search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெல்மெட்"

    ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சௌகான் உத்தரவின்படி அதிராம்பட்டினம் இராஜமடம் அண்ணா பல்கலைக்கழகம் அருகில் கடற்கரை சாலையில் ஜார்ஜ்ராஜ், குணசேகரன், ஐயப்பன், விமல், மதி ஆகிய போலீசார் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். சிறுவர்களிடம் வாகனங்களை ஓட்ட விடக்கூடாது என்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினர்.

    • கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு
    • போலீசார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் :

    குமரி மேற்கு மாவட்டம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் தனது மகனுடன் நாகர்கோவிலில் உள்ள துணிக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் இன்று காலை வந்தனர். கலெக்டர் அலுவலகம் பகுதியில் வந்த போது கணவன்-மனைவிக்கிடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணவன் திடீரென மனைவியை ஹெல்மெட்டால் தாக்க முயன்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் கணவன்-மனைவிக்கு அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது.
    • போக்குவரத்து பூங்காவில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மாநகரில் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், வருகிற 26-ந் தேதி முதல் வாகன தணிக்கை மேற் கொள்ளப்பட்டு விதிமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக கோவை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாநகரில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.வருகிற 26-ந் தேதி முதல் காவல்துறை, போக்குவரத்து துறை மற்றும் மாசுகட்டுப்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை ஒருங்கிணைத்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் அதிகப்படியாக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து விரிவாக ஆராய்ந்ததில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது.

    எனவே 100 சதவீதம் விபத்துக்களை தடுக்கும் வகையில், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற நடைமுறையை 100 சதவீதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    வருகிற 26-ந் தேதி முதல் நகரில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் பின்னால் அமர்ந்து வரும் நபர்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    அவர்களுக்கு ஒருவார காலததுக்கு போக்குவரத்து பூங்காவில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செல்லான் விபரங்களையும் டெல்லி போலீசார் தங்களது டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளனர்.
    • தயவு செய்து விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம், போக்குவரத்து விதிகளை பின்பற்றுங்கள் என குறிப்பிட்டிருந்தனர்.

    டெல்லியில் உள்ள சாலை ஒன்றில் திருமண உடை மற்றும் ஆபரணங்கள் அணிந்த நிலையில் மணமகள் கோலத்தில் ஒரு இளம்பெண் 'ஹெல்மெட்' அணியாமல் மொபட்டில் செல்வது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.

    இதைத்தொடர்ந்து மொபட்டில் உள்ள வாகன எண் மூலம் அந்த பெண்ணை அடையாளம் கண்ட போலீசார் அவருக்கு 'ஹெல்மெட்' அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ.1,000 மற்றும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

    இதுதொடர்பான செல்லான் விபரங்களையும் டெல்லி போலீசார் தங்களது டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளனர். அதில், தயவு செய்து விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம், போக்குவரத்து விதிகளை பின்பற்றுங்கள் என குறிப்பிட்டிருந்தனர். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், மீண்டும் மீண்டும் குற்றம் செய்தால் சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    • கடந்த ஒரு வாரத்தில் ரூ.10 லட்சம் அபராதம்
    • போலீசார் அதிரடி நடவடிக்கை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் சோதனை தீவிரப் படுத்தப்பட் டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஹெல்மெட் கட்டா யமாக்கப்பட்டுள்ள நிலை யில் கலெக்டர் அலுவல கத்திற்கு வருபவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிய தொடங்கி யுள்ளனர். அரசு அலுவலகங்களுக்கு வரும் பணியாளர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீதர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.இந்த நிலையில் நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிசன்களுக் குட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவிலில் இன்று காலையிலும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் அபராதம் விதித்தனார். இந்த சோதனையில் பெண்களும் சிக்கினார்கள். வாகன ஓட்டிகள் சிலர் போலீசார் சோதனை செய்வதை பார்த்ததும் வாகனங்களை திருப்பி ஓட்டி சென்றனர். கார்களில் சீட் பெல்ட் அணியாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் பகுதிகளிலும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு ஹெல்மெட் அணியாத வர்களுக்கு அபராதம் விதித்தனர். காலை தொடங்கிய வாகன சோதனை மதியம் வரை நீடித்தது.

    இன்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ரூ.50,000-க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஹெல்மெட் மற்றும் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    கனிம வளங்கள் கடத்த லை தடுக்கவும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு வருகி றார்கள. அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து வருகிறார்கள்.

    வடசேரி, மார்த்தாண்டம், ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் பகுதிகளில் அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்கள் நேற்று இரவு தடுத்து நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட் டது.

    • வாகனத்தையும் பறிகொடுத்து நடுவழியில் தவிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
    • குமரி மாவட்டம் முழுவதும் தினமும் நடைபெறும் அதிரடி சோதனை

    நாகர்கோவில் :

    தமிழகத்தின் தென்கோடி யில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருச்சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

    தமிழகத்தில் விற்பனை யாகும் இருச்சக்கர வாகனங்களின் எண்ணிக்கையில் 25 சதவீதம் வாகனங்கள் குமரி மாவட்டத்தில் தான் விற்பனை ஆகிறது.

    அதி வேகத்தில் செல்லும் நவீன ரக இருச்சக்கர வாகனங்கள் மற்றும் அதிக ஒலி எழுப்பி செல்லும் வாகனங்களும் இங்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

    வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இம்மாவட்டத்தில் வாகன விபத்துக்களும் அதிகம் நடக்கிறது. குறிப்பாக இருச்சக்கர வாகன விபத்துக்கள் அதிகம் நடக்கிறது.

    மக்கள் அதிகம் நடமாடும் சாலைகளிலும், புறநகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையிலும் சாகசம் செய்யும் மாணவர்கள், வாலிபர்கள் இருச்சக்கர வாகன விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கன்னியா குமரி மாவட்டத்தில் விபத்துகள் மூலமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்களுக்கு அதிக வேகம் மற்றும் குடி போதையில் வாகனங்களை ஓட்டி சென்றதே காரணம் என்பதை போக்குவரத்து போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

    இதுபோன்ற சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து போலீ சாரும் இணைந்து தற்போது அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

    அதன்படி மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பிர சாத் உத்தரவிட்டுள்ளார்.

    இதுபோல மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் இருச்சக்கர வாகனங்களில் வரும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வரவேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் வருவோருக்கு உடனடியாக ரூ.1000 அபராதம் விதிக்கலாம் என்றும் போலீ சாருக்கு உத்தரவிட்டார்.

    இப்படி மாவட்ட நிர்வாகமும், போலீஸ் சூப்பிரண்டும் ஒரே சேர விடுத்த உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை, மார்த்தாண்டம் என அனைத்து பகுதிகளி லும் இருச்சக்கர வாகன சோதனை தீவிரம் அடைந்தது.

    இதில் ஹெல்மெட் அணியாமல் வந்தால் ரூ.1000, லைசென்ஸ் இல்லையென்றால் ரூ.5 ஆயிரம், நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தால் ரூ.1500, ஒரே வண்டியில் 3 பேர் சென்றால் ரூ.1000 என அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. இதில் போலீசாரிடம் சிக்கும் வாலிபர்கள் பலரும் மொத்தமாக ரூ. 8 ஆயிரம் வரை அபராதம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது.

    முன்பெல்லாம் போலீசார் ஸ்பாட் பைன் விதித்தாலும் பணம் இல்லை என்றால் ஒரு செல்லாைன எழுதி கொடுப்பார்கள். அதனை கோர்ட்டில் செலுத்தி கொள்ளலாம்.

    இப்போது சோதனையில் சிக்குவோருக்கு செல்லான் கொடுப்பது கிடையாது. மாறாக ஆன்லைன் மூலம் அபராதத்தை உடனடியாக கட்டியாக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படு கிறது. பணம் கட்ட வழி யில்லா விட்டால் வாக னத்தை போலீசார் பறி முதல் செய்து விடுவார்கள்.

    அபராத தொகையை கட்டிய பின்பு தான் வாகனத்தை எடுத்து செல்ல முடியும் என்பதால் சோதனையில் சிக்கிய மாணவர்கள் பலரும் நடுவழியில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்காக போலீசார் யாரும் மனம் இரங்கக்கூடாது என்று உயர் அதிகாரிகள் அறி வுறுத்தி உள்ளனர். போக்கு வரத்து விதிகளை மதிக்கவேண்டும் என்பதை அவர்களின் பெற்றோர், தங்கள் மகன், மகள்களுக்கு கற்று கொடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் இதுபோன்று அபராதம் கட்டி பணத்தை இழக்க வேண்டியதிருக்கும் என்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில் வேதனை என்னவென்றால் வாலி பர்களுக்கு இணையாக இளம்பெண்களும் இச்சோதனையில் சிக்கி கொள்கிறார்கள். முன்பு இவ்வாறு சிக்கி கொள்ளும் பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பி விடுவார்கள்.

    இப்போது அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. பணம் இல்லை யென்றால் பெற்றோருக்கு போன் செய்து அவர்களை வந்து அபராதத்தை கட்டி செல்லும்படி கூறுகி றார்கள். இதனால் நாகர் கோவில், தக்கலை பகுதி களில் இளம் பெண்களும் நடுவழியில் தவித்தப்படி நிற்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது.

    ஹெல்மெட் சோதனை ஒருபுறம் நடக்க அதிக ஒலி எழுப்பும் கருவிகளை பொருத்தியபடி வலம் வரும் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    குறிப்பாக அந்த வாகனங்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்று அதில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளை அகற்றிய பின்பு அதற்கும் அபராதம் பெறப்பட்ட பின்னரே அந்த வாகனங்கள் விடுவிக்கப்படுகிறது.

    • இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதுவை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
    • போக்குவரத்து விதியை பின்பற்றி புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் ஹெல்மெட் அணிய தொடங்கி உள்ளனர்.

    புதுச்சேரி:

    இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி உயிர் இழப்பதை தடுக்க கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

    பல்வேறு மாநிலங்களில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

    அதுபோல் புதுச்சேரியிலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதுவை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

    மேலும் இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

    இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் பொதுமக்களுக்கு ஆதரவாக சுயேட்சை எம்.எல்.ஏ. நேருவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதன் காரணமாக தற்போது புதுச்சேரியில் அபராதம் விதிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே போக்குவரத்து விதியை பின்பற்றி புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் ஹெல்மெட் அணிய தொடங்கி உள்ளனர்.

    தற்போது கோடை வெயில் வருத்தெடுத்து வருகிறது. கோடை வெயிலை சமாளிக்க இருசக்கர வாகனங்களில் செல்லும் ஒரு சிலர் ஹெல்மெட் அணிந்து செல்கிறார்கள்.

    அவ்வாறு ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள் வெயிலால் படாத பாடுபட்டனர்.

    இதற்கிடையே கோடை வெயிலுக்கு இதமாக இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஏ.சி.ஹெல்மெட்டை தயாரித்துள்ளது.

    இதனை புதுவையில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிரத்தியேமாக தயாரிக்கப்பட்ட இந்த ஏ.சி. ஹெல்மெட்டை புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அணிந்து பரிசோதனை செய்தார். விரைவில் இந்த ஏ.சி. ஹெல்மெட் புதுவையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • பேரணியானது ரெயில் நிலையம் வழியாக சென்று மீண்டும் புதிய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் போக்குவரத்து துறை, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, பைக் ஓட்டுனர்களுக்கு ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து,

    நடந்த விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

    பின்னர் வாகன ஓட்டுனர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார்.

    மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், ,சீர்காழி மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சீர்காழி காவல் இன்ஸ்பெ க்டர் சிவகுமார், தாசில்தார் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினர்.

    100க்கும் மேற்பட்ட ஹெல்மெட் அணிந்த பைக் ஓட்டிகள் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கொள்ளிடம் முக்கூட்டு, ரயில் நிலையம் பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் புதிய பேருந்து நிலையத்தில் முடிவுற்றது.

    இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் ஹெல்மெட் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியை சேர்ந்த, வீரபா ண்டியன், முத்து, ஜெயா, மற்றும் ராஜா பங்கேற்றனர்

    • பெண் தோழி ஒருவரை பைக்கில் ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரம் நகரில் ஜாலியாக வலம் வந்துள்ளார்.
    • துரதிருஷ்டம் என்னவென்றால் அந்த டூ வீலர் பிரசன்னாவின் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டது.

    என்னங்க... பைக்கில் வேறு ஒரு பெண்ணுடன் நீங்கள் சென்றதை பார்த்ததாக பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க.. அது உண்மையா?

    "ஏய்... உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா? யாரோ ஒருத்தர் சொன்னதை கேட்டு என்னை சந்தேகப்படுறீயே...

    அப்படி இல்லீங்க... காலம் போகும் போக்கு சரியில்லை. இந்த மாதிரி எத்தனையோ சம்பவங்களை தினமும் செய்திதாள்களில் படிக்கிறேன். அதான் பயமா இருக்கு! எனக்கும் நம் பிள்ளைகளுக்கும் துரோகம் செஞ்சிடாதீங்க...

    அட... என்ன நீ... உனக்கு நான் துரோகம் பண்ணுவேனா? என்னை நம்பு. உன் மீது சத்தியமா சொல்கிறேன். எந்த பெண்ணையும் நான் பைக்கில் ஏற்றி செல்லவில்லை என்று மனைவியை சமாளிப்பதற்குள் ஒரு வழியாகிவிடும்.

    ஆனாலும் முழு திருப்தி அடையாமல் லேசான சந்தேகத்துடன் 'அப்படி, ஏதாவது தப்பு செஞ்சீங்க... நான் பொம்பளையா இருக்க மாட்டேன்...' என்று மனைவி எச்சரிப்பதை கேட்டு 'அப்பாடா... ஒரு வழியா நம்ப வைத்து சமாளித்து விட்டோம்' என்று கணவர் ஆறுதல் அடைந்த காலம் உண்டு.

    கணவன்மாரே உஷார். நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உங்களை கண்டுபிடித்து ஆதாரத்துடன் உங்கள் மனைவியிடமே போட்டுக் கொடுக்கவும் வாய்ப்பு உண்டு. இதற்கு கேரளாவில் நடந்திருக்கும் சம்பவமே சாட்சி.

    கேரள மாநிலம் இடுக்கியை பூர்வீகமாக கொண்டவர் 32 வயது வாலிபர் பிரசன்னா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளார்கள். தற்போது இந்த தம்பதியினர் திருவனந்தபுரம் அருகே வசித்து வருகிறார்கள்.

    பிரசன்னா ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். தினமும் டூ வீலரில் வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருகிறார். அவருடைய போதாத நேரம் இப்படி சிக்குவோம் என்று அவர் எதிர்பார்த்து இருக்கவேமாட்டார்.

    கடந்த மாதம் 25-ந் தேதி கடையில் இருந்து திரும்பும்போது தனது பெண் தோழி ஒருவரை பைக்கில் ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரம் நகரில் ஜாலியாக வலம் வந்துள்ளார்.

    கேரளாவில் முக்கிய இடங்கள் அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் அதி நவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளை அது படம்பிடித்து அனுப்பிவிடும். அபராத தொகையும் எவ்வளவு என்பது வீட்டுக்கே சென்றுவிடும்.

    ஒவ்வொருவரையும் நிறுத்தி அபராதம் விதிக்கும் பெரிய தலைவலி கேரள போக்குவரத்து போலீசுக்கு இல்லை. சம்பவத்தன்று பெண்ணுடன் ஊர் சுற்றிய பிரசன்னா ஜாலி மூடில் இருந்ததால் 'ஹெல்மெட்' அணிந்து செல்ல மறந்து போனார்.

    சாலையில் சென்றபோது இதை படம் பிடித்து இருக்கிறது கேமிரா. துரதிருஷ்டம் என்ன வென்றால் அந்த டூ வீலர் பிரசன்னாவின் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டது.

    எனவே கேமிரா பிடித்த போட்டோவை வண்டி உரிமையாளரான பிரசன்னாவின் மனைவியின் செல்போனுக்கே அனுப்பி வைத்துவிட்டது. அபராத தொகையை பற்றி பிரசன்னாவின் மனைவி கவலைப்படவில்லை. அவருக்கு பின்னால் 'ஈ' என்று இளித்தபடி ஒரு பெண் தோளில் கைபோட்டபடி இருக்கிறாளே அவள் யார்? என்பதுதான் ஆத்திரத்தில் கொந்தளிக்க வைத்தது.

    வரட்டும்... என்று காத்திருந்தவர் அழைப்பு மணி ஒலித்ததும் கணவர்தான் வருகிறார் என்பதை அறிந்து கதவை திறந்தார். மனைவி வழக்கம் போல் இல்லையே சேலையை வரிந்து கட்டிக் கொண்டு பத்திரகாளியாட்டம் தெரியுறாளே... என்னவென்று தெரியவில்லையே என்று மனதுக்குள் ஒருவிதமான கலக்கத்துடனேயே வீட்டுக்குள் சென்ற பிரசன்னா வேலை களைப்பில் நாற்காலியில் அமர்ந்தார்.

    வழக்கமாக வீடு திரும்பியதும் சிரித்து கொண்டே வரவேற்று ஆவிபறக்க கொண்டு தரும் காபி களைப்பை நீக்கிவிடும். ஆனால் இன்று முகத்திலும் சிரிப்பை காணோமே என்று யோசித்து கொண்டிருந்தபோது சமையலறையில் பாத்திரங்கள் விழுந்து உடைவது போல் பயங்கர சத்தம் கேட்டது.

    ஆஹா... ஏதோ வில்லங்கம் வரப்போகுது என்பதை பிரசன்னாவும் யூகித்து கொண்டார். சிறிது நேரத்தில் வெளியே வந்த மனைவி நேராக பிரசன்னாவின் அருகில் போய் நின்று கொண்டு "யாருய்யா.. அந்த பெண்" என்று நேராகவே கேள்வியை போட்டார்.

    பெண்ணா... நீ என்ன கேட்கிறாய்? என்று எதுவும் புரியாதது போல் தவித்த பிரசன்னாவிடம் "சமாளிக்காதேய்யா... அதான் உன் மூஞ்சியே சொல்லுதே பைக்கில் ஒருத்தியை ஏற்றிக் கொண்டு ஊர் சுத்துறியே அந்த பெண் யார்" என்று கேட்டேன் என்றார்.

    "ஏய்... நீ என்ன சொல்றே... பைக்கில் பெண்ணா... என்ன கனவு ஏதாச்சும் கண்டியா...? ஆமாய்யா... கனவு வேற காண வேண்டுமா? உன் லட்சணம் தான் ஊருக்கே தெரிந்து இருக்கிறதே. இதில் கனவு வேறு காண வேண்டுமாக்கும்...

    உண்மைய சொல்லு... இல்லாட்டி நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்றார். அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார் பிரசன்னா. அதை பார்த்து 'என்னய்யா... அமைதியா இருந்தால் நடந்ததெல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா?' என்று அதிர்ந்தார்.

    சந்தேகப்படும் உன்னை எப்படி நான் சமாளிப்பது என்று கம்மிய குரலில் பம்மிய பிரசன்னாவிடம் தனது செல்போனில் இருந்த போட்டோவை காட்டி இனியாவது நம்புவியா? இது யார்? என்றார்.

    இதுக்குத்தான் இவ்வளவு கோபமா? என்று வலுக்கட்டாயமாக முகத்தில் சிரிப்பையும், கையையும் போட்டபடி அமர்ந்து இருக்கிறாளே? கேட்டு தகராறு செய்தார். இந்த தகராறு அன்றோடு முடிந்துவிட வில்லை.

    அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தது. பிரசன்னாவும் பதிலுக்கு கத்த வீடே போர்க்களமாகிப் போனது. தகராறு முற்றிய நிலையில் அந்தப் பெண் கரமனை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். தனது கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னையும், தனது பிள்ளைகளையும் கொடுமைபடுத்துவதாக புகாரை கொடுத்து ஆதாரமாக கேமிரா அனுப்பி இருந்த போட்டோவையும் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இ.பி.கோ.321 (வேண்டுமென்றே காயப்படுத்துதல்), 341 (தவறான கட்டுப்பாடுகளை செய்தல்), 294 (பொது இடத்தில் ஆபாச செயலை செய்தல்), சிறார் சட்டம் 75 (குழந்தைகளை புறக்கணிப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரசன்னாவை கைது செய்தனர்.

    ஆணோ, பெண்ணோ... ஊருக்கு தெரியாது என்று தவறுகள் செய்தால் மனித கண்களை தாண்டி செயற்கை கண்களும் கண்காணிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

    • திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் கருப்பராய சுவாமி கோவில் பொங்கல் திருவிழா கடந்த 3-ந் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது
    • ஹெல்மெட் அணிவதன் மூலம் ஆண்டுக்கு 100 பேர் உயிரிழப்பு என்பதை 10-ஆக குறைக்க முடியும் என்றார்.

    அவினாசி:

    திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் கருப்பராய சுவாமி கோவில் பொங்கல் திருவிழா கடந்த 3-ந் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த நிலையில் அனுப்பர்பாளையம்புதூர் உதயம் நற்பணி மன்றம் சார்பில், குடும்ப உறவுகளை பேணி காப்பவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆசைத்தம்பி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். அப்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம். ஹெல்மெட் அணிவதன் மூலம் ஆண்டுக்கு 100 பேர் உயிரிழப்பு என்பதை 10ஆக குறைக்க முடியும் என்றார்.

    • பேரணியானது கூட நாணல், விண்ணமங்கலம், பூதலூர் சென்று மீண்டும் திருக்காட்டுப்பள்ளி வந்தடைந்தது.
    • ஏராளமானோர் ஹெல்மெட் அணிந்தபடி பேரணியில் கலந்து கொண்டனர்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளியில் திருச்சி மலைக்கோட்டை மாநகர இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம், திருக்காட்டுப்பள்ளி கிளை சங்கம் மற்றும் 11 சங்கங்கள் இணைந்து ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    திருக்காட்டுப்பள்ளி அண்ணா சிலையில் இருந்து தொடங்கிய ஹெல்மெட் விழிப்புணர்வு வாகன பேரணிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

    பேரணியை திருக்காட்டு ப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெ க்டர் ஜெயக்குமார் கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியை வாழ்த்தி திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன், வழக்கறிஞர் ஜெயக்குமார், சங்க மாவட்ட செயலாளர் அன்பு ராஜா, மாவட்ட பொருளாளர் செல்வமணி, கூட்டுறவு சங்க தலைவர் செந்தில்நாதன், வரகூர் கார்த்திகேயன், வக்கீல் ரமேஷ், இளங்காடு தங்கதுரை, திருக்கா ட்டுப்பள்ளி பெரியண்ணன், சாகுல் ஹமீது ஆகியோர் பேசினார்கள்.

    திருக்காட்டுப்பள்ளி நிர்வாகிகள் திராவிட மணி ,கிள்ளிவளவன் ,தாமஸ், சதீஷ், பாபு வரதராஜ், விஜயகுமார் ,செல்லையா, ஜீவா உள்ளிட்ட ஏராளமா னோர் ஹெல்மெட் அணிந்த படி பேரணியில் கலந்து கொண்டனர்.

    திருக்காட்டுப்பள்ளியில் தொடங்கிய பேரணி கூட நாணல் ,விண்ணமங்கலம், பூதலூர் சென்று விட்டு மீண்டும் திருக்காட்டுப்பள்ளி வந்தடைந்தது.

    பேரணி தொடங்குவதற்கு முன்னதாக திருக்காட்டு ப்பள்ளியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

    மதுரை

    வாடிப்பட்டி வட்டார வைகை இருசக்கர வாகன மற்றும் மெக்கானிக்கல் பொதுநல சங்கம் சார்பில் மே தின விழா, ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாநில தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார்.

    பொதுச் செயலாளர் சக்திவேல், பொருளாளர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் ஜாபர் சாதிக் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ரமேஷ்குமார் அறிக்கை வாசித்தார்.

    வல்லப கணபதி கோவிலில் இருந்து ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன பழுது பார்ப்பவர்கள் பேரணியாக சென்றனர். வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்று மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

    மாலையில் மழலையார் ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் சிவஞானம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

    ×