ஓடும் பேருந்தில் ஏறுவதும், இறங்குவதையும் தவிர்க்க பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

    பேரணி நால்ரோட்டில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

    நிகழ்ச்சியின் இறுதியில் அம்மாபேட்டை காவல்நிலையத்திற்கு லயன் சங்கம் சார்பில் முதல் உதவி பெட்டி வழங்கப்பட்டது. இதில் ஜெசிஐ நிர்வாகிகள் அமுதன், முத்துகுமார், பாலாஜி ஆட்சிமன்றகுழு உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

    • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பேரணியை தொடங்கி வைத்தார்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் இவாஸ் நலச்சங்கம், கும்பகோணம் ரத்ததான டிரஸ்ட் ஆகியவை இணைந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது தெப்பக்குளத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தெப்பக்குளத்தில் முடிவடைந்தது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு விபத்தில்லா பயணம், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவகுமார், துணை தலைவர் சங்கர், செயல் அலுவலர் உஷா, ரத்ததான டிரஸ்ட் அறங்காவலர் சுலைமான் சேட்டு, இவாஸ் நல சங்க நிர்வாகக்குழு அப்துல் மாலிக் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது போன்ற நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு.
    • ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு பிரச்சார கையேடு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    தேசிய பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஓ.என்.ஜி.சி மற்றும் திருவாரூர் காவல்துறை ஆகியவை இணைந்து திருவாரூர் பஸ் நிலையம் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் சாலை விதிகள் குறித்து பேசினார்.

    தொடர்ந்து, வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது, இருசக்கர வாகனத்தில் 2 நபருக்கு மேல் செல்லக்கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது போன்ற நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து, ஹெல்மெட் அணிந்து வந்த 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓ.என்.ஜி.சி சார்பில் டீசர்ட் வழங்கப்பட்டது.

    ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு பிரச்சார கையேடு வழங்கப்பட்டது.

    இதில் திருவாரூர் நகர போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் ஈஸ்வரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன், திருவாரூர் நகர சப்இன்ஸ்பெக்டர் தியாகராஜன், ஓ.என்.ஜி.சி பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு தலைவர் முதன்மை பொது மேலாளர் சிவசங்கர், துணை பொதுமேலாளர்கள் தியாகராஜன், வேனு கோபால், சமூக பொறுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்.
    • ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கி, ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தையும் கொடுத்து அனுப்பினர்.

    தொடர்ந்து எச்சரித்து அனுப்பியும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.

    பள்ளி குழந்தைகளுடன் வந்த பெற்றோரை நிறுத்தி, அவர்கள் குழந்தைகளிடம், உங்கள் அப்பாவிற்கு ஹெல்மெட் அணியாததால் நாங்கள் போடும் ரூ.1000 அபராத தொகை தேவையா என்றும், ஹெல்மெட் அணியாமல் வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் உங்களால் தாங்க முடியுமா? என்று கேட்டு இனி வரும் நாட்களில் உங்கள் அப்பா ஹெல்மெட் அணிந்து வர வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறி அனுப்பினர்.

    • விபத்தில்லா கோவை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்
    • விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டன.

    கோவை,

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் .பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், 'விபத்தில்லா கோவையை உருவாக்கும் நடவடிக்கை ேமற்கொள்ளப்பட்டு வருகிறது.

    போக்குவரத்துப் பிரிவு துணை கமிஷனர் மதிவாணன் மேற்பார் வையில், போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி, லட்சுமி மில் சந்திப்பு, நவ இந்தியா சந்திப்பு, அத்திப்பாளையம் பிரிவு சந்திப்பு, சரவணம்பட்டி சோதனைச் சாவடி, சரவணம்பட்டி - துடியலூர் சந்திப்பு, ரத்தினம் கல்லூரி அருகே, பொள்ளாச்சி ரோடு, எல்.ஐ.சி சந்திப்பு, நேரு கல்லூரி அருகே, கிருஷ்ணா கல்லூரி அருகே பாலக்காடு ரோடு, சாய்பாபா கோயில் அருகே, மேட்டுப்பாளையம் ரோடு ஆகிய 10 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த 1,155 பேர் சிக்கினர். இதில் 548 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 208 நபர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். 1,155 வாகன ஓட்டிகளுக்கும் அந்தந்த சிறப்பு வாகனத் தணிக்கை முகாமில், தன்னார்வ அமைப்புகள் மூலம் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும், ஹெல்மெட் அணிந்து சென்ற 399 இருசக்கர வாகன ஒட்டிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சிறப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்படும்' எனபோலீசார் தெரிவித்தனர்.

    • குமரி மாவட்டத்தில் போலீசார் தினமும் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • வாகன சோதனையில் சிக்கியிருந்த பொதுமக்கள் பலரும் வாலிபரின் இந்த செயலை செல்போனில் படம் பிடித்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போலீசார் தினமும் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் அபராதம் விதித்தனர்.பெண்கள் பலரும் இந்த வாகன சோதனையில் சிக்கினார்கள். குடும்பத்தோடு வந்தவர்களும் ஹெல்மெட் அணியாமல் வந்து போலீசாரிடம் மாட்டிக் கொண்டனர்.

    மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேரை தடுத்த போலீசார் அவர்களிடம் மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்களை எடுத்து வருமாறு தெரிவித்தனர். அப்போது போலீசார் அவதூறு வார்த்தைகளால் பேசியதாக கூறி அந்த வாலிபர் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    நடுரோட்டில் தகாத வார்த்தைகளால் பேசி அந்த வாலிபர் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்த பொது மக்களை முகம் சுழிக்க செய்தது. மேலும் வாகன சோதனையில் சிக்கியிருந்த பொதுமக்கள் பலரும் வாலிபரின் இந்த செயலை செல்போனில் படம் பிடித்தனர்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது.போலீசாரை வாலிபர் வசைபாடும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்றவற்றால் ஏற்படும் விளைவுகளை தத்ரூபமாக நடித்து காட்டினார்.
    • செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்க கூடாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே நேற்று தஞ்சை ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சை மாவட்ட காவல்துறையுடன் இணைந்து ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு நூதன விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

    தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பிள்ளையார்பட்டியை சேர்ந்த முன்னாள் அங்கன்வாடி ஆசிரியை ஜெயலட்சுமி, நாட்டுப்புற கலைகளை ஆராய்ச்சி செய்துவரும் மாணவர் சேகர் ஆகியோர் பொதுமக்களுக்கு நூதன முறையில் ஆத்தா வந்திருக்கேண்டா..,

    ஹெல்மெட் போட்டு வண்டிய ஓட்றா.. என அருள்வாக்கு கூறி சாலை பாதுகாப்பு நாடகம் நடத்தினர்.

    இதன் மூலம் தலைகவசம் அணிவதன் அவசியத்தை தாங்கள் அதிகமாக உணர்ந்து ள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கூறுகையில்:-

    "குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்றவற்றால் ஏற்படும் விளைவுகளை தத்ரூபமாக நடித்து காட்டினார்.

    இது நிச்சயமாக வாகன ஓட்டிகளுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்றார்.

    மேலும், ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக போக்குவரத்து போலீ சார் இனிப்பு வழங்கினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை தஞ்சை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பா ர்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் ஆர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    முடிவில் அறக்கட்டளை கள ஒருங்கிணைப்பாளர் நாராயணவடிவு நன்றி கூறினார்.

    ×