search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை ஹெல்மெட்டால் தாக்க முயன்ற கணவர்
    X

    மனைவியை ஹெல்மெட்டால் தாக்க முயன்ற கணவர்

    • கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு
    • போலீசார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் :

    குமரி மேற்கு மாவட்டம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் தனது மகனுடன் நாகர்கோவிலில் உள்ள துணிக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் இன்று காலை வந்தனர். கலெக்டர் அலுவலகம் பகுதியில் வந்த போது கணவன்-மனைவிக்கிடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணவன் திடீரென மனைவியை ஹெல்மெட்டால் தாக்க முயன்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் கணவன்-மனைவிக்கு அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×